ஆட்டோ எக்ஸ்போவில் கெத்து காட்டிய டாப் 5 கான்செப்ட் கார்கள்!

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025)-இல் கார் உற்பத்தி நிறுவனங்கள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு தயாரித்த கான்செப்ட் கார் மாடல்களைக் காட்சிப்படுத்தின. விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் மாடல்களைக் காட்டிலும் இவையே பார்வையாளர்களின் கவனத்தை வெகுவாகக் கவரும் வகையில் இருந்தன. அந்தவகையில், பார்வையாளர்கள் மற்றும் கார் காதலர்களின் கவனத்தை மிகப் பெரிய அளவில் கவரும் விதமாக இருந்த டாப் ஐந்து கான்செப்ட் கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.

500 கிலோ எடையை அசால்ட்டா சுமக்கக்கூடிய லோடு ஆட்டோ ரிக்‌ஷா!!

2025 பாரத் மொபிலிட்டி குளோபல் ஆட்டோ எக்ஸ்போ (Bharat Mobility Global Auto Expo) கண்காட்சியில் பங்கேற்றுள்ள இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்களுள் கோதாவரி எலக்ட்ரிக் மோட்டார்ஸ் பிரைவேட் லிமிடெட் (Godawari Electric Motors Private Limited) ஒன்றாகும். இந்த நிறுவனத்தில் இருந்து எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) மட்டுமின்றி, எலக்ட்ரிக் ஆட்டோ ரிக்‌ஷா (Electric Auto Richshaw)-களும் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளன. அந்த வகையில், கண்காட்சியில் பார்வையாளர்களை கவர்ந்த கோதாவரி எப்லு (Eblu) எலக்ட்ரிக் ஆட்டோவை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

7.89 லட்ச ரூபா கார் இவ்ளோ மைலேஜை தருதா!..

பிரீமியம் கார் உற்பத்தி நிறுவனமான ஸ்கோடா (Skoda), சமீபத்தில் இந்தியாவில் தன்னுடைய புதுமுக கார் மாடலான கைலாக் (Kylaq)-கை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியது. மிகவும் குறைவான விலையிலேயே இந்த காரை அது இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்திருக்கின்றது. ரூ. 7.89 லட்சம் என்கிற ஆரம்ப விலையே அதற்கு நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். விலை குறைவாக இந்த காரை விற்பனைக்குக் கொண்டு வந்திருந்தாலும், அதிக பிரீமியம் அம்சங்களை வழங்க அது தவறவில்லை.

கடைசி நாளில் அறிமுகமான ரூ3 கோடி கார்!

ரூ. 3.71 கோடி விலையில் வரும் மேபாக் GLS 600 நைட் சீரிஸ், ஆடம்பரமான அம்சங்கள் மற்றும் அழகியல் மேம்படுத்தல்களை வழங்குகிறது, ஆனால் எந்த இயந்திர மாற்றங்களும் இல்லை.
Advertisement

எத்தன பேர உள்ளே ஏத்துனாலும் இடம் மிச்சம் இருக்கும்... சிரோஸ்

கியா சிரோஸ் (Kia Syros), 2025 ஆட்டோ எக்ஸ்போ (2025 Auto Expo) கண்காட்சியில் எதிர்பார்க்கப்பட்ட மிகவும் முக்கியமான கார்களுள் ஒன்று. ஏனெனில் அந்த அளவிற்கு விலை குறைவான எஸ்யூவி காராக சிரோஸை கியா நிறுவனம் இந்தியாவிற்கு கொண்டுவருகிறது. இந்தியாவில் ஆந்திரா மாநிலத்தில் உள்ள கியாவின் தொழிற்சாலையில் சிரோஸ் கார்களின் உற்பத்தி சமீபத்தில்தான் துவங்கப்பட்டது. இந்த நிலையில், ஆட்டோ எக்ஸ்போவிலும் இந்த புதிய கியா கார் காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. சிரோஸ் காரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்த ரேட்ல எலெக்ட்ரிக் காரை களமிறக்க போறாங்களா...

