Short News

விற்பனையில் டாப்-10 ஸ்கூட்டர்களில் 3 எலக்ட்ரிக் மாடல்கள்!

விற்பனையில் டாப்-10 ஸ்கூட்டர்களில் 3 எலக்ட்ரிக் மாடல்கள்!

ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதாலும், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதாலும் இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற பெட்ரோல் மாடல்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. அதற்கு ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்களே சிறந்த உதாரணமாக அமைந்துள்ளன. முதல் ஐந்து இடங்களுக்குள் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம்பிடித்திருப்பது, இந்த சந்தையில் உருவாகி வரும் புதிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.
தேசிய நெடுஞ்சாலை டோல் கட்டணத்தில் புதிய கணக்கீடு!!

தேசிய நெடுஞ்சாலை டோல் கட்டணத்தில் புதிய கணக்கீடு!!

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் சில சாலைப் பகுதிகளில் டோல் கட்டணம் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும் விதி அல்ல என்பது முக்கியமான விஷயம். சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த சாலைப் பகுதிகளில் இந்த கட்டணம் பாதியாக குறையும் என்பதை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.
E20-க்கு ஏற்றதா? - இந்த 7 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

E20-க்கு ஏற்றதா? - இந்த 7 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பயன்படுத்தப்பட்ட (Used) பெட்ரோல் கார் வாங்கும்போது மைலேஜ், விலை, சர்வீஸ் ஹிஸ்டரி மட்டும் பார்த்து முடிவு செய்துவிடக் கூடாது. அந்த கார் E20 பெட்ரோலுக்கு இணக்கமானதா என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் வாங்குபவர்களுக்கு இது மிகவும் முக்கியமான சரிபார்க்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.
கடந்த ஆண்டு 1.83 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் பலி

கடந்த ஆண்டு 1.83 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் பலி

கடந்த 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.83 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 59 சாலை விபத்துக்கள் நடப்பதாகவும், 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.