3 வருஷத்துக்கு அப்புறமும் 2வது பேட்டரியை இலவசமா தராங்களா?

ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5), உலகளவில் பிரபலமான ஹூண்டாய் எலக்ட்ரிக் கார் (Electric Car). உலகிலேயே, பேட்டரியை ஒருமுறை சார்ஜ் நிரப்பினால் அதிக தொலைவிற்கு இயங்கக்கூடிய எலக்ட்ரிக் கார்களுள் ஹூண்டாய் ஐயோனிக் 5 ஒன்றாகும். இத்தகைய ஹூண்டாய் கார் இந்தியாவிலும் விற்பனை செய்யப்படுகிறது. இந்தியாவில் கடந்த 2023ஆம் ஆண்டு ஜனவரி மாதத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஐயோனிக் 5 எலக்ட்ரிக் காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் ரூ.46.30 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. பாகங்களாக வெளிநாட்டில் இருந்து கொண்டுவரப்பட்டு, இந்தியாவில் முழு காராக உருவாக்கப்பட்டு ஐயோனிக் 5 விற்பனை செய்யப்படுகிறது.

சொகுசு கார்ல சந்தோஷமா போறது அவங்களா!

இந்தியாவில் ஆடி (Audi) நிறுவனத்தின் கார்களுக்கு மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் பட்டாளம் உள்ளது. குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் பலரும் ஆடி நிறுவனத்தின் வாடிக்கையாளர்களாக உள்ளனர். இதன் மூலம் இந்தியாவில் அதிக சொகுசு கார்களை (Luxury Cars) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்றாக ஆடி திகழ்கிறது. ஆடி நிறுவனத்தின் கார்களை பொறுத்தவரையில், அதன் ஏ6 (Audi A6) கார் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருக்கிறது. இது சொகுசு செடான் (Luxury Sedan) ரகத்தை சேர்ந்த கார்களில் ஒன்றாகும்.

ஊட்டி, கொடைக்கானலுக்கு இப்படி ஒரு ரயில் வருதா?

வெளிநாடுகளில் உள்ளது போல ஊட்டி, கொடைக்கானல் பகுதியில் ஃப்யூனிகுலர் ரயில்களை கட்டமைக்க முடியுமா என்ற ஆய்வை சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் செய்ய திட்டமிட்டுள்ளது. அது போக மாமல்லபுரம் பகுதியில் ரோப் கார் வசதியையும் கொண்டு வருவதற்கான திட்டத்தையும் வைத்துள்ளது. ஃப்யூனிகுலர் ரயில் என்றால் என்ன? சாதாரண ரயிலுக்கும் இந்த ரயிலுக்கும் என்ன வித்தியாசம்? இந்த ரயில் எப்படி இயங்கும்? ஏன் ஊட்டி, கொடைக்கானல் உள்ளிட்ட மலைப்பகுதி மற்றும் மலை சார்ந்த பகுதிகளில் மட்டும் இது திட்டமிடப்படுகிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உலக நாடுகள் அனைத்தும் இந்த காரை பற்றிதான் பேசிட்டு இருக்கு!

இந்தியாவில் விற்பனைக்குக் கிடைக்காத ஹூண்டாய் (Hyundai) கார் மாடல்களில் ஒன்றாக நெக்ஸோ (Nexo) உள்ளது. இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே ஹூண்டாய் நிறுவனம் இந்த உலகத்திற்கு அறிமுகப்படுத்தி இருக்கின்றது. இரண்டாம் தலைமுறை வெர்ஷன் (Second Generation)-னையே அது அறிமுகம் செய்திருக்கின்றது. கொரியாவில் நடைபெற்று வரும் சியோல் மொபிலிட்டி ஷோ (Seoul Mobility Show) வாயிலாகவே இந்த காரை ஹூண்டாய் நிறுவனம் வெளியீடு செய்துள்ளது. நெக்ஸோ ஓர் ஃப்யூவல் செல் எலெக்ட்ரிக் கார் (Fuel Cell Electric Vehicle) மாடல் ஆகும்.
Advertisement

நட்சத்திர தம்பதி அவர்களது போர்ஷே காரால் தனியா தெரியுறாங்க!!

