காஸ்ட்லியா இருந்தாலும் இத்தனை பேர் வாங்குறாங்களா?

இந்தியாவில் 7 சீட்டர் கார்களின் விற்பனை கணிசமாக அதிகமாக உள்ளது. குடும்பத்துடன் பயணிக்க ஏற்ற கார்கள் என்பதால் இந்த ரக கார்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகி வருகின்றன. அதன்படி கடந்த அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் கார்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடா நானோ போல் குட்டி காரை களமிறக்கும் ஹீரோ!

இந்தியாவை சேர்ந்த ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் புது டெல்லியை (New Delhi) தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தற்போதைய நிலையில் இந்தியா மட்டுமல்லாது, உலக அளவிலும் மிகப்பெரிய டூவீலர் நிறுவனங்களில் ஒன்றாக ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் திகழ்ந்து கொண்டுள்ளது.

வெறும் ரூ15 செலவில் 106 கி.மீ போகலாமா?

யமஹா நிறுவனம் சமீபத்தில் தனது ப4 புதிய தயாரிப்புகளை வெளியிட்டது. அதன்படி எக்ஸ்எஸ் ஆர் 155, எஃப் இசட் ரெவ், ஏராக்ஸ் எலெக்ட்ரிக், இசி-06 ஆகியவாகன்ஙளை வெளியிட்டது. இதில் ஏராக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் முழு சார்ஜில் 106 கி.மீ பயணிக்கும் என்றும், இசி06 160 கி.மீ பயணிக்கும் என கூறப்பட்டது. குறைந்த விலையில் ஏராக்ஸ் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தான் வரும் என கணிக்கப்படுவதால் அதன் மீதான எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் அதிகமாக உள்ளது.

9 பேர் போற காரை அடி மாட்டு ரேட்ல வித்து தள்றாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero). மஹிந்திரா பொலிரோ இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு சுமார் கால் நூற்றாண்டு காலம் கடந்து விட்டது. கடந்த 2000ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட மஹிந்திரா பொலிரோ இன்றளவும், வாடிக்கையாளர்களின் விருப்பமான கார்களில் ஒன்றாக இருக்கிறது.
Advertisement

காசை பார்க்காம இந்த ரெண்டு கம்பெனி காரையும் வாங்குறாங்க!

ஹூண்டாய் மோட்டார் மற்றும் கியா கார்ப் ஆகிய 2 நிறுவனங்களும் சேர்ந்து உலகளவில் ஹைபிரிட் கார் விற்பனையில் புதிய சாதனையை படைக்கவுள்ளது. இந்நிறுவனம் இந்த 2025ம் ஆண்டு இறுதிக்குள் 10 லட்சம் ஹைபிரிட் கார்களை விற்பனை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி கார் ஆலை ஓய்வில்லாம ஓடுதுனு தெளிவா தெரியுது!

மாருதி சுஸுகி (Maruti Suzuki) நிறுவனம், 2025 அக்டோபர் மாதத்தில் கார்கள் விற்பனையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. பண்டிகைக் கால விற்பனை அதிகரிப்பும், செப்டம்பர் 22 முதல் புதிய ஜி.எஸ்.டி. 2.0 அமலுக்கு வந்ததும் சிறிய மற்றும் காம்பாக்ட் ரக கார்களின் விற்பனையில் நேர்மறையான தாக்கத்தை ஏற்படுத்தியதும் இந்த வளர்ச்சிக்குக் காரணமாக அமைந்துள்ளன.

இந்த 5 விஷயங்கள் டாடா சியாரா கார்ல கண்டிப்பா இருக்கும்!

டாடா நிறுவனம் தனது சியாரா காரை வரும் 285ம் தேதி அறிமுகப்படுத்துகிறது. இதற்கான ஏற்பாடுகள் எல்லாம் நடந்துவருகிறது.இந்த கார் குறித்த எதிர்பார்ப்பு நீண்ட நாட்களாக இருந்து வரும் நிலையில் தற்போது இந்த காரின் அறிமுகம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் உள்ள முக்கியமான 5 அம்சங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

13 லட்ச ரூபாய் கொடுத்து வாங்கும் பைக்கை கூட நம்ப முடியல!!

