ஓலாவின் இடத்தை பிடிக்க ஒரே அடியா ரூ.13,000ம் குறைச்சுட்டாங்க

இந்தியாவில் மின்சார வாகனங்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த சூழலைப் பயன்படுத்திக் கொண்டு வாடிக்கையாளர்களை தங்கள் பக்கம் ஈர்க்கும் நோக்கில் பிரபல மின்சார இரண்டு வாகன உற்பத்தி நிறுவனம் ஒன்று மாபெரும் விலை குறைப்பை அறிவித்திருக்கின்றது. வதோதராவை மையமாகக் கொண்டு இயங்கும் ஜாய் இ-பைக் (Joy e-Bike), இதுவே விலை குறைப்பைச் செய்திருக்கும் அந்த நிறுவனம் ஆகும். தன்னுடைய, குறிப்பிட்ட சில மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களின் விலையையே அது குறைத்திருக்கின்றது.

சென்னையில் இந்த கார் வாங்க ஆள் இல்லைனு நெனைச்சிட்டாங்களா?

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz), உலகளவில் பிரபல சொகுசு கார் நிறுவனம். ஜெர்மனியை சேர்ந்த மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனம் இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதில் நம்பர் ஒன் இடத்தில் உள்ளது. இந்தியா முழுவதுமே மெர்சிடிஸ்-பென்ஸ் நிறுவனத்துக்கு சிறப்பான வரவேற்பு உள்ளது.

பைக் மாதிரி மைலேஜை வாரி வழங்கும் டொயோட்டா கார்!

டொயோட்டா (Toyota) மற்றும் சுஸுகி (Suzuki) ஆகிய 2 நிறுவனங்களும் கூட்டணி அமைத்து இயங்கி வருகின்றன. இந்த கூட்டணியின் மூலம், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் ஒரு சில கார்களை, டொயோட்டா நிறுவனம் தனது பிராண்டின் கீழும் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) கார், டொயோட்டா ரூமியான் (Toyota Rumion) என்கிற பெயரில் விற்பனை செய்யப்பட்டு வருவதை இதற்கு ஒரு உதாரணமாக சொல்லலாம்.

இந்தியாவிற்கு வெளிநாட்டு கார்கள் கிடையாது.. அதிரடி அறிவிப்பு

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களில் ஸ்கோடா (Skoda)-வும் ஒன்று ஆகும். இந்தியாவில் கார் உற்பத்தி ஆலையை அமைத்து செயல்படும் நிறுவனங்களில் ஒன்றாகவும் அது இருக்கின்றது. என்னதான் இங்கு பலவகை கார் மாடல்களை அந்நிறுவனம் உற்பத்தி செய்தாலும், இந்தியர்களுக்காக குறிப்பிட்ட சில கார் மாடல்களை மட்டும் வெளிநாடுகளில் இருந்து அது இறக்குமதி செய்து விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையிலேயே இனி இந்தியாவிற்காக வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்யப்போவதில்லை என ஸ்கோடா அறிவித்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

விலை குறைவான காரில் புது வசதிகளை சேர்த்த சிட்ரோன் நிறுவனம்!!

சிட்ரோன் (Citroen), உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். இந்திய சந்தையில் சில வருடங்களுக்கு முன்பு நுழைந்த சிட்ரோன் நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த கார், சிட்ரோன் சி3 (C3) ஆகும்.

1,000 கிமீ மைலேஜ் தரும் ஹூண்டாய் கார் விற்பனைக்கு தயார்..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனமான ஹூண்டாய், அதன் பலிசேட் கார் மாடலை வெளியீடு செய்திருக்கின்றது. இது ஓர் ஹைபிரிட் தொழில்நுட்ப வசதிக் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். நிறுவனத்தின் மிகப் பெரிய உருவம் கொண்ட எஸ்யூவி ரக கார் மாடலும் இதுவே ஆகும். இந்த கார் எரிபொருள் மற்றும் மின்சாரம் என இரண்டிலும் இயங்கும் என்பது கவனிக்கத்தகுந்தது. நியூயார்க் சர்வதேச வாகன கண்காட்சியில் வைத்த இந்தே காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்திருக்கின்றது. உலக சந்தையில் ஹூண்டாய் பலிசேட் கார் மாடலுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

