நீண்ட வருடங்களாக இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த யமஹா பைக்!!

யமஹா (Yamaha) நிறுவனம், நீண்டகாலமாக இந்திய இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR155) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமான யமஹா ஆர்15 மற்றும் எம்டி-15 (MT-15) பைக்குகளின் புதிய-ரெட்ரோ வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது ரூ.1.50 லட்சம் விலையில் கிடைக்கும். இந்த புதிய அட்டகாசமான யமஹா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யமஹாவின் இந்த வண்டி தான் இனி செம ஹிட்டாக போகுது!

யமஹா நிறுவனம் தனது இசி 06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏராக்ஸ் இ என்ற ஸ்கூட்டர் உடன் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பவனையாகிவரும் நிலையில் இந்த ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நியூமரோஸ் என்-ஃபர்ஸ்ட் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

நியூமரோஸ் என்-ஃபர்ஸ்ட் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.1.17 லட்சம் மட்டும்தான் விலையா... யமஹாவின் எஃப்.இசட்-ரேவ்

இந்தியாவில், யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் புதிய எஃப்.இசட்-ரேவ் (FZ-RAVE) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 150சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரூ.1.17 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஃப்.இசட்-ரேவ் ஒரு புதிய வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.
Advertisement

டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய 2 கார்கள்!

இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ மற்றம் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் நீண்ட காலமாக டாப் 10 கார் பட்டியலில் இருந்தது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல விற்பவனையில் இருந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை விபரங்களில் இந்த இரண்டு கார்களும் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குழந்தை வெச்சிருப்பவங்க இதில் ஒரு காரை வாங்குறது பெஸ்ட்!!

ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில், மோதலை உணர்ந்து கதவுகளைத் தானாக திறக்கும் வசதியுடன் கிடைக்கும் கார்கள் பட்டியலில் டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் இவி, கியா சைரோஸ், ஹூண்டாய் ஐ20 என் லைன் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்கள் உள்ளன. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் பல வாகனங்களில் இந்த வசதி தற்போது அதிகரித்து வருகிறது. மோதலை உணர்ந்து கதவுகளைத் தானாக திறக்கும் வசதியுடன் கூடிய கார்களை இங்கே காணலாம்.

கர்வ் காரில் எதிர்பாராத நேரத்தில் அப்டேட்களை கொண்டுவந்த டாடா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு, புதிய மேம்படுத்தப்பட்ட எக்ஸிகியூட்டிவ் அம்சங்களுடன் கூடிய 'கர்வ்' (Curvv) கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பான பொறியியல் புதுமைகள் உடன், அனைத்து கர்வ் வேரியண்ட்களிலும் (ICE மற்றும் EV) உட்புற இடவசதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சவுகரியம் மற்றும் நடைமுறை பயன்பாட்டில் சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியதாக டாடா கர்வ் மாறியுள்ளது.

ஓசூரில் ஃபேக்ட்ரி வெச்சவங்க தோற்று போனதா சரித்தரமே இல்ல!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பான விற்பனை மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை பெற்றிருப்பதுடன் பொருளாதார அடிப்படையிலும் ஏத்தர் எனர்ஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் ஈரக்குலையை நடுங்க வைத்த மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற கேள்வி மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

2022இல் ஹூண்டாய் எவ்வளவு ஆசை ஆசையாய் அறிமுகம் செய்த கார்!

ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson) காரின் பெயர் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதால், அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கலாம் என்கிற செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவன வட்டாரங்களின்படி, இந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் முதன்மையான எஸ்யூவி (SUV) காரான டக்சன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டாக்கில் உள்ளவரை சில ஹூண்டாய் ஷோரூம்களில் இன்னும் சில வாரத்திற்கு கிடைக்கலாம்.

ஸ்கூட்டரில் பயணித்தவருக்கு ரூ21 லட்சம் அபராதம்!

இந்தியாவில் தற்போது வாகனங்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத விதிப்பில் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமல் போதற்காக ஒருவருக்க ரூ21 லட்சம் அரபாதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

9 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் ஒரு சில கார்கள் விற்பனைக்கு வருவதும் தெரியாது. விற்பனையில் இருந்து விலக்கப்படுவதும் தெரியாது. வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், அவை பிரபலம் அடைவதில்லை. ஆனால் ஒரு சில கார்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்து வருகின்றன.
Advertisement

கடைசிவரை தோல்வியடைந்த பைக்காகவே நடையை கட்டிய ஹோண்டா பைக்!