நஸ்ரியா நசீம் & பகத் பாசில் (Nazriya Nazim & Fahad Fasil) இந்த நட்சத்திர தம்பதியை பற்றி கேள்விப் படாதவர்கள் இருக்க மாட்டீர்கள் என நினைக்கிறேன். கேரளா (Kerala)-ஐ சேர்ந்தவர்களாக இருந்தாலும், நடிகை நஸ்ரியாவும், நடிகர் பகத் பாசிலும் தென்னிந்திய அளவில் பிரபலமானவர்கள். மற்ற மலையாள நடிகர்களை போலவே பகத் பாசில்- நஸ்ரியா தம்பதியினரும் விலையுயர்ந்த கார் மற்றும் பைக்குகளை விரும்பக் கூடியவர்கள். அவ்வப்போது புதுசு புதுசா விலையுயர்ந்த கார் & பைக்குகளை வாங்க கூடியவர்கள்.

1 கோடி ரூபா ஆடம்பர காரை வாங்கிய விஷால் பட நடிகை!

'கார் வாங்க வந்தாங்களா இல்ல விளம்பரம் தேடிக்க வந்தாங்களா' என கேட்கும் அளவிற்கு ஓர் நடிகை, கார் ஷோரூமிற்கே வந்து ஆடம்பர காரை டெலிவரி பெற்றுச் சென்று உள்ளார். பாலிவுட் திரை உலகைச் சேர்ந்தவர் ஆகன்ஷா புரி. இவர் முன்னணி மாடலாகவும் வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவருக்கே விளம்பர வீடியோவிற்கு இணையாக ஆடம்பர காரை டெலிவரி வழங்கி இருக்கின்றது 'கார் ஹோல்-சேல் பஸார்' எனும் ஷோரூம் நிர்வாகம். இதுகுறித்த வீடியோவே தற்போது இணையத்தில் வெளியாகி வைரலாகிக் கொண்டிருக்கின்றது.

பல கோடி சொத்து இருந்தும் பைக் டாக்ஸில சாதாரணமா போறாங்க!

திரையுலகை சேர்ந்த நடிகைகளின் வருமானம் அதிகம். எனவே ஆடம்பரமான வாழ்க்கையை அவர்கள் வாழ்ந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திரையுலக நடிகைகள் சொகுசு கார்களில்தான் பயணம் செய்கின்றனர். ஆடி (Audi), மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes Benz), பிஎம்டபிள்யூ (BMW), லேண்ட் ரோவர் (Land Rover), ஜாகுவார் (Jaguar) போன்ற பிராண்டுகளின் கார்கள்தான், நடிகைகளின் முதன்மையான தேர்வாக இருக்கின்றன. பிரபலமான நடிகைகளை இந்த பிராண்டுகளின் கார்களில் அடிக்கடி காண முடியும். விலை உயர்ந்த சொகுசு கார்களில் நடிகைகள் பயணம் செய்தது தொடர்பான செய்திகளை டிரைவ்ஸ்பார்க் தமிழ் தளத்தில் கூட நீங்கள் அடிக்கடி வாசித்திருப்பீர்கள்.

புதுசா கார் வாங்குற 3ல ஒருத்தரு இந்த காரை தான் வாங்குறாங்க!

மாரூதி சுசுகி, 2025 நிதியாண்டில் 71.60% பங்குடன் இந்தியாவின் CNG கார் சந்தையை வழிநடத்துகிறது, அதே நேரத்தில் டாடா மோட்டார்ஸ் வலுவான வளர்ச்சியைக் காட்டுகிறது.

மனைவி பேச்சை கேட்டவருக்கு கடைசியில் இதுதான் நிலைமை!

உலகளவில் சாலை விபத்துகள் அதிகம் நடைபெறும் நாடுகளுள் ஒன்றாக இந்தியா உள்ளதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், தினந்தோறும் குறைந்தப்பட்சம் ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது கேட்க முடிகிறது. சாலை விபத்துகளுக்கு முக்கியமான காரணங்களுள் ஒன்று, சாலை போக்குவரத்து விதிமுறைகளை முறையாக பின்பற்றாதது ஆகும். வாகன ஓட்டிகள் தான் சாலை விதிமுறைகளை பின்பற்றாமல் இருக்கிறார்கள் என்று பார்த்தால், சமீப காலமாக சாலையில் நடந்து செல்வோரின் இடையூறுகளும் அதிகரித்து உள்ளன.

சென்னை டூ மதுரை சிங்கிள் சார்ஜ்ல போகலாம்!

