விற்பனையில் டாப்-10 ஸ்கூட்டர்களில் 3 எலக்ட்ரிக் மாடல்கள்!

ஓட்டுவதற்கு எளிதாக இருப்பதாலும், குடும்ப பயன்பாட்டிற்கு ஏற்றதாக இருப்பதாலும் இந்தியாவில் ஸ்கூட்டர்களுக்கான தேவை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த சந்தையில் ஹோண்டா ஆக்டிவா மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் போன்ற பெட்ரோல் மாடல்கள் இன்னும் ஆதிக்கம் செலுத்தி வந்தாலும், கடந்த சில ஆண்டுகளாக எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களும் வேகமாக முன்னேறி வருகின்றன. அதற்கு ஜூன் 2026 விற்பனை புள்ளிவிவரங்களே சிறந்த உதாரணமாக அமைந்துள்ளன. முதல் ஐந்து இடங்களுக்குள் இரண்டு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் இடம்பிடித்திருப்பது, இந்த சந்தையில் உருவாகி வரும் புதிய மாற்றத்தை வெளிப்படுத்துகிறது.

தேசிய நெடுஞ்சாலை டோல் கட்டணத்தில் புதிய கணக்கீடு!!

தேசிய நெடுஞ்சாலைகளில் டோல் கட்டணத்தை கணக்கிடும் முறையை மத்திய அரசு மாற்றியுள்ளது. இதன் மூலம் சில சாலைப் பகுதிகளில் டோல் கட்டணம் 50 சதவீதம் வரை குறைய வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. ஆனால், இது அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் பொருந்தும் விதி அல்ல என்பது முக்கியமான விஷயம். சரி, தேசிய நெடுஞ்சாலைகளில் எந்த சாலைப் பகுதிகளில் இந்த கட்டணம் பாதியாக குறையும் என்பதை தொடர்ந்து விரிவாகப் பார்க்கலாம்.

E20-க்கு ஏற்றதா? - இந்த 7 விஷயங்களை மறக்காம செக் பண்ணுங்க!

இந்தியாவில் தற்போது பெரும்பாலான பெட்ரோல் நிலையங்களில் E20 பெட்ரோல்தான் விற்பனை செய்யப்படுகிறது. அதனால், பயன்படுத்தப்பட்ட (Used) பெட்ரோல் கார் வாங்கும்போது மைலேஜ், விலை, சர்வீஸ் ஹிஸ்டரி மட்டும் பார்த்து முடிவு செய்துவிடக் கூடாது. அந்த கார் E20 பெட்ரோலுக்கு இணக்கமானதா என்பதையும் தெரிந்துகொள்வது அவசியம். குறிப்பாக சில ஆண்டுகளுக்கு முன்பு தயாரிக்கப்பட்ட கார்கள் வாங்குபவர்களுக்கு இது மிகவும் முக்கியமான சரிபார்க்க வேண்டிய விஷயமாக மாறியுள்ளது.

கடந்த ஆண்டு 1.83 லட்சம் பேர் சாலை விபத்துக்களில் பலி

கடந்த 2025-ம் ஆண்டில் நாடு முழுவதும் 1.83 லட்சத்திற்கும் அதிகமானோர் சாலை விபத்துகளில் உயிரிழந்துள்ளனர் என்ற அதிர்ச்சி தகவலை மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். சராசரியாக ஒவ்வொரு மணி நேரத்திலும் 59 சாலை விபத்துக்கள் நடப்பதாகவும், 21 பேர் உயிரிழந்துள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.
Advertisement

