நம்ம பெட்ரூமை விட நீளமான ரெண்டு முகம் கொண்ட மாருதி 800..

மாருதி 800 (Maruti 800), இந்த கார் மாடலை அறியாதவர்களே இருக்க முடியாது. மலிவு விலை, குட்டியான உருவம் மற்றும் அதிக மைலேஜ் என பலவற்றிற்கு பெயர்போன கார் மாடலாக இது இருக்கின்றது. இத்தகைய கார் மாடலையே நீளமான உருவம் கொண்ட லிமோசைன் (limousine) வகை வாகனமாக இளைஞர்கள் சிலர் மாற்றி இருக்கின்றனர். இரண்டு மாருதி 800 கார்களை பயன்படுத்தியே அவர்கள் லிமோசைன் வாகனத்தை தயார் செய்திருக்கின்றனர். பிரபல யுட்யூபரான தில்ராஜ் சிங் ராவத், இவரும் இவருடைய நண்பர்கள் குழுவே இந்த வாகனத்தை தயார் செய்தவர்கள் ஆவர்.

ஆக்டிவா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இவ்வளவு பேர் தான் வாங்கியிருக்

ஹோண்டா அக்டிவா E மற்றும் QC1 மின்சார ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்துவதன் மூலம் EV சந்தையில் நுழைந்துள்ளது, ஆரம்ப விற்பனை புள்ளிவிவரங்கள் மற்றும் செயல்திறன் தகவல்கள் கிடைத்துள்ளன.

ஷோரூமில் இருந்து ஆசை ஆசையாய் டெலிவிரி எடுத்தது இதுக்குதானா?

இந்தியாவில் கடந்த காலங்களில் அட்வென்ச்சர் (Adventure) ரக பைக்குகளுக்கு பெரியதாக மார்க்கெட் இருந்தது இல்லை. ஆனால், சமீப காலமாக அட்வென்ச்சர் பைக்குகளுக்கு சிறப்பான வரவேற்பு கிடைத்து வருகிறது. நீண்ட சஸ்பென்ஷன் (Suspension) உடன் பள்ளம் மேடான சாலைகளை கையாளக் கூடியவை அட்வென்ச்சர் பைக்குகள் ஆகும்.

பெட்ரோல் பங்க்குகளில் ஏஐ கேமிராவா.. எதற்கு தெரியுமா?..

வயதை துள்ளியமாகக் கண்டறியும் ஏஐ கேமிரா (AI Camera)க்களை பெட்ரோல் பங்க்குகளில் பொருத்தும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. 'என்னதான் போலீஸின் கண்கள்ல மண்ணை தூவிவிட்டுட்டு மறைந்து மறைந்து ஓடிக் கொண்டிருந்தாலும், பெட்ரோல் போட பங்க் பக்கம் வந்துதானே ஆக வேண்டும். அங்கு வைத்து உங்களை பிடிப்போம்' என இந்த கேமிராக்களை பொருத்துவதன் வாயிலாக சொல்லாமல் சொல்லி இருக்கின்றது, காவல்துறை. நாடு முழுக்க வயது முதிர்ந்த வாகனங்களால் பல்வேறு சிக்கல்கள் ஏற்பட்டு வருகின்றன.
Advertisement

வெயில் காலத்தில் காரில் சில அறிகுறிகள் வந்தாலே உஷாராகிடனும்!

கோடைக்காலம் (Summer), ஐரோப்பிய, அமெரிக்க நாடுகளுக்கு வேண்டுமாயின் மகிழ்ச்சியான வசந்த காலமாக இருக்கலாமே தவிர்த்து, நம் இந்தியாவில் கோடைக்காலம் பல அசவுகரியங்களை ஏற்படுத்தக்கூடியதாக உள்ளது. தனிநபர் சவுகரியத்தில் இருந்து, வாகனங்களுக்கான சவுகரியமான சூழல் வரையில் என எல்லாமே வெயில் காலத்தில் தடைப்படுகிறது.

டொயோட்டா காரின் விலை உயர்ந்தது!..

டொயோட்டா (Toyota) நிறுவனம் இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கும் தரமான கார் மாடல்களில் ஒன்றாக கேம்ரி (Camry) உள்ளது. இது ஓர் பிரீமியம் அம்சங்கள் நிறைந்த செடான் ரக கார் மாடல் ஆகும். பிரீமியம் அம்சங்களை மட்டுமல்ல அதிக அட்வான்ஸ்டு தொழில்நுட்ப வசதிகளையும் தன்னுள் நிறைவாகக் கொண்டிருக்கும் கார் மாடலாக இது இருக்கின்றது. இத்தகைய காரின் விற்பனைக்கே சூன்யம் வை(பாதி)க்கின்ற மாதிரியான ஓர் செயலைச் டொயோட்டா நிறுவனம் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நிறுவனம் அதன் விலையையே உயர்த்தி இருக்கின்றது.

