மாருதி கார் விலை உயருது... சீக்கிரம் புக் பண்ணிடுங்க!

மாருதி சுஸுகி கார் வாங்க திட்டமிட்டிருக்கிறீர்களா? அப்படியானால் இந்த மாதத்திலேயே முன்பதிவு செய்து கொள்வது நல்லது. ஏனெனில், அடுத்த மாதம் முதல் தனது அனைத்து கார்களின் விலையையும் உயர்த்த உள்ளதாக மாருதி சுஸுகி அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. மாடலைப் பொறுத்து அதிகபட்சமாக ரூ.30,000 வரை விலை உயர்வு அமலுக்கு வர உள்ளது.

ஸ்டட்ஸ் நிறுவனத்தின் புதிய ரக ஹெல்மெட் அறிமுகம்!

இருசக்கர வாகன ஓட்டிகளுக்கான பாதுகாப்பு உபகரணங்களில் முன்னணி நிறுவனமான ஸ்டட்ஸ் (STUDDS), இந்திய சந்தையில் தனது புதிய Trooper Trail மாடுலர் ஹெல்மெட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆஃப்-ரோடு மற்றும் அட்வென்ச்சர் பைக் ஓட்டுபவர்களை கவரும் வகையில் புதிய தோற்றம், வசதியான அம்சங்கள் மற்றும் மலிவு விலை ஆகியவற்றுடன் இந்த ஹெல்மெட் அறிமுகமாகியுள்ளது.

E20 பெட்ரோலால் மைலேஜ் குறையும்?... ஒப்புக்கொண்ட மத்திய அரசு

E20 பெட்ரோல் குறித்து வாகன ஓட்டிகளிடையே நீண்ட நாட்களாக இருந்து வந்த முக்கிய சந்தேகத்திற்கு தற்போது மத்திய அரசே விளக்கம் அளித்துள்ளது. இதுவரை E20 பெட்ரோலால் என்ஜினுக்கு எந்த பாதிப்பும் ஏற்படாது என்று கூறி வந்த அரசு, தற்போது பழைய வாகனங்களில் மைலேஜ் 3 முதல் 5 சதவீதம் வரை குறையலாம் என்பதை நாடாளுமன்றத்தில் முதல் முறையாக அதிகாரப்பூர்வமாக ஒப்புக்கொண்டுள்ளது.**

ரூ.8.75 லட்சத்தில் சிட்ரோன் பசால்ட் X கம்ஃபர்ட் எடிஷன்!

இந்தியாவில் கூப்-ஸ்டைல் எஸ்யூவி (SUV Coupe) பிரிவில் தனது இடத்தை வலுப்படுத்தும் முயற்சியில் இருக்கும் சிட்ரோன், தற்போது பசால்ட் X Comfort Edition என்ற புதிய சிறப்பு பதிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் வெளிப்புற அலங்கார மாற்றங்களுடன் ஒரு ஸ்பெஷல் எடிஷனை வெளியிடாமல், அன்றாட பயன்பாட்டில் வாடிக்கையாளர்களுக்கு உண்மையாக பயனளிக்கும் வசதிகளை சேர்த்திருப்பதே இந்த புதிய பதிப்பின் முக்கிய நோக்கமாகும். ரூ.8.75 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆரம்ப விலையில் அறிமுகமாகியுள்ள இந்த மாடல், கூடுதல் வசதிகளை விரும்பும் வாடிக்கையாளர்களை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது.
Advertisement

ஜூன் 2026-ல் இந்தியாவில் அதிகம் விற்ற 10 இருசக்கர வாகனங்கள்!

இந்திய இருசக்கர வாகன சந்தை தொடர்ந்து வலுவான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. குறிப்பாக, கிராமப்புறங்களில் அதிகரித்து வரும் தேவை, எளிதான நிதி வசதிகள் மற்றும் தினசரி பயன்பாட்டுக்கான குறைந்த பராமரிப்பு செலவு ஆகியவை விற்பனையை உயர்த்த முக்கிய காரணங்களாக உள்ளன. இந்த நிலையில், கடும் சந்தைப் போட்டிக்கு மத்தியில் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் முதல் 10 இடங்களை பிடித்த இருசக்கர வாகனங்கள் மற்றும் எவ்வளவு யூனிட்டுகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்பதை இந்த செய்தியில் விரிவாகப் பார்க்கலாம்.