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). இந்த கார் வரும் பிப்ரவரி 1ம் தேதி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது. இதற்கு இன்னும் ஒரு சில நாட்களே உள்ள நிலையில், கியா சைரோஸ் காரின் உற்பத்தி பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. அத்துடன் நாடு முழுவதும் உள்ள கியா நிறுவன டீலர்ஷிப்களுக்கு, சைரோஸ் கார்களை அனுப்பி வைக்கும் பணிகளும் விறுவிறுப்பாக நடைபெற்று வருகின்றன. இந்த காரின் ஆரம்ப விலை அனேகமாக 9-10 லட்ச ரூபாய் என்ற அளவில் இருக்கலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

கும்பிடு போட்டு டீசல் கார்களை வெளியேத்திட்டாங்க..

இந்தியாவில் டீசல் கார்களுக்கு இப்போதும் அதிக முக்கியத்துவம் வழங்கிக் கொண்டிருக்கக் கூடிய கார் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக கியா (Kia) இருக்கின்றது. இந்த நிறுவனம் தன்னுடைய பெரும்பாலான கார் மாடல்களில் பெட்ரோல் ஆப்ஷனுடன் சேர்த்து டீசல் ஆப்ஷனை விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. அந்தவகையில், சொனெட் (Sonet), செல்டோஸ் (Seltos) மற்றும் கேரன்ஸ் (Carens) ஆகிய கார் மாடல்களிலும் டீசல் ஆப்ஷனை அது வழங்குகின்றது. இந்த நிலையிலேயே இந்த மூன்று கார் மாடல்களில் இருந்தும் டீசல் ஆப்ஷனை கியா நிறுவனம் வெளியேற்றி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்தியாவில் 5 நாளில் நடந்த மரண மாஸ் சம்பவம்!

200க்கும் மேற்பட்ட புதிய வாகனங்களை அறிமுகப்படுத்தும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025, இந்தியாவில் மின்சார வாகனங்கள் மற்றும் எதிர்கால இயக்கம் போக்குகளில் முன்னேற்றங்களை முன்னிலைப்படுத்துகிறது.

லேன் மாறினால் ரூ1500 அபராதம் விதிக்க போறாங்க!

நொய்டா போக்குவரத்து போலீஸ் போக்குவரத்து நெரிசலைக் குறைத்து சாலைப் பாதுகாப்பை மேம்படுத்த லேன் ஓட்டுதல் விதிமுறைகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மீறல்களுக்கு ரூ.1,500 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

ஆம்புலன்சுக்கு வழி விடாத காருக்குள் இருந்தது அவரா!

சாலையில் ஆம்புலன்ஸ்கள் சைரன் உடன் அவசரமாக செல்வதை பார்த்தால், நாம் உடனடியாக வழி விட வேண்டும். இல்லாவிட்டால் கடும் நடவடிக்கைக்கு ஆளாக நேரிடும். சமீப காலங்களில், ஆம்புலன்ஸ்களுக்கு வழி விட மறுத்த பலர் மீது காவல் துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்துள்ளனர். இருப்பினும் இது குறித்து இன்னும் போதிய அளவில் விழிப்புணர்வு ஏற்படவில்லை என்பது போல் தோன்றுகிறது. ஏனெனில் கேரள மாநிலத்தில் ஆம்புலன்சுக்கு வழி விட மறுத்த காரணத்திற்காக டாக்டர் ஒருவரே தற்போது அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.

ஹீரோ கம்பெனி உருவாக்குனா எதாச்சும் குறை சொல்ல முடியுமா?

ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் அதன் பல்வேறு புதிய வாகனங்களை காட்சிப்படுத்தி உள்ளது. அவற்றுள், விடா இசட் (Vida Z) ஒன்றாகும். ஹீரோ விடா பிராண்டில் கொண்டுவரப்படும் இந்த புதிய எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்துள்ளது. இந்த புதிய ஹீரோ விடா இசட் எலக்ட்ரிக் ஸ்கூட்டரை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ரயில் பயணத்தில் PNR எண் ஏன் வழங்கப்படுகிறது?

முன்பதிவு செய்யப்பட்ட ரயில் பயணங்களின் போது பிஎன்ஆர் எண் ஏன் வழங்கப்படுகிறது எனப் பலருக்கும் தெரியாது அதன் பயன்கள் என்ன? அதன் பின்னால் மறைந்திருக்கும் ரகசியங்கள் என்ன? முழுவதுமாக காணலாம் வாருங்கள்.

Advertisement

விமான நிலைய மோப்ப நாய்களிடம் இருக்கும் அதிசய சக்தி!