மாருதி சுஸுகி நிறுவனத்தின் காருக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்கள் ஒவ்வொரு மாதமும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து வருகின்றன. மறுபக்கம் ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறி கொண்டும் உள்ளன. அப்படி சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்ய தடுமாறி கொண்டுள்ள மாருதி சுஸுகி கார்களில் ஒன்றாக இக்னிஸ் (Maruti Suzuki Ignis). மாருதி சுஸுகி இக்னிஸ் காரின் விற்பனை எண்ணிக்கை ஒவ்வொரு மாதமும் மிகவும் சுமாராகதான் உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதமும் மாருதி சுஸுகி இக்னிஸ் கார் விற்பனையில் சோபிக்க தவறியுள்ளது.

ரூ1 கோடிகாரை ஒரே வருஷத்துல இ்வ்வளவு பேர் வாங்கிட்டாங்களா?

டொயோட்டா வெல்ஃபயர் எப்படி இந்தியாவின் முன்னணி சொகுசு காராக மாறியது, அதன் விற்பனை வளர்ச்சி எவ்வளவு சிறப்பாக இருந்தது, சொகுசுத் தரங்களை மறுவரையறை செய்தது என்பதை கண்டறியவும்.

எழுதி வெச்சிக்கோங்க.. இந்த பைக்கின் விலை பெருசா குறைய போகுது

ஜாவா மோட்டார்சைக்கிள்ஸ் (Jawa Motorcycles) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் 42 எஃப்.ஜே (42 FJ) என்கிற புதிய மோட்டார்சைக்கிள் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. 2024 செப்டம்பர் மாதத்தில் 'ஜாவா 42' பைக்கின் அடுத்த புதிய வெர்சனாக '42 எஃப்ஜே' கொண்டுவரப்பட்டது.

365 நாளில் வெறும் 166 பேர் தான் இந்த காரை வாங்கிருக்காங்க!

இந்திய மோட்டார் வாகன சந்தையில் வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் மாறி வருவதைக் காட்டும் வகையில், மகிந்திரா மாராஸ்சோ 2025 நிதியாண்டில் 77% விற்பனை வீழ்ச்சியை சந்தித்தது.

208km/h வேகத்தில் போகும்போது இந்த சாகசம் எல்லா அவசியம் தானா?

உலகில் அதிக எண்ணிக்கையில் சாலை விபத்துகள் நடைபெறும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாக உள்ளது. இதற்கு பல காரணங்கள் கூறப்பட்டாலும், முக்கியமான காரணங்களுள் ஒன்று அதிவேகமான பயணம் ஆகும். அதிகப்பட்சமாக இந்திய விரைவுச்சாலைகளில் மணிக்கு 120கிமீ வேகத்திற்கு செல்லலாம் என அனுமதிக்கப்படுகிறது.

பொழுதுபோகாம பெட்ரோலை போட்டுகிட்டு என்னென்ன பண்றாங்க பாருங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தார் (Thar) வாகனத்திற்கு மக்கள் மத்தியில் இருந்து மிக சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. இதன் மூலம் கிடைத்த தைரியத்தில்தான், கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் 'தார் ராக்ஸ்' (Thar ROXX) என்கிற 5-கதவுகளை கொண்ட புதிய தார் வாகனத்தை மஹிந்திரா அறிமுகம் செய்தது.
Advertisement

ஹோண்டா எலிவேட் எஸ்யூவி காரில் சிஎன்ஜி ஆப்ஷனா?..