தினமும் 18,500 பேர் இந்த வண்டியை வாங்குறாங்க!

இந்திய ஸ்கூட்டர் தொழில் 2025 நிதியாண்டில் ஒரு சாதாரண விற்பனை சாதனையை பதிவு செய்துள்ளது, 17% அதிகரிப்புடன் 68.53 லட்சம் யூனிட்களை எட்டியுள்ளது. ஹோண்டா மற்றும் டிவிஎஸ் போன்ற முக்கிய வீரர்கள் மின்சார ஸ்கூட்டர் தேவை மற்றும் கிராமப்புற சந்தை மறுமலர்ச்சி ஆகியவற்றால் ஊக்கப்படுத்தப்பட்டு, இந்த வளர்ச்சியை வழிநடத்தினர்.

34 கிமீ மைலேஜ் தர்ற காரை கம்மி ரேட்ல வித்து தள்றாங்க!

இந்தியாவில் அறிமுகமே தேவை இல்லை என்னும் அளவிற்கு அனைத்து தரப்பு மக்கள் மத்தியிலும் பரிட்சயமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த இந்த காரின் 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இது கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியில் இருந்து நடப்பு 2025ம் ஆண்டு மார்ச் 31ம் தேதி வரையிலான விற்பனை நிலவரம் ஆகும். இந்த காலகட்டத்தில் 1,02,232 ஆல்டோ கே10 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது.

இந்த காருக்கு 10 வருஷம் வாரண்டி தர போறாங்க!

சுஸுகியின் e விட்டாரா ஐரோப்பாவில் 10 ஆண்டு உத்தரவாதத்தை வழங்குகிறது, வடிவமைப்பு நம்பகத்தன்மையை வலியுறுத்துகிறது. பேட்டரி தொழில்நுட்பம் மற்றும் உற்பத்தித் திட்டங்கள் குறித்த விவரங்களைத் தெரிந்துகொள்ளுங்கள்.

பென்ஸ் கார் பார்க்க சூப்பரா இருந்த போதும் வாங்க ஆள் இல்ல!

மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்தில் இருந்து கார் ஒன்றின் விற்பனை எந்தவொரு அறிவிப்பும் இன்றி சைலண்ட்டாக நிறுத்திக் கொள்ளப்பட்டுள்ளது. பொதுவாக, கார்கள் சரியாக விற்பனையாகவில்லை என்றால், அதன் விற்பனை நிறுத்தப்படுவது வாடிக்கையான ஒன்றுதான். ஆனால், இந்த நிலைமை இந்தியாவின் நம்பர் ஒன் லக்சரி கார் நிறுவனமான மெர்சிடிஸ்-பென்ஸுக்கும் ஏற்பட்டுள்ளது எனும் நினைக்கும்போது கொஞ்சம் வருத்தமாக உள்ளது.

தமிழ்நாடு அரசின் மானத்தை வாங்கிய கவர்மெண்ட் பஸ்...

அரசு பஸ்கள் எல்லாம் மிக மோசமாக பராமரிக்கப்படுவதாக மக்கள் மத்தியில் நீண்ட நாட்களாக குற்றச்சாட்டு உள்ளது. இந்த குற்றச்சாட்டிற்கு சான்றாக பல இடங்களில் அரசு பஸ்கள் பல்வேறு விதமான விபத்துகளையும் ரிப்பேர்களையும் சந்தித்து வருகின்றன. இப்படியாக சமீபத்தில் ஓடிக்கொண்டிருந்த அரசு பஸ் வீல் கழன்று தனியாக ஓடிய சம்பவம் நடந்துள்ளது. சினிமா காமெடியில் வரும் காட்சி போல இந்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே ஆளா வந்து 100 வாகனங்களை வாங்கிட்டாங்க!!

125 ஆண்டுகள் பழைமையான நிறுவனம் முருகப்பா குழுமம். இது ஓர் சென்னையை தலைமையமாகக் கொண்டு இயங்கும் நிறுவனம் ஆகும். இந்த நிறுவனம் நிதி, மின்சார வாகன உற்பத்தி என பலதுறைகளில் பங்களித்து இயங்கி வருகின்றது. மோந்த்ரா எலெக்ட்ரிக் (Montra Electric), எனும் பெயரிலேயே அது மின்சார வாகனங்களை உற்பத்தி செய்து வருகின்றது. இந்த பிராண்டின்கீழ் உற்பத்தி செய்யப்படும் முக்கிய தயாரிப்புகளில் ஒன்றாக ஈவியேட்டர் (Eviator) இருக்கின்றது. இந்த மாடலுக்கே அதிக எண்ணிக்கையில் ஆர்டர் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

சீனா, ஜப்பானை எல்லாம் தண்ணி குடிக்க வைக்கும் இந்தியா...

