மேட் இன் தமிழ்நாடு காரின் டெலிவரி துவங்கியது!

விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது விஎஃப்6 மற்றும் விஎஃப்7 ஆகிய கார்களின் டெலிவரியைதுவங்கிவிட்டது. இந்த கார்கள் இ்நதியாவில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள நிலையில் தூத்துக்குடி ஆலையில் தயாரிக்கப்பட்ட கார்கள் டெலிவரி தற்பாது துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

150 கிமீ வேகத்துல தலகீழா கவிழ்ந்தும் ஒன்னும் ஆகல!

ஒவ்வொரு சாலையிலும் என்ன வேகத்தில் பயணம் செய்யலாம் என்ற வரம்பு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளதோ, அந்த வேகத்தில் மட்டுமே பயணம் செய்ய வேண்டும். ஆனால் வேக வரம்புகளை (Speed Limits) மீறுவதை, நிறைய பேர் பெருமையாக கருதுகின்றனர். வேகமாக சென்று, மற்றவர்களின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பதும், நிறைய பேரின் எண்ணமாக உள்ளது.

மஹிந்திராவின் புதிய சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார் சோதனை ஓட்டம்

மஹிந்திரா நிறுவனத்தின் அடுத்த தலைமுறை ஸ்கார்பியோ காராக அமையவுள்ள 'விஷன் எஸ்' (Vision S) மாடல் 2027ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. 2027க்கு இன்னும் ஒரு வருடத்திற்கும் மேல் உள்ள போதிலும், விஷன் எஸ் கான்செப்ட் வாகனத்தில் இருந்து புதிய காரை உருவாக்கும் பணிகளில் ஏற்கனவே மஹிந்திரா தீவிரமாக ஈடுப்பட ஆரம்பித்துவிட்டது.

30 நாளில் 7 லட்சம் கார்கள் வித்துடுச்சு!

இந்தியாவில் ஜிஎஸ்டி 2.0க்கு பிறகு கார் வாங்கும் மக்களின் எண்ணிக்கை இரு மடங்களாக அதிகரிக்த்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. கார்களின் விலை கணிசமாக குறைந்ததால் இந்த அளவிற்கு விற்பனை அதிகரித்துள்ளதாக தெரியவந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

நவம்பர் 4இல் அறிமுகமாகும் புது ஹூண்டாய் கார் இதுதான்!!

புதிய தலைமுறை ஹூண்டாய் வென்யூ (Hyundai Venue) கார் வருகிற நவம்பர் 4ஆம் தேதியில் அறிமுகம் செய்யப்பட உள்ளது. உட்புறம் மற்றும் வெளிப்புறத்தில் பல்வேறு மாற்றங்களுடன், பிரீமியம் அம்சங்களுடன் இது வரவிருக்கிறது. இந்தியாவில் மக்கள் பலர் வாங்கும் எஸ்யூவி கார்களுள் ஒன்றாக வென்யூ விளங்குவதால், அதன் புதிய தலைமுறை மாடலுக்கு பெரிதும் எதிர்பார்ப்பு உருவாகி உள்ளது.

35 கிமீ மைலேஜ்! விலை 4.70 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனத்தின் பெரும்பாலான கார்களின் விற்பனை, தற்போது மிகவும் சிறப்பாக உள்ளது. ஆனால் ஒரு நாணயத்திற்கு 2 பக்கங்கள் என்பதை போல், மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஒரு சில கார்கள் விற்பனையில் தடுமாறவும் செய்கின்றன.

செஞ்சூரி பிராண்ட் காரை உலகமே திருப்பி பார்க்கப்போகுது!

டொயோட்டா நிறுவனம் ரோல்ஸ்ராய்ஸ் போல காஸ்ட்லியான சொகுசு கார்களை செய்ய செஞ்சூரி என்ற புதிய பிராண்டை உருவாக்கியுள்ளது.இந்த பிராண்டின் கீழ் சொகுசு மற்றும் அல்ரா லக்ஸரி வாகனங்கள் எல்லாம் செய்ய திட்டமிடப்பட்டுள்ளது. ஏற்கனவே லெக்ஸஸ் என்ற பிராண்ட் இருக்கும் நிலையில் இந்த புதிய பிராண்ட் எதற்காக? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தங்கம் விலை ஏறியதும் அலுக்காஸில் லாபம் கொட்டுது போல!

