ரூ.95,000ல் ஸ்பெஷலான டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் அறிமுகம்

பல்வேறு தனித்துவமான சிறப்பம்சங்களுடன் கூடிய டிவிஎஸ் ரெய்டர் 125 பைக் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரெய்டர் 125 டாக்டர் டூம் என்ற பெயரில் வந்துள்ள இந்த பைக்கிற்கு ரூ.95,320 எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இந்த ஸ்பெஷல் எடிசன் மாடலில் இடம்பெற்றிருக்கும் முக்கிய அம்சங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேனின் அசத்தும 10 விஷயங்கள்!

சுற்றுலா மற்றும் நீண்ட தூர பயணங்களுக்கு ஃபோர்ஸ் அர்பானியா வேன் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. ஒரு டிரிப் செல்கிறோம் என்றால் வாகனத்தில் ஏறி பயணித்து இறங்குவது வரை மிகச் சிறப்பான அனுபவத்தை வழங்க வேண்டும். அந்த வகையில், சிறப்பான இடவசதி, சொகுசு அம்சங்களுடன் காரில் செல்வதை விட மிகச் சிறந்த பயண அனுபவத்தை இந்த வேன் தரும் என்றால் மிகையாகாது. இந்த நிலையில், பயணிகளுக்கு கூடுதல் வசதிகளை வழங்கும் வகையில் ஃபோர்ஸ் அர்பானியாவின் புதிய டீலக்ஸ் மாடல் அண்மையில் அறிமுகம் செய்யப்பட்டது. ஏற்கனவே இருந்த மாடலுக்கு மாற்றாக வந்துள்ள இந்த புதிய மாடல் குறித்து வாடிக்கையாளர்கள் மத்தியிலும், சுற்றுலா திட்டமிடுவோர் மத்தியிலும் அதிக ஆவல் ஏற்பட்டுள்ளது. இந்த புதிய அர்பானியா மாடலின் சிறப்பான 10 விஷயங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

கூடுதல் சிறப்பம்சங்களுடன் யெஸ்டி பைக்குகள் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் தனது பைக் மாடல்களை இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது யெஸ்டி மோட்டார்சைக்கிள் நிறுவனம். வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், தனது அட்வென்ச்சர், ரோட்ஸ்டெர் மற்றும் ஸ்க்ராம்ப்ளர் ரக பைக் மாடல்களில் சில மாற்றங்களை செய்து 2026 மாடல்களாக கொண்டு வந்துள்ளது.

E20 பெட்ரோல் போட்டால் மைலேஜ் 6% வரை குறையுமா? அரசு விளக்கம்

E20 பயன்படுத்தினால் பழைய வாகன எஞ்சின்களில் பிரச்னை ஏற்படும்; மைலேஜ் குறையும் என்ற விவாவதம் தீவிரமடைந்து இருக்கும் நிலையில், இதுதொடர்பாக இரண்டு முக்கிய தகவல்களை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இது பழைய வாகனங்களை வைத்திருப்பவர்களை மேலும் கவலையில் ஆழ்த்தி உள்ளது.
Advertisement

எலெக்ட்ரிக் பஸ்களுக்கு பல்க் ஆர்டர் பெற்றது சுவிட்ச் !!

சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வரும் சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனம் 650 எலெக்ட்ரிக் பஸ்களை சப்ளை செய்வதற்கு பல்க் ஆர்டரை கைப்பற்றி உள்ளது. மும்பை மற்றும் புனே நகரங்களில் இயக்குவதற்காக 650 எலெக்ட்ரிக் பஸ்களை பயன்படுத்துவதற்காக சாய் க்ரீன் நிறுவனத்திற்கும், சுவிட்ச் மொபிலிட்டி நிறுவனத்திற்கும் இடையே ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது.

