கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காரை மீண்டும் எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காரை எடுக்கும்போது டயர்களில் காற்றழுத்தம், பேட்டரி சார்ஜ் அளவு பார்க்க வேண்டும். எஞ்சின் ஆயில், கூலண்ட் அளவையும் செக்கப் செய்துவிடுங்கள். இல்லையெனில், அருகிலுள்ள பரிசோதனை மையத்தில் ஒருமுறை செக்கப் செய்துவிடுவது நல்லது.
ஏடிஏஎஸ் தொழில்நுட்பத்திற்காக கார்களில் பிரத்யேக சென்சார்கள், கேமரா மற்றும் ரேடார் கருவி உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. இவை ஒரு சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு கார் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும். கார் செல்லும் பாதையில் இருக்கும் தடைகள், பாதசாரிகள் குறுக்கே வரும் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும். ஓட்டுனரை தவிர்த்து இது காரின் மூன்றாவது கண் போன்று செயல்படும்.
எலெக்டரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் பயன்படுத்தப்படும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் குறித்த முழு தொழிற்நுட்ப ரீதியிலான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.