E20 பெட்ரோலுக்கு எதிராக முதல் பெரிய போராட்டம்

இந்தியாவில் E20 பெட்ரோல் அமல்படுத்தப்பட்டதிலிருந்து வாகன ஓட்டிகள் மத்தியில் மைலேஜ் குறைவு, பழைய வாகனங்களின் செயல்திறன் மற்றும் பராமரிப்பு செலவு அதிகரிப்பு போன்ற விவாதங்கள் தொடர்ந்து எழுந்து வருகின்றன. இதுவரை இந்த எதிர்ப்புகள் பெரும்பாலும் சமூக வலைதளங்கள், வாகன உரிமையாளர்களின் தனிப்பட்ட புகார்கள் மற்றும் அரசியல் விவாதங்களாகவே இருக்கின்றன. ஆனால் தற்போது முதல் முறையாக, நாடு முழுவதும் உள்ள வர்த்தக வாகன ஓட்டுநர்களை ஒன்றிணைத்து, நாடாளுமன்றத்தை நோக்கி பெரிய அளவிலான போராட்டம் நடத்தப்படும் என்று டெல்லி டாக்ஸி மற்றும் சுற்றுலா போக்குவரத்து சங்கம் அறிவித்துள்ளது.

மஹிந்திரா விஷன் டி எஸ்யூவிக்கு காப்புரிமைக்கு விண்ணப்பம்

மஹிந்திரா நிறுவனத்தின் விஷன் டி என்ற புத்தம் புதிய டிசைனிலான எஸ்யூவி மாடலுக்கு காப்புரிமை பதிவு செய்யப்பட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. கடந்த ஆண்டு மஹிந்திரா நிறுவனம் தனது விஷன் 2027 என்ற நிகழ்ச்சியில் புதிய டிசைன் தாத்பரியங்களுடன் உருவாக்கப்பட்ட விஷன் டி கான்செப்ட் எஸ்யூவியை பொது பார்வைக்கு கொண்டு வந்தது. அப்போதே, வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளையும், டிசைன் குறித்த பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த புதிய விஷன் டி எஸ்யூவியின் வடிவமைப்புக்கு தற்போது இந்தியாவில் காப்புரிமை (Design Patent) பதிவு செய்யப்பட்டிருப்பது ஆட்டோமொபைல் துறையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஆண்டு காட்சிப்படுத்தப்பட்ட கான்செப்ட் மாடலின் வடிவமைப்பே உற்பத்தி நிலைக்கு உகந்த மாடலிலும் பெரும்பாலும் தொடரும் என்பதை இந்த காப்புரிமை படங்கள் மூலமாக உணர முடிகிறது.

₹48 லட்சத்தில் வந்த ஹோண்டா காருக்கு புக்கிங் முடிந்தது!

ரூ.48 லட்சம் விலையில் அறிமுகமான ஹோண்டா ZR-V ஹைபிரிட் எஸ்யூவிக்கு எதிர்பார்த்ததை விட அதிக வரவேற்பு கிடைத்துள்ளது. அறிமுகமான சில நாட்களிலேயே இந்தியாவுக்காக ஒதுக்கப்பட்ட முதல் இரண்டு பேட்ச் கார்களும் முழுமையாக முன்பதிவு செய்யப்பட்டுள்ளதாக ஹோண்டா தெரிவித்துள்ளது. இதன் காரணமாக, இந்த பிரீமியம் எஸ்யூவி தற்போது வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக கவனம் பெற்றுள்ளது.

புதிய ஃபெராரி சூப்பர் கார் பெங்களூரில் தரிசனம்!!

அண்மையில் இந்தியாவில் அறிமுகமான ஃபெராரி அமால்ஃபி ஸ்பைடர் சூப்பர் கார் தற்போது பெங்களூருவில் நடந்த நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. முதல்முறையாக இந்தியாவில் ஃபெராரி நிறுவனம் பிராந்திய அளவிலான அறிமுகத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டது. கடந்த வாரம் மும்பையில் காட்சிப்படுத்தப்பட்ட இந்த கார் தற்போது பெங்களூருவிலும், இதைத்தொடர்ந்து அடுத்த வாரம் டெல்லியில் உள்ள ஃபெராரி ஷோரூமிலும் காட்சிப்படுத்தப்பட உள்ளது.

