இப்ப வரும் கார்களில் இந்த விளக்கை பார்த்து இருக்கீங்களா?

பத்து லட்ச ரூபாய் எக்ஸ்-ஷோரூம் விலைக்குள் வாங்கக்கூடிய கார்களிலும், டிரங்க் லைட் எனப்படும் காரின் பின்பக்கத்தில் பொருட்களை வைக்கும் பகுதியில் விளக்குகள் கிடைக்கின்றன. இந்த பட்ஜெட்டில் கிடைக்கும் அத்தகைய கார்களுள் சிறந்தவற்றின் பட்டியலை தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். இதில், பல கார்களில் இந்த வசதி ஒரு நிலையான அம்சமாகவோ அல்லது கூடுதலாக பெறக்கூடிய அம்சமாகவோ வழங்கப்படுகிறது.

வரிசையா எலெக்ட்ரிக் பைக்கை களமிறக்கும் ராயல் என்ஃபீல்டு!

கோவாவில் நடைபெற்றுவரும் 2025ஆம் ஆண்டிற்கான மோட்டோவெர்ஸ் (Motoverse) நிகழ்ச்சியில் ராயல் என்பீல்டு நிறுவனம், அதன் புதிய எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளான 'ஃபிளையிங் ஃப்ளே எஃப்.எஃப்.எஸ்.6' (Flying Flea FF.S6)-ஐ பார்வையாளர்கள் முன் காட்சிப்படுத்தியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் பயன்படுத்தப்பட்ட இலகுரக ராணுவ பைக்கின் பெயரைத் தாங்கி வரும் இந்த பைக் ஆனது ராயல் என்ஃபீல்டின் ஃபிளையிங் ஃப்ளே வரிசையில் இரண்டாவது மாடலாகும்.

மேட்-இன்-தமிழ்நாடு ஏத்தர் ஸ்கூட்டர் தான் எலலா நாட்டுக்கும்!!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன தயாரிப்பு நிறுவனமான ஏத்தர் எனர்ஜி லிமிடெட், இலங்கையில் அதன் மார்க்கெட்டை பெரிதுப்படுத்தும் வகையில் புதிய ரிஸ்டா (Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை விற்பனைக்கு அறிமுகப்படுத்தியுள்ளது. இலங்கை தலைநகர் கொழும்புவில் நடைபெற்ற 2025ஆம் ஆண்டிற்கான மோட்டார் கண்காட்சியில் ஏத்தர் ரிஸ்டா வெளியீடு செய்யப்பட்டுள்ளது. இலங்கையில் ஏத்தரின் அங்கீகரிக்கப்பட்ட விநியோகஸ்தரான எவல்யூஷன் ஆட்டோ பிரைவேட் லிமிடெட் (Evolution Auto Pvt. Ltd) நிறுவனத்துடன் இணைந்து இந்த நாட்டில் ரிஸ்டா அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

பெங்களூருவில் ஸ்கூட்டரை வாங்கினால் 12,000 ரூபாய் மிச்சம்!!

உலகின் முன்னணி இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான பஜாஜ் ஆட்டோ லிமிடெட் (Bajaj Auto Limited), பெங்களூரு வாடிக்கையாளர்களுக்கு ஒரு சிறப்பு சலுகையை அறிவித்துள்ளது. "முழு ஆயுள் காப்பீடு" (Fully Lifeproof) என்று பெயரிடப்பட்டுள்ள இந்தச் சலுகை, இந்தியாவின் வேகமாக வளர்ந்து வரும் எலெக்ட்ரிக் வாகனச் சந்தைகளில் ஒன்றான பெங்களூருவுக்கு மட்டும் ஆக அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

ஆக்டிவா இவியை வாங்க ஆளே இல்லை!

ஹோண்டா நிறுவனம் தனது ஆக்டிவா இ மற்றும் க்யூசி 1 ஆகிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களின் தயாரிப்பை கடந்த ஆகஸ்ட் மாதம் முதல் நிறுத்திவிட்டதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த ஸ்கூட்டர் தற்போது விற்பனையில் இருந்தாலும் கடந்த 4 மாதங்களாக ஒரு ஸ்கூட்டர்கள் கூடதயாரிக்கப்படவில்லை என தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த காரணம் மற்றும் விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

2026ல் கலக்கப்போவது இவங்க தான்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன பிரிவில் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது.இந்த ஸ்கூட்டர்கள் மார்கெட்டில் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்ப்பை பெறும் நிலையில் வரும் 2026ம் ஆண்டு சில எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் வருவது உறுதியாகியுள்ளது. இது குறித்து இதுவரை வெளியான விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

திருமண நாளுக்காக மனைவிக்கு நடிகர் வாங்கி கொடுத்த கார்!!

