ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் காரின் லிமிடேட் எடிசன் மாடல் அறிமுகம்

இந்தியாவில் மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஃபோக்ஸ்வேகன் விர்ட்டஸ் (Volkswagen Virtus) காருக்கு நல்ல வரவேற்பு இருந்து வருகிறது. இந்த நிலையில், இந்த கார் இந்தியாவில் அறிமுகமாகி நான்கு ஆண்டுகள் நிறைவடைந்ததை முன்னிட்டு, தனித்துவமான கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய ஆனிவர்சரி எடிசன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது. இந்த புதிய லிமிடெட் எடிஷன் மாடலுக்கு எக்ஸ்ஷோரூம் விலையாக ரூ.19.20 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு இனி பெட்ரோல் கிடைக்காதா?!

இந்தியாவில் வாகன இன்சூரன்ஸ் இல்லாமல் சாலைகளில் செல்லும் வாகனங்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், அதைக் கட்டுப்படுத்த உச்சநீதிமன்றம் முக்கியமான பரிந்துரையை முன்வைத்துள்ளது. அதாவது, காலாவதியாகாத மூன்றாம் தரப்பு (Third-Party) இன்சூரன்ஸ் இல்லாத வாகனங்களுக்கு பெட்ரோல், டீசல் விற்பனையை கட்டுப்படுத்தும் சாத்தியம் குறித்து முன்னோடித் திட்டம் ஒன்றை தயாரிக்குமாறு மத்திய அரசுக்கு நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

புதிய ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் பெயர் வெளியானது

எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க திட்டமிட்டுள்ளோர் மத்தியில் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள குறைவான விலை ஏத்தர் ஸ்கூட்டரின் பெயர் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. கடந்த சில மாதங்களாக EL01 என்ற குறியீட்டுப் பெயரில் சோதனை செய்யப்பட்டு வந்த இந்த புதிய குடும்ப பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கு ஏத்தர் கோனார்க் (Ather Konarc) என்று பெயரில் விற்பனைக்கு வர இருக்கிறது. இதனை ஏத்தர் எனெர்ஜி நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி தருண் மேத்தா எக்ஸ் தளத்தின் மூலமாக டீசர் வீடியோவுடன் வெளியிட்டுள்ளார். "ஒரு புதிய பயணத்தின் தொடக்கம்" என்ற வாசகத்துடன் இந்த புதிய டீசர் மற்றும் பெயரை அவர் வெளியிட்டுள்ளார்.

புதிய மஹிந்திரா ஸ்கார்பியோ என் ஃபேஸ்லிஃப்ட் அறிமுகம்

இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவிகளில் ஒன்றான மஹிந்திரா ஸ்கார்பியோ N தற்போது கூடுதல் சிறப்பம்சங்களுடன் 2026 மாடலாக அப்டேட் செய்யப்பட்டு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. வெளிப்புற வடிவமைப்பில் பெரிய மாற்றங்கள் இல்லாவிட்டாலும், வாடிக்கையாளர்கள் நீண்ட நாட்களாக எதிர்பார்த்த பல வசதிகளை மஹிந்திரா நிறுவனம் இந்த ஃபேஸ்லிஃப்ட் மாடலில் சேர்த்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு ஆரம்ப விலையாக ரூ.13.69 லட்சம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

E20 பெட்ரோல் குறித்து அரசுக்கு சியாம் எழுதிய கடிதம் வாபஸ்?