மலிவு விலையில் அமைந்துள்ள போதிலும் மின்சார இயக்கத்திற்குத் தேவையான அற்புதமான அம்சங்கள் மற்றும் விவரக்குறிப்புகள் உள்ளனவா என்பதைக் கண்டுபிடிக்க புதிய BYD e7 நடுத்தர அளவு செடானைக் கண்டறியவும்.

இந்த கார் இன்னும் சில நாட்களுக்கு அறிமுக விலையில் கிடைக்குமா

கார் காதலர்களை அதிர்ச்சியில் ஆழ்த்தும் விதமாக கார் உற்பத்தி நிறுவனங்கள் சில விலை உயர்வைப் பற்றி அறிவித்துக் கொண்டிருக்கின்றன. குறிப்பாக, இந்த ஏப்ரல் மாதத்தில் நிறைய நிறுவனங்கள் தங்களின் புதிய கார்களை உயர்த்தப்பட்ட புதிய விலையில் விற்பனைச் செய்ய இருக்கின்றன. இந்த மாதிரியான சூழலில் பிரபல கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய புதுமுக கார் மாடல் ஒன்றின் விலையை உயர்த்த மனமில்லாமல் தவித்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஸ்கோடா (Skoda) நிறுவனமே அது ஆகும்.

இன்னும் 5 நாளில் இந்த கார்களின் விலை எல்லாம் ஏறப்போகுது!

ஏப்ரல் 8 ஆம் தேதி முதல், மார்ஷி சுஸுகி, கிராண்ட் விட்டாரா உட்பட பல மாதிரிகளின் விலைகளை உயர்த்தும், இது சந்தை சூழல்களையும் இயக்கச் செலவுகளையும் பிரதிபலிக்கிறது.
Advertisement

கப்பல் கப்பலா மேட்-இன்-இந்தியா கார்கள்- மும்பை துறைமுகத்தில்

ஸ்கோடா ஆட்டோ ஃபோஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India), நம் நாட்டில் கார்களை விற்பனை செய்யும் முன்னணி நிறுவனங்களுள் ஒன்று. செக் குடியரசு நாட்டை சேர்ந்த ஸ்கோடா ஆட்டோ நிறுவனத்துக்கும், ஜெர்மனியை சேர்ந்த ஃபோஸ்வேகன் நிறுவனத்துக்கும் இடையேயான கூட்டணி நிறுவனம் தான், ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா ஆகும். இந்திய சூழலுக்கும், மக்களுக்கும் ஏற்ற கார்களை இந்த இரு நிறுவனங்களும் ஒன்றாக இணைந்து உருவாக்கி விற்பனை செய்கின்றன. இதனால்தான், சமீப காலத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கோடா மற்றும் ஃபோஸ்வேகன் கார்கள் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக உள்ளன.

தமிழ்நாட்டு கம்பெனினு காலரை தூக்கிவிட்டு கெத்தா சொல்லலாம்!!

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor), தமிழ்நாட்டை சேர்ந்த இந்தியாவின் முன்னணி ஆட்டோமொபைல் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், டிவிஎஸ் நிறுவனத்திற்கு பல வெளிநாடுகளில் கூட வலுவான நெட்வொர்க் உள்ளது. இதனாலேயே சென்னையை தலைமையிடமாக கொண்டு செயல்படும் டிவிஎஸ் மோட்டார் நிறுவனத்தின் உள்நாட்டு விற்பனை மற்றும் வெளிநாட்டு ஏற்றுமதி என இரண்டும் சிறப்பானதாக இருந்து வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த மார்ச் மாதத்தில் டிவிஎஸ் நிறுவனத்தில் விற்பனை செய்யப்பட்ட வாகனங்கள் குறித்த விபரங்கள் கிடைக்கப் பெற்றுள்ளன. அவற்றை பற்றி விரிவாக இனி இனி தொடர்ந்து பார்க்கலாம்.

இத்தாலி பிராண்டுடன் இணைந்து உருவாக்கப்பட்ட இ-ஸ்கூட்டர்!