விமான நிலையங்களில் பயன்படுத்தப்படும் மோப்ப நாய்களிடம் இருக்கும் அதிசய சக்திகளை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வித்தியாசமான கார் ஆக்சஸரீஸ்கள்...

கார்களில் ஏகப்பட்ட ஆக்சஸரீஸ்கள் இருந்தாலும் பல ஆக்சஸரீஸ்கள் நமக்கேர தெரியாது. அப்படியாக மிகப் பயனுள்ளதாக இருக்கும் அதே நேரத்தில் பிரபலமாகாத ஆக்சஸரீஸ் குறித்துக் காணலாம்.

ரயில் இன்ஜினின் வகையைக் கண்டுபிடிப்பது எப்படி?

இந்தியாவில் இயக்கப்படும் ரயில் இன்ஜின்கள் பல வகைகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. ரயில் இன்ஜினின் வகை மற்றும் திறன் இன்ஜினிலேயே எழுதப்பட்டிருக்கும் அதை எப்படிப் புரிந்து கொள்ள வேண்டும் எனக் காணலாம் வாருங்கள்.

விமான நிலையங்களை ஏன் ஏரிக்கு பக்கத்துல கட்றாங்க தெரியுமா?

விமான நிலையங்கள் ஏன் பெரும்பாலும் ஏரி மற்றும் கடல் போன்ற நீர் நிலைகளுக்கு அருகில் கட்டப்படுகின்றன? என்பதற்கான காரணங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் சீக்கிரமே விற்பனைக்கு வரவிருக்கும் 7சீட்டர் கார்

இந்தியாவில் அதிக இருக்கைகள் கொண்ட கார் மாடல்களுக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதனைக் கருத்தில் கொண்ட வாகன உற்பத்தியாளர்கள், அதிக இருக்கைகளைக் கொண்ட கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்கி வருகின்றனர். இதை உறுதிப்படுத்தும் விதமாகவே சமீபத்தில் நடைபெற்ற 'பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025' (Bharat Mobility Global Expo 2025)-வும் அமைந்துள்ளது. அதிக எண்ணிக்கையில் 7 சீட்டர் கார்கள் இங்கு காட்சிப்படுத்தப்பட்டன. இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை ஈர்க்கும் நோக்கிலேயே, வாகன உற்பத்தியாளர்கள் இந்த உலக புகழ்பெற்ற வாகன கண்காட்சியைப் பயன்படுத்தி அதிக இருக்கை கார்களைக் காட்சிப்படுத்தி இருக்கின்றனர்.

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 440 இந்தியாவில் வெளியிடப்பட்டது

ராயல் என்ஃபீல்ட் ஸ்க்ரேம் 440 இந்தியாவில் வெளியிடப்பட்டது, மேம்படுத்தப்பட்ட என்ஜின், புதிய வண்ண விருப்பங்கள் மற்றும் மேம்படுத்தப்பட்ட விவரக்குறிப்புகளை கொண்டுள்ளது. ₹2.08 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.

50 லட்ச ரூபா கார்ல போனது அந்த நடிகரின் பொண்ணா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் ஐயோனிக் 5 (Hyundai Ioniq 5). இது ஒரு எலெக்ட்ரிக் கார் (Electric Car) ஆகும். இந்திய சந்தையில் தற்போதைய நிலையில் 46.05 லட்ச ரூபாய் என்ற விலையில் ஹூண்டாய் ஐயோனிக் 5 எலெக்ட்ரிக் கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இது எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-showroom Price) ஆகும். ஆன்-ரோடு விலை (On-Road Price) தோராயமாக 53 லட்ச ரூபாய் என்ற அளவில் வரும்.

காதை கிழிக்கும் ஹாரனுக்கு இனியாவது முடிவு கிடைக்குமா!..

வாகனங்களினால் காற்று மாசடைவதை பற்றி மட்டுமே நாம் இங்கே பேசிக் கொண்டிருக்கின்றோம். அவை மிகப் பெரிய அளவில் ஒலியையும் மாசுப்படுத்திக் கொண்டிருக்கின்றன என்பதை நம்மில் பெரும்பாலும் யாரும் யோசிப்பதில்லை. குறிப்பாக, ஒரு சில வாகன உரிமையாளர்கள் பயன்படுத்தும் அதிக ஒலியை எழுப்பும் ஹாரன்கள் மிகப் பெரிய அளவில் ஒலியை மாசுப்படுத்துகின்றன. அதுமட்டுமின்றி, பலரின் கேட்கும் திறனையும் அவை பாதிக்கின்றன. அத்தகைய அதிக ஒலியை ஏற்படுத்தும் ஹாரன்களையே வாகன உரிமையாளர்கள் சிலர் தங்களின் வாகனங்களில் பயன்படுத்தி வருகின்றனர்.
Advertisement

காருக்குள் ஏசி எல்லாம் அந்த காலம்... இப்போ லாரியில் கூட!!