மஹிந்திரா பிஇ6 (Mahindra BE6), கடந்த நவம்பரில் அறிமுகப்படுத்தப்பட்டு இந்தியாவில் தற்சமயம் அதிகம் விற்பனையாகும் எலெக்ட்ரிக் கார்களுள் ஒன்றாகும். கடந்த சில மாதங்களாக, இந்த மாடர்ன் மஹிந்திரா எலெக்ட்ரிக் கார் பல பிரபலங்கள் மற்றும் முக்கிய நபர்களின் இல்லங்களுக்கு வந்து சேர்ந்திருக்கிறது. அந்த வகையில் தற்போது, நடிகர் கணேஷ் வெங்கட்ராமன் (Ganesh Venkatraman) தனது 10வது திருமண நாளை முன்னிட்டு தனது மனைவிக்கு பிஇ6 எலெக்ட்ரிக் கார் ஒன்றை பரிசளித்துள்ளார்.

சர்வீஸ் பண்ண காரை துபாயக்கு தூக்கி சென்ற பணக்காரர்

இந்திய தொழிலதிபர் ஒருவர் தனது ரோல்ஸ்ராய்ஸ் காரை துபாய்க்கு சர்வீஸ்க்காக கொண்டு சன்ற சம்பவம் தற்போது வீடியோவாக சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. காஸ்ட்லி கார்களை வாங்குவதில் இருக்கும் பெரிய சிக்கல் அதை சர்வீஸ் செய்வது தான். சரியான நேரத்தில் சர்வீஸ் செய்யாமல் விட்டால் அந்த காரின் வாரண்டி கிடைக்காமல் போகும், சர்வீஸ்காகவே அதிகம் செலவு செய்ய வேண்டியதுவரும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காஸ்ட்லி காராக தேடி தேடி வாங்கிய மக்கள்!

இந்தியாவில் பண்டிகை காலங்களில் வாகனங்களின் விற்பனை கணிசமாக அதிகரிக்கும். கடந்த தீபாவளி காலத்திலும் மிக அதிகமான விற்பனை நடந்தது. இதற்கு பண்டிகை காலம் ஒரு பக்கம் இருந்தாலும், செப்டம்பர் 22ம் தேதி முதல் ஜிஎஸ்டி வரி குறைப்புவந்தது. மற்றொரு காரணமாக இருகு்கிறது. இருக்கிறது. இந்நிலையில் இந்த விற்பனையில் கம்பேக்ட் கார்கள் தான் அதிக விற்பனையை பெற்றுள்ளது தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

7 பேர் வரை சவுகரியமா அமர்ந்து செல்லலாம், கியாவின் புது கார்!

கியா நிறுவனம் புதிய மூன்று வரிசை எஸ்யூவி-யை இந்திய சாலைகளில் மீண்டும் சோதனை செய்து வருகிறது. இம்முறை வெளியான தகவல்கள், இந்த வாகனத்தின் அம்சங்கள் குறித்து தெளிவான விவரங்களை அளிக்கின்றன. நீண்ட சாளர அமைப்பு மற்றும் நேர்மையான வால் பகுதி ஆகியவை, கியா பிரீமியம் பிரிவில் ஒரு உண்மையான ஏழு இருக்கைகள் கொண்ட வாகனத்தை தயார் செய்து வருவதை உறுதிப்படுத்துகின்றன. இது கியாவின் இந்திய போர்ட்ஃபோலியோவில் செல்டோஸ் மாடலுக்கு மேல் நிலைநிறுத்தப்படும்.

காரின் பாதுகாப்பில் இருந்து மைலேஜ் வரை இதுதான் அடிப்படை!!

இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்படும் ரூ.10 லட்சம் விலை கொண்ட பெரும்பாலான கார்கள் 'ரேடியல் டியூப்லெஸ்' (Radial Tubeless) டயர்களுடன் வருகின்றன. டயர் தயாரிப்புத் துறையில், ரேடியல் ட்யூப்லெஸ் டயர்கள் ஒரு முக்கியமான கண்டுபிடிப்பாக உருவெடுத்துள்ளன. ரேடியல் என்பது டயரின் உள் கட்டுமானத்தைக் குறிக்கிறது. இது வழக்கமான டயர்களின் மெல்லிய குறுக்குவெட்டு இரப்பர்களில் இருந்து வேறுபடுகிறது.

