ரூ.2 லட்சத்தில் புதிய யமஹா ஆர்2 பைக்... புக்கிங் துவங்கியது

இளைஞர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள புதிய யமஹா ஆர்2 பைக்கிற்கு இந்தியாவில் முன்பதிவு துவங்கப்பட்டுள்ளது. ரூ.10,000 செலுத்தி டீலர்களில் முன்பதிவு செய்து கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படுகிறது.

மின்சார இருசக்கர வாகன விற்பனையில் கலக்கிய நிறுவனங்கள்!

கடந்த மாதம் இந்தியாவில் மின்சார ஸ்கூட்டர் மற்றும் பைக் விற்பனை புதிய உச்சத்தை தொட்டுள்ளது. ஜூலையில் மின்சார இருசக்கர வாகனங்களின் சில்லறை விற்பனையானது 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை கடந்துள்ளது. இந்திய வாகன டீலர்கள் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள தரவுகளின்படி, கடந்த மாதத்தில் 2,04,362 மின்சார இருசக்கர வாகனங்கள் பதிவு செய்யப்பட்டுள்ளன.

கருப்பு சிறுத்தை போல மிரட்டும் புதிய ஹூண்டாய் எக்ஸ்டர்!!

பண்டிகை காலத்தில் புதிய கார் வாங்குவோரை கவரும் வகையில், ஹூண்டாய் எக்ஸ்டர் எஸ்யூவியின் ஸ்பெஷல் எடிசன் மாடல் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. வழக்கமான எக்ஸ்டர் எஸ்யூவியைவிட தோற்றத்தில் சில குறிப்பிட்ட வசீகர அம்சங்களுடன் இந்த மாடல் வந்துள்ளது. ரூ.8.13 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள இந்த புதிய ஸ்பெஷல் எடிசன் மாடல் குறித்த விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

மின்சார ஸ்கூட்டர் வாங்குபவர்களுக்கு குட்நியூஸ்!

மின்சார இருசக்கர வாகனங்களை வாங்குவோர் மத்தியில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட மத்திய அரசின் PM E-DRIVE சிறப்பு ஊக்கத்தொகைத் திட்டத்திற்கான காலக்கெடு மேலும் நீட்டிக்கப்பட்டுள்ளது. இதன்படி, 2028ம் ஆண்டு மார்ச் 31ந் தேதி வரை இந்த திட்டம் செயல்பாட்டில் இருக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இது மின்சார இருசக்கர வாகனங்கள் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரத்தில், பல புதிய நிபந்தனைகளுடன் இந்த திட்டம் நடைமுறைக்கு வந்துள்ளது.
Advertisement

புதிய மஹிந்திரா பிஇ-6 ஸ்போர்டெக் எடிசன் டீசர் வெளியீடு

ஆண்டுதோறும் ஆகஸ்ட் 15ந் தேதி சுதந்திர தினத்தன்று மஹிந்திரா நிறுவனம் தனது வாகன ரசிகர்களுக்காக பல்வேறு புதிய விஷயங்களையும், கார் மாடல்களையும் வெளியிடுவது வழக்கமாக வைத்துள்ளது. அந்த வகையில், வரும் 15ந் தேதி சுதந்திர தினத்தன்றும் மஹிந்திரா சில புதிய மாடல்களை வெளியிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதன்படி, கூடுதல் சிறப்பம்சங்களுடன் பிஇ6 எலெக்ட்ரிக் எஸ்யூவியின் புதிய மாடலை வரும் 15ந் தேதி மஹிந்திரா அறிமுகம் செய்ய உள்ளது. இதற்காக, மஹிந்திரா நிறுவனம் டீசரையும் வெளியிட்டுள்ளது.

புதிய எம்ஜி ஹெக்டர் ஹாக் குறித்த 7 முக்கிய விஷயங்கள்!!

இந்தியாவில் 7 சீட்டர் கார்களுக்கான வரவேற்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த ரகத்தில் பல புதிய மாடல்கள் பிரிமீயம் அம்சங்களுடன் இந்த பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்யப்பட உள்ளன. அதில், எம்ஜி மோட்டார் நிறுவனத்திடம் இருந்து வரும் ஹெக்டர் ஹாக் எஸ்யூவி பெரிய எதிர்பார்ப்பை வாடிக்கையாளர் மத்தியில் ஏற்படுத்தி உள்ளது.

வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு காப்புரிமை பதிவு

வியட்நாமை சேர்ந்த வின்ஃபாஸ்ட் மின்சார வாகனத் தயாரிப்பு நிறுவனம் அடுத்து ஒரு புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு இந்தியாவில் வடிவமைப்புக்கான காப்புரிமை பதிவு செய்துள்ளது. ரசாத் (Rasad) என்ற பெயரில் குறிப்பிடப்படும் கான்செப்ட் மாடலின் அடிப்படையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மேக்ஸி ஸ்டைல் டிசைனில் இருக்கிறது.