இன்று தங்கம் விலை மிக அதிகமாக இருக்கிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்னர் கிராம் ரூ6000த்திற்கு விற்பனையாகி வந்த தங்கம் தற்போது கிராம் ரூ12,000த்திற்கு விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் தென்னிந்தியாவின் மிகப்பெரிய நகைகடை நெட்வொக்கான ஜோஸ் அலுக்காஸ் ஜூவல்லரியின் உரிமையாளர் ஜான் அலுக்காஸ் புதிதாக ரூ1.5 கோடிக்கு கார் வாங்கியுள்ளார். இது சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.இவர் சமீபத்தில் தான் எம்ஜி சைபஸ்பர் காரை வாங்கிய நிலையில் உடனடியாக மற்றொரு காஸ்ட்லி காரை வாங்கியது. வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சபரிமலைக்கு ஜனாதிபதி வந்தது மட்டும் தானே தெரியும்...

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு சபரிமலை ஐயப்பன் கோயிலுக்கு அக்டோபர் 22 அன்று வருகை தந்தார். பொதுவாக பக்தர்கள் கால்நடையாகவோ, உடல்நலக் குறைபாடு உள்ளவர்கள் டோலி சேவையிலோ சன்னிதானம் செல்வார்கள். ஆனால், குடியரசுத் தலைவரின் உடல்நலம் மற்றும் பாதுகாப்புக் காரணங்களுக்காக, அவர் பம்பையிலிருந்து சன்னிதானம் செல்ல போர்ஸ் கூர்கா (Force Gurkha) வாகனத்தைப் பயன்படுத்தவுள்ளதாக சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.

உலகின் காஸ்ட்லியான 10 கார்கள் இது தான்!

உலகம் முழுவதும் வாகனங்கள் ஒரு முக்கியமான விஷயங்களாக இருக்கிறது. கார்கள் சமூகத்தில் நமக்கு அந்தஸ்தை தருகிறது. இந்த வாகனங்களின் விலை மிக முக்கியமான விஷயமாக இருக்கிறது. இந்நிலையில் உலகில் அதிகம் விற்பனையாகும் டாப் 10 கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

காரை திருடினு எங்கேயும் போக முடியாது... 10 லட்ச ரூபா கார்கள்

இந்தியாவில் ரூ.10 லட்சம் பட்ஜெட்டில், கார் தொழிற்சாலையிலேயே பொருத்தப்பட்ட வாகன கண்காணிப்பு வசதியுடன் ஒரு காரை வாங்க விரும்பினால், பொதுவாக காரின் நடுத்தர அல்லது உயர்நிலை வேரியண்ட்டைத் தேர்வு செய்ய வேண்டியிருக்கும். ஏனெனில் இந்த தொழில்நுட்பம் எண்ட்ரி-லெவல் கார்களில் அரிதாகவே காணப்படுகிறது.

சினிமாவில் யாரை பார்த்தாலும் இந்த பென்ஸ் கார் வைத்துள்ளனர்!!

பாலிவுட் திரையுலகில் கடந்த சில வருடங்களாகவே மெர்சிடிஸ் மேபேக் ஜிஎல்எஸ்600 காரை வாங்குவது ஒரு புதிய டிரெண்ட் ஆக மாறி வருகிறது. அந்த வகையில், சமீபத்தில் இந்த மெர்சிடிஸ் காரை வாங்கிய பிரபல பாலிவுட் நடிகர் ஃபர்ஹான் அக்தர் தனது புதிய மேபேக் ஜிஎல்எஸ்600 காரில் வலம் வந்துள்ளார்.
Advertisement

7 பேர் போற புதிய காரை வாங்க மக்கள் போட்டி போட போறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N). இது மிகவும் அதிகமாக விற்பனையாகி கொண்டுள்ள 7 சீட்டர் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக இருந்து வருகிறது. அத்துடன் இது முன்பதிவிலேயே பல்வேறு சாதனைகளை படைத்த கார் ஆகும்.