விரைவில் 7 சீட்டர் எஸ்யூவியை இந்தியாவில் களமிறக்குகிறது கியா

கியா சொரென்டோ 7 சீட்டர் எஸ்யூவி விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்படுவது அதிகாரப்பூர்வமாக இன்று உறுதியாகி உள்ளது. வாடிக்கையாளர் மத்தியில் அதிக வரவேற்பை பெற்ற செல்டோஸ் எஸ்யூவியைவிட விலை கூடுதலான பிரிமீயம் எஸ்யூவி ரகத்தில் இந்த புதிய மாடல் நிலைநிறுத்தப்படும்.

பிஎஸ்-3 வாகனங்களுக்கு மத்திய அரசு முக்கிய அறிவுறுத்தல்

கடந்த 2016ம் ஆண்டுக்கு முன்னர் தயாரிக்கப்பட்ட பிஎஸ்-3 வாகனங்கள் குறித்த ஒரு முக்கிய உண்மையை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்காரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். இந்த வாகனங்களை வைத்திருப்போர் என்ன செய்ய வேண்டும்; வாகனங்களில் ஏற்படும் பிரச்னை குறித்த தகவல்களையும் அவர் வெளியிட்டுள்ளார். அதன் விபரங்களை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.

முதல் 'மாஸ் மார்க்கெட்ட' எலெக்ட்ரிக் ஆஃப்ரோடு எஸ்யூவி

சீனாவை சேர்ந்த செர்ரி பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்களை இந்தியாவில் புதிய பிராண்டில் விற்பனை செய்ய ஜேஎஸ்டபிள்யூ நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அதன்படி, செர்ரி பிராண்டில் விற்பனையில் உள்ள ஐகார் வி23 என்ற ஆஃப்ரோடு எலெக்ட்ரிக் எஸ்யூவியை விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வர அந்நிறுவனம் ஆயத்தமாகி வருகிறது. இதுதான் இந்தியாவின் முதல் ஆஃப்ரோடு மின்சார எஸ்யூவி மாடலாக இருக்கும்.

மழை வெள்ளம் புகுந்ததால் டாடா கார் ஆலையில் உற்பத்தி நிறுத்தம்

மழை வெள்ளம் புகுந்ததால் குஜராத்தில் உள்ள டாடா கார் ஆலையில் உற்பத்திப் பணிகள் தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால், கார் டெலிவிரிப் பணிகளில் சிறிய அளவிலான தாமதம் ஏற்படும் நிலை ஏற்பட்டுள்ளது.

5.3 மீட்டர் நீளத்தில் ஆடியின் புதிய க்யூ9 எஸ்யூவி வெளியீடு!

ஆடி நிறுவனத்தின் க்யூ வரிசையில் பல எஸ்யூவி மாடல்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. அந்த வரிசையில் புதிதாக க்யூ9 என்ற பெயரில் பிரம்மாண்டமான எஸ்யூவி மாடல் வெளியிடப்பட்டுள்ளது. தற்போது விற்பனையில் இருக்கும் க்யூ7 எஸ்யூவியைவிட உயரிய ரகத்தில் இந்த புதிய மாடல் சந்தைக்கு வர இருக்கிறது.

கம்மியான பட்ஜெட்டில் டாப்-5 சிறிய கார்கள்!!

மாதாந்திர கார் விற்பனை தரவுகளின்படி, சிறிய கார்களின் விற்பனை தொடர்ந்து கணிசமாக உயர்ந்து வருகிறது. யாருமே எதிர்பாராத வகையில் கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனையின் வளர்ச்சி 78 சதவீதம் அதிகரித்துள்ளது. குறிப்பாக, முதல்முறையாக கார் வாங்குவோர் தற்போது எஸ்யூவி மாடல்களைவிட சிறிய வகையிலான ஹேட்ச்பேக் கார்கள் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளனர்.