E20-க்கு அடுத்து E25 பெட்ரோலா? மத்திய அரசு கொடுத்த விளக்கம்

நாடு முழுவதும் தற்போது E20 பெட்ரோல் (20% எத்தனால் + 80% பெட்ரோல்) விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், பழைய வாகன உரிமையாளர்கள் மத்தியில் பல்வேறு சந்தேகங்களும், விவாதங்களும் எழுந்துள்ளன. இந்த விவாதம் இன்னும் ஓயாத நிலையில், அடுத்த கட்டமாக E25 அல்லது அதற்கு மேல் எத்தனால் கலவையை அரசு அறிமுகப்படுத்த திட்டமிட்டு இருப்பதாக கடந்த சில வாரங்களாக அதிகம் பேசப்பட்டு வருகிறது. இந்த நிலையில், E25 பெட்ரோல் குறித்து மத்திய அரசு தற்போது தெளிவான விளக்கத்தை அளித்துள்ளது.

ஹூண்டாய் Boulder ஆஃப்ரோடு SUV இந்தியாவில் காப்புரிமை பதிவு!

இந்திய சந்தையில் தொடர்ந்து எஸ்யூவி வரிசையை விரிவுபடுத்தி வரும் ஹூண்டாய், தற்போது முழுமையான ஆஃப்ரோடு எஸ்யூவி மார்க்கெட் பக்கம் கவனத்தை திருப்பி உள்ளது. ஜீப் ரேங்க்லர், லேண்ட் ரோவர் டிஃபென்டர் போன்ற முரட்டுத்தனமான ஆஃப்ரோடு SUV-களை நினைவூட்டும் வகையில் புதிய மாடலை உருவாக்கி வருகிறது. அந்த அளவுக்கு மிக முரட்டுத்தனமான தோற்றமும், ஆஃப்ரோடு அம்சங்களையும் இந்த கான்செப்ட் மாடல் கொண்டுள்ளது.

அடேங்கப்பா... பெங்களூருவில் 25 லட்சம் தனியார் கார்கள்!!

போக்குவரத்து நெரிசல் பிரச்னையால் படாத பாடுபட்டு  வரும் பெங்களூரு, தற்போது இந்தியாவிலேயே அதிக தனியார் கார்கள் பதிவு செய்யப்பட்ட நகரமாக மாறியுள்ளது. கர்நாடக போக்குவரத்துத் துறையின் 'வாகன்' (VAHAN) வாகனப் பதிவு தரவுகளின்படி, நகரில் தனியார் கார்களின் எண்ணிக்கை 25 லட்சத்தை கடந்துள்ளது.

சிறந்த 'லைட் வெயிட்' எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள்!

எலக்ட்ரிக் ஸ்கூட்டர் வாங்கும்போது பெரும்பாலானோர் முதலில் பேட்டரி ரேஞ்ச், விலை மற்றும் சார்ஜிங் நேரத்தையே கவனிக்கிறார்கள். ஆனால், தினமும் அலுவலகம், கல்லூரி அல்லது நகரத்திற்குள் பயன்படுத்தும் எடை அதிகமுடைய ஸ்கூட்டர்கள் பலருக்கு அசௌகரியத்தையும், உடல் சோர்வையும் ஏற்படுத்துகின்றன. குறிப்பாக போக்குவரத்து நெரிசல் நிறைந்த சாலைகளில் அடிக்கடி நிறுத்தி, மீண்டும் இயக்க வேண்டிய சூழலில் அதிக எடை கொண்ட ஸ்கூட்டர்களை கையாள்வது சிரமமாக இருக்கும். அதனால், இப்போது மைலேஜ் மற்றும் விலையைப் போலவே ஸ்கூட்டரின் எடையையும் கவனித்து வாங்குவது அவசியமாகியுள்ளது. பார்க்கிங் செய்வது, யூ-டர்ன் எடுப்பது, சென்டர் ஸ்டாண்ட் போடுவது போன்ற அன்றாட செயல்களில் லைட் வெயிட் ஸ்கூட்டர்கள் பெரிய வித்தியாசத்தை ஏற்படுத்துகின்றன.

குறைவான விலையில் விரைவில் வரும் புதிய ஏத்தர் ஸ்கூட்டர்!

