டயர்களில் கூட சென்சார் வந்துடுச்சுனு சொன்னா நம்புவீங்களா?

சாலைப் பாதுகாப்பை மேம்படுத்தும் ஸ்மார்ட் டயர்கள் எனப்படும் சென்சார் பொருத்தப்பட்ட டயர்கள் காற்றழுத்தம், வெப்பநிலை மற்றும் தேய்மானம் போன்ற முக்கியமான தகவல்களை நிகழ்நேரத்தில் வழங்குகின்றன. இது, டயர் கோளாறுகளால் ஏற்படும் விபத்துகளைத் தடுக்க உதவுகிறது. இந்தியாவில், இந்தத் தொழில்நுட்ப கண்டுபிடிப்பு தற்போதைக்கு ஆரம்பக்கட்ட நிலையில் தான் உள்ளது என்றாலும், அரசின் பாதுகாப்பு முயற்சிகளால் தற்போது இது பிரபலமடைந்து வருகிறது.

வெறும் 55 ஆயிரத்துக்கு 70 கிமீ மைலேஜ் குடுக்கும் பைக்கா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் (Hero HF Deluxe) பைக்கின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. ரஸ்லேன் தளத்தில் வெளியாகியுள்ள இந்த சேல்ஸ் ரிப்போர்ட்டின்படி பார்த்தால், நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதம், 1,13,998 ஹீரோ ஹெச்எஃப் டீலக்ஸ் பைக்குகள் விற்பனை செய்யப்பட்டுள்ளன.

சியராவை தவிர எந்த காரை வாங்கினாலும் இந்த வசதிகள் இருக்காது!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், சியரா (Sierra) எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஆரம்ப விலை ரூ.11.40 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டுள்ளது. இந்த புதிய 5-கதவு டாடா எஸ்யூவி காருக்கான முன்பதிவுகள் டிசம்பர் 16ஆம் தேதியில் இருந்தும், டெலிவரிகள் 2026 ஜனவரி 15ஆம் தேதியில் இருந்தும் துவங்கப்பட உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதிய சியரா கார் அதன் காம்பாக்ட்-எஸ்யூவி கார்கள் பிரிவிலேயே முதல்முறையாக பல வசதிகளை பெற்று வந்துள்ளது. அவற்றுள் முக்கியமானவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

டாடா சியாரா பேஸ் மாடலுக்கு இஎம்ஐ இவ்வளவு தானா?

டாடா நிறுவனம் தனது சியாரா காரை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது.இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற எக்ஸ் ஷோரூம் விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காரை வாங்க நினைப்பவர்கள் இந்த காருக்கு எவ்வளவு இஎம்ஐ செலுத்த வேண்டும்? எவ்வளவு முன்பணம் செலுத்த வேண்டும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த கார் விலை எவ்வளவு லட்சமாக இருந்தாலும் வாங்க ஆள் இருக்கு

இந்தியாவின் இரண்டாவது, அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமான ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), தனது முதன்மை எலெக்ட்ரிக் ரோட்ஸ்டர் காரான எம்ஜி சைபர்ஸ்டர் (MG Cyberster) மூலம் சந்தையில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. உலகின் அதிவேக எம்ஜி கார் மற்றும் இந்தியாவின் அதிக விலையிலான எலெக்ட்ரிக் ஸ்போர்ட்ஸ் கார் எனப் பெயர் பெற்றுள்ள சைபர்ஸ்டர், அறிமுகமான சில மாதங்களிலேயே மிகப்பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது.

பாதியாக குறைந்த ஆல்டோ விற்பனை!

மாருதி நிறுவனம் இந்தியாவில் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்து வருகிறது. குறைந்த விலையில் அதிக கார்களை விற்பனை செய்யும் நிலையில் இந்நிறுவனத்தின் குறைந்த விலை காரான ஆல்டோ காரை கடந்த 10 மாதங்களில் வெறும் 70,000 பேர் தான் வாங்கியுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த கார் குறைந்த விலை காராக இருந்தாலும் விற்பனை ஏன் குறைவாக இருக்கிறது? ஒவ்வொரு மாதமும் எவ்வளவு விற்பனை நடந்துள்ளது?விரிவாக காணலாம் வாருங்கள்.

90 கிமீ மைலேஜ் ஸ்கூட்டரை அடிமாட்டு விலையில் களமிறக்கறாங்க!

இந்தியாவில் ஒரு சில ஸ்கூட்டர்களுக்கு வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு காணப்படுகிறது. இதில், டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) மிகவும் முக்கியமானது. இந்தியர்களின் விருப்பமான ஸ்கூட்டர்களில் ஒன்றாக இருப்பதால், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை, டிவிஎஸ் ஜூபிடர் பதிவு செய்து வருகிறது.

22 வருட பழைய கார்னு சொன்னா ஒருத்தரும் நம்ப மாட்டாங்க...!!

புதிய கார்களை வாங்க பலர் விரும்பினாலும், சிலருக்கு பழைய கார்கள் மீதான ஆர்வம் அதிகம். தங்கள் பழைய நினைவுகளைப் புதுப்பிக்கும் வகையில், விண்டேஜ் கார்களைப் பராமரிப்பதில் அவர்கள் மிகுந்த ஈடுபாடு காட்டுகின்றனர். அத்தகைய ஒரு கார் உரிமையாளர், தனது 22 வருட பழமையான டாடா இண்டிகா (Tata Indica) ஹேட்ச்பேக் கார் குறித்த தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

சியாராக்கு போட்டியா விக்கும் காரோட ரேட் என்ன தெரியுமா?

