லட்சுமணன் உயிர் காக்க சஞ்சீவி மலையை பெயர்த்து எடுத்து வந்த அனுமன்...இப்போது வைரல் ஆவது ஏன் தெரியுமா
இந்தியாவின் இதிகாசமான ராமாயணத்தில் உயிர்காக்கும் சஞ்சீவி முலிகை பற்றி சொல்லப்பட்டுள்ளது. ராம ராவண யுத்தத்தில் இந்திரஜித் ஏவிய பிரம்மாஸ்திரம் தாக்கி மயக்கமான லட்சுமணன் உயிரை காக்க சஞ்சீவி மலையையே பெயர்த்து எடுத்து வந்தார் அனுமன். உயிரைக் காக்கும் அனைத்துமே சஞ்சீவிதான். கொரோனா வைரஸ் பிடியில் இருந்து மக்களை காக்கும் எந்த மருந்துமே சஞ்சீவிதான். எனவேதான் கொரோனா தடுப்பு மருந்தை ஏற்றுமதி செய்து பிரேசிலுக்கு அனுப்பிவைத்ததற்காக பிரேசில் பிரதமர் ஜெய்ர் போல்சனாரோ இந்தியப் பிரதமர் நரேந்திர மோடிக்கு அனுமனையும் சஞ்சீவி முலிகையையும் குறிப்பிட்டு நன்றி தெரிவித்திருக்கிறார்.