டாடா பன்ச் இவி காருக்கு 5 நட்சத்திர பாதுகாப்பு தர மதிப்பீடு

பாரத் என்சிஏபி அமைப்பு நடத்திய பாதுகாப்பு தரத்தை மதிப்பிடும் மோதல் சோதனையில் டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் அதிகபட்சமான 5 நட்சத்திர மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது. டாடா பன்ச் எலெக்ட்ரிக் எஸ்யூவின் அனைத்து வேரியண்ட்டுகளுக்கும் இந்த பாதுகாப்பு தர மதிப்பீடு பொருந்தும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

E20 குறித்து இன்னொரு உண்மையை ஒப்புக்கொண்ட மத்திய அரசு!

நாட்டில் எத்தனை வாகனங்கள் இ20 பெட்ரோல் வாகனங்களுக்கு இணக்கமாக தயாரிக்கப்பட்டவை என்று மதிப்பீடு எதுவும் செய்வில்லை என்று நாடாளுமன்றத்தில் மத்திய அரசு தெரிவித்துள்ளது. இதனால், இ20 பெட்ரோல் விற்பனைக்கு கொண்டு வரும்போது, அரசு சார்பில் எந்த ஒரு முழுமையான மதிப்பீடும் செய்யவில்லை என்பது தெரியவந்துள்ளது. இது வாகன உரிமையாளர்கள் மத்தியில் பெரும் விவாதத்தை ஏற்படுத்தி உள்ளது.

புதிய மாருதி பிரெஸ்ஸா டெலிவரி துவங்கியது

கடந்த வாரம் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட புதிய மாருதி சுஸுகி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரின் டெலிவிரிப் பணிகள் தற்போது நாடு முழுவதும் உள்ள டீலர்களில் தொடங்கி உள்ளது. மாருதி நிறுவனத்தின் அரேனா (Arena) ஷோரூம்களில் முன்பதிவு செய்த வாடிக்கையாளர்களுக்கு வரிசைப்படி, புதிய பிரெஸ்ஸா கார் டெலிவிரி வழங்கப்பட்டு வருகிறது.

BS6 வாகனங்களுக்கான PUC செல்லுபடி காலம் 3 ஆண்டுகளாக உயருமா?

கார் மற்றும் பைக் வைத்திருப்பவர்கள் அனைவரும் குறிப்பிட்ட கால இடைவெளியில் Pollution Under Control Certificate (PUC) எனப்படும் வாகனங்கள் வெளியிடும் புகையில் உள்ள மாசு உமிழ்வு அளவை காட்டும் சான்றிதழை குறிப்பிட்ட கால இடைவெளியில் தொடர்ந்து புதுப்பிக்க வேண்டியது கட்டாயமாக உள்ளது. இந்த நிலையில், பிஎஸ்6 தரநிலையுடன் தயாரிக்கப்பட்ட தனியார் வாகனங்களுக்கான PUC சான்றிதழின் செல்லுபடி காலத்தை தற்போதைய ஒரு ஆண்டிலிருந்து 3 ஆண்டுகளாக உயர்த்தும் வரைவு அறிவிப்பை (Draft Notification) மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலை அமைச்சகம் வெளியிட்டுள்ளது.

ஆகஸ்ட் 18-ல் அறிமுகமாகும் ஸ்கோடா ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட்

எஸ்யூவி மாடல்களின் வருகையால் செடான் கார்களின் விற்பனை இந்தியாவில் சற்று மந்தமான நிலையில் இருந்தாலும், இந்த பிரிவில் ஸ்கோடா ஸ்லாவியா கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்யும் வகையில், வடிவமைப்பில் சில மாறுதல்கள் மற்றும் கூடுதல் சிறப்பம்சங்களுடன் கூடிய புதிய ஸ்லாவியா ஃபேஸ்லிஃப்ட் மாடலை வரும் ஆகஸ்ட் 18ந் தேதி இந்தியாவில் அறிமுகப்படுத்த உள்ளதாக ஸ்கோடா நிறுவனம் உறுதி செய்துள்ளது.

இந்தியாவில் மீண்டும் வேகமெடுக்கும் சிறிய கார் விற்பனை!!