டாடா நிறுவனம் இன்று தனது சியாரா காரை மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் நீண்ட நாட்களாக பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் இந்த கார் ரூ11.49 லட்சம் என்ற அறிமுக விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இந்த காரின் போட்டி தயாரிப்புகளின் விலையும் இந்த காரின் விலையும் எப்படி இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம்.

22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்தது சியரா!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விற்பனை கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பின்னர், டாடா சியரா இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 25) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறிவித்திருந்தது.

7 பேர் உயிரை காவு வாங்கிய தனியார் பஸ் விபத்து!

தென்காசியில் நேற்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? இந்த சம்பவத்தை எப்படி தடுத்திருக்க முடியும்? எதிர்காலத்தில் இது போன் சம்பவம் நடக்காமல் எப்படி தடுப்பது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நேரடியாக 5000 பேருக்கு வேலை! ஓசூரில் இப்படி ஒரு கம்பெனியா?

ஸ்டெலன்டிஸ் நிறுவனம் இந்தியாவில் அதுவும் நமது ஒசூரில் நடத்தி வரும் ஆலையை உலகளவில் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பின் மையமாக மாற்றியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்களை தயாரித்து வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான இன்ஜின்களையும் இந்த ஆலையிலேயே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டாடாவில் இந்த கார் வந்த பிறகு மொத்த கதையும் மாறிடும்!

புதிய தோற்றப்பொலிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப மாதங்களாக பலமுறை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, ஸ்பை ஷாட்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்பை ஷாட்கள் காரின் முன், பக்கவாட்டு மற்றும் பின் தோற்றத்தை தெளிவாகக் காட்டுகின்றன.

10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினால் இது இருக்கானு பாருங்க!!

பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் கார்களுள் சில கார்களில் பின் இருக்கை வரிசையில் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் (Arm Rest) வசதி வழங்கப்படுகிறது. இது, குறிப்பாக கார்களின் உயர்தர வேரியண்ட்களில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் காம்பாக்ட் செடான், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் அடங்குகின்றன.

20 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கு என மொத்தம் 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.

30 லட்ச ரூபா காரில் சொகுசு கார்களுக்கே சவால்விடும் மஹிந்திரா

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பெங்களூருவில் 'ஸ்க்ரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திராவின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 26 அன்று பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் காரின் சிறப்புப் பதிப்பு வெளியாக உள்ளது.

சலூன் தொழிலை கத்துக்கிட்டவர் இன்று பென்ஸ் காருக்கு ஓனர்!!

இந்தியாவின் பிரபலமான சிகை அலங்கார நிபுணர்களுள் ஒருவர், அலீம் ஹகீம் (Aalim Hakim) ஆவார். நடிகர் சல்மான் கான், விராட் கோலி போன்ற பல பிரபலங்களுக்கு இவர் முடி அலங்காரம் செய்பவராக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில், அலீம் ஹகீம் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் புதிய சொகுசு கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கு பின் மறுபடியும் வருது!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா சியரா காரின் விற்பனை 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, புதிய தலைமுறை டாடா சியரா கார், இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

13 வருஷமா ஒரே இடத்தில் நிற்கும் ஏர் இந்தியா விமானம் விற்பனை!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Tata Sons And Singapore Airlines)-க்கு விற்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 737 (Boing 737) விமானம், தற்போது வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்படுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த குறிப்பிட்ட போயிங் விமானம் 3 வருடங்களுக்கு முன் வேறொரு நிறுவனத்தின் வசம் சென்றாலும், கடந்த சுமார் 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகையே மிரள விட்ட 36 கிமீ மைலேஜ் கார் இந்தியாவுக்கு வருது!

இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அப்படிப்பட்ட கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், டொயோட்டா (Toyota) நிறுவனமும் ஒன்று.
Advertisement

நாளை அறிமுகமாகும் புது டாடா காரை எந்த கலரில் வாங்கலாம்?

புதிய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார் நாளை (நவம்பர் 25) சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டாடா கர்வ் போன்ற ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சவாலான கார்களுடன் இது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சியரா காருக்கு வழங்கப்பட உள்ள கலர் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.

இவங்களா மஹிந்திரா தார் வாகனத்தை ஓட்டிட்டு வந்தது?

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் ஆபிரகாம் ஒரு தீவிர வாகன ஆர்வலர். அவர் எஸ்யூவிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும், பல உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சூப்பர்பைக்குகளையும் வைத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச ஆண்கள் தினத்தை (நவம்பர் 19) முன்னிட்டு, ஏழு பெண்கள் தங்கள் மஹிந்திரா தார் எஸ்யூவிகளை ஓட்டி மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். மஹிந்திரா தார் மீதான தங்கள் ஆர்வத்தையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சம்பவத்தின் காணொளி பின்னர் மஹிந்திரா தாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

சின்ன விளக்கு தான்... இரவு பயணத்தில் ரொம்ப தேவையா இருக்கும்!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார்களில், பின் இருக்கைகளில் வாசிப்பதற்கான விளக்கு (Rear Reading Lamp) வசதி கிடைக்கிறது. குறிப்பாக, இந்த விளக்கு இரவு நேர பயணங்களின் போதும், காரில் பயணத்தப்படி புத்தகம் வாசிப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இந்த வசதி உடன் வரும் கார்களை பற்றிய விவரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

33 கிமீ மைலேஜ் தரும் காரை இந்த ரேட்ல விக்க பெரிய மனசு வேணும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது.

4 லட்சம்பேர் இந்த காரை நம்பி வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களை இதுவரை 4 லட்சம் பேர் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இ்நத சாதனையை வெறும் 7ஆண்டுகளில் அந்நிறுவமன் செய்துள்ளுது. அதுவும் 3எக்ஸ்ஓ என பெயர் மாறிய பிறகு அதிக அளவில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.