வால்வோ ஐச்சர் கமர்ஷியல் வாகனங்கள் (Volvo Eicher Commercial Vehicles - VECV) நிறுவனத்தில் இருந்து 2025 ஆட்டோ எக்ஸ்போ கண்காட்சியில் பல்வேறு கமர்ஷியல் வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இதனால், கண்காட்சியில் இந்த நிறுவனத்தின் பெவிலியனில் எப்போது கூட்டம் அதிகமாகவே உள்ளது. அதிலிலும் VECV நிறுவனம் காட்சிப்படுத்தி இருப்பது எல்லாம் பெரிய பெரிய வாகனங்கள் என்பதால், அவற்றை பார்க்க இரு கண்கள் போதவில்லை. இந்த வகையில் கண்காட்சியில் இடம்பெற்றுள்ள பிரம்மாண்டமான ஐச்சர் லாரியை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

5 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க! இதுல என்ன இருக்குது?

டாடா பஞ்ச் 5,00,000 யூனிட் உற்பத்தி செய்துள்ளது, 2024ம் ஆண்டில் இந்தியாவின் அதிகம் விற்பனையாகும் வாகனமாக மாறியது. அதன் புதுமையான அம்சங்கள், பவர் டிரெயின் விருப்பங்கள், மற்றும் பாதுகாப்பு மதிப்பீடுகள் அதன் வெற்றிக்கு பங்களிக்கின்றன, எதிர்கால புதுப்பிப்புகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

டிரைவருக்குனு தனியா கதவு கிடையாது, டொயோட்டா உருவாக்கும் வேன்

பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 (Bharat Mobility Global Expo 2025) கண்காட்சியில் பல்வேறு தனித்துவமான வாகனங்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. அவற்றுள் ஒன்றாக, டொயோட்டா (Toyota)-இன் எக்ஸ்-வேன் கியர் (X-Van Gear) கான்செப்ட் வாகனம் (Concept Vehicle)-ஐ சொல்லலாம். எக்ஸ்-வேன் வாகனத்தில் காட்சிப்படுத்தப்பட்ட 3 விதமான கான்செப்ட் வெர்சன்களில் இந்த எக்ஸ்-வேன் கியர் கான்செப்ட் ஒன்றாகும். கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்த இந்த கான்செப்ட் வாகனத்தை பற்றித்தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

வேவி சோலார் கார் முதல் கிரெட்டா இவி வரை..

கடந்த காலங்களில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ (Auto Expo)-க்களைப் போலவே இந்த ஆண்டில் நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ-விலும் புதிய வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் காட்சிப்படுத்தப்பட்டன. அதாவது, காட்சிப்படுத்துதல், வெளியீடு செய்தல் மற்றும் விற்பனைக்கு அறிமுகப்படுத்துதல் என அனைத்தும் பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025 இல் நிகழ்த்தப்பட்டன. அந்தவகையில், சமீபத்தில் தொடங்கிய பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போ 2025-யை பயன்படுத்தி விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட டாப் 5 கார் மாடல்கள் பற்றிய தகவலையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். வாங்க விரிவான பதிவிற்குள் போகலாம்.

அந்த ஹிட் படத்தில் நடித்தவர் தான இவரு? மாருதி காருக்கு தூதர்

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யும் பிரம்மாண்டமான நிறுவனமாக விளங்குகிறது. இதனாலேயே மாருதி சுஸுகியின் வணிகம் எல்லாம் இண்டர்நேஷ்னல் லெவலில் இருப்பது வழக்கம். தற்போதுகூட, தனது பிரபலமான கார் ஒன்றிற்கு பிராண்ட் தூதராக பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவரை நியமித்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது. யார் அவர் என்பதையும், எந்த மாருதி காருக்கு அவர் பிராண்ட் தூதர் என்பதை பற்றியும் இனி தொடர்ந்து பார்க்கலாம்.