பெங்களூரு-ஓசூர் மெட்ரோவுக்கு உண்மையில் சாத்திய கூறு இல்லையா?

கர்நாடகாவின் பெங்களூரு மெட்ரோ ரயில் சேவையை தமிழ்நாட்டின் ஓசூர் வரையில் நீட்டிக்க போதிய சாத்திய கூறுகள் இல்லை எனவும், இதனால் பெங்களூரு- ஓசூர் மெட்ரோ சேவைக்கு வாய்ப்பு மிகவும் குறைந்துள்ளதும் தான் தற்போதைக்கு டிரெண்டிங்காக பேசப்பட்டு கொண்டிருக்கிறது. இதுகுறித்த கொஞ்சம் விரிவான விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

6 மாசத்தில் ஒரு லட்சம் வீட்டில் இந்த காரை வாங்கிட்டாங்க!

இந்தியாவில் நடப்பு நிதியாண்டின் முதல் அரையாண்டு நிறைவடைந்துள்ள நிலையில், வாகன தயாரிப்பு நிறுவனங்கள் தங்கள் விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளன. அதன்படி கடந்த ஆறு மாதமாக எந்த வாகனம் அதிகமாக விற்பனையாகியுள்ளது என்ற விபரம் வெளியாகி உள்ளது. இதில் மாருதி நிறுவனத்தின் டிசையர் கார் தான் நம்பர் 1 இடத்தில் இருக்கிறது. 6 மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான கார்கள் விற்பனையாகி உள்ளன. இதுவரை விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்திய தயாரிப்புகளுக்கு வெளிநாடுகளில் செம டிமாண்ட்!

இந்தியாவில் தயாரித்த வாகனங்களுக்கு வெளிநாட்டில் செம டிமாண்ட் ஏற்பட்டுள்ளுது. இந்த வாகனங்களை மக்கள் விரும்பி வாங்கி வருகின்றனர். இந்நிலையில் கடந்த 6 மாதத்தில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட வானங்களை வெளிநாட்டு மக்கள் வாங்கி குவித்துள்ளனர். இதனால் ஏற்றுமதி அதிகமாகியள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தீபாவளிக்கு நிறைய பேர் டிரெஸ் எடுத்துட்டாங்க போல...!!

கல்யாண் சில்க்ஸ் நிறுவனத்தின் தலைவர் டி.எஸ். பட்டாபிராமன், புதிய ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி எல்டபிள்யூபி கார் வாங்கியதை ஒரு வாரத்திற்கு முன் நாம் அறிந்தோம். இந்நிலையில், தீபாவளி பண்டிகையையொட்டி, கறுப்பு நிறத்தில் ஒரு புதிய லம்போர்கினி ஹுராகன் டெக்னிகா எல்பி640-2 கார் அவரது வாகன சேகரிப்பில் இணைந்துள்ளது. இந்த 640 குதிரைத்திறன் கொண்ட சூப்பர் காரை இறக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.

புதிய பஜாஜ் சேத்தக் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் ஸ்பை படங்கள்!!

கடந்த சில ஆண்டுகளாக, எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் பிரிவில் பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) குறிப்பிடத்தக்க வளர்ச்சியை கண்டுள்ளது. சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மூலம், எலெக்ட்ரிக் இருசக்கர வாகனத் துறையில் பஜாஜ் ஒரு முக்கிய இடத்தைப் பிடித்துள்ளது. இந்த நிலையில், இந்த நிறுவனம் தனது ஆதிக்கத்தை மேலும் விரிவுபடுத்தும் வகையில், புதிய தலைமுறை சேத்தக் ஸ்கூட்டரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது.

பஞ்ச் கார் மூலமே 30 நாளில் இவ்வளவு வருமானமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு கடந்த தீபாவளி ஒரு ஜாக்பாட் என்றே சொல்ல வேண்டும். நவராத்திரி முதல் தீபாவளிக்குள் இந்நிறுவனம் 1 லட்சம் கார்களைவிற்பனை செய்துள்ளது.இதில் அந்நிறுவனத்தின் பஞ்ச் கார் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்வாருங்கள்.