டீசலிலும் எத்தனால் கலந்து சோதனை நடத்திய மத்திய அரசு!

பெட்ரோலில் எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், டீசலிலும் எத்தனால் கலந்து பயன்படுத்தும் திட்டம் குறித்து மத்திய அரசு ஆய்வு செய்து வருகிறது. இந்த நிலையில், அண்மையில் டீசலில் எத்தனால் கலப்பு செய்வதால் அதன் குறைந்தபட்ச தீப்பற்றும் புள்ளி மிகவும் குறைந்ததால், இந்த சோதனை எதிர்பார்த்த தரத்தை எட்டவில்லை. எனவே, எத்தனால் டீசலை பயன்பாட்டுக்கு கொண்டு வர முடியாது என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.

ரூ.13.99 லட்சத்தில் புதிய டுகாட்டி மான்ஸ்ட்டர் சூப்பர் பைக்

இந்தியாவின் சூப்பர் பைக் சந்தையில் பிரபலமான தேர்வாக இருந்து வரும் டுகாட்டி மான்ஸ்ட்டர் பைக் கூடுதல் அம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட மாடலாக விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய பைக் மான்ஸ்ட்டர் வி2 மற்றும் மான்ஸ்ட்டர்+ வி2 என்ற இரண்டு மாடல்களில் வந்துள்ளது.

எலெக்ட்ரிக் காராக மீண்டும் வருகிறதா டாடா நானோ?

ஒரு லட்ச ரூபாய் கார் என்ற பெருமையுடன் உலகையே திரும்பி பார்க்க வைத்த டாடா நானோ கார் மீண்டும் எலெக்ட்ரிக் கார் மாடலாக அறிமுகம் செய்யப்படும் வாய்ப்பு எழுந்துள்ளது. இதனை டாடா மோட்டார்ஸ் டிசைன் பிரிவுத் தலைவர் அஜய் ஜெயின் ஆமோதிக்கும் வகையில் தனது கருத்தை வெளிப்படுத்தி உள்ளார்.

55 லிட்டர் பெட்ரோலுக்கு 1,980 கி.மீ. பயணித்த நிஸான் கார்

எரிபொருள் விலையால் இன்னல் படும் வாகன உரிமையாளர்களுக்கு தீர்வு கிடைக்கும் வகையில், நிஸான் நிறுவனம் உருவாக்கியிருக்கும் e-POWER தொழில்நுட்பம் உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. இந்த தொழில்நுட்பத்துடன் இயக்கப்பட்ட நிஸான் காஷ்கய் இ-பவர் எஸ்யூவி, ஒரே ஒரு முழு டேங்க் பெட்ரோலில் 1,980 கி.மீ. தூரம் பயணித்து கின்னஸ் உலக சாதனை படைத்துள்ளது.

E20 வேண்டாம்? எத்தனால் இல்லாத பெட்ரோல் எங்கு கிடைக்கும்?

எத்தனால் கலப்புடன் விற்பனை செய்யப்படும் E20 பெட்ரோல் தொடர்பான விவாதங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில், "எத்தனால் கலக்காத பெட்ரோல் இன்னும் கிடைக்கிறதா?" என்ற கேள்வி கார் மற்றும் பைக் உரிமையாளர்களிடம் எழுந்துள்ளது. குறிப்பாக E20 பயன்படுத்துவதில் சந்தேகம் கொண்ட பழைய வாகன உரிமையாளர்கள், மாற்று எரிபொருள் குறித்து தேடி வருகின்றனர்.
Advertisement

மாருதியிடம் இருந்து அடுத்தடுத்து வரும் 7 புதிய எஸ்யூவிகள்!

இந்தியாவில் கார் என்றாலே ஒரு காலத்தில் மாருதி சுஸுகி என்ற நிலை இருந்தது. குறிப்பாக சிறிய கார்கள், குறைந்த விலை, அதிக மைலேஜ், எளிதான பராமரிப்பு என இந்திய குடும்பங்களின் தேவையை சரியாக புரிந்துகொண்ட நிறுவனமாக மாருதி இருந்தது. ஆனால் அந்த நிலை இப்போது கொஞ்சம் கொஞ்சமாக மாறி வருகிறது. இன்று புதிய கார் வாங்கும் பலரின் முதல் தேர்வு ஹேட்ச்பேக் என்ற நிலை மாறி, எஸ்யூவிதான் முதன்மையான தேர்வாக மாறியுள்ளது. அதிக இடவசதி, கம்பீரமான தோற்றம், இந்திய சாலை நிலைகளுக்கு ஏற்ற க்ரவுண்ட் கிளியரன்ஸ், கைகளுக்கு தோதான பட்ஜெட் போன்றவை வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்க காரணமாக உள்ளது.