கடந்த சில ஆண்டுகளாக இந்திய கார் சந்தையில் எஸ்யூவி மாடல்கள் விற்பனையில் ஆதிக்கம் செலுத்தி வரும் நிலையில், கடந்த மாதம் சிறிய கார்களின் விற்பனை திடீரென அதிகரித்து ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது. குறிப்பாக, முதல் முறையாக கார் வாங்கும் வாடிக்கையாளர்களே இந்த மாற்றத்துக்கு முக்கிய காரணமாக உள்ளனர்.

புதிய டொயோட்டா ஹைலக்ஸ் அறிமுகம்.. விலை ரூ.31.99 லட்சம்

புதிய பொலிவுடன் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய டொயோட்டா ஹைலக்ஸ் சொகுசு ரக பிக்கப் டிரக் இந்திய சந்தையில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ. 31.99 லட்சம் ஆரம்ப எக்ஸ்ஷோரூம் விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ஆஃப்-ரோடு சாகசங்களை விரும்புபவர்களுக்கு பிரீமியமான இந்த பிக்கப் டிரக் சிறந்த தேர்வாக வந்துள்ளது.

260 கிமீ ரேஞ்ச்... புதிய Avore EX எலக்ட்ரிக் பைக்குகள்!

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் இதுவரை ஸ்கூட்டர்கள்தான் அதிக ஆதிக்கம் செலுத்தி வந்தன. ஆனால், சமீப காலமாக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் பிரிவிலும் போட்டி வேகமெடுத்து வருகிறது. ரிவோல்ட், ஓபன், ஓலா ரோட்ஸ்டெர் எக்ஸ், டார்க் போன்ற நிறுவனங்கள் புதிய மாடல்களை அறிமுகப்படுத்தின. இந்த வரிசையில், குஜராத்தைச் சேர்ந்த Avore Electric நிறுவனமும் சேர்ந்துள்ளது. இன்று தனது EX என்ற பிராண்டில் முதல் எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் மாடல்களை விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது.

2027ல் 'மேட் இன் இந்தியா' ஸ்கூட்டர்களை களமிறக்கும் பியாஜியோ

ஹோண்டா ஆக்டிவா, டிவிஎஸ் ஜூபிடர் சந்தையை குறி வைத்து இத்தாலியைச் சேர்ந்த பியாஜியோ குழுமம் இந்திய சந்தைக்காக மிகப்பெரிய திட்டத்தை கையில் எடுத்துள்ளது. இதுவரை இந்தியாவில் வெஸ்பா மற்றும் ஏப்ரிலியா போன்ற பிரீமியம் ஸ்கூட்டர்களை மட்டுமே விற்பனை செய்து வந்த நிறுவனம், இனி அதிக விற்பனை நடைபெறும் கம்யூட்டர் ஸ்கூட்டர் (Commuter Scooter) பிரிவிலும் களமிறங்க தயாராகியுள்ளது. அதிலும் முக்கியமாக, இந்த புதிய ஸ்கூட்டர்கள் அனைத்தும் இந்தியாவிலேயே தயாரிக்கப்பட உள்ளன.
Advertisement

ஹோண்டா ADV160 Vs யமஹா ஏராக்ஸ்155 Vs ஹீரோ ஸூம்160: ஒப்பீடு

இந்தியாவில் ஸ்கூட்டர் சந்தை வேகமாக மாறி வருகிறது. குடும்ப பயன்பாட்டுக்கான ஆக்டிவா, ஜூபிடர் போன்ற மாடல்கள் மிகப்பெரிய வரவேற்பை பெற்று விற்பனையில் அசத்தி வரும் நிலையில், இப்போது அதிக செயல்திறன் மற்றும் நீண்ட தூர பயணத்திற்கு ஏற்ற மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கும் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த பிரிவில் யமஹா ஏராக்ஸ் 155 நீண்ட காலமாக முன்னணி மாடலாக இருந்து வருகிறது. சமீபத்தில் வந்த ஹீரோ ஸூம் 160 சிறந்த மாற்றுத் தேர்வு வாய்ப்பை வழங்கி வருகிறது. இந்த நிலையில், ஹோண்டா நிறுவனமும் மேக்ஸி ஸ்கூட்டர் மார்க்கெட்டில் தனது ADV160 ஸ்கூட்டருடன் விரைவில் களம் காண உள்ளது. சில நாட்களுக்கு முன் இந்த ஸ்கூட்டரை இந்தியாவில் பொதுமக்கள் பார்வைக்கு ஹோண்டா காட்சிப்படுத்தியது.