E20 பெட்ரோல் தரம் குறித்து கடந்த சில வாரங்களாக வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும் விவாதங்களும் எழுந்து வருகின்றன. குறிப்பாக, E20 பெட்ரோல் நீண்டகால பயன்பாட்டில் எஞ்சினுக்கு பாதிப்பு ஏற்படுத்துமா, பழைய வாகனங்களில் செயல்திறன் குறையுமா என்ற கேள்விகள் தொடர்ந்து பேசப்பட்டு வருகின்றன. இந்த நிலையில், E20 எரிபொருள் தரம் தொடர்பாக மத்திய அரசுக்கு சியாம் என்று அழைக்கப்படும் இந்திய வாகன தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு (SIAM) எழுதிய கடிதம் வெளியாகி பெரும் கவனத்தை ஈர்த்தது. ஆனால், அந்தக் கடிதத்தை சியாம் அமைப்பு திடீரென திரும்பப் பெற்றதுடன், E20 பெட்ரோல் பயன்பாட்டுக்கு தங்களது முழு ஆதரவு இருப்பதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த திடீர் திசை மாற்றம் வாகன உரிமையாளர்கள் மத்தியில் மேலும் பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

வாகன மோதலை தவிர்க்கும் வி2வி தொழில்நுட்பம் கட்டாயமாகிறது?

சாலை விபத்துக்களை பெருமளவு குறைக்கும் நோக்கில் புதிய பாதுகாப்பு தொழில்நுட்பத்தை மத்திய அரசு முன்மொழிந்துள்ளது. கார், பைக், மட்டுமின்றி, பஸ், டிரக் உள்ளிட்ட அனைத்து வாகனங்களிலும் V2V என்று குறிப்பிடப்படும் இந்த வாகனங்களுக்கு இடையிலான எச்சரிக்கை தகவல் பரிமாற்றத் தொழில்நுட்பத்தை கட்டாயமாக பொருத்தப்பட வேண்டும் என்று மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வரைவு அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் கார்கள்.. டாடா பன்ச் அசத்தல்!

இந்தியாவின் மைக்ரோ எஸ்யூவி என்ற சிறிய கார் பிரிவில் டாடா பன்ச் முக்கிய தேர்வாக இருந்து வருகிறது. மாத விற்பனையில் தொடர்ந்து கலக்கலான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வரும் டாடா பன்ச் கார் தற்போது ஒட்டுமொத்தமான விற்பனையில் புதிய சாதனையை படைத்துள்ளது. ஆம், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபரில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த கார் வெறும் 5 ஆண்டுகளுக்குள் 8 லட்சம் யூனிட்டுகள் விற்பனையாகி புதிய மைல்கல்லை கடந்துள்ளது. மிகக் குறுகிய காலத்தில் இந்த சாதனையை எட்டிய எஸ்யூவிகளில் ஒன்று என்ற பெருமையை இந்த எஸ்யூவி பெற்றிருக்கிறது.

ஆகஸ்டில் இந்தியாவில் அறிமுகமாகும் புதிய பைக், ஸ்கூட்டர்கள்!

பண்டிகை கால சீசன் துவங்க இருக்கும் நிலையில், இருசக்கர வாகனம் வாங்க திட்டமிட்டுள்ளோருக்கு இனி மிகவும் பரபரப்பான மாதமாக இருக்கப் போகிறது. எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் முதல் உயர் செயல்திறன் கொண்ட ஸ்போர்ட்ஸ் பைக்குகள் வரை பல புதிய இருச்சகர வாகன மாடல்கள் இந்திய சந்தையில் அறிமுகமாக உள்ளன.

விற்பனையில் முதலிடத்தை பிடித்து புதிய வரலாறு படைத்த டிவிஎஸ்

தமிழ்நாட்டை சேர்ந்த டிவிஎஸ் நிறுவனம் கடந்த மாத மொத்த விற்பனையில் புதிய வரலாறு படைத்துள்ளது. நீண்ட காலமாக நாட்டின் மிகப்பெரிய இருசக்கர வாகனத் தயாரிப்பு நிறுவனங்களாக முதல் இரண்டு இடங்களில் இருந்த ஹீரோ மற்றும் ஹோண்டா நிறுவனங்களை பின்னுக்குத் தள்ளி பெரிய அளவிலான வித்தியாசத்தில் முதலிடத்தை பிடித்து அசத்தி உள்ளது.

