சொகுசு கார்ல வந்து இறங்கிய நடிகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா கார்னிவல் (Kia Carnival). இது பிரீமியம் எம்பிவி (Premium MPV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். மிகவும் விலை உயர்ந்த கியா கார்னிவல் காரை, திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் பலரும் வைத்துள்ளனர். இதில், கிரிக்கெட் வீரர் சுரேஷ் ரெய்னா (Suresh Raina), பாலிவுட் நடிகர் சங்கி பாண்டே (Chunky Panday) மற்றும் பாலிவுட் பாடகர் சுனிதி சௌகான் (Sunidhi Chauhan) போன்றவர்கள் எல்லாம் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

எப்படி இருந்த டாடா மோட்டார்ஸ் இப்போ இப்படி ஆயிடுச்சு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), மஹிந்திரா (Mahindra) இரண்டுமே இந்தியாவை சேர்ந்த முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்கள் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு கார்கள் விற்பனையில் ஜொலித்துக் கொண்டிருக்கும் இந்த நிறுவனங்களுக்கு இடையே சமீப மாதங்களாக பலத்த போட்டி நிலவி வருகிறது. இதில், கடந்த ஜனவரி மாத விற்பனையில் டாடா மோட்டார்ஸை அதிர்ச்சிக்குள்ளாக்கும் வகையில் அதனை மஹிந்திரா முந்தியிருந்த நிலையில், கடந்த பிப்ரவரி மாத விற்பனையில் என்ன நடந்துள்ளது என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

1.60 லட்சம் பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

மாரித்தி சுசுகி 2025 பிப்ரவரியில் 1,99,400 அலகு விற்பனையைப் பதிவு செய்துள்ளது, இது வலுவான உள்நாட்டு சந்தையையும் வேறுபட்ட பிரிவு செயல்திறன்களையும் எடுத்துக்காட்டுகிறது.

போர்ஷே காரை குப்பை தொட்டியில் வீசிய இளைஞர்..

கார் காதலர்கள் மத்தியில் நல்ல பெயரைக் கொண்ட கார் தயாரிப்பு நிறுவனமாக போர்ஷே (Porsche) உள்ளது. இதுமட்டுல்ல இதன் தயாரிப்பு என்றாலே கண்களை மூடிக் கொண்டு வாங்குபவர்களும் மிக அதிகமாக இருக்கின்றனர். ஆனால், நிறுவனத்தின் கார்களின் விலை மிக மிக அதிகம் என்பதால் பெரும் செல்வந்தர்களுக்கு மட்டுமே எட்டக் கூடிய கனியாக அந்த நிறுவனத்தின் தயாரிப்புகள் இருக்கின்றன. இந்த மாதிரியான நிறுவனம் தயாரித்த ஓர் விலை உயர்ந்த காரையே இளைஞர் ஒருவர் தற்போது குப்பைத் தொட்டியில் வீசிச் சென்றிருக்கின்றார்.
Advertisement

யார் பார்த்த வேலைனு தெரியல! வீடு தேடி வந்த போலீஸ்காரர்கள்

கார் மாடிஃபிகேஷன் (Car Modification)-களினால் எவ்வளவு ஆபத்துகள் உள்ளன என்பதை நமது தளத்தில் தொடர்ச்சியாக கூறிக்கொண்டு இருந்தாலும், ஒருபக்கம் கார்களை தங்களது விருப்பத்திற்கேற்ப மாடிஃபிகேஷன் செய்துக் கொள்வது ஒருபக்கம் நடைபெற்றுக் கொண்டுதான் இருக்கிறது. ஒரு சிலர் 'கெத்து' என நினைத்துக் கொண்டு இவ்வாறு செய்கின்றனர். ஆனால், அவர்களுள் பெரும்பாலானவர்கள் விரைவாகவே போலீசாரிடம் சிக்கிவிடுகின்றனர். அவ்வாறுதான், இங்கு ஒருவர் தனது காரில் எக்ஸாஸ்ட் குழாய் (Exhaust Pipe)-ல் இருந்து நெருப்பு வெளிவரும் வகையில் மாற்றம் செய்துள்ளார். அதன்பின் என்ன நடந்தது என்பதை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சாலையில் எல்லாரும் ஒரு நிமிஷம் நின்னு பார்த்துட்டு போனாங்க!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), பிஇ 6 (BE 6) ஆகும். ஏற்கனவே விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு விட்ட இந்த எலக்ட்ரிக் காரை மஹிந்திரா நிறுவனம் மீண்டும் சோதனை ஓட்டத்தில் உட்படுத்தி உள்ளது. சமீபத்தில் விற்பனைக்கு வந்த எலக்ட்ரிக் கார் மீண்டும் சாலையில் ஓட்டி பார்க்கப்பட்டு சோதனை செய்யப்பட்டு இருப்பது உங்களில் சிலருக்கு விசித்திரமானதாக தோன்றலாம். வாருங்கள் இதனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

