என்ன இது வித்தியாசமா? கண்ல பாத்ததும் ஊரே தெகச்சு போயிருச்சு

சாலை மார்க்கமாக கார்களில் தொலை தூர பயணங்களை மேற்கொள்வது அலாதியானது. அதுவும் உடன் நண்பர்கள் வந்தால், அந்த பயணத்தின் இனிமை அதிகரிக்கும். ஆனால் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்கள், அந்த பயணம் சொகுசாக இருக்க வேண்டும் என்பதற்காக, நல்ல கண்டிஷனில் உள்ள கார்களைதான், பயணங்களுக்கு தேர்வு செய்வார்கள். அதுதான் சரியானதும் கூட. இல்லாவிட்டால் அந்த பயணம் இனிமையானதாக இருக்காது. ஏனெனில் உடல் சோர்வு மற்றும் நடுவழியில் பழுது போன்ற பிரச்னைகளை எல்லாம் எதிர்கொள்ள வேண்டியதிருக்கும். எனவே நல்ல கண்டிஷனில் உள்ள சௌகரியமான கார்கள்தான், தொலை தூர பயணங்களுக்கு ஏற்றவை.

ஹோண்டாவின் இந்த வளர்ச்சிக்கு என்ன காரணம் தெரியுமா?

உள்நாட்டு சவால்களைக் கடந்து, ஏற்றுமதி மூலமாக ஹோண்டா கார்கள் இந்தியா லிமிடெட் 2024 ஆம் ஆண்டில் 20% விற்பனை வளர்ச்சியை அடைந்துள்ளது. அவர்களின் ஆண்டு செயல்திறனைப் பற்றி அறிக.

லோடு டிரைசைக்கிளுக்கு தீர்வாக வந்தாச்சு இ 3 வீலர்!

சிறிய வியாபாரிகள் தங்களின் சரக்குகளை ஏற்றிச் செல்ல இரண்டு சக்கர வாகனங்களையே லோடு வாகனங்களாக பயன்படுத்தி வருகின்றனர். வாகனத்தின் உயரத்தைவிட பல மடங்கு அதிக உயரத்தில் சரக்குகளை வியாபாரிகள் ஏற்றிச் செல்வதை நாம் தினமும் பார்த்து வருகின்றனர். குறிப்பாக, டிவிஎஸ் எக்ஸ்எல் (TVS XL)-லையே வியாபாரிகள் தங்களின் அதிகம் லோடு வாகனமாக பயன்படுத்தி வருகின்றனர். லோடு ஏற்றிச் செல்வதற்காகவே தயார் செய்யப்பட்ட ஓர் டூ-வீலரே டிவிஎஸ் எக்ஸ்எல் ஆகும். இதனால்தான் அதற்கு தனித்துவமான வரவேற்பு சிறிய வியாபாரிகள் மத்தியில் கிடைத்துக் கொண்டிருக்கின்றது.

பிசியான சாலையில் லம்போர்கினி கார் ஓனர் செய்த செயல்!!

பெங்களூரு (Bengaluru), இந்தியாவின் மென்பொருள் தலைநகரம். தொழிற்நுட்ப வளர்ச்சியினால் சமீப காலமாக வேகமாக பொருளாதாரத்தில் வளர்ச்சி கண்டுவரும் நகரம். எந்த அளவிற்கு வளர்ச்சி என்றால், பெங்களூருவில் ஒருவர் விலையுயர்ந்த லம்போர்கினி (Lamborghini) காரை சர்வ சாதாரணமாக ஒரு பக்கெட் நீரில் சாலையோரத்தில் வைத்து கழுவும் வீடியோ (Video) ஒன்று வெளியாகி வைரலாகி வருகிறது. துபாய் போன்ற மல்டி-மில்லியனர்கள் வாழும் நகரத்தில்தான் இவ்வாறான சம்பவங்களை அதிகமாக பார்க்க முடியும். ஆனால், பெங்களூருவில் நடந்துள்ள இந்த சம்பவத்தை பற்றிய கூடுதல் விபரங்களை இனி தொடர்ந்து பார்க்கலாம்.
Advertisement

இந்த 5 கார்ல ஒன்ன வாங்கிடீங்கன்னா உங்க கெத்தே தனி!

ஸ்கோடா சூப்பர்ப், ஒக்டேவியா ஆர்எஸ், விடபிள்யூ விர்ச்சஸ் மற்றும் ஹோண்டா சிட்டியின் புதுப்பித்த பதிப்புகள் உட்பட புதிய செடான்களை இணைத்து இந்தியாவின் 2025 ஆட்டோமொபைல் சந்தையை ஆராயுங்கள்.

