7 பேர் வரை சவுகரியமா அமர்ந்து செல்லலாம், கியாவின் புது கார்!

கியா நிறுவனம் புதிய மூன்று வரிசை எஸ்யூவி-யை இந்திய சாலைகளில் மீண்டும் சோதனை செய்து வருகிறது. இம்முறை வெளியான தகவல்கள், இந்த வாகனத்தின் அம்சங்கள் குறித்து தெளிவான விவரங்களை அளிக்கின்றன. நீண்ட சாளர அமைப்பு மற்றும் நேர்மையான வால் பகுதி ஆகியவை, கியா பிரீமியம் பிரிவில் ஒரு உண்மையான ஏழு இருக்கைகள் கொண்ட வாகனத்தை தயார் செய்து வருவதை உறுதிப்படுத்துகின்றன. இது கியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் செல்டோஸ் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்படும்.

காரின் பாதுகாப்பில் இருந்து மைலேஜ் வரை இதுதான் அடிப்படை!!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ரூ.10 லட்சம் விலை கொண்ட பெரும்பாலான கார்கள் 'ரேடியல் டியூப்லெஸ்' (Radial Tubeless) டயர்களுடன் வருகின்றன. டயர் தயாரிப்புத் துறையில், ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளன. ரேடியல் என்பது டயரின் உள் கட்டுமானத்தைக் குறிக்கிறது. இது வழக்கமான டயர்களின் மெல்லிய குறுக்குவெட்டு இரப்பர்களில் இருந்து வேறுபடுகிறது.

பணக்காரர்கள் இப்பவே புக்கிங்கை போட ஆரம்பித்து இருப்பாங்க!

உலகளவில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ள போர்ஷே கேயென் (Porsche Cayenne) எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் டர்போ எலெக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.76 கோடி மற்றும் ரூ.2.26 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பிரபலமான ஹூண்டாய் காருக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.
Advertisement

டாடா உருவாக்கும் புதிய சியரா காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று, சியரா (Sierra) ஆகும். 1991ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா ஆனது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார்களுள் ஒன்றாகும். இதனாலேயே அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்ற சியரா காரை மீண்டும் புதிய தோற்றத்தில் டாடா நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர உள்ளது.

மஹிந்திராவின் அடுத்த சிக்ஸர்... நவ.26 வரை காத்திருங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் கார்களின் வெற்றியைத் தொடர்ந்து, இது மஹிந்திரா நிறுவனத்தின் மூன்றாவது எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். நவம்பர் 26 மற்றும் 27 அன்று பெங்களூருவில் நடைபெறும் 'ஸ்கிரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) நிகழ்வில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு இவி பைக் இவ்வளவு சிக்கீரம் வரப்போகுதா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இதுவரை அந்நிறுவனம் 2 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பைக் வரும் டிசம்பர் மாதமே அறிமுகமாக கூட வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எமனே எதிர்ல வந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியமா போகலாம்!

இந்திய சந்தையில் ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் (Premium Hatchback Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது.

அடிமாட்டு விலையில் புதிய மஹிந்திரா பிஇ6 காரா?

மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிஇ6 காரின் புதிய வெர்ஷனை வரும் நவம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த டீசரையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் காரை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யூஸ் ஆகாம ஓரமா கிடந்த காருக்கு 10 லட்ச ரூபாயில் ஜாக்பாட்!!

மாருதி 800 (Maruti 800), இந்தியாவில் இந்த காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த இந்த காரை இப்போது தொழிலதிபராக உள்ள பலரும் அவர்களது இளம் பருவத்திலும், தொழில் துவங்கிய புதியதிலும் பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு மாருதி 800 காரை ஒரு காலத்தில் பயன்படுத்தியவர், 1991ஆம் ஆண்டில் கான்ஃபிடண்ட் ரியல் எஸ்டேட் (Confident Real Estate) குழுமத்தைத் தொடங்கி, தற்போது நாட்டின் பணக்கார வர்த்தகர்களில் ஒருவராகத் திகழும் டாக்டர் சி.ஜே ராய் (C.J Roy) ஆவார்.