ரூ.1 லட்சம் பட்ஜெட்டில் வரும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்

இந்திய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் முன்னோடி நிறுவனமான ஏத்தர் இதுவரை இளைஞர்களை கவரும் ஸ்போர்ட்டியான வகை மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கி வந்தது. முதல்முறையாக அதிக வாடிக்கையாளர் வட்டத்தை கவரும் விதமாக, குறைவான பட்ஜெட்டில் EL01 என்ற பெயரில் புதிய குடும்ப பயன்பாட்டுக்கான ஸ்கூட்டர் மாடலை களமிறக்க உள்ளது.

நம்பகமான டாப்-5 எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தை அதீத வளர்ச்சியை நோக்கி முன்னேறி வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மட்டும் மின்சார இருசக்கர வாகன விற்பனை 2 லட்சத்தை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது. வாடிக்கையாளர்கள் தற்போது ரேஞ்ச், விலை மட்டுமல்லாமல் வாங்கப்போகும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிராண்டு மீதான நம்பகத்தன்மை, சர்வீஸ் நெட்வொர்க், பேட்டரி வாரண்டி, நவீன தொழில்நுட்ப அம்சங்கள் மற்றும் மறுவிற்பனை மதிப்பு உள்ளிட்ட பல முக்கிய அம்சங்களை பார்த்துத்தான் வாங்குகின்றனர்.

புதிய மைல்கல்லை கடந்த மின்சார இருசக்கர வாகன விற்பனை!

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கான டிமான்ட் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. கடந்த ஜூலை மாதத்தில் மின்சார இருசக்கர வாகனங்களின் மாத விற்பனை முதல்முறையாக 2 லட்சம் யூனிட்டுகளை கடந்து புதிய மைல்கல்லை எட்டி உள்ளது.
Advertisement

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவிக்கு புக்கிங் துவங்கியது!

கியா மோட்டார்ஸ் நிறுவனம் தனது முதல் ஹைப்ரிட் எஸ்யூவியை மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர இருப்பதை அதிகாரப்பூர்வமாக இன்று உறுதி செய்துள்ளது. 7 பேர் செல்லும் இருக்கை வசதி கொண்ட இந்த புதிய மாடலின் டீசரை இன்று கியா மோட்டார்ஸ் வெளியிட்டுள்ளதுடன், இந்தியாவில் புக்கிங்கையும் அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது.

விற்பனையில் இந்தியாவின் டாப்-10 கார் நிறுவனங்கள்

நாட்டின் கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு கடந்த ஜூலையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் மட்டும் 4.7 லட்சம் பயணிகள் வாகனங்கள் டீலர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது கடந்த ஆண்டு ஜூன் மாதத்துடன் ஒப்பிடும்போது, 33 சதவீதம் உயர்வு கண்டுள்ளது. வழக்கம்போல் மாருதி சுஸுகி கார் நிறுவனம் மிகப்பெரிய வித்தியாசத்துடன் முதலிடத்தை தக்கவைத்துள்ளது.

புதிய ஹீரோ விடா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் அறிமுகம்!

வாடிக்கையாளர்களின் வசதியை கருத்தில்கொண்டு எளிதாக சார்ஜ் செய்யும் வசதியுடன் விடா விஎக்ஸ்2 எலெக்ட்ரி ஸ்கூட்டரின் புதிய வேரியண்ட்டை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. பேட்டரியை கழற்றி தூக்கிச் செல்ல வேண்டிய அவசியம் இல்லாத வீட்டு சார்ஜர் வசதியுடன் வந்துள்ள இந்த புதிய வேரியண்ட்டிற்கு ரூ.1.13 லட்சம் விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

E20 Petrol: லிட்டருக்கு ரூ.30 வரை மிச்சமா? அரசு விளக்கம்

E20 பெட்ரோல் பயன்படுத்தப்படுவதால் வாகனம் வைத்திருப்பவர்களுக்கு ஒவ்வொரு லிட்டருக்கும் 30 ரூபாய் வரை மிச்சம் ஏற்படுவதாக மத்திய அரசு புதிய தகவலை வெளியிட்டுள்ளது. நாடுமுழுவதும் பெரும்பான்மையான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் பிரதானமாக விற்பனை செய்யப்படுகிறது.