'ஜெயிச்சுட்டோம் மாறா' ஃபீலில் பஜாஜ்! இத எதிர்பார்க்கவே இல்ல!

இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன (Electric Two Wheeler) பிரிவை முழுமையாக ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் ஆக்கிரமிப்பு செய்து வந்தது அனைவரும் அறிந்த ஒன்றே. ஆனால், இந்த இடத்தை தற்போது அது பஜாஜ் (Bajaj) இடம் விட்டுக் கொடுத்திருக்கின்றது. விட்டுக் கொடுத்திருக்கின்றது என்பதற்கு பதிலாக அந்த இடத்தை தன்னுடைய விடா முயற்சியினால் பஜாஜ் பிடித்திருக்கின்றது என்று கூறலாம். இத்தனைக்கும் பஜாஜ் நிறுவனம் சேத்தக் (Chetak) எனும் ஒற்றை எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலை மட்டுமே இந்தியாவில் விற்பனைக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது.

இரயில்வேயின் புத்தாண்டு பரிசு... ஸ்டேஷனில் வந்து நின்றாச்சு!

புத்தாண்டு (New Year) துவங்கிவிட்டாலே பரிசு பொருட்கள் குவிய ஆரம்பித்துவிடும். மக்களுக்கு மட்டுமில்லை, அரசாங்கங்களுக்கும் தான். புதிய ஆண்டில் இருந்து துவங்கும் பல அரசாங்க திட்டங்களை ஒவ்வொரு வருடமும் பார்த்து வருகிறோம். அந்த வகையில், இந்த வருடத்தை கேரள அரசாங்கம் புதிய வந்தே பாரத் (Vande Bharat) இரயில் உடன் துவங்கியுள்ளது. இதன் மூலமாக கேரளாவில் இயங்கும் வந்தே பாரத் இரயிலின் நீளம் அதிகரித்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்த மாசமும் எம்ஜி-தான் டாப்புல இருக்கா..

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor), விற்பனையில் மாபெரும் வளர்ச்சியைச் சந்தித்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இந்த நிறுவனம் சமீப சில மாதங்களாகவே விற்பனையில் வளர்ச்சியை மட்டுமே சந்தித்து வருகின்றது. குறிப்பாக, அது விண்ட்ஸர் இவி (Windsor EV) எனும் எலெக்ட்ரிக் கார் மாடலை விற்பனைக்கு களமிறக்கியதில் இருந்தே இந்த நிறுவனத்திற்கு அதிர்ஷ்டம் அடித்ததைப் போல விற்பனை வரவேற்பானது கட்டுக்கடங்காமல் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. இதற்கு சான்றாகவே சென்ற 2024 டிசம்பர் மாதம் அமைந்து உள்ளது.

20 வயதிலேயே கார் வாங்கிய இந்த பிரபலம் யாரென்று தெரிகிறதா?

டெஸ்ட் கிரிக்கெட் (Test Cricket)-இல் இந்திய ஆண்கள் அணிக்கு சமீப காலமாக கெட்ட நேரமாக உள்ளது. தொடர் தோல்விகள் உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரில் இந்திய அணியின் இறுதிப்போட்டிக்கான வாய்ப்பை வெகுவாக குறைந்துள்ளன. தொடர் தோல்விகளுக்கு மத்தியில், இந்திய அணியின் வளர்ந்துவரும் நம்பிக்கை நட்சத்திரமாக நிதிஷ் குமார் ரெட்டி (Nitish Kumar Reddy) உருவெடுத்துள்ளார். சமீபத்தில் நடைபெற்ற ஆஸ்திரேலியாவுக்கு எதிரான பாக்ஸிங் டே டெஸ்ட்டில் சதம் அடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்துள்ள நிதிஷ் குமார் ரெட்டி டொயோட்டா (Toyota) கார் ஒன்றின் உரிமையாளர் என்பது உங்களில் எத்தனை பேருக்கு தெரியும்?

பெட்ரோல் இல்லாமலேயே இயங்கும் வேகன் ஆர் கார் வரப்போகுதா?

e-விட்டாரா எலக்ட்ரிக் எஸ்யூவி உள்ளிட்ட மாரூதி சுசுகியின் புதிய மாடல்களை 2025 பாரத் மொபிலிட்டி குளோபல் எக்ஸ்போவில் கண்டறியவும்.

இந்த 2025 புத்தாண்டு மறக்க முடியாத மாதிரி அமைஞ்சிடுச்சு!!