2027 கவாஸாகி நின்ஜா 300 அறிமுகம்... விலை ரூ.3.34 லட்சம்

இந்தியாவின் நடுத்தர எடைப் பிரிவு (Middleweight) ஸ்போர்ட்ஸ் பைக் சந்தையில் கவாஸாகி நின்ஜா மிக முக்கிய மாடலாக இருந்து வருகிறது. இந்த சந்தையில் பல புதிய போட்டியாளர்கள் களமிறங்கி வரும் நிலையில், கவாஸாகி நிறுவனம் தனது மிகவும் பிரபலமான நின்ஜா 300 பைக்கில் சில மாறுதல்களுடன் 2027 மாடலாக இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய மாடலுக்கு ரூ.3.34 லட்சமாக விலை நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரூ7.40 லட்சத்தில் டர்போ பிரெஸ்ஸா... முழு விலைப்பட்டியல்

இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி சந்தையில் கடுமையான சந்தைப் போட்டி நிலவுகிறது. டாடா நெக்ஸான், மஹிந்திரா எக்ஸ்யூவி 3XO, கியா சோனெட், ஹூண்டாய் வென்யூ, ஸ்கோடா கைலாக் போன்ற மாடல்கள் டர்போ பெட்ரோல் எஞ்சினுடன் விற்பனையாகி வருகின்றன. இந்த நிலையில், சில தினங்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் காரில் டர்போ பெட்ரோல் எஞ்சின் சேர்க்கப்பட்டதுடன், மிக மிக சவாலான விலையில் இந்த மாடலை களமிறக்க போட்டியாளர்களுக்கு செக் வைத்துள்ளது மாருதி சுஸுகி நிறுவனம்.

விரைவில் அறிமுகமாகும் 5 புத்தம் புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான வரவேற்பு மாதா மாதம் அதிகரித்து வருகிறது. டிவிஎஸ் ஐக்யூப், பஜாஜ் சேத்தக், ஏத்தர் ரிஸ்டா உள்ளிட்ட மாடல்கள் விற்பனையில் கலக்கி வருகின்றன. இந்த நிலையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மவுசு எகிடுதகிடாக அதிகரித்து வரும் நிலையில், வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் வகையில், எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தயாரிப்பு நிறுவனங்கள் புதிய மாடல்களை பண்டிகை காலத்தையொட்டி அறிமுகம் செய்ய ஆயத்தமாகி வருகின்றன.

E20 ஜனதா பார்ட்டிக்கு பெருகும் ஆதரவு

இந்தியாவில் E20 (20 சதவீதம் எத்தனால் கலந்த பெட்ரோல்) தற்போது நாடு முழுவதும் பரவலாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது. கச்சா எண்ணெய் இறக்குமதியை குறைத்து விவசாயிகளின் வருமானத்தை அதிகரிப்பது மற்றும் கார்பன் உமிழ்வை குறைப்பது போன்ற நோக்கங்களுடன் மத்திய அரசு இந்த திட்டத்தை செயல்படுத்தி வருகிறது. ஆனால், E20 பயன்பாடு குறித்து வாகன ஓட்டிகள் மத்தியிலிருந்து சமூக வலைதளங்களில் தொடர்ந்து விவாதங்களும் எதிர்ப்புகளும் எழுந்து வருகின்றன.