இந்தியாவில் கடலுக்கு அடியில் ரயில் பாதை போட போறாங்க!

உலகம் மிக வேகமாக இயங்கிக்கொண்டிருக்கிறது. அதனால் பயணங்களும் மிக வேகமாக மாறிக்கொண்டிருக்கின்றன. இன்று வேகமான பயணம் என்றால் எல்லோரும் விமானங்களை தான் தேர்வு செய்வார்கள். ஆனால் விமானங்களுக்கு இணையாக ரயிலிலும் பயணிக்க முடியும் என்று பலர் இனி கூறுவார்கள். அப்படியான ஒரு மாற்றம் தற்போது வரப்போகுது மும்பையிலிருந்து துபாய்க்கு கடல் வழியாக நீருக்கடியில் மணிக்கு 1000 கி.மீ வேகத்தில் பயணிக்கும் ரயில் அறிமுகமாகவுள்ளது.

மனைவி உடன் புது காரை டெலிவிரி எடுத்த இன்ஸ்டாகிராம் பிரபலம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) ஆகும். கடந்த ஆண்டு டிசம்பர் மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் டெலிவிரிகள் சமீபத்தில், கடந்த மார்ச் மாத மத்தியில் துவங்கப்பட்டன. அதனை தொடர்ந்து, இந்தியா முழுவதும் ஒவ்வொரு கஸ்டமர்களாக இந்த எலக்ட்ரிக் கார்களை டெலிவிரி பெற்று வருகின்றனர். அந்த வகையில், இன்ஸ்டாகிராம் (Instagram) பிரபலமான ஒருவர் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ எலக்ட்ரிக் காரை தற்போது டெலிவிரி பெற்றுள்ளார்.

கொஞ்ச தூரம் நடந்து வந்து கார்ல ஏறவே ரொம்ப கஷ்டப்பட்றாரு!

இந்தியாவில் ரேஞ்ச் ரோவர் (Range Rover) காருக்கு மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ரேஞ்ச் ரோவர் காரை வைத்துள்ளனர். இளம் நடிகர்கள் மற்றும் மூத்த நடிகர்கள் என வயது வித்தியாசமின்றி ரேஞ்ச் ரோவர் காரை அதிகளவில் பயன்படுத்தி வருகின்றனர். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் ரேஞ்ச் ரோவர் காரின் ஆரம்ப விலையே 2.40 கோடி ரூபாயாக இருக்கிறது. அதே நேரத்தில் இந்த காரின் டாப் வேரியண்ட்டின் விலை 4.98 கோடி ரூபாயாக உள்ளது. இவை எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும்.

சைக்கிள்-பைக் மாதிரி விற்பனையாகும் கியா கார்..

இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) உருவெடுத்திருக்கின்றது. இதை நம்பாதவர்களை நம்ப வைக்கும் விதமான ஓர் சம்பவமே தற்போது நாட்டில் அரங்கேறி இருக்கின்றது. அதாவது நிறுவனத்தின் புதுமுக தயாரிப்பு ஒன்றிற்கு இந்தியர்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. சைரோஸ் (Syros) கார் மாடலே அது ஆகும். இது ஓர் டால்பாய் உருவம் கொண்ட எஸ்யூவி (SUV) ரக கார் மாடல் ஆகும். இந்த கார் விற்பனைக்கு வந்து இரண்டு மாதங்கள் மட்டுமே ஆகின்றன.
Advertisement

வெறும் 365 நாளில் 22.34 லட்சம் கார்கள் வித்துடுச்சு!

மாரூதி சுசூகி இந்தியா FY 2025 இல் மொத்த விற்பனையில் 4.63% வளர்ச்சியை பதிவு செய்துள்ளது, இதில் பயன்பாட்டு வாகன பிரிவில் வலுவான செயல்பாடுகள் மற்றும் ஏற்றுமதி துறையில் வலுவான வளர்ச்சி ஆகியவை அடங்கும்.

பளபளக்கும் கருப்பு நிறத்தில் கம்பீரமா காட்சி தரும் டாடா கார்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்யப்பட்ட கார், கர்வ் (Curvv) ஆகும். டாடா நிறுவனத்தின் கூபே-ஸ்டைலிலான எஸ்யூவி காராக கர்வ் அறிமுகம் செய்யப்பட்டது. பிரபலமான ஹூண்டாய் கிரெட்டா (Hyundai Creta) காருக்கு போட்டியாக விளங்கும் டாடா கர்வ் காரில் புதியதாக டார்க் எடிசன் (Dark Edition)-ஐ கொண்டுவர டாடா மோட்டார்ஸ் திட்டமிட்டு வருவதை ஏற்கனவே பார்த்திருந்தோம். இந்த நிலையில், டாடா கர்வ் டார்க் எடிசன் கார் ஒன்று ஷோரூமில் காட்சி தந்துள்ளது.