இசை புயலுக்கு இந்த காரை இவ்ளோ புடிச்சு போச்சா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் இந்தியாவின் மின்சார வாகன பிரிவை அலங்கரிக்கும் விதமாக இரண்டு எலெக்ட்ரிக் கார் (Electric Car) மாடல்களை சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) இந்த கார் மாடல்களையே அது நாட்டில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இதற்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. குறிப்பாக, தொழிலதிபர்கள் மற்றும் பிரபலங்கள் மத்தியிலும் இந்த எலெக்ட்ரிக் கார்களுக்கு மிக சிறப்பான டிமாண்ட் கிடைக்கத் தொடங்கி இருக்கின்றது.

வெள்ளை கலர் காரில் வந்து இறங்கிய தேவதை!

இந்தியாவில் திரையுலக நடிகைகள் என்றால், விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் பயணம் செய்ய வேண்டும் என்பது எழுதப்படாத விதியாக உள்ளது. ஆனால் விதிவிலக்காக ஒரு சில நடிகைகள் மட்டும் எளிமையான கார்களில் பயணிக்கின்றனர். ஷ்ரத்தா கபூர் (Shraddha Kapoor), சாரா அலி கான் (Sara Ali Khan) போன்ற நடிகைகளை, இதற்கு உதாரணமாக கூறலாம். இவர்களில் ஷ்ரத்தா கபூர், மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) காரில் அடிக்கடி பயணிக்கிறார். மறுபக்கம் சாரா அலி கானை, மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto) காரில் அடிக்கடி பார்க்க முடிகிறது.

ரூ.1.12 லட்சத்தில் நியூமரோஸ் டிப்ளோஸ் மேக்ஸ் இ-ஸ்கூட்டர்!!

நியூமரோஸ் மோட்டார்ஸ் (Numeros Motors), எலக்ட்ரிக் வாகனங்களுக்கான பாகங்களை உற்பத்தி செய்வதில் நிபுணத்துவம் வாய்ந்த நிறுவனம். இந்த நிறுவனத்தில் இருந்து புதியதாக 'டிப்ளோஸ் மேக்ஸ்' (Diplos Max) என்கிற பெயரில் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆனால், இந்த எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்குவதில் ஒரு சிறிய பிரச்சனை உள்ளது. அப்படி என்ன மாதிரியான பிரச்சனை அது என்பதையும், புதிய நியூமரோஸ் டிப்ளோஸ் மேக்ஸ் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

சென்னையில் தயாரிக்கப்பட்ட சொகுசு கார் விற்பனைக்கு அறிமுகம்!

பிப்ரவரி மாதத்தின் இறுதி நாளான இன்று பிரபல கார் உற்பத்தி நிறுவனம் புதுமுக கார் மாடலை நாட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. பிஎம்டபிள்யூ நிறுவனமே மாதத்தின் கடைசி நாளில் புதுமுக காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கும் அந்த நிறுவனம் ஆகும். இது புதிய 3 சீரிஸ் லாங் வீல்பேஸ் மாடலையே இந்தியாவில் அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இது ஓர் உள்ளூரில் வைத்து தயாரிக்கப்பட்ட சொகுசு கார் மாடல் ஆகும். சென்னையில் வைத்தே இந்த கார் மாடலை அவர்கள் தயாரித்து இருக்கின்றனர்.

