பியூஷ் கோயல் - தங்கமணி சந்திப்பு கூட்டணிக்காக அல்ல... சொல்கிறார் அமைச்சர் ஜெயக்குமார்
மத்திய அமைச்சர் பியூஷ்கோயலுடன் அமைச்சர் தங்கமணி சந்திப்பு நடத்தியது கூட்டணிக்காக அல்ல என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார். நாடாளுமன்ற தேர்தல் நெருங்குவதை ஒட்டி கூட்டணி அமைப்பதில் பிரதான கட்சிகள் தீவிரம் காட்டி வருகின்றன. மேலும், தமிழகத்தில் அதிமுக தலைமையில் மெகா கூட்டணி அமையும் திமுக, அமமுக தவிர்த்து மற்ற கட்சிகளுடன் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வருகிறோம் என்றும் அவர் கூறினார்.