வின்ஃபாஸ்ட் மின்சார ஸ்கூட்டடர்கள் எப்போது அறிமுகம்!

வியட்நாமைச் சேர்ந்த மின்சார வாகன உற்பத்தியாளரான வின்ஃபாஸ்ட், இந்திய சந்தையில் தனது மின்சார ஸ்கூட்டர்களை களமிறக்கும் திட்டத்தில் தீவிரமாக உள்ளது. ஏற்கனவே தூத்துக்குடி சிப்காட் தொழிற்பூங்காவில் ஆலையை அமைத்துள்ள அந்நிறுவனம் தற்போது மின்சார கார்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது. இதைத்தொடர்ந்து, மின்சார பேருந்துகள் மற்றும் மின்சார ஸ்கூட்டர்களையும் இந்தியாவில் தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இதற்காக தமிழக அரசுடன் புரிந்துணர்வு ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஆலையை மேலும் விரிவுபடுத்த கூடுதலாக சுமார் 200 ஹெக்டேர் நிலம் ஒதுக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கார் பம்பரில் காற்றாலை மின் உற்பத்தி... ஹூண்டாய் பலே ஐடியா!

மின்சார கார்கள் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், அவற்றின் ரேஞ்ச், செயல்திறன் மற்றும் ஆற்றல் பயன்பாட்டை மேலும் மேம்படுத்த புதிய தொழில்நுட்பங்களை உலகின் முன்னணி வாகன உற்பத்தியாளர்கள் தொடர்ந்து ஆராய்ந்து வருகின்றனர். அந்த வரிசையில், தென்கொரியாவைச் சேர்ந்த ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்கள் இணைந்து, காரின் முன்பக்க பம்பருக்குள் சிறிய காற்றாலை டர்பைனை பொருத்தி மின்சாரம் உற்பத்தி செய்யும் புதிய தொழில்நுட்பத்துக்கு காப்புரிமை (Patent) கோரி பதிவு செய்துள்ளன.

ரூ.48 லட்சத்தில் புதிய ஹோண்டா கார் இந்தியாவில் அறிமுகம்

ஹோண்டா கார்ஸ் இந்தியா நிறுவனம் தனது புதிய ZR-V e:HEV என்ற பிரிமீயம் ரக எஸ்யூவியை இந்தியாவில் இன்று விற்பனைக்கு கொண்டு வந்துள்ளது. அத்துடன் இன்றுமுதல் வாடிக்கையாளர்களுக்கான டெலிவரியையும் தொடங்கியுள்ளது. ஜப்பானிலிருந்து முழுமையாக இறக்குமதி (CBU) செய்யப்பட்டு வரும் இந்த பிரிமீயம் ஹைபிரிட் எஸ்யூவிக்கு ரூ.47.99 லட்சம் டெல்லி எக்ஸ்ஷோரூம் விலையாக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

புதிய ஜீப் மெரிடியன் எஸ்யூவியின் சிறப்பு பதிப்பு அறிமுகம்!

ஜீப் எஸ்யூவி தயாரிப்பு நிறுவனத்தின் 85 ஆண்டுகால பாரம்பரியத்தை கொண்டாடும் வகையில், மெரிடியன் எஸ்யூவியின் 85ம் ஆண்டு கொண்டாட்ட பதிப்பை அந்நிறுவனம் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் 85 யூனிட்கள் மட்டுமே தயாரிக்கப்பட உள்ள இந்த சிறப்பு பதிப்பு, Meridian வரிசையில் அதிக வசதிகள் கொண்ட Overland வேரியண்டை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.36.05 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

ரூ.7.39 லட்சத்தில் புதிய மாருதி பிரெஸ்ஸா கார் அறிமுகம்!

