85% எத்தனால் கலந்த பெட்ரோல் அறிமுகப்படுத்த முயற்சி?
ஆட்டோமொபைல்
- 2 hr, 22 min ago
சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகமானது புதிய வரைவு ஒன்றை வெளியிட்டுள்ளது. மத்திய மோட்டார் வாகன விதிகள், 1989ல் திருத்தங்களைச் செய்வதற்காக இந்த வரைவு வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் தற்போது எத்தனால் கலந்த எரிபொருளின் பயன்பாடு அதிகரித்திருப்பதோடு, மாற்று எரிபொருள்கள் மீதான கவனமும் அதிகரித்து வருகிறது. எனவே, அவற்றையும் விதிமுறைகளில் சேர்க்கும் நோக்கத்தோடு இந்த வரைவை மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ளது.