ஹோண்டா சிபி1000 ஹார்னெட் எஸ்பி (Honda CB1000 Hornet SP) மோட்டார்சைக்கிள்களில் கண்டறியப்பட்ட ஒரு குறைபாடு காரணமாக, ஹோண்டா நிறுவனம் உலகளாவிய ரீதியில் இந்த பைக்கை திரும்பப் பெறும் நடவடிக்கையை அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கையின்படி, இந்தியாவில் தயாரிக்கப்பட்ட சில சிபி1000 ஹார்னெட் எஸ்பி பைக்குகளும் திரும்ப அழைக்கப்படுகின்றன.

யாருமே வாங்காத காரை திடீரென வாங்கிய 2 பேர்!

சிட்ரோன் நிறுவனம் இந்தியாவில் தனது விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் கடந்த அக்டோபர் மாதம் மொத்தம் 1426 கார்களை விற்பனை செய்துள்ளது. இதில் இந்நிறுவனத்தின் என்ட்ரி லெவல் காரான சி3 கார் தான் சிறப்பாக விற்பனையாதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. அதே நேரம் குறைவான எண்ணிக்கையில் சி5 ஏர்கிராஸ் காரும் விற்பனையாகியுள்ளது.

10 லட்ச ரூபாய்க்குள் பலரும் இதில் ஒரு காரை தான் வாங்குறாங்க!

2025 அக்டோபரில் ரூ.10 லட்சத்துக்கும் குறைவான விலையுள்ள கார்களில், மாருதி சுஸுகி, டாடா மோட்டார்ஸ் மற்றும் மஹிந்திரா நிறுவனங்களின் சில பிரபலமான கார் மாடல்கள் சிறப்பான விற்பனையை பதிவு செய்துள்ளன. அதன்படி பார்க்கும்போது, கடந்த 2024ஆம் ஆண்டின் இதே அக்டோபர் மாதத்துடன் ஒப்பிடுகையில், இதில் சில கார்கள் குறிப்பிடத்தக்க விற்பனை வளர்ச்சியை கண்டுள்ளன.

விற்பனையில் சரிவை சந்தித்த ஹூண்டாய் எக்ஸ்டர்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான எஸ்யூவி ரக கார்களில் ஒன்று ஹூண்டாய் எக்ஸ்டர் (Hyundai Exter). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

டாடா கார்களுக்கு கஸ்டமர்ஸ் வர மாட்றாங்கனு யாருங்க சொன்னா?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம், கடந்த சில மாதங்களாக கார்கள் விற்பனையில் சரிவை சந்தித்து வந்த நிலையில், கடந்த 2025 அக்டோபர் மாதத்தில் கணிசமான விற்பனை வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. கடந்த ஒரு மாத காலகட்டத்தில் இந்திய பயணிகள் கார் சந்தை சிறப்பான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ள நிலையில், அதன் ஒரு பகுதியாக டாடா நிறுவனமும் கணிசமான விற்பனை வளர்ச்சியை பதிவு செய்துள்ளது.
Advertisement

விலையை பார்த்தால் மயக்கமே வருது... புதிய கவாஸாகி இசட்1100

கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் அதன் புதிய இசட்1100 (Z1100) சூப்பர் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முந்தைய இசட்1100 பைக்கை விட சில வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பெற்றுள்ளது.

காரை டெலிவரி எடுத்த கையோட இந்த ஸ்டிக்கரை கிழிச்சு வீசிருங்க!

புதிய கார்களை வாங்கும் பலர், சீட்களில் இருக்க கூடிய பிளாஸ்டிக் கவரை கிழிப்பது இல்லை. அதை கிழித்து விட்டால், புதிய கார் என்ற உணர்வு போய் விடும் என பலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, இருக்கைகள் அழுக்காகி விடும் என பயப்படுகின்றனர். புதிய கார் என்பதால், ஒரு சில மாதங்களாவது கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது பலரின் எண்ணம்.

டாடா நெக்ஸானை எந்த காராலும் நெருங்க கூட முடியல!

இந்தியாவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் சந்தை, எப்போதும் கடும் போட்டி நிறைந்ததாகவே உள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாத விற்பனையில் மார்க்கெட்டின் இந்த சவாலான சூழல் தெளிவாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் ஸ்கோடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள், பண்டிகை காலத்தை சாதகமாக்கி காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன.

மாருதியோட கணக்கு தப்புமா... விக்டோரிஸ் சேல்ஸ் ரிப்போர்ட்!!