E20 எஃபெக்ட்? பெட்ரோல் கார்களுக்கு மவுசு குறைகிறது!

இந்திய கார் சந்தையில் பெட்ரோல் கார்களுக்கு இருந்து வந்த மவுசு மெல்ல குறைந்து வருவது ஜூலை மாத விற்பனை தரவுகள் மூலமாக தெரிய வந்துள்ளது. குறிப்பாக E20 பெட்ரோல் தொடர்பாக வாகன உரிமையாளர்கள் மற்றும் கார் வாங்குபவர்கள் மத்தியில் தொடர்ந்து நிலவி வரும் சந்தேகங்களுக்கு இடையே, மாற்று எரிபொருள் கார்களை நோக்கி வாடிக்கையாளர்கள் கவனம் திரும்பியுள்ளதை கடந்த மாத விற்பனை தரவுகள் வெளிப்படுத்துகிறது.

ஹோண்டாவின் புதிய கார்களை உருவாக்கப்போகும் டாடா டெக்னாலஜீஸ்!

இந்தியாவில் கார் சந்தையில் நீண்ட காலமாக வர்த்தகம் செய்து வந்தாலும் கடும் போட்டியால் குறிப்பிடத்தக்க விற்பனையை பெற முடியாத நிலையில் ஹோண்டா கார் நிறுவனம் உள்ளது. இந்த நிலையில், இந்தியா மற்றும் உலகளாவிய சந்தையில் விற்பனையை வலுப்படுத்தும் திட்டத்தில் ஹோண்டா அதிரடி முடிவு ஒன்றை எடுத்துள்ளது. அதன்படி, புதிய தலைமுறை கார்களை உருவாக்குவதற்கான புதிய கட்டமைப்புக் கொள்கை மற்றும் கார் உருவாக்க பொறியியல் பணிகளை மேற்கொள்வதற்கான பணியை இந்தியாவை சேர்ந்த டாடா டெக்னாலஜீஸ் நிறுவனத்திடம் ஒப்படைக்க உள்ளதாக நிக்கெய் ஆசியா (Nikkei Asia) செய்தி வெளியிட்டுள்ளது.

புதிய மஹிந்திரா தார் ஃபேஸ்லிஃப்ட் விரைவில் அறிமுகம்!

ஆஃப்ரோடு எஸ்யூவி பிரியர்களின் மிகச் சிறந்த தேர்வாக உள்ள மஹிந்திரா தார் விரைவில் மீண்டும் சில முக்கிய அப்டேட்டுகளுடன் அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏற்கனவே சாலை சோதனைகளுக்கு உட்படுத்தபட்டுள்ள இந்த 3 டோர் தார் எஸ்யூவியின் மேம்படுத்தப்பட்ட மாடல் இந்த மாதமே அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த புதிய பதிப்பு மூலமாக தார் எஸ்யூவியின் வடிவமைப்பிலும், வசதிகளிலும் குறிப்பிடத்தக்க மாற்றங்கள் கிடைக்க உள்ளன.

எலெக்ட்ரிக் பைக் மார்க்கெட்டில் முந்திக் கொள்ள ஹீரோ முடிவு

இந்தியாவின் மிகப்பெரிய இருசக்கர வாகன உற்பத்தியாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையில் நேரடியாக களமிறங்குவதற்கான பணிகளில் தீவிரமாக இறங்கி உள்ளது. அந்நிறுவனத்தின் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் வரும் 2027ம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஒரேவழி... விற்பனையை தூக்கி நிறுத்த கடைசி ஆயுதத்தை எடுத்த ஓலா

விற்பனையை தூக்கி நிறுத்துவதற்கான தீவிர முயற்சிகளில் ஓலா எலக்ட்ரிக் நிறுவனம் ஈடுபட்டுள்ளது. அதன்படி, நேரடி விற்பனையில் கவனத்தை குறைத்து, டீலர்கள் மூலமாக விற்பனையை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதன்மூலம், வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமான சேவை மற்றும் தொடர்பை ஏற்படுத்திக்கொள்ள நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

ஹோண்டா கார்களுக்கு ரூ.2.45 லட்சம் வரை சலுகை

சுதந்திர தினத்தையொட்டி, இந்த மாதம் ஹோண்டா கார்களுக்கு சிறப்பு சேமிப்புச் சலுகைகள் வழங்கப்படுகின்றன. ஹோண்டா கார்ஸ் இந்தியா தனது அதிகாரப்பூர்வப் பக்கத்தில் அமேஸ், சிட்டி மற்றும் எலிவேட் கார்களுக்கான சிறப்பு ஆஃபர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன.