தமிழ்நாட்டை மறந்து ஆந்திரா பக்கம் போகும் முதலீடு!

ஆந்திர மாநில அரசு சரளா ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதன் ஜிகா ஸ்கேல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஹப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் ட்ரோன் தேவை அதிகரித்து வரும் நிலையில் இதை பெரிய அளவில் தயாரிக்கும் ஆலை ரெடியாகிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டொயோட்டாவுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மிக கடுமையான சவாலை அளிக்க கூடிய வகையிலான ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் இந்திய சந்தையில் இல்லை.
Advertisement

இந்த 4 கார்கள் இந்தியாவையே புரட்டி போடப்போகுது!

மஹிந்திரா, டாடா, ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனம் மிட்சைஸ் செக்மெண்டில் கம்பஷன் இன்ஜின் கார்களை அடுத்த 3-4 மாதங்களில் வெளியிட தயாராகி வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பல லட்ச ரூபா கொடுத்து வாங்கும் KTM பைக்குகளையும் நம்ப முடியல

கேடிஎம் (KTM) நிறுவனம் உலக அளவில் தனது 125 டியூக் (125 Duke), 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏற்கனவே கஸ்டமர்களுக்கு விற்கப்பட்ட இந்த பைக்குகளை அவற்றில் பழுது ஒன்றை கண்டறிந்ததை அடுத்து கேடிஎம் நிறுவனம் திரும்ப அழைக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி ஷோரூம்களை மக்கள் ஈ போல் மொய்ப்பதற்கு இதுதான் காரணம்!

கடந்த 2025 அக்டோபர் மாதத்தில், வழக்கம்போல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 318 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது, 2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை விட 10.48% அதிகமாகும்.

தோனியை அம்பாசிடரா போட்டதுக்கு பலன் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோன் நிறுவனம் மற்ற முன்னணி கார் நிறுவனங்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வந்தாலும், 2025 அக்டோபரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சிட்ரோன் சி3 (C3) ஹேட்ச்பேக் கார் ஆகும். கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் விற்பனைப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் சிட்ரோன், ஒட்டுமொத்த சந்தையில் 0.3% பங்கைக் கொண்டுள்ளது.

கார் பார்க்க தான் சிறுசு... இப்பவே புக்கிங்கை போடுங்க!!

புதிய மினி கூப்பர் கன்வெர்ட்டிபிள் (MINI Cooper Convertible) காருக்கான முன்பதிவுகள் இந்தியாவில் இன்று (நவம்பர் 19) தொடங்கப்பட்டுள்ளன. இந்த காம்பெக்ட் கன்வெர்ட்டிபிள் கார் 2025 டிசம்பருக்குள் அறிமுகப்படுத்தப்படும் என்று மினி இந்தியா அறிவித்துள்ளது. இதற்கிடையில்தான் இந்த காருக்கான முன்பதிவுகள் தற்போது அதிகாரப்பூர்வமாக துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

டாடாவால் முடியல... இந்தியாவில் சாதித்து காட்டிய எம்ஜி!!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India) நிறுவனம், அதன் விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரின் விற்பனையில் 50,000 என்கிற பிரம்மாண்ட மைல்கல்லை 400 நாட்களுக்கு உள்ளாக, அதாவது ஒரு வருட காலத்தில் எட்டியுள்ளதாக அறிவித்துள்ளது. எம்ஜி நிறுவனத்திற்கு ஒரு குறிப்பிடத்தக்க சாதனையாக அமைந்துள்ள இந்த நிகழ்வை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

மேனுவல் கியரை மக்கள் அதிகம் தேர்வு செய்ய இதுவும் காரணம்!

இந்தியாவில் வாகனங்களை தயாரித்து விற்பனை செய்யும் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் மேனுவல் கியர் உடன் ஆட்டோமெட்டிக் கியர் ஆப்ஷனையும் வழங்கி வருகின்றனர். வாகனம் ஒட்டுவதற்கு மேனுவல் கியரை விட ஆட்டோமெட்டிக் கியர் தான் சுலபமாக இருக்கும். இருந்தாலும் மக்கள் பலர் மேனுவல் கியர் காரையே தேர்வு செய்கின்றரன். இதற்கான காரணம் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

மைலேஜ் சும்மா தாறுமாற தரப்போகுது!