5.53 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய நம்பி வாங்கியிருக்காங்க

2025 மார்ச் மாதத்தில் டாட்டா மோட்டார்ஸ் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பெற்றது, மகிந்திரா ஆட்டோவை விஞ்சியது, சர்வதேச சந்தை விரிவாக்கம் மற்றும் ஏற்றுமதி வளர்ச்சியில் கவனம் செலுத்தியது.

செல்லானை கட்டாம வச்சிருக்கீங்களா.. உங்களோட கவனத்திற்கு..

போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு அடுத்த முறை போக்குவரத்து விதிமீறலில் ஈடுபடக் கூடாது என்பதற்காக அபராதம் வழங்கப்படுகின்றது. இதனை இரண்டு வழிகளில் போக்குவரத்து காவல்துறையினர் வழங்கிக் கொண்டிருக்கின்றனர். சாலையோரங்களில் நின்றுக் கொண்டு விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளைப் பிடித்து அவர்களுக்கு அபராத செல்லான்களை வழங்குவது மற்றும் முக்கிய சாலைகளில் அதி நவீன தொழில்நுட்ப வசதிக் கொண்ட கண்கானிப்பு கேமிராக்களைப் பொருத்தி அதன் வாயிலாக விதிமீறலில் ஈடுபடுபவர்களுக்கு இ-செல்லானை போட்டு அனுப்பி வைத்துக் கொண்டிருக்கின்றனர்.

மொத்த மாநிலத்துக்கே தண்ணி காட்டும் குடும்பம் வாங்கிய கார்!!

பி.எம்.டபிள்யூ (BMW), உலகளவில் பிரபலமான சொகுசு கார் நிறுவனம். ஜெர்மனியை சேர்ந்த இந்த நிறுவனத்தின் கீழ்தான் மினி (MINI) நிறுவனம் செயல்படுகிறது. பெயருக்கேற்ப, மினி பிராண்டில் விற்பனை செய்யப்படும் கார்கள் யாவும் அளவில் சிறியவை ஆகும். இருப்பினும், மினி கார்களின் விலைகள் பல இலட்ச ரூபாய்களாக உள்ளன. இதனாலேயே அளவில் சிறிய கார்களாக இருப்பினும், மினி கார்களை பணக்காரர்கள் மட்டுமே வாங்குகின்றனர். அந்த வகையில் தற்போது ஒரு செல்வந்தர் மினி நிறுவனத்தின் கார் ஒன்றை வாங்கி உள்ளார்.

கார் டாக்ஸி தொழிலை ஆரம்பிக்க எந்த காரை தேர்வு செய்வது?

இந்தியா, உலகின் மிக பெரும் கார் டாக்ஸி (Car Taxi) நெட்வொர்க்கை கொண்ட நாடுகளுள் ஒன்று என சொன்னால் அது மிகையில்லை. இதனாலேயே சில கார் நிறுவனங்கள் கார் டாக்ஸி தொழிலுக்காக என்றே பிரத்யேக கார்களை உருவாக்கி வழங்குகின்றன. கார்களில் சிஎன்ஜி பவர்டிரெயின் (Powertrain) ஆப்ஷன் கொண்டுவரப்பட்டது கூட டாக்ஸி தொழிலை மனதில் வைத்தே ஆகும். இத்தகைய கார் டாக்ஸி தொழிலுக்காக இந்தியாவில் குறைந்த விலையில் கிடைக்கக்கூடிய, அதிக மைலேஜை வழங்கக்கூடிய கார்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

100 நாடுகளுக்கு இந்த காரை ஏற்றுமதி செய்ய மாருதி திட்டம்!

இந்தியர்களின் மிகப் பெரிய எதிர்பார்ப்பாக மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara) கார் மாடல் இருக்கின்றது. இது ஓர் மின்சாரத்தில் இயங்கும் எஸ்யூவி ரக கார் (SUV Electric Car) மாடல் ஆகும். இந்த கார் மாடல் இந்தியாவில் நடப்பு ஏப்ரல் மாதத்திலேயே விற்பனைக்கு அறிமுகமாகிவிடும் என உறுதியாக நம்பப்படுகின்றது. ஆனால், இதுபற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் கிடைக்கவில்லை. ஆனால், நிறுவனத்தின் செயல்கள் அனைத்தும் இதை உறுதிப்படுத்தும் விதமாகவே இருக்கின்றன.