ஒரே மாதத்தில் பல நிறுவனங்கள் உச்சபட்ச விற்பனை பதிவு செய்தது

கடந்த ஜூலை மாதம் இந்திய கார் சந்தைக்கு வரலாற்று சிறப்புமிக்க மாதமாக அமைந்துள்ளது. இந்தியாவில் மொத்த கார் விற்பனை இதுவரை இல்லாத அளவுக்கு மிக உச்சபட்ச எண்ணிக்கையை பதிவு செய்து சாதனை படைத்துள்ளது. நாட்டின் முன்ணணி நிறுவனங்களான மாருதி சுஸுகி, ஹூண்டாய் மோட்டார்ஸ், டாடா மோட்டார்ஸ், கியா உள்ளிட்ட பெரும்பாலான நிறுவனங்கள் தங்களது உச்சபட்ச மாத விற்பனையை பதிவு செய்துள்ளனர்.

மாத விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டது ஹூண்டாய்

மாத விற்பனையில் இதுவரை இல்லாத அளவுக்கு புதிய உச்சத்தை தொட்டுள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ் இந்தியா நிறுவனம். உள்நாட்டு விற்பனையும், ஏற்றுமதியும் மிகப்பெரிய உச்சத்தை தொட்டு அந்நிறுவனத்திற்கு புதிய உத்வேகத்தை கொடுத்துள்ளது.

ஆகஸ்டில் அறிமுகமாகும் புதிய கார்கள்

பண்டிகை காலத்தின் அறிகுறியமாக கடந்த மாதமே புதிய கார் மாடல்களின் அறிமுகத்துடன் சில நிறுவனங்கள் பிள்ளையார் சுழி போட்டன. மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட், 9வது தலைமுறை டொயோட்டா ஹைலக்ஸ் பிக்கப் டிரிக், நிஸான் டெக்டான் மற்றும் ஹோண்டா இசட்ஆர்வி ஆகிய மாடல்கள் கடந்த மாதத்தில் முக்கிய மாடல்களாக அமைந்தன. இதைத்தொடர்ந்து, ஆகஸ்ட்டிலும் புதிய கார் மாடல்கள் விற்பனைக்கு தயாராகி வருகின்றன. குறிப்பாக, மஹிந்திரா, ஸ்கோடா, எம்ஜி மோட்டார் நிறுவனங்களின் புதிய மாடல்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளன. அந்த விபரங்களை தொடர்ந்து இந்த செய்தியில் பார்க்கலாம்.

மாத விற்பனையில் புதிய வரலாறு படைத்தது மாருதி சுஸுகி!!

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி ஜூலை மாத உள்நாட்டு விற்பனையில் புதிய உச்சத்தை தொட்டு சாதனை படைத்துள்ளது. கடந்த மாதம் 2 லட்சத்திற்கும் அதிகமான வாகனங்களை இந்திய சந்தையில் விற்பனை செய்து அசத்தி உள்ளது. இது அந்நிறுவனத்தின் மாத விற்பனையில் உச்சபட்ச எண்ணிக்கையாக அமைந்துள்ளது.
Advertisement

ஜூலையில் 22% உயர்ந்த எம்ஜி மோட்டார் விற்பனை!

எம்ஜி கார் நிறுவனத்தின் விற்பனை இந்தியாவில் இதுவரை இல்லாத உச்சபட்ச எண்ணிக்கையை தொட்டு அசத்தி இருக்கிறது. அந்த நிறுவனம் கடந்த ஜூலையில் 8,158 கார்களை டீலர்களுக்கு அனுப்பி உள்ளதாக தெரிவித்துள்ளது. கடந்த ஆண்டு ஜூலையுடன் ஒப்பிடும்போது இது 22 சதவீதம் அளவுக்கு உயர்ந்துள்ளது. மேலும், அந்நிறுவனத்தின் மாதாந்திர விற்பனையில் இதுவே அதிகபட்ச மொத்த விற்பனையாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒரே ஆலையில் 10 லட்சம் கார்கள் தயாரிக்கும் திறன் பெற்ற மாருதி