இந்தியர்கள் மத்தியில் சிஎன்ஜி (CNG) வாகனங்களுக்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இந்த நிலையை உணர்ந்து பிரபல கார் உற்பத்தி நிறுவனமான ஹோண்டா (Honda), அதன் பிரபல கார் மாடல் ஒன்றில் சிஎன்ஜி ஆப்ஷனை சேர்த்திருக்கின்றது. எலிவேட் (Elevate) கார் மாடலிலேயே அது சிஎன்ஜி தேர்வைச் சேர்த்திருக்கின்றது. ரெட்ரோஃபிட் செய்தே சிஎன்ஜி ஆப்ஷனை அதன் வாடிக்கையாளர்களுக்கு வழங்க நிறுவனம் முன் வந்திருக்கின்றது. ஏற்கனவே இந்த செயலை சில முன்னணி ஹோண்டா கார் விற்பனையாளர்கள் செய்துக் கொண்டிருக்கின்றனர்.

31 கிமீ மைலேஜை வாரி வழங்கற இந்த காரை வாங்கவே ஆள் இல்லையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களில் (Premium Hatchback Cars) ஒன்று மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno). இதன் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், மாருதி சுஸுகி நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் மாதம் இந்தியாவில் 12,357 பலேனோ கார்களை மட்டுமே விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கையானது கடந்த 2024ம் ஆண்டு மார்ச் மாதம் 15,588 ஆக இருந்தது.

காரை பரிசா தந்து கணவனை ஆச்சரியப்படுத்திய பெண்!!

இந்த மாதிரி மனைவி அமைவதெல்லாம் வரம்ங்க.. என சொல்லும் அளவிற்கு ஓர் மனைவி, தன் கணவனிடம் நடந்திருக்கின்றார். கணவனின் மனசு கஷ்டப்படாமல் சந்தோஷமாக வச்சுக்கிறதே பெரிய விஷயமாக ஆண்கள் பலர் கருதுகின்றனர். ஆனால், நாம் பார்க்க இருக்கும் இந்த பெண்ணோ அன்புடன் சேர்த்து தன்னுடைய கணவனின் நீண்ட நாள் கனவு காரையும் பரிசாக தந்திருக்கின்றார். இன்ஸ்டாவில் பிரபலமாக வலம் வந்துக் கொண்டிருக்கும் ஜோடி அர்பிதா மற்றும் அபிஷேக் ஆவர். அபிஷேக்கிற்கே அர்பிதா விலை உயர்ந்த காரை பரிசாக தந்திருக்கின்றார்.

5 இருக்கை மட்டுமே இருந்தாலும் மக்கள் விடுவதாக இல்லை...!!

இந்தியாவில் நிமிர்ந்த தோற்றம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார்களை வாங்கவே சமீப காலமாக மக்கள் பலரும் விரும்புகின்றனர். இதனாலேயே எஸ்யூவி கார்களை வாங்குவோரின் எண்ணிக்கையும் சரி, மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள எஸ்யூவி கார்களின் எண்ணிக்கையும் சரி தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது.

ஸ்டாக்குல இருக்குற காரை வாங்க கடைசி வாய்ப்பு விலை என்ன?

போர்ஷே இந்தியா மெக்கான் எஸ் மற்றும் ஜிடிஎஸ் மாடல்களை நிறுத்தியுள்ளது, பெட்ரோல் எண்ட்ரி-லெவல் மாடல் மட்டுமே உள்ளது. விலை சரிசெய்தல் மற்ற மாடல்களை பாதிக்கிறது, மின்சார மாடல்கள் நிலையானதாக உள்ளன.

கம்மியா தான் வித்திருக்குது! ஆனாலும் கம்பெனிக்கு செம லாபம்!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் கார்களுக்கு நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்திய மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. எஸ்யூவி கார்கள் என்றால் முழு சைஸ் எஸ்யூவி கார்கள் தான். மக்கள் மத்தியில் எஸ்யூவி கார்கள் அதிகம் விரும்பப்படுவதால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தியாவில் இதில் பல்வேறு வகையான வாகனங்களை தயாரித்து விற்பனைக்கு அறிமுகப்படுத்தி வருகிறது. ஆனால் முழுமையான எஸ்யூவிகளுக்க இந்தியாவில் தொடர்ந்து தேவை அதிகரித்துக்கொண்டே வருகிறது. இப்படியாக கடந்த மார்ச் மாதம் விற்பனையான டாப் முழு சைஸ் எஸ்யூவிகள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