ஏசர் ஃபாஸ்டர் விருதுகளை பெற போகும் கார் & பைக்குகள் எவை?

சென்னையின் மெட்ராஸ் மோட்டார் ரேஸ் டிராக் (Madras Motor Race Trcak)-இல் நடைபெற்ற ஏசர் ஃபாஸ்டர் விருதுகள் (Acer FASTER Awards) நிகழ்ச்சி வெகு விமர்சையாக நடைபெற்று முடிந்துள்ளது. தொடர்ந்து 4வது ஆண்டாக நடைபெற்ற இந்த விருதுகள் வழங்கும் நிகழ்ச்சியில் வழக்கம்போல் நமது டிரைவ்ஸ்பார்க் குழுவும் பங்கேற்றது. இந்த நிகழ்ச்சியின் முக்கிய அம்சமாக, பல்வேறு கார் & பைக்குகள் சோதனை செய்து பார்க்கப்பட்டன. இந்த சோதனைகளின் முடிவுகள் எப்போது அறிவிக்கப்படும் என்பது குறித்த விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வித்ததே 312 யூனிட்டுதான் இதையே இவ்ளோ பெருசா பேசுறாங்களா!

இந்த பிப்ரவரி மாதம் நிறைவுற இன்னும் ஒரு சில மணி நேரங்களே உள்ளன. இந்த மாதிரியான சூழலில் வாகன உற்பத்தியாளர்கள் சிலர் 2025 பிப்ரவரி மாத விற்பனை விபரங்களை வெளியிட தொடங்கி இருக்கின்றனர். அந்தவகையில், ஒடைசி எலெக்ட்ரிக் (Odysse Electric) நிறுவனம் அதன் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. அது வெளியிட்டு இருக்கும் தகவலின்படி 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தமாக 312 யூனிட்டுகள் வாகனங்களை அது விற்பனைச் செய்திருப்பது தெரிய வந்திருக்கின்றது.
Advertisement

பாகிஸ்தான் வீரர்களிடம் காஸ்லியான காரெல்லாம் இருக்குதா?

நடந்து வரும் ஐசிசி சாம்பியன்ஸ் கோப்பை டிக்கெட் போட்டியில் இருந்து பாகிஸ்தான் அணி பரிதாபமான நிலையில் வெளியேறி உள்ளது. முதல் இரண்டு போட்டிகள் பாகிஸ்தான் அணி பரிதாபமாக தோல்வி அடைந்த நிலையில், மூன்றாவது போட்டி நடக்காமலேயே அந்த அணி வெளியேறியுள்ளது. பாகிஸ்தானில் வைத்து இந்த போட்டிகள் நடந்தாலும் சொந்த மண்ணிலேயே இந்த அணி வெளியேற்றப்பட்டது ரசிகர்களுக்கு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் அந்நாட்டின் கிரிக்கெட் வீரர்கள் எவ்வளவு காஸ்ட்லியான கார்களை வைத்திருக்கிறார்கள் என்ற தகவல் பலரை கவர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஆல்டோ கே10 அனைத்து வேரியண்டிலும் 6 ஏர்பேக்குகள் கட்டாயம்!

கார்களில் பயணிகளின் பாதுகாப்பிற்காக வழங்கப்படும் மிக முக்கியமான அம்சங்களில் 'ஏர் பேக்' (Airbag)-ம் ஒன்றாகும். இது விபத்தின்போது பலூன் போன்று விரிந்து உயிர்களைப் பாதுகாக்கும். நம்முடைய தலை மற்றும் மார்பகம் காரினுள் உள்ள பாகங்களின் மீது வேகமாக மோதுவதை தவிர்த்தே அவை உச்சபட்ச பாதுகாப்பை வழங்குகின்றன. இத்தகைய ஓர் அம்சத்தையே மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம் அதன் விலை குறைவான கார் மாடல் ஒன்றில் அதிக எண்ணிக்கையில் வழங்க முன் வந்திருக்கின்றது.