சைலண்டா விற்பனையில் சாதனை படைத்த பஜாஜ் பைக்..

இந்தியாவின் இரண்டு சக்கர வாகனப் பிரிவில் தலைமைப் பதவியை வகிக்கும் நிறுவனங்களில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto Ltd)-வும் ஒன்றாகும். இந்த நிறுவனத்தின் தயாரிப்பிற்கு இந்தியாவில் நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. நம் நாட்டில் மட்டுமல்ல உலக நாடுகள் சிலவற்றிலும் பஜாஜின் தயாரிப்பிற்கு மிக சிறப்பான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. அதேவேளையில், இது டூ-வீலர்களை மட்டுமல்ல மூன்று சக்கர வாகன உற்பத்தியிலும் ஈடுபட்டு வருகின்றது. இந்த நிலையிலேயே இந்த நிறுவனத்தின் தயாரிப்பு ஒன்று 2 கோடி யூனிட்டுகளைக் கடந்து விற்பனையாகிக் கொண்டிருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன.
Advertisement

திருமணமான மகனுக்கு பிஸ்னஸ்மேன் தந்தையின் 'காஸ்ட்லீ' கிஃப்ட்!

மெர்சிடிஸ் (Mercedes), ஜெர்மனியை சேர்ந்த முன்னணி லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் விலையுயர்ந்த கார்களை விற்பனை செய்வதில் பி.எம்.டபிள்யூ (BMW) மற்றும் ஆடி (Audi) போன்ற நிறுவனங்களை விட முன்னணியில் மெர்சிர்டிஸ் உள்ளது. இத்தகைய மெர்சிடிஸ் நிறிவனத்தில் இருந்து கார்கள் மொத்தம் 3 விதமான பிரிவுகளின் கீழ் விற்பனை செய்யப்படுகின்றன. பென்ஸ் (Benz), ஏஎம்ஜி (AMG) மற்றும் மேபக் (Maybach) என்பன அவை ஆகும். இதில், மேபக் ஆனது மிகவும் விலை உயர்ந்த கார்களை கொண்டதாக உள்ளது.

சாதாரண காரில் வந்தது இந்த நடிகரா?

பொதுவாக நடிகர்கள் என்றால் காஸ்ட்லியான கார்களை தான் பயன்படுத்துவார்கள். அப்பொழுது தான் அவர்களது ரசிகர்கள் அதிகம் அதை பற்றி பேசுவார்கள். அவரை பற்றி பேச்சு சமூகத்தில் அதிகமாக இருக்கும். அதே நேரம் இந்த காஸ்ட்லியான கார்கள் அவர்களுக்கான வசதியையும் பாதுகாப்பையும் வழங்கும். அதே நேரம் சில நடிகர்கள் என்னதான் தனது ஸ்டார் அந்தஸ்து இருந்தாலும் சிம்பிளாக தங்களை காட்டிக்கொள்வார்கள். இப்படியாக நடிகர் ஒருவர் சாதாரண காரில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது.

விவிஐபி பதிவெண்ணுடன் விற்பனைக்கு வரும் நடிகரின் பைக்..

ரோஹித் ராய், இந்த பெயரை அறியாத இந்தி பட ரசிகர்களே இருக்க முடியாது. இவர் இந்தி படங்களில் மட்டுமல்ல நாடகங்களிலும் நடித்துக் கொண்டிருக்கின்றார் என்பது குறிப்பிடத்தகுந்தது. இவர் படங்களில் நடிப்பதில் மட்டுமல்ல வாகனங்களை நேசிப்பதிலும் பெயர்போன நபராக உள்ளார். இதற்கு சான்றாக அவரிடத்தில் ஏகப்பட்ட ஆடம்பர வாகனங்கள் பயன்பாட்டில் உள்ளன. கார்கள் மட்டுமல்ல சில விலை உயர்ந்த டூ-வீலர்களையும் அவர் வைத்திருக்கின்றார் என்பது கவனிக்கத்தகுந்தது. அதில் ஒன்றையே விற்பனைச் செய்ய தான் முன் வந்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

அவ்வளவு பெரிய நிறுவனத்தின் சிஇஓ-னு சொன்னா நம்பவே முடியல!!

