திருச்சி.. சிறுவன் கொலை வழக்கில் இளம்பெண்ணுக்கு இரட்டை ஆயுள்
கடை முதலாளி மீதான முன்விரோதம் காரணமாக அவரது மூன்றரை வயது மகனை கொன்ற இளம்பெண் வழக்கில் நேற்று திருச்சி நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. அதில், குற்றம் சாட்டப்பட்ட ரோஸ்லின் பாக்கியராணிக்கு 2 பிரிவுகளுக்கு இரட்டை ஆயுள் தண்டனையும், ரூ.4 ஆயிரம் அபராதமும் வழங்கப்படுவதாக அறிவித்தார். மேலும், தண்டனையை ஏககாலத்தில் அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி தனது தீர்ப்பில் உத்தரவிட்டார்.