இனி 5 ஸ்டார் ரேட்டிங் வாங்குறது ரெம்ப கஷ்டம்!

உலகம் முழுவதும் பாதுகாப்பான வாகனங்களுக்கான சோதனை மிக முக்கிய விஷயமாக பார்க்கப்படுகிறது. இதில் வரும் முடிவுகள் நேரடியாக வாகனத்தின் விற்பனையில் பிரதிபலிக்கிறது. அதிக ரேட்டிங் கொண்ட வாகனங்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இது ஐரோப்பாவிலும் அதிகமாக இருக்கிறது. இந்தியாவிற்கு எப்படி பாரத் என்கேப் சோதனை உள்ளதோ அதே போல ஐரோப்பாவிற்கு யூரோ என்கேப் சோதனை நடத்தப்படுகிறது.
Advertisement

தொழிற்சாலையில் கிட்டத்தட்ட எல்லா வேலையும் முடிஞ்சிடுச்சு!!

பெங்களூரைச் சேர்ந்த எலக்ட்ரிக் இருசக்கர வாகன ஸ்டார்ட் அப் நிறுவனமான அல்ட்ரா வயலட் ஆட்டோமோட்டிவ், கடந்த மாதம் தனது புதிய எலக்ட்ரிக் மோட்டார்சைக்கிளாக எக்ஸ்47 க்ராஸ்ஓவர் இவி அட்வென்ச்சர் பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியது. தற்போது, ஒரு மாதத்திற்குப் பிறகு, நிறுவனம் அதன் டெலிவரிகளைத் தொடங்கியுள்ளது.

ரூ21 கோடியை மிச்சப்படுத்திய தொழிலதிபர்கள்!

குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த பிசினஸ் குழுமம் ஒன்று ஒன்றாக சேர்ந்து சொகுசு காரை வாங்கியதில் ரூபாய் 21 கோடியை மிச்சம் செய்துள்ளது. பிசினஸ் குழுமம் என்றால் எப்படி செயல்பட வேண்டும் என்பதை காட்டும் வகையில் இந்த குழுமம் செயல்பட்டுள்ளது. இதன் மூலம் பல கோடி ரூபாயை மிச்சபடுத்தி மிகப்பெரிய சாதனையை செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.

10 லட்ச ரூபா கார்களில் இந்த வசதி இருக்குறதே பலருக்கு தெரியல!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்குள் விலை கொண்ட கார்களில் ரிமோட் என்ஜின் ஸ்டார்ட் வசதி அரிதாகவே கிடைக்கிறது. பெரும்பாலான கார்களில் கீலெஸ் என்ட்ரி மற்றும் ஸ்டார்ட்/ ஸ்டாப் பொத்தான் இருந்தாலும், சாவியில் உள்ள ரிமோட் மூலம் காருக்கு வெளியே குறிப்பிட்ட தொலைவில் இருந்தே என்ஜினை இயக்க வைக்கும் வசதி சற்று விலைமிக்க கார்களில் தான் வழங்கப்படுகின்றன.

10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினால், இந்த வசதி இருக்கனும்!!

ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில் யுஎஸ்பி டைப்-சி சார்ஜிங் வசதி கொண்ட காரை தேடுகிறீர்களா? அப்படியென்றால் டாடா, ஹூண்டாய், மஹிந்திரா போன்ற பிராண்ட்களின் புதிய கார்களின் சில வேரியண்ட்களை நீங்கள் கருத்தில் கொள்ளலாம். யுஎஸ்பி டைப்-சி போர்ட்கள் தற்போது பொதுவானதாகிவிட்டாலும், இவை பெரும்பாலும் நடுத்தர மற்றும் உயர் ரக கார்களிலோ அல்லது கூடுதலான ஆக்ஸஸரீஸ் தொகுப்புகளிலோ தான் கிடைக்கின்றன.

நீங்க நினைக்கறதை விட விலை ரொம்ப கம்மி!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் (Hatchback) ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இதன் நடப்பு 2025ம் ஆண்டு செப்டம்பர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.