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் மிக பெரும் ஆட்டோமொபைல் (Automobile) நிறுவனங்களுள் ஒன்று. குறிப்பாக, கமர்ஷியல் வாகனங்களை விற்பனை செய்வதில் நாட்டின் முன்னணி நிறுவனமாக விளங்குகிறது. நமது சென்னை (Chennai)-இல், எண்ணூர் (Ennore) பகுதியில் கூட அசோக் லேலண்ட் நிறுவனத்துக்கு தொழிற்சாலை இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். இத்தகைய பிரம்மாண்ட நிறுவனத்தின் எலக்ட்ரிக் வாகன பிரிவாக ஸ்விட்ச் மொபிலிட்டி (Switch Mobility) செயல்பட்டு வருகிறது. அதாவது, எலக்ட்ரிக் வாகனங்களை ஸ்விட்ச் மொபிலிட்டி நிறுவனத்தின் மூலம் உற்பத்தி செய்து அசோக் லேலண்ட் விற்பனை செய்கிறது.

தியேட்டருக்கு போறதுக்கு பதிலா இந்த கார்களிலே பார்க்கலாம்!

டாடா மோட்டார்ஸ் மற்றும் பிற நிறுவனங்களின் சிறு கார்களில் பெரிய தொடுதிரை காட்சிகள் எவ்வாறு அதிகரித்து வருகின்றன என்பதையும், மேம்பட்ட இன்போடெயின்மென்ட் அமைப்புகள் மூலம் ஓட்டுநர் அனுபவத்தை மேம்படுத்துவதைப் பற்றியும் ஆராயுங்கள்.

அமெரிக்கா, சீனாவை மண்டியிட வைக்க போகும் இந்தியா...

உலகம் மிக வேகமாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு (Electric Vehicles) மாறி கொண்டுள்ளது. தற்போது கைவசம் உள்ள கச்சா எண்ணெய் (Crude Oil) வளம் அடுத்த 50 ஆண்டுகளில் தீர்ந்து போய் விடும் என்று ஆய்வுகள் எச்சரிக்கின்றன. உலகின் தற்போதைய கச்சா எண்ணெய் நுகர்வின் அடிப்படையில் இது மதிப்பிடப்பட்டுள்ளது. எனவே கச்சா எண்ணெய் வளத்தால் செல்வ செழிப்பில் மிதந்து கொண்டுள்ள நாடுகள் பலவும், சுற்றுலா (Tourism) உள்ளிட்ட துறைகளின் மூலமாக வருவாய் ஈட்ட ஆயத்தமாகி கொண்டுள்ளன. துபாயை (Dubai) உள்ளிடக்கிய ஐக்கிய அரபு அமீரகம் (United Arab Emirates) இதற்கு ஒரு உதாரணம்.

2 கோடி ரூபா காரை வாங்கிய இரண்டே தமிழ் படத்தில் நடித்த நடிகை!

சோனம் பஜ்வா, இந்த பெயர் உங்களுக்கு ஞாபகம் இருக்கா?.. இந்தியாவின் பலமொழி படங்களில் இவர் நடித்துக் கொண்டிருக்கின்றார். இந்தி, பஞ்சாபி, தெலுங்கு மற்றும் தமிழ் உள்ளிட்ட மொழி படங்களிலேயே அவர் நடித்துக் கொண்டுள்ளார். தமிழ்ல இவங்க நடிச்சிருக்காங்களா?.. என நீங்கள் ஆச்சரியத்துடன் கேட்கலாம். இவர் இரண்டு தமிழ் படங்களில் நடித்திருக்கின்றார். கார்திக் ஜி கிரிஷ் இயக்கத்தில், வைபவ் நடிப்பில் கடந்த 2014 ஆம் ஆண்டில் வெளியாகிய படம் 'கப்பல்'. இந்த படத்தில் ஹீரோயினாக நடித்தவரே இந்த சோனம் பஜ்வா ஆவார்.

மனைவி இறந்த பிறகு கணவன் இப்படியெல்லமா இருப்பாங்க?

தன் மனைவி பிரிந்து சென்ற நிலையில் தன் வாழ்வில் முக்கியமான நிலையில் அவர் இல்லாததை நினைத்து கணவன் கதறி அழும் வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து வருகின்றனர். மனைவி பிரிந்து சென்ற பிறகும் வாழ்வில் தன் தரத்தை கணவர் உயர்த்திய பின்பும் பிரிந்து சென்ற மனைவி நினைத்து கணவன் உருகியது. பலருக்கு கண்ணீரை வரவழைத்தது. இந்த வீடியோ குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பைக்ல வந்த ஆண் நண்பருக்கு எதை குடுத்து அனுப்பறாங்க பாருங்க!