நாட்டின் மிகப்பெரிய கார் நிறுவனமான மாருதி சுஸுகி நிறுவனம் ஆண்டுக்கு 2 மில்லியன் கார்களுக்கு மேல் உற்பத்தி செய்து வருகிறது. கடந்த நிதி ஆண்டில் மட்டும் 23.4 லட்சம் கார்களை தயாரித்து பிரமிப்பில் ஆழ்த்தியது. உள்நாட்டு தேவை மட்டுமின்றி பல்வேறு நாடுகளுக்கும் இந்தியாவில் இருந்து கார்களை ஏற்றுமதியும் செய்து வருகிறது. எனவே, எதிர்கால வர்த்தக வாய்ப்புகளை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளும் விதமாக, இந்தியாவில் உள்ள தனது கார் ஆலைகளின் உற்பத்தித் திறனை மாருதி நிறுவனம் வெகுவாக உயர்த்தி வருகிறது.

சூடுபிடிக்கும் சிறிய கார் சந்தை.. கோட்டைவிடுகிறதா ஹூண்டாய்?

ஒரு காலத்தில் இந்தியாவின் சிறிய கார் சந்தையில் மாருதி நிறுவனத்திற்கு கடும் போட்டியை ஹூண்டாய் நிறுவனம் கொடுத்து வந்தது. ஹூண்டாய் நிறுவனத்தின் சான்ட்ரோ, i10, கிராண்ட் i10 போன்ற சிறிய கார்கள் மாருதி கார்களுக்கு மாருதிக்கு கடும் போட்டியை தந்ததுடன் வாடிக்கையாளர்களுக்கும் சிறந்த மாற்றுத் தேர்வாக இருந்து வந்தன.மேலும், மாருதி கார்களைவிட கூடுதல் பிரிமீயம் அம்சங்கள், வசதிகளுடன் சிறிய கார் வைத்திருப்போரையும் 'கெத்து' காட்ட வைத்தது. மாருதிக்கு அடுத்து நாட்டின் இரண்டாவது பெரிய கார் நிறுவனமாகவும் கோலோய்ச்சி வந்தது.

விலை குறைவான ஏத்தர் ஸ்கூட்டர் உற்பத்தி துவங்கியது!

மிகவும் குறைவான விலையில் எதிர்பார்க்கப்படும் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வரும் 29ந் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஏத்தர் கம்யூனிட்டி டே என்ற வருடாந்திர நிகழ்ச்சியில் இந்த ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட இருப்பது ஏற்கனவே உறுதியாகி இருக்கிறது. ஏத்தர் நிறுவனத்தின் ரிஸ்டா ஸ்கூட்டரைவிட விலை குறைவாக எதிர்பார்க்கப்படுவதால், புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்க இருப்போர் மத்தியில் அதிக ஆவலை ஏற்படுத்தி உள்ளது.

பெட்ரோலா, டீசலா, எலெக்ட்ரிக் காரா? எது சிறந்தது?

பண்டிகை காலம் நெருங்கி வரும் இவ்வேளையில் புதிய கார் வாங்குவதற்கு பலர் யோசித்து வருகிறார்கள். ஆனால், பெட்ரோல், டீசல், ஹைப்ரிட், எலெக்ட்ரிக் என எதை தேர்வு செய்வது என்பதில் குழப்பம் பலருக்கு உள்ளது. மேலும், E20 எரிபொருள் குறித்த குழப்பங்கள், எரிபொருள் மீதான மாசு விதிகள் கட்டுமையாக்கபட்டு வரும் நிலை, எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரி விலக்கு உள்ளிட்ட காரணங்களால் எரிபொருள் தேர்வில் பலர் குழப்பத்தில் உள்ளனர். இன்றைய சூழலை வைத்து பார்த்தால் தமிழ்நாட்டு குடும்பங்களுக்கு பெட்ரோல் காரே சிறந்த தேர்வாக நான் பரிந்துரை செய்வேன்.