ஃபாஸ்டேக் கார்டில் வச்சிட்டாங்க ஆப்பு?

சுங்கசாவடி கட்டணத்தில் பாக்கி வைத்திருக்கும் வாகன உரிமையாளர்களுக்கு ஆப்பு வைக்கும் வகையில் புதிய நடைமுறையை மத்திய அரசு அமலுக்கு கொண்டு வரவுள்ளது. இதனால் இனி சுங்ககட்டணம் செலுத்தாமல் யாரும் தப்பிக்க முடியாத சூழ்நிலை ஏற்படப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இனி சோப்பு டப்பான்னு கிண்டல் பண்ண முடியாது!

இந்தியாவின் நம்பர்-1 கார் உற்பத்தி நிறுவனமாக மாருதி சுஸுகி (Maruti Suzuki) இருந்து வருகிறது. இதற்கு சரியான விலை நிர்ணயம், சிறப்பான மைலேஜ், பிரம்மாண்டமான சேல்ஸ் மற்றும் சர்வீஸ் நெட்வொர்க் என ஏகப்பட்ட காரணங்களை கூற முடியும். ஆனால் பாதுகாப்பு விஷயத்தில் மட்டும் மாருதி சுஸுகி நிறுவனத்தின் கார்கள் கடுமையான விமர்சனங்களை சந்தித்து வந்தன.

கவாஸாகி பைக்னு நெனைச்சவங்க எல்லாம் ஒழுங்கா கைய தூக்கிடு!!

வெளிநாட்டில் இருந்து பைக்குகளை இந்தியாவில் விற்பனை செய்யும் நிறுவனங்களுள் ஒன்று, கீவே (Keeway) ஆகும். மோட்டோ வால்ட் (Moto Vault) நிறுவனத்தின் கீழ் செயல்படும் இந்த கீவே நிறுவனத்தில் இருந்து அசத்தலான தோற்றத்திலான பல்வேறு பைக்குகள் இந்தியாவில் விற்பனை செய்யப்படும் நிலையில், புதியதாக தற்போது 'ஆர்.ஆர்300' (RR300) என்கிற பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ரூ.1.30 லட்சத்தில் எலக்ட்ரிக் பைக்கை வழங்க பெரிய மனசு வேணும்

கோமகி (Komaki), இந்தியாவில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனம். குறிப்பாக, எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) விற்பனை செய்யும் மிகவும் சில நிறுவனங்களுள் ஒன்று. ரேஞ்சர் என்கிற பெயரில் எலக்ட்ரிக் பைக்கை இந்த நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்த நிலையில், கோமகி நிறுவனத்தில் இருந்து புதியதாக ரேஞ்சர் புரோ (Ranger Pro) மற்றும் ரேஞ்சர் புரோ+ (Ranger Pro+) என்கிற எலக்ட்ரிக் பைக்குகள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.
Advertisement

10 லட்சம் பேர் இந்த காஸ்ட்லியான காரை வாங்கிட்டாங்க!

போர்ஷே நிறுவனம் மேக்கன் காரின் விற்பனையில் புதிய வரலாற்று மைல்கல்லை படைத்துள்ளது. இந்த கார் தான் அந்த பிராண்டிலேயே அதிகம் விற்பவனையாகும் காராக மாறியுள்ளது. இந்த காரின் விலை அதிகமாக இருந்தும் இவ்வளவு அதிக எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

27 கிமீ மைலேஜ்! விலை இவ்ளோதானா!

இந்திய சாலைகளை ஆட்சி செய்து கொண்டிருக்கும் மிகவும் பிரபலமான கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த இந்த கார், தற்போது மிகவும் பிரம்மாண்டமான உற்பத்தி மைல்கல் (Production Milestone) ஒன்றை கடந்துள்ளது. 6 லட்சம் யூனிட்கள் உற்பத்தி என்பதுதான் அந்த மைல்கல் ஆகும்.

