புறாவுக்காக தேர் கொடுத்த பாரி வள்ளல்கள் இப்பவும் இருக்காங்க!
ஆட்டோமொபைல்
- 1 year, 7 month, 2 days ago
ஒரு சிலர் எவ்வளவு தான் சொத்து சேர்த்து வைத்திருந்தாலும், மனிதநேயத்துடன் நடந்துக் கொள்வதை பார்க்கும்போதே ஆச்சிரியமாகவும், மகிழ்ச்சியாகவும் இருக்கும். அவ்வாறுதான், துபாய் போன்ற உலகின் மிக முக்கியமான பொருளாதார நகரத்தின் இளவரசராக இருப்பவர், புறா கூடுக்கட்டி வாழ தனது மெர்சிடிஸ்-பென்ஸ் ஜி-வேகன் (Mercedes-Benz G-Wagen) காரை பல நாட்களாக பயன்படுத்தாமல் உள்ளார். இன்னும் சொல்லப்போனால், புறா பயப்பட போகிறது என்பதற்காக தனது ஜி-வேகன் காரின் அருகில் கூட யாரையும் செல்ல விடாமல் பாதுகாத்து வருகிறார். துபாய் இளவரசரின் இந்த மனிதநேயமிக்க செயலை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.