இந்தியாவின் எலக்ட்ரிக் இருசக்கர வாகன சந்தையில் தனக்கென ஒரு இடத்தைப் பிடித்துள்ள ஏத்தர் எனர்ஜி (Ather Energy, தற்போது அதிக வாடிக்கையாளர்களை இலக்காகக் கொண்டு புதிய பட்ஜெட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. 'EL' என்ற புதிய பிளாட்ஃபார்மை அடிப்படையாகக் கொண்டு உருவாகும் இந்த ஸ்கூட்டர் குறித்து தொடர்ந்து புதிய தகவல்கள் வெளியாகி வருகின்றன.

கியா சைரோஸ் EV: 7 வேரியண்ட்டுகளில் உங்களுக்கு எது பெஸ்ட்?

இந்திய எலெக்ட்ரிக் கார் சந்தையில் போட்டி நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், கியா தனது புதிய சைரோஸ் EV மாடலை அறிமுகப்படுத்தி கவனத்தை ஈர்த்துள்ளது. பாக்ஸி (Boxy) SUV வடிவமைப்பு, நீண்ட பயண தூரம், பிரீமியம் கேபின், அதிநவீன தொழில்நுட்ப வசதிகள் மற்றும் பல்வேறு வேரியண்ட் தேர்வுகள் ஆகியவற்றுடன் வந்துள்ளது. இந்த எலெக்ட்ரிக் SUV, டாடா நெக்ஸான் EV, எம்ஜி விண்ட்சர் EV, மகிந்திரா XUV 3XO EV போன்ற மாடல்களுக்கு நேரடி போட்டியாக களமிறங்கியுள்ளது.

E20 பெட்ரோல் எஞ்சினை பாதித்தால்... உரிமையாளர்களின் முடிவு?

இந்தியாவில் எத்தனால் கலந்த E20 பெட்ரோல் பயன்பாடு படிப்படியாக விரிவுபடுத்தப்பட்டு வரும் நிலையில், பழைய பெட்ரோல் கார் உரிமையாளர்கள் மத்தியில் அதுகுறித்த பெரிய விவாதத்தை கிளப்பியுள்ளது. சமூக வலைத்தளங்களில் பல வாகன உரிமையாளர்கள் E20 பெட்ரோல் பயன்பாடு மற்றும் அது எஞ்சினை பாதிக்கும் என்று அச்சம் தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில், சமீபத்தில் வெளியான ஒரு புதிய சர்வே, E20 பெட்ரோல் தொடர்பான விவகாரத்தை மீண்டும் தேசிய அளவில் பேசுபொருளாக்கியுள்ளது.
Advertisement

அடுத்த 2 வாரங்களில் இந்தியாவை கலக்க வரும் 4 புதிய கார்கள்!

இந்திய கார் சந்தையில் ஜூலை மாதத்தின் இரண்டாவது பாதி மிகவும் பரபரப்பாக இருக்க உள்ளது. காம்பாக்ட் எஸ்யூவி, பிளக்-இன் ஹைபிரிட் (PHEV), ஸ்ட்ராங் ஹைபிரிட் மற்றும் பிக்-அப் டிரக் என வெவ்வேறு பிரிவுகளில் பல முக்கிய மாடல்கள் அறிமுகமாக உள்ளன. குறிப்பாக, நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட சில மாடல்கள் இந்த மாத இறுதிக்குள் அறிமுகமாகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளன.

புதிய சீன எலெக்ட்ரிக் எஸ்யூவிக்கு இந்தியாவில் காப்புரிமை!

சீனாவை சேர்ந்த முன்னணி கார் தயாரிப்பு நிறுவனமான செர்ரி (Chery Automobile), இந்தியாவில் தனது தயாரிப்பு வரிசையை விரிவுபடுத்தும் முயற்சியில் தொடர்ந்து காப்புரிமை (Design Patent) விண்ணப்பங்களை தாக்கல் செய்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது LEPAS L4 என்ற புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவியின் வடிவமைப்பிற்கும் இந்தியாவில் காப்புரிமை பெறப்பட்டுள்ளது. இந்த மாடல் உடனடியாக இந்தியாவில் அறிமுகமாகும் என்பதற்கான உறுதியான தகவல் அல்ல. இருப்பினும், எதிர்கால திட்டங்களுக்கு முன்னோட்டமாக பார்க்கப்படுகிறது.