ரூ.9.99 லட்சத்தில் டாடா நெக்ஸான் CAMO எடிஷன் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பேக்ட் எஸ்யூவிகளில் ஒன்றான டாடா நெக்ஸான், தொடர்ந்து புதிய வேரியண்ட்டுகள் மற்றும் சிறப்பு எடிஷன்கள் மூலம் அப்டேட் செய்யப்பட்டு வருகிறது. அந்த வரிசையில், பண்டிகை காலத்தில் வாடிக்கையாளர்களை கவரும் வகையில், தற்போது நெக்ஸான் CAMO என்ற ஸ்பெஷல் எடிஷன் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய எடிஷன், வழக்கமான நெக்ஸானைவிட வித்தியாசமான தோற்றத்துடன் கூடுதல் தொழில்நுட்ப வசதிகளையும் வழங்குகிறது.
Advertisement

4 வால்வு எஞ்சினுடன் பஜாஜ் என்160 எஸ் பைக் அறிமுகம்!

இந்தியாவில் இளைஞர்கள் மத்தியில் நீண்ட காலமாக பிரபலமாக இருந்து வரும் பல்சர் வரிசையில், பஜாஜ் ஆட்டோ நிறுவனம் புதிய N160 S மற்றும் N160 SS மாடல்களை அறிமுகம் செய்துள்ளது. தற்போது 160சிசி பிரிவில் போட்டி அதிகரித்து வரும் நிலையில், புதிய எஞ்ஜின், ரைடிங் மோடுகள், ரைடு பை வயர் த்ராட்டில் கன்ட்ரோல் உள்ளிட்ட பல முக்கிய தொழில்நுட்ப அப்டேட்களுடன் இந்த இரண்டு மாடல்களும் களமிறங்கியுள்ளன.

E20 பெட்ரோலை தொடர்ந்து Bio-CNG... மத்திய அரசு அதிரடி

இந்தியாவில் பெட்ரோலில் 20 சதவீதம் எத்தனால் (E20) கலக்கும் திட்டத்தை நடைமுறைக்கு கொண்டு வந்த மத்திய அரசு, அடுத்ததாக பயோ சிஎன்ஜி திட்டத்தை செயல்படுத்த தீவிரமாக களமிறங்கி உள்ளது. இதற்காக, கோபர்தன் (Galvanizing Organic Bio-Agro Resources Dhan) எனப்படும் திட்டத்தை நாடு முழுவதும் விரிவுபடுத்தும் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் வழங்கியுள்ளது. மேலும், வாகன எரிபொருள் பயன்பாட்டிலும் பெரிய அளவிலான மாற்று எரிபொருளை பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கும் வாய்ப்பு கிடைக்கும்.

ரூ.99,999 விலையில் புதிய E3 ட்ரியான் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்!

இந்தியாவில் குறைந்த விலையில் அதிக ரேஞ்ச் தரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான போட்டி தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில், பெங்களூரை சேர்ந்த E3 மொபிலிட்டி நிறுவனம் தனது புதிய ட்ரியான் (Trion) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ரூ.99,999 ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ஜூலையில் அதிகம் விற்பனையான இந்தியாவின் டாப்-10 கார்கள்!

இந்திய பயணிகள் வாகன சந்தை 2026 ஜூலை மாதத்தில் புதிய உச்சத்தை எட்டியுள்ளது. உற்பத்தியாளர்களிடமிருந்து டீலர்களுக்கு அனுப்பப்பட்ட கார்கள் கடந்த மாதம் 4.7 லட்சத்தை தாண்டி புதிய சாதனையை பதிவு செய்துள்ளன. இதனுடன், ஜூலை மாதத்தில் அதிகம் விற்பனையான டாப்-10 கார்கள் பட்டியலும் வெளியாகியுள்ளது.

கியா சொரென்டோ எஸ்யூவி பற்றிய 10 முக்கிய விஷயங்கள்!!

பிரிமீயம் அம்சங்களுடன் கூடிய எஸ்யூவி மாடல்களால் வாடிக்கையாளர்களை வசியம் செய்த கியா மோட்டார் நிறுவனம் அடுத்து முற்றிலும் பிரிமீயம் ரக எஸ்யூவி மாடலை இந்தியாவில் களமிறக்க ஆயத்தமாகி வருகிறது. வரும் செப்டம்பர் 4ந் தேதி இந்த புதிய மாடல் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட உள்ளது அதிகாரப்பூர்வமாக உறுதி செய்யப்பட்டு இருக்கிறது.