இந்தியாவில் முன்பெல்லாம் விவாகரத்து வழக்குகள் (Divorce Cases) மிகவும் குறைவாகவே இருந்தன. ஆனால் சமீப காலமாக விவாகரத்து வழக்குகளின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே வருகிறது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் விவாகரத்து பெறுவது அதிகமாக இருக்கிறது. வெகு சமீபத்தில் கூட, கிரிக்கெட் வீரர் யுசுவேந்திர சஹாலும் (Yuzvendra Chahal), அவருடைய மனைவி தனஸ்ரீ வர்மாவும் (Dhanashree Verma) விவாகரத்து பெற்றனர். மிக குறுகிய காலத்திலேயே இவர்களது திருமண வாழ்க்கை முடிவுக்கு வந்திருப்பது வருத்தமான ஒரு விஷயம்தான்.

இறந்த மகனின் நினைவா இப்போதைக்கு இது மட்டுமே இருக்கு!

சித்து மூஸ்வாலா (Sidhu Moose Wala), பிரபலமான பஞ்சாபி பாடகர் (Punjabi Singer) மற்றும் ராப் சிங்கர் (Rap Singer). பஞ்சாபி பாடகர் என்பதை தாண்டி, பாலிவுட் (Bollywood) சினிமாவிலும் கவனத்தை ஈர்த்தவர். ஆனால், துரதிர்ஷ்டவசமாக கடந்த 2022ஆம் ஆண்டில் மர்ம நபர்களால் சித்து மூஸ்வாலா படுகொலை செய்யப்பட்டது நாடு முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. ஏனெனில், குறிப்பாக வட இந்தியாவில் மிகவும் பிரபலமான பாடகராக சித்து மூஸ்வாலா விளங்கினார். மறைந்த இந்த பஞ்சாபி பாடகரின் அடையாளமாக பாடல்கள் பலவற்றை கூறலாம்.

ரோட்டிற்கு வந்த விஜய் மல்லையாவின் கார்!

இந்தியாவில் பெரும் பணக்காரராக இருந்து வங்கியில் வாங்கிய கடனை திரும்ப செலுத்த முடியாமல் வெளிநாட்டிற்கு தப்பி சென்ற விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கார் ஒன்று தற்போது மும்பை சாலையில் காணப்பட்டது. இந்த காரை ஓட்டி வந்தவர் பெரிய பிரபலமாக இருக்கிறார். விஜய் மல்லையாவிற்கு சொந்தமான கார் எப்படி இவர் வசம் வந்தது? இந்த காரில் அப்படி என்ன விசேஷமான விஷயங்கள் எல்லாம் இருக்கின்றன. விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

மேட்ச்ல 6 அடிச்சு வர காசுல இந்த காரை தான் வாங்க போறாரு!

தற்போது 2025ம் ஆண்டிற்கான ஐபிஎல் சீசன் நடந்து வருகிறது. இதில் தற்போது கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணிக்காக ரமன்தீப் சிங் என்பவர் விளையாடி வருகிறார். இவர் சமீபத்தில் ராஜ் ஷாமணி என்பவர் நடத்திய நேர்காணலில் இவர் தனது கனவு கார்கள் குறித்து பேசியுள்ளார். இந்தியாவில் கிரிக்கெட் வீரர்கள் எல்லாம் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்தி வரும் நிலையில் இவரும் காஸ்ட்லியான காரை வாங்க வேண்டும் என்ற ஆசையை வைத்துள்ளார். இவர் வாங்க விரும்பும் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரின் விலையை உயர்த்தும் நிறுவனங்கள்.. எந்தெந்த நிறுவனம்?

வாகன உற்பத்தி நிறுவனங்கள் சில இந்த ஏப்ரல் மாதம் முதல் தங்களின் தயாரிப்புகளின் விலை உயர்த்த இருப்பதாக சமீபத்தில் அறிவித்தன. அதாவது, புதிய கார்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்தன. எந்தெந்த நிறுவனம் இந்த அறிவிப்பை வெளியிட்டு இருக்கின்றன என்பது பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க உள்ளோம். இன்னும் தெளிவாகச் சொல்ல வேண்டும் என்றால், 2025 ஏப்ரலில் விலை உயர்வை செய்யப் போவதாக அறிவித்திருக்கும் நிறுவனங்களின் பட்டியலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.