10ல 6 பேர் இந்த ரெண்டு மாடல் காரை தான் வாங்குறாங்க!

டாடா நிறுவனம் தனது ஜூன் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ள நிலையில் அந்நிறுவனத்தின் ஒட்டு மொத்த விற்பனையில் 60 சதவீதம் வரை இரண்டு கார்கள் மட்டுமே விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்

துணை முதலமைச்சர் என்பதையே கொஞ்ச நேரத்துக்கு மறந்துவிட்டார்!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக இந்திய மார்க்கெட்டிற்குள் நுழைந்ததில் இருந்து, டெஸ்லா எலக்ட்ரிக் காரை எப்போ ஓட்டி பார்ப்போம் என்று செல்வந்தர்கள் பலருக்கு இப்போதே ஆர்வம் அடக்கம் முடியாமல் இருக்கும். இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள முதல் டெஸ்லா எலக்ட்ரிக் காரான மாடல் ஒய் (Model Y)-க்கு முன்பதிவுகள் (Bookings) துவங்கப்பட்டுள்ளன.

ஏழரை கோடி ரூபா காருக்கு கோயிலில் பூஜை போட்டது அவரா!

இந்தியாவில் தொழில் அதிபர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. அவர்களில் பெரும்பாலானோர், கார் ஆர்வலர்களாக இருக்கின்றனர். எனவே மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களை அவர்கள் அதிகளவில் வாங்கி வருகின்றனர். இந்த வரிசையில் ஏற்கனவே ஏராளமான சொகுசு கார்களை வைத்துள்ள தொழில் அதிபர் ஒருவர், விலை உயர்ந்த ரோல்ஸ் ராய்ஸ் (Rolls Royce) காரை தற்போது வாங்கியுள்ளார்.

இளைஞர்கள் எத்தனை பேரது தூக்கத்தை கெடுக்க போகுதோ...!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனத்தில் இருந்து புதியதாக அப்டேட் செய்யப்பட்ட அப்பாச்சி ஆர்டிஆர்310 (Apache RTR310) மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் நிறுவனத்தின் உதவியுடன் டிவிஎஸ் நிறுவனம் உருவாக்கிய அப்பாச்சி ஆர்டிஆர்310 பைக்கின் மேம்படுத்தப்பட்ட வெர்சனாக இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இனி இந்த காரை தான் அரசியல்வாதிகள் வாங்கப்போறாங்க!

இந்தியாவில் எம்ஜி நிறுவனம் 3 வரிசை சீட்டர் கொண்ட சொகுசு எலெக்ட்ரிக் எம்பிவி காராக தனது எம்9 காரை இந்திய மார்கெட்டில் விற்பனைக்காக கொண்டு வரவுள்ளது. இந்த கார் வரும் 21ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகமாகும் நிலையில் இந்த கார் குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே நாம் காணப்போகிறோம்.

2 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் ஏகப்பட்ட வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இருக்கின்றன. பல்வேறு விதமான வாகனங்களை அந்நிறுவனங்கள் தயாரித்து விற்பனை செய்து வருகின்றன. ஆனால் ஒரே ஒரு காரை நம்பி இந்தியாவில் ஒரு நிறுவனம் செயல்படுகிறது என்று சொன்னால் நம்ப முடிகிறதா? ஆம் இந்நிறுவனத்தின் ஒரு கார் தான் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஆட்டோ டிரைவரா பார்த்தவங்க எல்லாரும் ஆச்சிரியமா பார்க்குறாங்க

இளம் வயதில் எளிமையான வேலையை பார்த்து படிப்படியாக முன்னேறிய பணக்காரர்கள் பலரை கேள்விப்பட்டு இருப்போம். அத்தகையவர்களுள் ஒருவர் தான், தொழிலதிபர் சத்யா சங்கர் (Sathya Shankar). கர்நாடகாவின் புத்தூர் என்கிற பகுதியில் ஒரு காலத்தில் ஆட்டோ டிரைவராக இருந்தவரான சத்யா சங்கரின் சொத்து மதிப்பு தற்போதைய நிலவரப்படி ரூ.800 கோடி ஆகும்.