புதிய 2025ஆம் ஆண்டை பலரும் புதிய வாகனங்களுடன் துவங்க விரும்புவீர்கள். ஆனால், அது இங்கு ஒருவருக்கு நிஜமாகி உள்ளது. அதாவது, நாம் இந்த செய்தியில் பார்க்க போகும் நபர் மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar ROXX) வாகனத்தை புத்தாண்டு அதுவுமாக புதியதாக பெற்றுள்ளார். ஆனால், இந்த வாகனத்தை அவர் வாங்கவில்லை. இதற்கு பின்னால் மனம் நெகிழ்வான ஒரு சிறிய கதை உள்ளது. அது என்ன என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

இந்த கருவியைதான் கிரெட்டா இ-கார் ஓனர்களுக்கு தர போறாங்களா!

இந்தியாவின் மின்சார கார் தேவையை பூர்த்தி செய்யும் விதமாக ஹூண்டாய் (Hyundai) நிறுவனம் விரைவிலேயே கிரெட்டா இவி (Creta EV)-யை விற்பனைக்குக் கொண்டு வர இருக்கின்றது. இந்த காருக்கு இந்தியாவில் எதிர்பார்ப்பு மிக அதிகமாக நிலவுகின்றது. கிரெட்டாவின் ஐசிஇ (Creta ICE) வெர்ஷன் இந்தியாவின் எஸ்யூவி கார் பிரிவில் மிகப் பெரிய ஆதிக்கத்தைச் செலுத்தி வருகின்றது. இதைப் போலவே சந்தையின் இ-கார் பிரிவை கிரெட்டா இவி-யும் மிக அளவில் ஆதிக்கம் செய்யும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இதற்கேற்ப இந்த காரின் பக்கம் இப்போதே இந்தியர்களைக் கவரும் வேலையில் ஈடுபட்டு வருகின்றது, ஹூண்டாய் நிறுவனம்.
Advertisement

மிடில்-கிளாஸ் மக்கள் யாராக இருந்தாலும் மயங்கிடுவாங்க!!

ஜப்பானை சேர்ந்த சுஸுகி (Suzuki) நிறுவனத்தில் இருந்து தாய்லாந்து (Thailand)-இல் செலேரியோ மிலானோ எடிசன் (Celerio Miano Edition) காட்சிக்கு நிறுத்தப்பட்டுள்ளது. 68 பிஎஸ் வரையிலான இயக்க ஆற்றலை வெளிப்படுத்தக்கூடிய 1.0 லிட்டர் 3-சிலிண்டர் நேச்சுரலி-அஸ்பிரேட்டட் பெட்ரோல் என்ஜின் உடன் இந்த புதிய செலேரியோ கார் வெளியீடு செய்யப்பட்டுள்ளது. புதிய செலேரியோ மிலானோ எடிசனை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டருக்கான புக்கிங் தொடங்கியது..

ஹோண்டா (Honda Motorcycle & Scooter India) நிறுவனம், அதன் மின்சார இரண்டு சக்கர வாகனங்களுக்கு புக்கிங்கை ஏற்க தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கடந்த சில வாரங்களுக்கு முன்பு ஆக்டிவா இ: (ACTIVA e:) மற்றும் க்யூசி1 (QC1) எனும் இரண்டு மின்சார இரண்டு சக்கர வாகனங்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் வெளியீடு செய்திருந்தது. இந்த இரண்டுமே எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் ஆகும். இவற்றிற்கே அந்நிறுவனம் புக்கிங்கை ஏற்கும் பணிகளைத் தொடங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

கீ போட்டு 15 செகண்ட் கழிச்சுதான் ஸ்டார்ட் பண்ணனுமா?

உங்கள் காரின் சாவியைச் செருகிய பிறகு 15 விநாடிகள் காத்திருப்பது எப்படி என்ஜின் ஆரோக்கியத்தை மேம்படுத்துகிறது, செயல்திறனை அதிகரிக்கிறது, மற்றும் ஆயுளை நீட்டிக்கிறது என்பதை அறிக.

இந்த ஜனவரில நிறைய கார்கள் அறிமுகமாக காத்திருக்கு!!

புத்தாண்டு தொடங்கிருச்சு.. சென்ற ஆண்டை போலவே இந்த ஆண்டிலும் நிறைய புதுமுக வாகனங்கள் இந்தியாவில் விற்பனைக்கு வர இருக்கின்றன. அந்தவகையில், ஆண்டின் தொடக்க மாதமான ஜனவரியில் பலதரப்பட்ட கார் மாடல்கள் தங்களின் அறிமுகத்தை வழங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. அந்த கார் மாடல்கள் எவை என்பது பற்றிய விபரங்களையே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம். அதாவது, 2025 ஜனவரியில் அறிமுகம் மற்றும் வெளீட்டைக் காண இருக்கும் கார் மாடல்கள் பற்றியும், அவற்றின் சிறப்புகள் பற்றியே இந்த பதிவில் பார்க்க இருக்கின்றோம்.