இசை புயல் உண்மையாகவே இந்த காரை வாங்கிட்டாரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் லேட்டஸ்ட் அறிமுகமாக எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) கார் மாடல்கள் இருக்கின்றன. இரண்டுமே எஸ்யூவி ரக மின்சார கார்கள் ஆகும். இந்த கார்களுக்கு இந்தியர்கள் மத்தியில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதில் ஓர் கார் மாடலை இசைப் புயல் ஏஆர் ரஹ்மான் புக் செய்திருப்பதாக கடந்த சில தினங்களுக்கு முன்னர் தகவல்கள் வெளியாகின. இந்த தகவலை பலரும் நம்பவில்லை என்றே சொல்லலாம்.

7 பேர் போகும் இந்த காரை மக்கள் வாங்கி குவிச்சிட்டாங்க!

2025 மார்ச் மாதத்தில், ரெனோ இந்தியாவின் டிரைபர் மாடல், இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் போட்டியின் மத்தியில் நிலையான விற்பனையைக் காண்பித்து, சிறந்த விற்பனையாகும் மாடலாக மாறியது.
Advertisement

ஒரு வருஷம் கூட ஆகல! அதுக்குள்ள விற்பனை டபுள் மடங்காகிடுச்சு!

மகிந்திராவின் XUV 3XO குறிப்பிடத்தக்க விற்பனை வெற்றியைப் பெற்று, பல்வேறு இயந்திர விருப்பங்களை, ஈர்க்கும் வடிவமைப்பை மற்றும் விரிவான அம்சங்களை வழங்குகிறது.

8 வருஷத்துக்கு பின் மீண்டும் மார்க்கெட்டில் அறிமுகமான கார்!

ஸ்கோடா ஆட்டோ இந்தியா (Skoda Auto India) நிறுவனத்தில் இருந்து மேம்படுத்தப்பட்ட புதிய கோடியாக் (Kodiaq) என்கிற விலைமிக்க எஸ்யூவி (SUV) ரக கார் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பார்க்க பிரம்மாண்டமாக இருக்கும் இந்த ஸ்கோடா கார் அதற்கேற்ப விலையையும் சற்று அதிகமாக பெற்று வந்துள்ளது.

அடுத்த வருஷத்துல இருந்து பெட்ரோல் டூவீலர்களுக்கு தடையா?

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் தீவிரமடைந்து கொண்டே வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol), டீசல் (Diesel) மூலமாக இயங்கும் வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாட்டை அதிகரிக்கும் முயற்சிகளை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும் இந்தியாவின் பல்வேறு மாநில அரசுகளும், எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை பொதுமக்கள் மத்தியில் அதிகரிக்கும் முயற்சிகளை மிக தீவிரமாக எடுத்து வருகின்றன.

ஷோரூமை திறந்தாச்சு, இனி பைக்குகளை விற்க வேண்டியதுதான்!

ரிவோல்ட் மோட்டார்ஸ் (Revolt Motors), இந்தியாவில் எலக்ட்ரிக் பைக்குகளை (Electric Bikes) உற்பத்தி செய்யக்கூடிய மிகவும் சில நிறுனங்களுள் ஒன்று. இந்தியவின் மிக பெரும் க்ரூப் ஆன ரத்தன்இந்தியா (RattanIndia)-இன் கீழ் செயல்படும் எலக்ட்ரிக் 2-வீலர் நிறுவனம்.

பைக் டாக்ஸியில் திருட்டுத்தனமா போன கிரிக்கெட் வீரர் - வீடியோ

ஐபிஎல் (IPL), உலகின் மிக பெரிய கிரிக்கெட் (Cricket) தொடர்களுள் ஒன்று. கிரிக்கெட் என்பதை தாண்டி, ஒவ்வொரு வருடமும் பல ஆயிரம் கோடி ரூபாய் பணம் புரளும் வணிகமாக ஐபிஎல் விளங்குகிறது. ஐபிஎல் மூலம் தங்களை விளம்பரப்படுத்திக் கொள்ள ஒவ்வொரு கார்ப்பிரேட் நிறுவனங்களும் விரும்புகின்றன.