2024-25 ஆம் நிதியாண்டில் இந்திய ஆட்டோமொபைல் ஏற்றுமதிகள் 19% அதிகரித்துள்ளன, இது சர்வதேச சந்தைகளில் பயணிகள் வாகனங்கள் மற்றும் இருசக்கர வாகனங்களுக்கான வலுவான தேவை காரணமாகும்.

கார் விற்பனையில் கலக்கும் மாருதி சுஸுகி & டொயோட்டா!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. ஜப்பானை சேர்ந்த சுஸுகி மற்றும் இந்தியாவின் மாருதி நிறுவனங்களுக்கு இடையேயான கூட்டணி நிறுவனம் தான் மாருதி சுஸுகி ஆகும்.

ஒன்னரை கோடி ரூபா கார்ல வந்தது அவங்களா!

இந்தியாவை சேர்ந்த கோடீஸ்வரர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்7 (BMW X7). ஜெர்மனியை சேர்ந்த பிஎம்டபிள்யூ நிறுவனம் உருவாக்கி வரும் சொகுசு எஸ்யூவி (Luxury SUV) ரகத்தை சேர்ந்த கார்தான் எக்ஸ்7. 6 சீட்டர் மற்றும் 7 சீட்டர் ஆப்ஷன்களில் விற்பனை செய்யப்பட்டு வரும் பிஎம்டபிள்யூ எக்ஸ்7 கார் மிகவும் விலை உயர்ந்தது ஆகும். தற்போதைய நிலையில் இந்த காரின் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலையே 1.29 கோடி ரூபாயாக உள்ளது.

ஆர்சிபி அணி கொடுத்த 2 கோடி ரூபா இப்படித்தான் செலவாகி இருக்கு

தேவ்தத் படிக்கல் (Devdutt Padikkal), இந்த பெயரை எங்கேயோ கேட்டதுபோல் உள்ளதா? ஐபிஎல் (IPL) கிரிக்கெட் போட்டியில் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணிக்காக விளையாடி வருபவர் தான் இந்த தேவ்தத் படிக்கல் ஆவார். ஐபிஎல் தொடர்களில் வெவ்வேறான அணிகளுக்காக விளையாடினாலும் இவர் நாடு முழுவதும் கிரிக்கெட் ரசிகர்கள் மத்தியில் பிரபலமாகியதற்கு ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணி முக்கியமான காரணம் ஆகும்.

கையில காரை வாங்கினதும் அப்படி ஒரு மகிழ்ச்சி..

இந்தியாவில் மிக வேகமாக ஓர் கார் மாடல் பிரபலமடைந்து வருகின்றது. மஹிந்திரா (Mahindra)-வின் சமீபத்திய வெளியீடான எக்ஸ்இவி 9இ (XEV 9e), கார் மாடலே அது ஆகும். இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் மாடல் ஆகும். இந்த காருக்கு இந்தியர்கள் மத்தியில் மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. திரை உலகைச் சேர்ந்த உச்ச நட்சத்திரங்கள் தொடங்கி பெரும் செல்வந்தர்கள் வரை என பலர் இந்த வாகனத்தை போட்டி போட்டு வாங்கிக் கொண்டிருக்கின்றனர்.

எல்லாமே நல்லா இருந்தும் மக்கள் ஏன் இந்த காரை வாங்கல?

2025 நிதியாண்டில் வோக்ஸ்வாகன் டிகுவான் விற்பனையில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க சரிவு மற்றும் இந்தியாவில் விளையாட்டுத்தனமான டிகுவான் ஆர் லைன் அறிமுகம் ஆகியவற்றைக் கண்டறியவும்.

யாரோ மாதிரி மஹிந்திரா கார்ல வந்தது அவங்களா!

இந்தியாவில் முன்பெல்லாம் நடிகர், நடிகைகள் பொதுவாக மிகவும் விலை உயர்ந்த சொகுசு கார்களில்தான் (Luxury Cars) பயணிப்பார்கள். அதாவது ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz) மற்றும் பிஎம்டபிள்யூ (BMW) போன்ற நிறுவனங்களின் சொகுசு கார்கள்தான் நடிகர், நடிகைகளின் முதன்மையான தேர்வாக இருக்கும். ஆனால் தற்போது காலம் மாறி வருகிறது. இந்திய நிறுவனங்களின் கார்களை பிரபல நடிகர், நடிகைகள் பலரும் பயன்படுத்த தொடங்கியுள்ளனர். குறிப்பாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் தயாரிப்புகள் சமீப காலமாக திரையுலக நட்சத்திரங்கள் பலராலும் வாங்கப்பட்டு வருகின்றன.