கூடுதல் சிறப்பம்சங்களுடன் மேம்படுத்தப்பட்ட புதிய மாருதி பிரெஸ்ஸா கார் இந்தியாவில் இன்று விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்தியாவின் சப்-4 மீட்டர் எஸ்யூவி கார் மார்க்கெட்டில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்த பிரெஸ்ஸா கார் வெளிப்புற டிசைனில் லேசான மாற்றங்கள், கேபினில் புதிய தொழில்நுட்ப வசதிகள், கூடுதல் பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் புதிய டர்போ-பெட்ரோல் என்ஜின் தேர்வு ஆகியவற்றுடன் இந்த அப்டேட் மாடல் விற்பனைக்கு வந்துள்ளது.

இன்று 10 புதிய இருசக்கர வாகனங்களை காட்சிப்படுத்திய ஹோண்டா

ஹோண்டா மோட்டார்சைக்கிள் இந்தியா நிறுவனம் தனது 10 புதிய மோட்டார்சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் மாடல்களை இந்தியாவில் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் பொது பார்வைக்கு கொண்டு வந்தது. இந்த நிகழ்ச்சியில் இடம்பெற்ற மாடல்களில் சில மாடல்கள் இந்தியாவில் ஏற்கனவே விற்பனையில் உள்ளன. சில எதிர்கால இந்திய அறிமுகத்தை முன்னிட்டு காட்சிப்படுத்தப்பட்டன. மேலும் சில பிரீமியம் உலகளாவிய மாடல்கள், ஹோண்டாவின் தொழில்நுட்ப திறனை வெளிப்படுத்தும் நோக்கில் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன.

ஹோண்டாவின் ADV160 அட்வென்ச்சர் ஸ்கூட்டர் பார்வைக்கு வந்தது!

இந்தியாவில் பிரீமியம் ஸ்கூட்டர் சந்தை கடந்த சில ஆண்டுகளாக வேகமாக வளர்ந்து வருகிறது. குறிப்பாக ஸ்போர்ட்டி தோற்றம் மற்றும் அதிக திறன் கொண்ட மேக்ஸி ஸ்கூட்டர்களுக்கு இளைஞர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. இந்த நிலையில், நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட Honda ADV160 மேக்ஸி ஸ்கூட்டரை ஹோண்டா நிறுவனம் இன்று நடந்த நிகழ்ச்சியில் இந்தியாவில் முதல் முறையாக காட்சிப்படுத்தியுள்ளது. இதனால் இந்த ஸ்கூட்டர் மிக விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கிறது.

புதிய ஃபோர்ஸ் அர்பானியா டீலக்ஸ் வேன் அறிமுகம்!

சுற்றுலா நிறுவனங்கள், ஹோட்டல் ஷட்டில் சேவைகள், கார்ப்பரேட் ஊழியர்களுக்கான போக்குவரத்து என அதிக எண்ணிக்கையிலான பயணிகளை வசதியாக அழைத்துச் செல்லும் வேன்களுக்கான தேவை இந்தியாவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இந்த பிரிவில் ஏற்கனவே Urbania மாடல் மூலம் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள Force Motors, தற்போது கூடுதல் வசதிகள் மற்றும் அதிக திறன் கொண்ட என்ஜினுடன் புதிய Urbania Deluxe மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது.

மின்சார வாகனங்களுக்கான மானியம் மீண்டும் நீட்டிக்கப்படுமா?

மத்திய அரசின் PM E-DRIVE திட்டத்தின் கீழ் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு வழங்கப்பட்டு வரும் மானிய திட்டத்திற்கான காலக்கெடு வரும் ஜூலை 31-ம் தேதியுடன் முடிவடைய உள்ளது. ஏற்கனவே மார்ச் 31-ம் தேதி வரை அமலில் இருந்த இந்த திட்டம் பின்னர் ஜூலை 31 வரை நீட்டிக்கப்பட்டது. தற்போது அந்த நீட்டிக்கப்பட்ட காலக்கெடும் நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை தொடர கூடுதல் நிதி ஒதுக்கி திட்டத்தை மீண்டும் நீட்டிக்க மத்திய அரசு பரிசீலித்து வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முதல் பஜாஜ் எலெக்ட்ரிக் பைக் எப்போது அறிமுகம்?