ஜூன் விற்பனையில் டாப்-5 இருசக்கர வாகன நிறுவனங்கள்!

உலகின் மிகப்பெரிய இருசக்கர வாகன சந்தையாக இருந்து வரும் இந்தியாவில், ஒவ்வொரு மாதமும் விற்பனை புள்ளிவிவரங்கள் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகின்றன. குறிப்பாக, கிராமப்புற தேவை, நகர்ப்புற போக்குவரத்து, பண்டிகைக் கால சலுகைகள் மற்றும் புதிய மாடல்களின் அறிமுகம் போன்ற காரணிகள் இருசக்கர வாகன விற்பனையில் நேரடி தாக்கத்தை ஏற்படுத்துகின்றன. இந்திய வாகன உற்பத்தியாளர் கூட்டமைப்பு (SIAM) வெளியிட்டுள்ள சமீபத்திய அறிக்கையின்படி, கடந்த ஜூன் மாதத்தில் இந்திய இருசக்கர வாகன சந்தை மீண்டும் வலுவான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கில் 2 சூப்பர் வசதிகள்!

ராயல் என்ஃபீல்டு க்ளாசிக் 350 பைக்கில் 2 சூப்பரான புதிய வசதிகள் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றன. வாடிக்கையாளர்களின் நீண்ட கால எதிர்பார்ப்பாக இருந்து வந்த இந்த வசதிகள் தற்போது வழங்கப்பட்டு இருப்பதால், இந்த மோட்டார்சைக்கிளை ஓட்டும்போது மேலும் மென்மையான மற்றும் மேம்பட்ட அனுபவத்தை பெற முடியும். குறிப்பாக, நகர்ப்புற போக்குவரத்து மற்றும் நீண்ட தூர பயணங்களின்போது இந்த புதிய அப்டேட் அதிக பயனளிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த புதிய வசதி குறித்த முழு விபரங்களை தொடர்ந்து பார்க்கலாம்.

இந்தியாவின் முதல் ஹைட்ரஜன் ரயில் எப்படி இயங்குகிறது?

இந்திய ரயில்வேயின் வரலாற்றில் புதிய அத்யாயம் எழுதப்பட்டுள்ளது. நாட்டின் முதல் ஹைட்ரஜன் எரிபொருள் கலன் (Hydrogen Fuel Cell) தொழில்நுட்பத்தில் இயங்கும் பயணிகள் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி ஹரியானாவின் ஜிந்த் ரயில் நிலையத்தில் இன்று கொடியசைத்து தொடங்கி வைத்தார். சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்தை நோக்கி இந்தியா எடுத்து வைத்துள்ள முக்கியமான முன்னேற்றமாக இந்த திட்டம் பார்க்கப்படுகிறது.

டொயோட்டா வெல்ஃபையர் காரின் விற்பனை சரிவு...

இந்திய செல்வந்தர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா வெல்ஃபையர் (Toyota Vellfire). சொகுசு எம்பிவி (Luxury MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா வெல்ஃபையர் காரை இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள் பலரும் தங்கள் வசம் சொந்தமாக வைத்துள்ளனர்.

புதிய கியா எலெக்ட்ரிக் காரை எந்த வேரியண்ட்டில் புக் செய்வது?

கியா சிரோஸ் EV அடுத்ததாக இந்தியாவில் விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. கியாவின் புதிய எலெக்ட்ரிக் காராக களமிறக்கப்படும் இது ஏற்கனவே விற்பனையில் உள்ள சிரோஸ் காரின் எலெக்ட்ரிக் வெர்சன் ஆகும். HTK, HTK+, HTX, HTX+ மற்றும் எக்ஸ்-லைன் என ஐந்து விதமான வேரியண்ட்களில் சிரோஸ் EV விற்பனைக்கு கொண்டுவரப்பட உள்ளது. இவை ஒவ்வொன்றிலும் என்னென்ன மாதிரியான அம்சங்களை பெறலாம் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ADV 160 ஸ்கூட்டர் ஸ்பைடர்மேன் எடிஷனை வெளியிட்டுள்ளது ஹோண்டா

ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் விரைவிலேயே புதிய 160 ஸ்கூட்டர் ஒன்றை வெளியிடவுள்ளது. வெளிநாடுகளில் அந்நிறுவனம் விற்பனை செய்து வரும் ADV 160 என்ற மேக்ஸி ஸ்கூட்டரை இந்தியாவில் வெளியிட ஹோண்டா திட்டமிட்டு வருகிறது. இந்தியாவில் யமஹா ஏராக்ஸ் 155, ஹீரோ ஸூம் 160 உள்ளிட்ட ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக இந்த மேக்ஸி ஸ்கூட்டர் வெளியாகவிருக்கிறது.
Advertisement

சிங்கிள் சார்ஜில் 500 கிமீ ஓடும் ஹூண்டாய் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா சைரோஸ் இவி (Kia Syros EV) எலெக்ட்ரிக் கார் தற்போது பொது பார்வைக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. அதாவது விலையை தவிர, கியா சைரோஸ் இவி எலெக்ட்ரிக் காரை பற்றிய அனைத்து தகவல்களும் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டு விட்டன.

ஏத்தர் எனர்ஜி நிறுவனத்தில் முதலீடு செய்யும் இந்திய அரசு

இந்தியாவில் வேகமாக வளர்ந்து வரும் ஒரு ஆட்டோமொபைல் நிறுவனமாக ஏத்தர் எனர்ஜி இருக்கிறது. முன்பை விட தற்போது அதிகளவிலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை ஏத்தர் எனர்ஜி விற்பனை செய்யத் தொடங்கியிருக்கிறது. வாடிக்கையாளர்களுக்கு ஏத்தர் எனர்ஜியின் மீது நம்பிக்கை அதிகரித்துள்ளது. டிவிஎஸ் மற்றும் பஜாஜ் உள்ளிட்ட, பல ஆண்டுகளாக இந்தியாவில் செயல்பட்டு வரும் ஆட்டோமொபைல் நிறுவனங்களுக்கு இணையான மதிப்பையும் நம்பிக்கையையும் ஏத்தர் எனர்ஜி நிறுவனமும் பெற்று வருகிறது.

பெங்களூருவுக்கு தாவிய சென்னை எலெக்ட்ரிக் பைக் கம்பெனி!

சென்னையை சேர்ந்த ராப்டீ.HV (Raptee HV) நிறுவனம் தனது மார்க்கெட்டை பெங்களூருவுக்கு விரிவுப்படுத்தி உள்ளது. இதன்படி, டி30 என்கிற எலெக்ட்ரிக் கார் DNA-ஐ கொண்ட இந்தியாவின் முதல் மோட்டார்சைக்கிளை இந்த நிறுவனம் பெங்களூருவில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கடன் வாங்கி கார் வாங்கப்போறீங்களா?

இந்தியாவில் தற்போது பண்டிகை காலம் என்பதால் இந்த நேரத்தில் வாகன விற்பனை என்பது அதிகமாக இருக்கும். இந்நிலையில் உங்களில் பலர் புதிதாக வாகனம் வாங்க வேண்டும் என்ற எண்ணத்தில் இருக்கலாம். இப்படியாக நீங்கள் வாகனம் வாங்கும் போது பெரும்பாலும் கடன் வாங்கி தான் வாகனம் வாங்குவார்கள். இப்படியாக எவ்வளவு கடன் வாங்கினால் அதற்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும் என்ற விபரங்களை தான் இங்கே காணப் போகிறோம்.

மெக்கானிக் ஷாப் போகாமலேயே இதையெல்லாம் கண்டுப்பிடிச்சிடலாம்!!

காரில் பிரச்சனை ஏற்படுவது எந்தவொரு கோடீஸ்வரருக்கும் கூட கவலையளிக்க கூடிய செய்தியே. அதற்கு பணத்தை செலவழிக்க போகிறோம் என்பதை விட, காரின் பாகங்களை மாற்ற வேண்டியிருக்குமே அவற்றிற்கான பார்ட்ஸ் கிடைக்குமோ கிடைக்காதோ என்கிற கேள்விகள் மேலும் தலைவலியை ஏற்படுத்தும். காரில் ஏற்படும் ஒரு சில பிரச்சனைகளை நீங்களாகவே கண்டுபிடித்துவிடலாம். மேலும், அவற்றை உங்கள் வீட்டில் வைத்தே பழுதுப்பார்த்து சரிசெய்ய முடியும். எந்தெந்த மாதிரியான பிரச்சனைகள் அவை? அவற்றை எவ்வாறு கண்டறிவது? என்பதை இனி பார்க்கலாம்.