பணக்காரர்கள் இப்பவே புக்கிங்கை போட ஆரம்பித்து இருப்பாங்க!

உலகளவில் சமீபத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ள போர்ஷே கேயென் (Porsche Cayenne) எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் மற்றும் டர்போ எலெக்ட்ரிக் என இரண்டு வேரியண்ட்களில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள இந்த காரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் முறையே ரூ.1.76 கோடி மற்றும் ரூ.2.26 கோடி ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Advertisement

பிரபலமான ஹூண்டாய் காருக்கே இப்படி ஒரு நிலைமையா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (Hyundai Grand i10 Nios). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

டாடா உருவாக்கும் புதிய சியரா காருக்கு எகிறும் எதிர்பார்ப்பு!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பிரபலமான கார்களுள் ஒன்று, சியரா (Sierra) ஆகும். 1991ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்ட டாடா சியரா ஆனது உள்நாட்டிலேயே உற்பத்தி செய்யப்பட்ட முதல் கார்களுள் ஒன்றாகும். இதனாலேயே அந்த சமயத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் பெரிதும் கவனத்தை பெற்ற சியரா காரை மீண்டும் புதிய தோற்றத்தில் டாடா நிறுவனம் சந்தைக்கு கொண்டுவர உள்ளது.

மஹிந்திராவின் அடுத்த சிக்ஸர்... நவ.26 வரை காத்திருங்க!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் புதிய எக்ஸ்இவி 9எஸ் (XEV 9S) எலக்ட்ரிக் எஸ்யூவி காரை அறிமுகப்படுத்தத் தயாராகி வருகிறது. பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்இவி 9இ (XEV 9e) எலெக்ட்ரிக் கார்களின் வெற்றியைத் தொடர்ந்து, இது மஹிந்திரா நிறுவனத்தின் மூன்றாவது எலக்ட்ரிக் எஸ்யூவி கார் ஆகும். நவம்பர் 26 மற்றும் 27 அன்று பெங்களூருவில் நடைபெறும் 'ஸ்கிரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) நிகழ்வில் இந்த கார் அறிமுகப்படுத்தப்பட உள்ளது.

ராயல் என்ஃபீல்டு இவி பைக் இவ்வளவு சிக்கீரம் வரப்போகுதா?

ராயல் என்ஃபீல்டு நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை விரைவில் அறிமுகப்படுத்தும் என்ற தகவல் தற்போது வெளியாகியுள்ளது.இதுவரை அந்நிறுவனம் 2 பைக்குகளை விற்பனைக்கு கொண்டு வரும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஒரு பைக் வரும் டிசம்பர் மாதமே அறிமுகமாக கூட வாய்ப்புள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எமனே எதிர்ல வந்தாலும் பாத்துக்கலாம்னு தைரியமா போகலாம்!

இந்திய சந்தையில் ஏராளமான பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்கள் (Premium Hatchback Cars) விற்பனைக்கு கிடைக்கின்றன. இதில், டாடா அல்ட்ராஸ் (Tata Altroz) மிகவும் முக்கியமான ஒன்றாக உள்ளது. மாருதி சுஸுகி பலேனோ (Maruti Suzuki Baleno) மற்றும் ஹூண்டாய் ஐ20 (Hyundai i20) போன்ற பிரீமியம் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு எல்லாம் மிகச்சிறந்த மாற்று ஆப்ஷனாக டாடா அல்ட்ராஸ் திகழ்கிறது.

அடிமாட்டு விலையில் புதிய மஹிந்திரா பிஇ6 காரா?

மஹிந்திரா எலெக்ட்ரிக் நிறுவனம் தனது பிஇ6 காரின் புதிய வெர்ஷனை வரும் நவம்பர் 26ம் தேதி அறிமுகப்படுத்தப்போவதாக தெரிவித்துள்ளது. இது குறித்த டீசரையும் வெளியிட்டுள்ளது. ஏற்கனவே இந்நிறுவனம் எக்ஸ்இவி 9எஸ் காரை வெளியிட திட்டமிட்டுள்ள நிலையில் தற்போது இந்த கார் பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

யூஸ் ஆகாம ஓரமா கிடந்த காருக்கு 10 லட்ச ரூபாயில் ஜாக்பாட்!!