விஎல்எஃப் இந்தியா (VLF India) நிறுவனமும், வெலேசிஃபெரோ இத்தாலி (Velocifero Italy) நிறுவனமும் இணைந்து இந்தியாவிற்காக ஓர் அசத்தலான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மாடலை உருவாக்கி இருக்கின்றன. விஎல்எஃப் டென்னிஸ் மிலானோ எடிசன் (VLF Tennis Milano Edition) எனும் பெயரிலேயே அது விற்பனைக்குக் கிடைக்கும். இது ஓர் சிறப்பு பதிப்பு எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடல் ஆகும். அதாவது குறைவான எண்ணிக்கையில் மட்டுமே அது விற்பனைக்குக் கிடைக்கும். சிறப்பு பதிப்பு என்றாலும் இதற்கு மிகவும் குறைவான விலையையே விஎல்எஃப் நிறுவனம் நிர்ணயம் செய்திருக்கின்றது.

ராயல் என்பீல்டை இனி கையிலயே பிடிக்க முடியாது போங்க...

2024-25ம் நிதியாண்டு (Financial Year), கடந்த மார்ச் 31ம் தேதியுடன் முடிவுக்கு வந்துள்ளது. இதை தொடர்ந்து பல்வேறு வாகன நிறுவனங்களின் கடந்த 2024-25ம் நிதியாண்டிற்கான சேல்ஸ் ரிப்போர்ட்களும் (Sales Reports) தற்போது வெளியாகி வருகின்றன. இந்த வரிசையில் ராயல் என்பீல்டு நிறுவனத்தின் சேல்ஸ் ரிப்போர்ட் வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் கடந்த 2024-25ம் நிதியாண்டில் ஒட்டுமொத்தமாக 10,09,900 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது. இதில், மிக முக்கியமான சாதனை ஒன்று அடங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வெயிலுக்கு டயர் கிழியாம இருக்க என்ன பண்ணனும் தெரியுமா?

இந்தியாவில் அதிக வெப்பநிலையில் ஓட்டுவதற்கான அத்தியாவசிய டயர் பாதுகாப்பு குறிப்புகளை அறிந்து கொள்ளுங்கள். டயரின் சிறந்த நிலையை உறுதிப்படுத்தி, வெடிப்புகளைத் தடுக்கவும்.

பிரபல இன்ஸ்டாகிராம் தம்பதி வாங்கிய எலக்ட்ரிக் கார்!!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars)-இன் முன்பதிவுகளை கடந்த பிப்ரவரி மாதத்தில் துவங்கியது. அதனை தொடர்ந்து, கார்களை டெலிவிரி கொடுக்கும் பணிகள் கடந்த மார்ச் மாதத்தில் துவங்கப்பட்டன. இந்த புதிய மஹிந்திரா எலக்ட்ரிக் கார்களின் விலைமிக்க டாப் வேரியண்ட்களின் டெலிவிரிகள் மட்டுமே தற்போதைக்கு துவங்கப்பட்டுள்ளன. விலை குறைவான வேரியண்ட்களின் டெலிவிரிகள் வருகிற ஜூன் மாதத்தில் இருந்து துவங்கப்பட உள்ளன.

34 கி.மீ மைலேஜ் தரும் இந்த காரின் விலையும் கம்மி!

மாரூதி சுசுகி வாகன்ஆர், 2024-25 ஆம் நிதியாண்டிற்கான இந்தியாவின் அதிக விற்பனையாகும் பயணிகள் வாகனமாக இருந்து, குடும்பங்களுக்கு இடையே அதன் ஈர்ப்பு மற்றும் நீடித்த பிரபலத்தை வெளிப்படுத்துகிறது.

இ-வோ இ-பைக்கை அறிமுகம் செய்ய அனுமதி கிடைச்சிருச்சா!

ஹோண்டா (Honda) நிறுவனத்தின் புதுமுக எலெக்ட்ரிக் பைக்கை அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் கிடைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. ஹோண்டா நிறுவனம் எதிர்காலத்திற்காக பலதரப்பட்ட மின்சார இரண்டு சக்கர வாகனங்களை உற்பத்தி செய்துக் கொண்டிருக்கின்றது. அதில் ஒன்றே டபிள்யூ 8000 டி (WH8000D) மாடல் ஆகும். இதையே உலக சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கான ஒப்புதல் நிறுவனத்திற்கு கிடைத்திருக்கின்றது. ஆகையால், இன்னும் ஒரு சில வாரங்கள் அல்லது மாதங்களில் இந்த இ-பைக் உலக நாடுகளில் விற்பனைக்கு வந்துவிடும் என எதிர்பார்க்கப்படுகின்றது.
Advertisement

பைக் வாங்க ஷோரூமுக்கு வந்தது அந்த பிரபல நடிகரின் மகனா?