இந்தியாவில் எலக்ட்ரிக் ஸ்கூட்டர் சந்தையில் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம் வலுவான இடத்தை பிடித்துள்ள பஜாஜ் ஆட்டோ, அடுத்த கட்டமாக எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் சந்தையிலும் விரைவில் களமிறங்க உள்ளது. நடப்பு நிதி ஆண்டு காலத்தில் இந்த முதல் எலெக்ட்ரிக் பைக் மாடலை சந்தைக்கு கொண்டு வர திட்டமிட்டுள்ளது.

ரூ.1.45 கோடியில் அறிமுகமான பவர்ஃபுல்லான பென்ஸ் கார்!

Mercedes-Benz நிறுவனம் தனது செயல்திறன் மிக்க புதிய Mercedes-AMG E 53 HYBRID 4MATIC+ என்ற புதிய சொகுசு காரை இந்தியாவில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. அந்நிறுவனத்தின் மிகவும் பிரபலமான E Class சொகுசு செடான் காரின் அடிப்படையில், AMG பெர்ஃபார்மென்ஸ் பிராண்டில் இந்தியாவில் அறிமுகமாகும் முதல் ஹைப்ரிட் கார் மாடலாக வந்துள்ளது.

சவாலான விலையில் புதிய கியா சைரோஸ் இவி கார் அறிமுகம்!

இந்தியாவில் எலக்ட்ரிக் கார் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கியா இந்தியா நிறுவனம் தனது புதிய Syros EV-யை போட்டித்தன்மை கொண்ட விலையில் அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. ஏற்கனவே Carens Clavis EV மூலம் தனது எலக்ட்ரிக் கார் வரிசையை தொடங்கியிருந்த கியா, தற்போது Syros EV மூலம் காம்பாக்ட் எலக்ட்ரிக் SUV பிரிவிலும் தனது இருப்பை மேலும் வலுப்படுத்தியுள்ளது. நீண்ட ரேஞ்ச், அதிக வசதிகள் மற்றும் வாழ்நாள் பேட்டரி வாரண்டி போன்ற அம்சங்களுடன் வந்துள்ள Syros EV கார் சந்தையில் Tata Nexon EV, Mahindra XUV 3XO EV மற்றும் MG Windsor EV உள்ளிட்ட மாடல்களுக்கு நேரடி போட்டியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Advertisement

மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் மாடலுக்கு 5-ஸ்டார் ரேட்டிங்

மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் புதிய மாருதி பிரெஸ்ஸா எஸ்யூவி கார் விரைவில் விற்பனைக்கு வர இருக்கிறது. இந்த நிலையில், இந்த புதிய மாடலை வாங்க காத்திருக்கும் வாடிக்கையாளர்களுக்கு ஒரு மகிழ்ச்சியான செய்தி வந்துள்ளது. புதிய மாருதி பிரெஸ்ஸா ஃபேஸ்லிஃப்ட் (Brezza Facelift) மாடலானது,பாரத் என்கேப் (Bharat NCAP ) நடத்திய மோதல் பாதுகாப்பு சோதனையில் உயரிய பாதுகாப்பு மதிப்பீட்டை பெற்று அசத்தி உள்ளது.. இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் காம்பாக்ட் SUV-களில் ஒன்றான Brezza-வுக்கு கிடைத்துள்ள இந்த அங்கீகாரம், பாதுகாப்பை முக்கியமாகக் கருதி புதிய கார் வாங்க திட்டமிட்டிருப்பவர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.

அப்டேட்டுகளுடன் வருகிறது புதிய பல்சர் பைக் மாடல்கள்!

