Short News

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய அரசு

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய அரசு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. முன்பை விட தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் எனர்ஜியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட, பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பையும் நம்பிக்கையையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் பெற்று வருகிறது.
E20 பெட்ரோல் எஞ்சினை பாதித்தால்... உரிமையாளர்களின் முடிவு?

E20 பெட்ரோல் எஞ்சினை பாதித்தால்... உரிமையாளர்களின் முடிவு?

இந்தியாவில் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், பழைய பெட்ரோல் கார் உரிமையாளர்கள் மத்தியில் அதுகுறித்த பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பல வாகன உரிமையாளர்கள் E20 பெட்ரோல் பயன்பாடு மற்றும் அது எஞ்சினை பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு புதிய சர்வே, E20 பெட்ரோல் தொடர்பான விவகாரத்தை மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாக்கியுள்ளது.
அடுத்த 2 வாரங்களில் இந்தியாவை கலக்க வரும் 4 புதிய கார்கள்!

அடுத்த 2 வாரங்களில் இந்தியாவை கலக்க வரும் 4 புதிய கார்கள்!

இந்திய கார் சந்தையில் ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதி மிகவும் பரபரப்பாக இருக்க உள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி, பிளக்-இன் ஹைபிரிட் (PHEV), ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிக்-அப் டிரக் என வெவ்வேறு பிரிவுகளில் பல முக்கிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன. குறிப்பாக, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சில மாடல்கள் இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
புதிய சீன எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை!

புதிய சீன எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை!

சீனாவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான செர்ரி (Chery Automobile), இந்தியாவில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து காப்புரிமை (Design Patent) விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது LEPAS L4 என்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வடிவமைப்பிற்கும் இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த மாடல் உடனடியாக இந்தியாவில் அறிமுகமாகும் என்பதற்கான உறுதியான தகவல் அல்ல. இருப்பினும், எதிர்கால திட்டங்களுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.