மஹிந்திராவின் அதிரடி முன்னேற்றத்திற்கு என்ன காரணம்?

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, இந்த 2025ஆம் ஆண்டில் இருந்து மஹிந்திராவின் கார்கள் விற்பனை புதிய உச்சத்தை தொட்டு வருகிறது. கடந்த காலங்களில் மாருதி சுஸுகி (Maruti Suzuki), ஹூண்டாய் (Hyundai), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்களுக்கு அடுத்து 4வது இடத்தை பிடித்துவந்த மஹிந்திரா நிறுவனம், கடந்த 6 மாதங்களில் மட்டும் கார்கள் விற்பனை 4 முறை ஹூண்டாய் மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களை முந்தி 2வது இடத்தை தனதாக்கி உள்ளது.

வெறும் நாலே முக்கா லட்சத்துக்கு புது காரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இது இந்திய சந்தையில் கடந்த 2015ம் ஆண்டு செப்டம்பர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆரம்பத்தில் ரெனால்ட் க்விட் காருக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்தது.

ஒரு கார் கூட விற்காமல் ஸ்டாக்குலே கிடக்குது!

நிஸான் நிறுவனத்தின் எக்ஸ்-டிரையல் காரின் விற்பனை மிகப்பெரிய வீழ்ச்சியை சந்தித்துள்ளது. கடந்த ஒரு மாதம் முழுவதும் விற்பனை செய்ய முயற்சித்தும் அந்நிறுவனத்தால் ஒரு காரை கூட விற்பனை செய்ய முடியவில்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இதுக்கு டெஸ்லா இந்தியாவுக்கு வராமலேயே இருந்திருக்கலாம்!!

டெஸ்லா (Tesla) நிறுவனம் ஒருவழியாக இந்தியாவில் நுழைந்துவிட்டது. மத்திய அரசாங்கத்திடம் இருந்து எதிர்பார்த்தப்படி எந்த சலுகையும் கிடைக்காவிட்டாலும், அறிவித்தப்படி முதல் டீலர்ஷிப் ஷோரூமை மும்பையில் டெஸ்லா திறந்துள்ளது. உலகளவில் எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள டெஸ்லா நிறுவனம் இந்தியாவின் எலக்ட்ரிக் கார்கள் மார்க்கெட்டிலும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என முன்னதாக எதிர்பார்க்கப்பட்டது.

36 கிமீ மைலேஜ்! இந்த காரை இத்தன நாளா எங்கயா வெச்சிருந்தீங்க!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்று டொயோட்டா (Toyota). அதிக நம்பகத்தன்மை கொண்ட கார்களை விற்பனை செய்து வருவதால், டொயோட்டா நிறுவனத்திற்கு இந்திய சந்தையில் மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. டொயோட்டா நிறுவனம் இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 12 கார்களை விற்பனை செய்து வருகிறது.

பெட்ரோல் கார்களின் எரிபொருள் செலவில் இயங்கும் விமானம்!!

விமானத்தில் பயணம் செய்வது என்பது நம்மில் பலருக்கு பிடித்தமான விஷயமாகும். வாழ்வில் எப்படியாவது ஒருமுறை ஆவது விமானத்தில் பறந்து பார்த்திட வேண்டுமென்று நம்மில் நிறைய பேருக்கு ஆசை இருக்கும். அதுவும் குறைவான பயணிகள் உடன் விமானத்தில் பயணம் செய்வது என்பது தனி சுகம் ஆகும். உங்களுக்காகவே விமானம் இயக்கப்படுகிறது என்பது போன்ற உணர்வு ஏற்படும்.