ஜெயசூர்யா (Jayasuriya), இந்த பெயரை பல இடங்களில் கேள்விப்பட்டு இருப்பீர்கள். இலங்கை கிரிக்கெட் வீரர்களில் நட்சத்திர வீரர் ஒருவரது பெயர் ஜெயசூர்யா ஆகும். அதேபோல், ஜெயசூர்யா என்கிற பெயரில் மலையாள நடிகர் ஒருவரும் உள்ளதும் உங்களுக்கு தெரியும் என நினைக்கிறேன். மலையாள நடிகராக இருப்பினும், 2002இல் ஜெயசூர்யாவின் நடிப்பில் வெளிவந்த 'என் மன வானில்' என்கிற தமிழ் திரைப்படத்தில் மாற்றுத்திறனாளி கதாபாத்திரத்தில் இருக்கும் நடிகர் வடிவேலு (Vadivelu) உடன் வாய் பேச முடியாதவராக நடிகர் ஜெயசூர்யாவை பார்த்து இருப்பீர்கள்.

ஹீரோ இ-ஸ்கூட்டருக்கு சிறப்பு சலுகை அறிவிப்பு!

இந்திய இரண்டு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனமான ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp), மின்சார இரண்டுசக்கர வாகனங்களையும் நாட்டில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. விடா (Vida) எனும் பிராண்டின்கீழேயே அது எலெக்ட்ரிக் டூ-வீலர்களை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. இந்த பிராண்டின்கீழ் விற்பனைக்குக் கிடைக்கும் இ-ஸ்கூட்டர்களுக்கே தற்போது சலுகை அறிவிக்கப்பட்டு இருக்கின்றது. ரூ. 40 ஆயிரம் வரை பலன்களைப் பெற்றுக் கொள்ள முடியுமாம். அமேசான், ஃபிளிப்கார்ட் தளத்தின் வாயிலாக வாங்கும்போதே இந்த சலுகைகளைப் பெற்றுக் கொள்ள முடியும் என்பது கவனிக்கத்தகுந்தது.

இந்த 10 கார்களை தான் அதிகம் வாங்குறாங்க!

2025 நிதியாண்டில், மாரூதி சுசூகி இந்தியா சாதனை விற்பனையை பதிவு செய்து, இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் தனது முன்னிலையை உறுதிப்படுத்தியுள்ளது. SUV களில் மாற்றம் தெளிவாக தெரிகிறது, மேல் 10 விற்பனையாகும் கார்களில் ஐந்து மாடல்கள் SUV களாகும், அதே நேரத்தில் மாரூதி சுசூகி வேகன்ஆர் தொடர்ந்து மிகவும் விற்பனையாகும் வாகனமாக உள்ளது.

பெட்ரோல், டீசல்ல ஓட்ற அத்தன வண்டிகளையும் தடை பண்ண போறாங்களா!

உலகின் பல்வேறு நாடுகளிலும், குறிப்பாக இந்தியா உள்பட ஆசிய கண்டத்தை சேர்ந்த நாடுகளில், காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை விஸ்வரூபம் எடுத்து வருகிறது. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலம் இயங்கும் வாகனங்கள்தான் மிகவும் முக்கியமான காரணமாக கருதப்படுகின்றன. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை குறைப்பதற்கு தேவையான பல்வேறு நடவடிக்கைகளை சம்பந்தப்பட்ட பகுதிகளின் அரசுகள் எடுத்து வருகின்றன. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலுக்கு நட்பானவையாக கருதப்படுவதுதான் இதற்கு காரணம்.

2019ல் வாங்கின ஃபார்ச்சூனர்.. இப்பவும் புதுசு போல மின்னுது!

இந்திய அரசியல்வாதிகள் பலரின் பிரியமான கார் மாடலாக டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner) உள்ளது. இதற்கேற்ப இந்தியாவில் உள்ள பெரும்பாலான அரசியல்வாதிகளிடத்தில் இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் காண முடிகின்றது. கடந்த நாட்களில் இன்னோவா காரில் பயணித்து வந்த அரசியல் புள்ளிகள் பலர் தற்போது இந்த காரிலேயே பயணித்துக் கொண்டிருக்கின்றனர். ஏன் நம்ம ஊரு கவுன்சிலரிடம் கூட இந்த கார் மாடல் பயன்பாட்டில் இருப்பதை நம்மால் பார்க்க முடிகின்றது.