டாடா மோட்டார் நிறுவனம் தனது பிரிமியம் எஸ்யூவி கார்களுக்கு புதிய இன்ஜின் ஆப்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. பொதுவாக பிரிமியம் கார்களில் பயன்படுத்தப்படாத சிஎன்ஜி வேரியன்டை கொண்டு வரடுவும் திட்டமிட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்கள் ஒரு பக்கம் பிரபலமாகி வரும் நிலையில் மறுபக்கம் இது போன்ற முயற்சியை அந்நிறுவனம் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

புது காருக்கு வாயிலயே நுழையாத பெயரை வைக்க போகும் மஹிந்திரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்யூவி 700 (Mahindra XUV 700). இதன் ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் மஹிந்திரா நிறுவனம் தற்போது ஈடுபட்டு வருகிறது. மஹிந்திரா எக்ஸ்யூவி 700 ஃபேஸ்லிஃப்ட் மாடலின் சோதனை ஓட்டம் இந்திய சாலைகளில் தற்போது மிகவும் தீவிரமாக நடைபெற்று வருகிறது.

ரோல்ஸ்-ராய்ஸ் காரினால் இந்த பிறந்தநாளை மறக்கவே மாட்டார்!!

இயக்குநர் விக்னேஷ் சிவன், தனது மனைவி நயன்தாராவின் 41வது பிறந்தநாளை முன்னிட்டு, சுமார் 10 கோடி ரூபாய் மதிப்புள்ள 'ரோல்ஸ் ராய்ஸ் பிளாக் பேட்ஜ் ஸ்பெக்டர்' (Rolls-Royce Black Badge Spectre) காரை பரிசளித்துள்ளார். இந்த புதிய ஆடம்பர எலெக்ட்ரிக் காரில் விக்னேஷ் சிவன்- நயன்தாரா தம்பதி தங்களது இரட்டை குழந்தைகள் உடன் இருக்கும் புகைப்படங்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி, ரசிகர்களிடையே பெரும் கவனத்தை பெற்றுள்ளன.

பழைய வண்டிய எல்லாம் இனி ஓட்டவே முடியாது போல!

இந்தியாவில் மோட்டார் வாகனங்களுக்கான ஃபிட்னஸ் சான்று பெறுவதற்கான பட்டணம் 10 மடங்கு உயர்ந்துள்ளது. இந்த கட்டணம் அனைத்து மாநிலங்களிலும் உடனடியாக அமலுக்கு வந்துள்ளது.வாகனத்தின் வயதிற்கு ஏற்ப கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மார்க்கெட்டையே தலைகீழா திருப்பி போட போகும் மாருதி கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி பிரெஸ்ஸா (Maruti Suzuki Brezza). இது சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இந்திய சந்தையில் டாடா நெக்ஸான் (Tata Nexon) போன்ற கார்களுடன், மாருதி சுஸுகி பிரெஸ்ஸா நேருக்கு நேராக போட்டியிட்டு வருகிறது.

இளைஞர்கள் ஆசையில் மண் அள்ளி போட்ட கேடிஎம்... விலை உயர்வுகள்!

புகழ்பெற்ற கேடிஎம் 390 அட்வென்ச்சர் (KTM 390 Adventure) மற்றும் அட்வென்ச்சர் எக்ஸ் மோட்டார்சைக்கிள்களின் விலைகள் உயர்ந்துள்ளன. அரசின் புதிய ஜிஎஸ்டி மாற்றங்களே இந்த விலை உயர்வுக்குக் காரணம் ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. புதிய ஜிஎஸ்டி 2.0 விதிமுறைகளின்படி, 350சிசி-க்கு மேல் என்ஜின் திறன் கொண்ட இருசக்கர வாகனங்களுக்கான வரி 31%-இல் இருந்து 40% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.