திடீரென பல்சர் பைக்கின் விற்பனையை நிறுத்திய பஜாஜ்!

பஜாஜ் நிறுவனம் தனது பல்சர் என் 150பைக்கை தற்போது விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது. இந்த பைக் விற்பனைக்கு வந்து 2 ஆண்டுகள் ஆகும் நிலையில் தற்போது இதை விற்பனையில் இருந்து நீக்கியுள்ளது. இதற்கான காரணம் என்ன?ஏன் விற்பனை நிறுத்தப்பட்டது? முழுமையான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பாகிஸ்தான், சீனாவின் ஈரக்குலைய நடுங்க வைத்த இந்தியா!

உலகில் மிக வேகமாக வளர்ந்து வரும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. ஆனால் எல்லையில் பாகிஸ்தான் (Pakistan) மற்றும் சீனா (China) ஆகிய நாடுகள் இந்தியாவிற்கு குடைச்சல் கொடுத்து கொண்டுள்ளன. இந்த 2 நாடுகளின் தீவிரவாத மற்றும் ராணுவ தாக்குதல்களை எல்லாம் கடந்து, இந்தியா வளர்ச்சி பாதையில் பயணித்து வருகிறது.

3 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

மஹிந்திரா நிறுவனத்தின் ஃபிளாக்ஷிப் காரான எக்ஸ்யூவி 700 கார் முக்கியமான மைல்கல்லை எட்டியுள்ளது. இந்த கார் அறிமுகமானதில் இருந்து சுமார் 3 லட்சம் பேர் இந்த காரை வாங்கியுள்ளார்கள். இந்த காருக்க இன்னும் டிமாண்ட் அதிகமாக உள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ30 ஆயிரம் சம்பளம் வாங்குனாலே கார் வாங்க முடியுமா?

இந்தியாவில் புதிதாக கார் வாங்குபவர்கள் பலர் மாத சம்பளம் வாங்குபவர்கள் தான். இவர்கள் தங்கள் மாத சம்பளத்தை வைத்து என்ன காரை வாங்குவது என தெரியாமல் அதிகம் திண்டாடி வருகின்றனர். பெரும்பாலும் மாதம் ரூ30 ஆயிரம் முதல் ரூ1 லட்சம் வரை சம்பளம் வாங்குபவர்களாக இருக்கிறார்கள். இதில் யார் யார் தங்களது சம்பளத்திற்கு ஏற்ப என்ன காரை வாங்கலாம். என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

டாடா ரேஞ்சுக்கு இந்தியாவில் தர லோக்கலாக இறங்கும் டெஸ்லா!!

டெஸ்லா (Tesla) நிறுவனத்தின் முதல் கார் ஷோரூம் மும்பையில் திறக்கப்பட்டதுதான் தற்போது நாடு முழுக்க பேச்சாக உள்ளது. இத்தனைக்கும் டெஸ்லாவில் இருந்து தற்போதைக்கு 'மாடல் ஒய்' (Model Y) என்கிற ஒரு எலக்ட்ரிக் கார் (Electric Car) மட்டுமே எதிர்பார்த்ததை காட்டிலும் அதிக விலையில் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

இவியை வேகமா சார்ஜ் போட்டா மத்த பொருள் எல்லாம் புகைஞ்சிடும

இந்தியாவில் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்தும் நபர்களின் எண்ணிக்கை அதிகமாகிவிட்டது. வாகன தயாரிப்பு நிறுவனங்களும் ஏகப்பட்ட எலெக்ட்ரிக் கார்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். ஆனால் எலெக்ட்ரிக் கார்களை வீட்டில் ஃபாஸ்ட் சார்ஜ் போடும் போது இந்த விஷயத்தை கவனிக்காமல் வீட்டில் உள்ள மற்ற எலெக்ட்ரானிக் பொருட்கள் பாதிக்கப்படும் என்பது உங்களுக்கு தெரியுமா? இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.