25 ஆண்டுகளுக்கு முன்பு இந்திய இளைஞர்களின் கனவு பைக்காக அறிமுகமான பல்சர், இன்றும் அதே வரவேற்புடன் விற்பனையாகி வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு 25 ஆண்டுகள் ஆவதை கொண்டாடும் வகையில், பல்சர் வரிசையில் உள்ள பைக்குகளுக்கு அடுத்த சில வாரங்களில் பெரிய அளவிலான அப்டேட்களை வழங்க பஜாஜ் ஆட்டோ தயாராகி வருகிறது. குறிப்பாக 125 சிசி முதல் 160 சிசி வரையிலான பிரிவில், அடுத்த ஆறு வாரங்களுக்குள் புதிய அல்லது குறிப்பிடத்தக்க அளவில் மேம்படுத்தப்பட்ட பல்சர் மாடல்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது.

E20 பெட்ரோல் போட்ட பின் இந்த அறிகுறிகள் இருந்தால்?!

இந்தியாவில் எத்தனால் கலப்புடன் கூடிய E20 பெட்ரோல் பயன்பாடு வேகமாக அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, "E20 பெட்ரோல் போட்ட பிறகு கார் சரியாக ஓடவில்லை", "மைலேஜ் குறைந்துவிட்டது", "எஞ்சின் சப்தம் மாறிவிட்டது" போன்ற சந்தேகங்களை வாகன உரிமையாளர்கள் தொடர்ந்து எழுப்பி வருகின்றனர். சமூக வலைதளங்களிலும் இதுதொடர்பான பல பதிவுகள் பகிரப்பட்டு வருகின்றன.

புதிய சிம்பிள் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் செப்டபர் 2ல் அறிமுகம்!

சிம்பிள் எனர்ஜி (Simple Energy) நிறுவனம் இதுவரை நீண்ட ரேஞ்ச் மற்றும் அதிக செயல்திறன் கொண்ட எலக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி வந்தது. இந்த நிலையில், ஏத்தர் ரிஸ்டாவுக்கு போட்டியாக குடும்ப பயன்பாட்டுக்கு ஏற்ற புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டரை சந்தையில் களமிறக்க நிறுவனம் தயாராகியுள்ளது. தனது முதல் ஃபேமிலி எலக்ட்ரிக் ஸ்கூட்டரை வரும் செப்டம்பர் 2-ம் தேதி அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்த உள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது. இந்த புதிய மாடலுக்கு "Simple Arrive" என்ற பெயரிடப்படும் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஸ்கோடா ஸ்லாவியா Monte Carlo-வில் 2 புதிய வண்ணத் தேர்வுகள்

ஸ்கோடா ஸ்லாவியா செடான் காரில் இரண்டு ஸ்பெஷலான புதிய வண்ணத் தேர்வுகளை ஸ்கோடா நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பார்ப்பதற்கு செம ஸ்போர்ட்டியான Monte Carlo எடிஷனில்தான் இந்த புதிய வண்ணங்கள் வழங்கப்படுகின்றன. இதிலும் இன்னொரு சிறப்பு என்னவென்றால், இந்த புதிய வண்ணத் தேர்வுகளில் கருப்பு வண்ண பெயிண்ட் செய்யப்பட்ட மேற்கூரையுடன் (Black Roof) கூடிய டூயல்-டோன் (Dual-tone) தேர்வுகளாக கிடைக்கின்றன. மேலும், இந்த இரண்டு புதிய வண்ணங்களில் வெறும் 200 கார்களை மட்டுமே தயாரித்து விற்பனை செய்ய ஸ்கோடா திட்டமிட்டுள்ளது. அதனால், இந்த நிறங்களில் Slavia Monte Carlo வாங்குபவர்களுக்கு சாலையில் தனித்து தெரியும் ஒரு பிரத்யேக கார் என்ற உணர்வு நிச்சயம் கிடைக்கும்.