மாருதி சுஸுகி விக்டோரிஸ் நடுத்தர எஸ்யூவி கார், அறிமுகமான குறுகிய காலத்திலேயே, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் மாத மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 13,496 யூனிட்கள் விற்பனையாகி, நடுத்தர எஸ்யூவி பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது.

தமிழக அரசு பஸ்களா இது!

தமிழகத்தில் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் பலரின் முதல் சாய்ஸ் தனியார் சொகுசு ஆம்னி பஸ்களாகதான் உள்ளன. ஏனெனில் தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள்தான், பொதுமக்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்குகின்றன. அரசு பஸ்களில் அந்த அளவிற்கு சௌகரியம் கிடைப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

உங்க வாழ்க்கையை அழகாக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தன்று இத சொல்ல மறந்துடாதீங்க!

குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்ததால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் நேருவை பாசமாக 'நேரு மாமா' என்று அழைத்தனர்.

500 எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உடன் 6 நகரங்களில் சேவை துவங்கம்!

புனேவைச் சேர்ந்த AI-ஆல் செயல்படும் நகர்ப்புற போக்குவரத்துத் தளமான எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் (ElektrikExpress), தனது முதல் 500 எலக்ட்ரிக் டெலிவரி வாகனங்களை இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த 6 நகரங்கள் டெல்லி, குர்கான், நொய்டா, புனே, மும்பை மற்றும் தானே ஆகும். இன்னும் சென்னையில் எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் அதன் சேவையை துவங்கவில்லை.

நாவிகேஷன் வசதி உடன் 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட கார்கள்!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள கார்களில், நவீன வழிக்காட்டும் (Navigation) வசதிகள், பெரிய தொடுதிரைகள் மூலமாகவும், ஸ்மார்ட்போன் (Android Auto மற்றும் Apple CarPlay) வாயிலாகவும் கிடைக்கின்றன. விலையுயர்ந்த சொகுசு கார்களில் உள்ள பில்ட்-இன் நாவிகேஷன் மென்பொருள் அளவிற்கு இல்லையென்றாலும், ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது.
Advertisement

எந்த விமானியும் விமானத்தில் இப்படி நடக்க விரும்ப மாட்டாங்க!!

என்ஜின்கள் அனைத்தும் செயலிழந்தாலும் விமானங்களால் பாதுகாப்பாக தரையிறங்க முடியும். ஏனென்றால், அவை காற்றின் வேகத்திலேயே திறமையாக செயல்படும் வகையில் பார்த்து பார்த்து கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, முன்னோக்கி செல்வதற்கான வேகத்தைப் பராமரிக்கவும், விமானத்தின் கட்டுப்பாட்டை தக்க வைக்கவும், விமானம் பறக்கும் உயரத்தை தொடர்ந்து உயர்த்தியும், குறைத்தும் விமானிகள் தங்களது கண்ட்ரோலில் விமானத்தை வைத்திருக்க முடியும்.

நடு வழியில் சார்ஜ் காலியானாலும் இனி கவலை இல்ல...!!

இந்தியாவின் மிகப்பெரிய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா.இவி (TATA.ev), வோல்ட்ரான் (Voltran) நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெரிய அளவில் 14 டாடா எலெக்ட்ரிக் வாகன ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-Charging) நிலையங்களை திறந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் நிலையங்களால் தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு என்ன மாதிரியான நன்மைகள் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்கும்போது உஷார்...!!

சமீபத்திய டெல்லி கார் வெடிகுண்டு சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் என்னவென்றால், டெல்லியில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையில் வசிப்பவரும் செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்ற பின் உடனடியாகவும் சட்டபூர்வமாகவும் வாகன உரிமையை (ஆர்.சி பரிமாற்றம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) மாற்றுவதும், வாகனம் விற்கப்பட்டவுடன் காப்பீட்டை ரத்து செய்வதும் அல்லது மாற்றுவதும் அவசியம் ஆகும்.

நாடே எதிர்பார்த்தது இந்த ரெண்டு கார்களுக்கு தான்!

நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தஇரண்டு கார்களிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின் கார்கள் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே மாதத்தில் 22 மடங்கு அதிகரித்த விற்பனை!

இந்தியாவில் இவி மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. தற்போது டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எம்ஜி நிறுவனம் கணிசமான மார்கெட் பங்கை பெற்றுள்ள நிலையில் புதிதாக வியட்நாம் நாட்டைச் சேர்ந்த விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை துவங்கி விற்பவனையை துவங்கிய 2வது மாதமே நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.