மாருதி 800 (Maruti 800), இந்தியாவில் இந்த காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவிற்கு ஒரு காலத்தில் மிக பிரபலமாக இருந்த இந்த காரை இப்போது தொழிலதிபராக உள்ள பலரும் அவர்களது இளம் பருவத்திலும், தொழில் துவங்கிய புதியதிலும் பயன்படுத்தி உள்ளனர். அவ்வாறு மாருதி 800 காரை ஒரு காலத்தில் பயன்படுத்தியவர், 1991ஆம் ஆண்டில் கான்ஃபிடண்ட் ரியல் எஸ்டேட் (Confident Real Estate) குழுமத்தைத் தொடங்கி, தற்போது நாட்டின் பணக்கார வர்த்தகர்களில் ஒருவராகத் திகழும் டாக்டர் சி.ஜே ராய் (C.J Roy) ஆவார்.

தமிழ்நாட்டை மறந்து ஆந்திரா பக்கம் போகும் முதலீடு!

ஆந்திர மாநில அரசு சரளா ஏவியேசன் நிறுவனத்துடன் இணைந்து இந்தியாவின் முதன் ஜிகா ஸ்கேல் எலெக்ட்ரிக் ஏர் டாக்ஸி ஹப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளது. இங்கு அதிக எண்ணிக்கையில் ட்ரோன்களை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. உலகளவில் ட்ரோன் தேவை அதிகரித்து வரும் நிலையில் இதை பெரிய அளவில் தயாரிக்கும் ஆலை ரெடியாகிறது.இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டொயோட்டாவுக்கு இப்பவே நடுக்கம் எடுத்திருக்கும்!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner). இது ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரகத்தை சேர்ந்தது ஆகும். ஆனால் டொயோட்டா ஃபார்ச்சூனர் காருக்கு மிக கடுமையான சவாலை அளிக்க கூடிய வகையிலான ஃபுல்-சைஸ் எஸ்யூவி ரக கார்கள் இந்திய சந்தையில் இல்லை.

இந்த 4 கார்கள் இந்தியாவையே புரட்டி போடப்போகுது!

மஹிந்திரா, டாடா, ரெனால்ட், நிஸான் ஆகிய நிறுவனம் மிட்சைஸ் செக்மெண்டில் கம்பஷன் இன்ஜின் கார்களை அடுத்த 3-4 மாதங்களில் வெளியிட தயாராகி வருகின்றன. இந்த கார்கள் எல்லாம் மக்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ள கார்கள் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பல லட்ச ரூபா கொடுத்து வாங்கும் KTM பைக்குகளையும் நம்ப முடியல

கேடிஎம் (KTM) நிறுவனம் உலக அளவில் தனது 125 டியூக் (125 Duke), 250 டியூக், 390 டியூக் மற்றும் 990 டியூக் பைக்குகளை திரும்ப அழைப்பதாக அறிவித்துள்ளது. அதாவது, ஏற்கனவே கஸ்டமர்களுக்கு விற்கப்பட்ட இந்த பைக்குகளை அவற்றில் பழுது ஒன்றை கண்டறிந்ததை அடுத்து கேடிஎம் நிறுவனம் திரும்ப அழைக்கிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மாருதி ஷோரூம்களை மக்கள் ஈ போல் மொய்ப்பதற்கு இதுதான் காரணம்!

கடந்த 2025 அக்டோபர் மாதத்தில், வழக்கம்போல் மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனமாக முதலிடத்தை பிடித்துள்ளது. கடந்த அக்டோபரில் மொத்தம் 1 லட்சத்து 76 ஆயிரத்து 318 கார்களை மாருதி சுஸுகி விற்பனை செய்துள்ளது. இது, 2024 அக்டோபரில் விற்பனை செய்யப்பட்ட மாருதி சுஸுகி கார்களின் எண்ணிக்கையை விட 10.48% அதிகமாகும்.

தோனியை அம்பாசிடரா போட்டதுக்கு பலன் கிடைக்க ஆரம்பிச்சிருக்கு!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் சிட்ரோன் நிறுவனம் மற்ற முன்னணி கார் நிறுவனங்களை விடக் குறைந்த எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்து வந்தாலும், 2025 அக்டோபரில் குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தைக் கண்டுள்ளது. இதற்கு முக்கியக் காரணம், சிட்ரோன் சி3 (C3) ஹேட்ச்பேக் கார் ஆகும். கடந்த மாதத்தில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்த நிறுவனங்களின் விற்பனைப் பட்டியலில் 13வது இடத்தில் இருக்கும் சிட்ரோன், ஒட்டுமொத்த சந்தையில் 0.3% பங்கைக் கொண்டுள்ளது.