டிராயர் உடன் காரில் இருந்து இறங்கிய மன்னர் குடும்ப வாரிசு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்5 (BMW X5). சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த மிகவும் விலை உயர்ந்த பிஎம்டபிள்யூ எக்ஸ்5 காரை, திரையுலக நட்சத்திரங்கள் பலரும் வைத்துள்ளனர். பாலிவுட் நடிகர்கள் சுனில் ஷெட்டி (Suniel Shetty) மற்றும் ராகவ் ஜூயல் (Raghav Juyal) போன்றவர்களிடம், பிஎம்டபிள்யூ எக்ஸ்5 இருக்கிறது. இந்த வரிசையில் பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான ஷாருக்கானிடமும் (Shah Rukh Khan) ஒரு சமயத்தில் பிஎம்டபிள்யூ எக்ஸ்5 கார் இருந்தது.

உங்க கார் பெட்ரோலை குடிக்குதா? இதை பண்ணுங்க

ஏசி பயன்பாடு அதிகரிப்பிலிருந்து டயர் அழுத்தம் வரை, கோடை காலம் கார் மைலேஜை எவ்வாறு பாதிக்கிறது என்பதை ஆராயுங்கள். வெப்பமான மாதங்களில் எரிபொருள் திறனை பராமரிக்க உதவிக்குறிப்புகளை அறிக.

ஹெல்மெட் இன்றி நடு இரவில் பெண்களின் பைக் ரைடு!!

பொதுவாகவே, பெண்கள் அதிகமாக மோட்டார்சைக்கிள்களை ஓட்டுவது இல்லை. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன. இன்றைய மாடர்ன் உலகில் இந்த நிலை கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது என்றாலும், இந்தியாவில் இன்னமும் நிறைய பெண்கள் பைக் ஓட்ட தயக்கம் காட்டுவதை பார்க்க முடிகிறது. ஆனால், இங்கு சில இந்திய பெண்கள் நடு ராத்திரியில் பவர்ஃபுல்லான ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) பைக்குகளை ஓட்டி மாஸ் காட்டியுள்ளனர். இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

மார்ச் மாசம் வரப்போகும் கார்கள் இது தான்

மார்ச் 2025 இல் இந்தியாவில் அறிமுகமாகும் மின்சார வாகனங்களின் அற்புதமான வரிசையை ஆராயுங்கள், இதில் மாரூதியின் முதல் EV, டாடா ஹாரியர் EV மற்றும் பல.

சொன்னதவிட கம்மி விலைக்கு விற்பனைக்கு கொண்டு வந்திருக்காங்க!

பிரபல சீன செல்போன் மற்றும் வீட்டு உபயோகப் பொருட்கள் உற்பத்தி நிறுவனமான ஜியோமி (Xiaomi), தற்போது மின்சார கார் உற்பத்தியாளராகவும் உருவெடுத்திருக்கின்றது. நிறுவனம் அதன் புதிய தயாரிப்பான எஸ்யூ7 அல்ட்ரா (SU7 Ultra) எனும் கார் மாடலை அதிகாரப்பூர்வமாக விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. சீன சந்தையிலேயே இந்த காரை அது விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றது. இதற்கு அறிமுகமாக 5 லட்சத்து 29 ஆயிரத்து 999 யுவான்கள் விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது.

கியா இவி4 எலெக்ட்ரிக் கார் வெளியீடு! இதோ முழு விபரம்!