நகைக்கடை ஓனரே மஹிந்திராவின் இந்த காரைதான் வாங்கியிருக்காரு!!

இந்தியாவில் இயங்கிக் கொண்டிருக்கும் முன்னணி நகைக் கடைகளில் ஜோஸ் ஆலுக்காஸ்-ம் ஒன்றாகும். தென்னிந்தியாவின் பிரபலமான ஆபரண தங்க நகைக் கடையாக இது விளங்குகின்றது. இதன் சிஇஓ ஜான் ஆலுக்கா, இவரே தற்போது புதிதாக கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். இந்தியர்கள் மத்தியில் புதிதாக பிரபலமடைந்துக் கொண்டிருக்கும் மஹிந்திரா (Mahindra) இ-காரையே அவர் வாங்கி இருக்கின்றார். சமீபத்தில் இந்த நிறுவனம் இரண்டு புதுமுக கார்களை இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. எக்ஸ்இவி 9இ (XEV 9e) மற்றும் பிஇ 6 (BE 6) ஆகிய கார் மாடல்களையே அது அறிமுகப்படுத்தியது.
Advertisement

டிரைவரே இல்லாமல் ஓடும் குட்டி "சிட்டி" வண்டி!

ஹர்ஷ் கோயங்கா CEAT தொழிற்சாலையில் ஓட்டுநர் இல்லாத வாகனத்தின் வீடியோவை பகிர்ந்து, அற்புதமான AI மற்றும் தானியக்க தொழில்நுட்பத்தை எடுத்துக்காட்டுகிறார். பொது மக்களின் எதிர்வினைகளை ஆராயுங்கள்.

பள்ளி மாணவியா நடித்த நடிகை தானே இது? மஹிந்திரா காருக்கு ஓனர்

மகிமா நம்பியார் (Mahima Nambiar), மலையாள நடிகையாக இருப்பினும், தமிழிலும் சில திரைப்படங்களில் நடித்து கவனத்தை ஈர்த்தவர். இன்னும் சொல்லப்போனால், மலையாளத்தை காட்டிலும் தமிழில் தான் அதிக திரைப்படங்களில் நடிகை மகிமா நம்பியார் நடித்துள்ளார்.

ஆகஸ்டு முதல் மதுரைக்கும் வருகிறது இ-பஸ்!!

சென்னையின் பொதுபோக்குவரத்தில் விரைவிலேயே மின்சாரத்தில் இயங்கும் பேருந்துகள் இணைக்கப்பட இருக்கின்றன. இதற்காக ஆயிரக் கணக்கான பேருந்துகளுக்கு ஏற்கனவே தமிழக அரசு ஆர்டர் கொடுத்துவிட்டது. இதில் சில யூனிட்டுகளே ஒரு சில வாரங்களில் பயன்பாட்டிற்கு வர இருக்கின்றன. இந்த நிலையிலேயே புதிய தகவலாக சென்னையில் மட்டுமல்ல மதுரையிலும் புதிய மின்சார பேருந்துகள் பயன்பாட்டிற்குக் கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சமீபத்தில் மதுரை மாட்டுத்தாவனி பேருந்து நிலையில் புதிதாக 32 டிஎன்எஸ்டிசி பேருந்துகளை பொதுமக்களின் பயன்பாட்டில் அமைச்சர் எஸ்எஸ் சிவசங்கர் பச்சை கொடியசைத்து இணைத்து வைத்தார்.

மஹிந்திரா,மாருதி கார்களை ஒரம்கட்டபோகும்! தமிழ்நாடு கார்கள்!

வியட்நாமிய உற்பத்தியாளரான வின்காஸ்ட் இந்தியாவில் VF 6 மற்றும் VF 7 மின்சார SUV களை அறிமுகப்படுத்துகிறது, இது நவீன அம்சங்கள் மற்றும் போட்டித் திறன் கொண்ட விவரக்குறிப்புகளை வலியுறுத்துகிறது.

வரிசைக்கட்டி சென்ற லாரிகள் ஒருத்தருக்கு மட்டுமே சொந்தமானதா?

இந்தியாவில் வாகன ஊர்வலங்களுக்கு எப்போதுமே குறை இருந்ததே கிடையாது. திருவிழா, பேரணி என்று எதற்கெடுத்தாலும் வாகனங்கள் ஊர்வலமாக கொண்டு செல்லப்படுவது வழக்கம். ஆனால், இங்கு ஒருவர் தான் வாங்கிய புத்தம் புதிய லாரிகளை ஒன்றாக சாலையில் கொண்டு சென்று மாஸ் காட்டியுள்ளார்.