கியா (Kia) நிறுவனம் ஓர் முழு சார்ஜில் 630 கிமீ ரேஞ்ச் தரக் கூடிய புதுமுக எலெக்ட்ரிக் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இவி4 (EV4) எனும் கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. விரைவில் இந்த காரை கியா நிறுவனம் விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இதை முன்னிட்டே இந்த காரை கியா நிறுவனம் தற்போது வெளியீடு செய்திருக்கின்றது. இந்த காரை இரண்டு விதமான அவதாரங்களில் விற்பனைக்கு வழங்க இருக்கின்றது, கியா.
Advertisement

செல்போன் மாதிரி ஆளுக்கு ஒரு கார் வாங்குற நேரம் வந்துடுச்சு

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை வளர்ச்சி பாதையில் உள்ளது, பயணிகள் வாகன விற்பனை 2026 இல் 4-7% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது, இரண்டு சக்கர வாகன விற்பனை 6-9% வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விலை உயர்ந்த கார்ல வந்தது அவங்களா!

இந்தியாவின் கிரிக்கெட் உலகிற்கும், பாலிவுட் திரை துறைக்கும் எப்போதுமே நெருங்கிய தொடர்பு இருந்து வருகிறது. கிரிக்கெட் வீரர்கள் பலர், பாலிவுட் நடிகைகளை திருமணம் செய்துள்ளனர். விராட் கோஹ்லி - அனுஷ்கா சர்மா (Virat Kohli - Anushka Sharma) தம்பதியினரை இதற்கு ஒரு உதாரணமாக நம்மால் கூற முடியும். இந்தியாவின் முன்னணி கிரிக்கெட் வீரர்களில் ஒருவராக இருக்கும் விராட் கோஹ்லி, பாலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவரான அனுஷ்கா சர்மாவை, கடந்த 2017ம் ஆண்டு திருமணம் செய்தார்.

கம்மிவிலையில் இப்படி ஒரு இவி காரா?

2025 கியா EV டேயில் அறிமுகப்படுத்தப்பட்ட கியா EV2 கான்செப்ட், புதுமையான வடிவமைப்பு, தொழில்நுட்பம் மற்றும் 2026 ஆம் ஆண்டு உலகளாவிய வெளியீட்டுத் திட்டங்களை வெளிப்படுத்துகிறது.

எத்தனை நாள் கோபமோ... லாரி டிரைவரிடம் இதை எதிர்பார்க்கல!!

டிவிஎஸ் அப்பாச்சி (TVS Apache), இந்தியாவின் பிரபலமான மோட்டார்சைக்கிள்களுள் ஒன்று. வேகமாக இயங்கக்கூடிய பைக்குகளாக அப்பாச்சி பைக்குகள் விளங்குவதால், இந்த பைக்குகளை வாங்கும் கஸ்டமர்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்த வண்ணம் உள்ளது. இந்த வகையில், அப்பாச்சி பைக்கை வாங்கி பயன்படுத்தி வந்த இளைஞர் ஒருவர் அதில் நடுரோட்டில் சாகசத்தில் ஈடுப்பட்ட போது தவறி கீழே விழுந்துள்ளார். அப்போது அருகில் சென்ற லாரியின் சக்கரத்துக்கு மிக நெருக்கமாக அந்த இளைஞர் விழும் பதைபதைக்க வைக்கும் காட்சிகள் இணையத்தில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளன.

டூ-வீலரில் ஹைபிரிட் டெக்னாலஜியா!.. யமஹா சம்பவம் பண்ண போது!

வாகனங்களை அதிகம் மைலேஜ் தரக் கூடியதாக மாற்றக் கூடிய ஓர் தொழில்நுட்பமே ஹைபிரிட் (Hybrid) ஆகும். இந்த அம்சம் இப்போது கார்களிலேயே மிக அதிகளவில் வழங்கப்படுகின்றது. மாருதி சுஸுகி, டொயோட்டா போன்ற நிறுவனங்களின் கார்களிலேயே இந்த அம்சம் மிக தாராளமாக வழங்கப்படுகின்றது. இதேபோல், விலை உயர்ந்த ஆடம்பர கார்களிலும் இந்த அம்சம் வழங்கப்படுகின்றது. இத்தகைய அம்சத்தையே டூ-வீலர்களில் வழங்கும் முயற்சியில் களமிறங்கி இருக்கின்றது, உலக புகழ்பெற்ற இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான யமஹா (Yamaha).