ஹோண்டா மோட்டார்சைக்கிள்ஸ் & ஸ்கூட்டர்ஸ் இந்தியா (Honda Motorcycles & Scooters India) நிறுவனம் தனது இணையதளத்தில் இருந்து 'சிபி300ஆர்' (CB300R) மோட்டார்சைக்கிளை எந்தவொரு அறிவிப்பும் இன்றி அமைதியாக நீக்கியுள்ளது. விற்கப்படாமல் ஸ்டாக்கில் இருக்கும் சிபி300ஆர் பைக்குகள் எதுவும் இல்லை என்றும், இந்த பைக்கிற்கான புதிய முன்பதிவுகள் எதுவும் ஏற்கப்படவில்லை என்றும் டீலர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.

நானோ மாதிரி குட்டி இவி காரை களம் இறக்கும் ஓலா!

ஓலா நிறுவனம் எலெக்ட்ரிக் டூவீலர் விற்பவனையில் சிறப்பாக வாகனங்களை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.இந்நிறுவனம் புதிய கண்டுபிடிப்புகள், அம்சங்கள் மற்றும் புதிய தயாரிப்புகளிலும் தொடர்ந்து கவனம் செலுத்தி வருகிறது. இந்நிறுவனம் எதிர்கால விற்பனையையும் மனதில் வைத்து தங்கள் தயாரிப்புகளை மாற்றியமைக்க யோசித்து வருகிறது.

டொயோட்டா இன்னோவாக்கு அப்பன்!

இந்திய சந்தையில் எம்பிவி ரக கார்களுக்கு (MPV Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் உள்ளது. டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா (Toyota Innova Crysta), கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) என ஏராளமான எம்பிவி ரக கார்கள் இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக உள்ளன.

டில்லி கார் வெடிப்பில் சிறிய தவறால் அப்பாவி சிக்குகிறாரா?

டில்லியில் நடந்த கார் குண்டு வெடிப்பு சம்பவத்தில் பயன்படுத்தப்பட்ட கார் செகண்ட் ஹேண்ட் முறையில் வாங்கப்பட்டது எனவும் அந்த காரின் பெயரை மாற்றாமலேயே குண்டு வெடிப்பிற்காக பயன்படுத்தப்பட்டதாகவும், தற்போது அதன் முதல் ஒனரும் விசாரணை வளையத்திற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன. செகண்ட் ஹேண்டில் காரை விற்பனை செய்யும் போது பலர் செய்யும் தவறால் அந்த கார் சட்டவிரோதமான செயலில் ஈடுபடும் போது அதை விற்பனை செய்தவரும் சிக்குவார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எங்கே பார்த்தாலும் சென்சார்கள்... டயர்களிலும் வந்தாச்சு!!

ஜே.கே டயர் & இண்டஸ்ட்ரீஸ் (JK Tyre & Industries) நிறுவனம், இந்தியாவின் முதல் டிஜிட்டல் சென்சார் உட்பொதிக்கப்பட்ட கார் டயர்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய தயாரிப்பு, கனெக்டட் மொபிலிட்டி தீர்வுகளின் ஒரு பகுதியாக, வாகன பாகங்களில் டேட்டா கண்காணிப்பை ஒருங்கிணைக்கிறது. மத்தியப் பிரதேச மாநிலம் பன்மோரில் உள்ள ஜே.கே டயர் நிறுவனத்தின் தொழிற்சாலையில் இந்த டயர்கள் உருவாக்கப்பட்டுள்ளன.

சிறந்த பின் இருக்கைகளுடன் ரூ.10 லட்சத்திற்குள் சில கார்கள்!!

இந்தியச் சந்தையில், ரூ.10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் சொகுசான பின் இருக்கை வசதியை எதிர்பார்க்கும் வாடிக்கையாளர்களுக்கு, மாருதி சுஸுகி எர்டிகா மற்றும் ஹோண்டா அமேஸ் ஆகிய இரண்டு வாகனங்கள் சிறந்த தேர்வுகளாகும். இவை விசாலமான இடவசதி, வசதியான இருக்கைகள் மற்றும் மென்மையான பயண அனுபவம் ஆகியவற்றை வழங்குகின்றன. எர்டிகாவில் பின் இருக்கைகளை அதிகமாக சாய்த்துக்கொண்டு, நன்கு சவுகரியமாக அமரும் வசதி் உள்ளது.

மறுபிறவி எடுத்த அம்பாஸிடர்! 34 கிமீ மைலேஜ்!

இந்தியாவில் செடான் கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது என்பதெல்லாம் பச்சை குழந்தைக்கு கூட தெரியும். ஆனால் விதிவிலக்காக ஒரு செடான் கார் மட்டும் விற்பனையில் கொடி கட்டி பறந்து கொண்டுள்ளது. அது மாருதி சுஸுகி டிசையர் (Maruti Suzuki Dzire) ஆகும்.

ஓடிக் கொண்டிருக்கும் ஒரு கார் தானாக இப்படி வெடித்து சிதறுமா?

டெல்லி செங்கோட்டை மெட்ரோ ரயில் நிலையம் அருகே இன்று (நவ.10) மாலை 7.30 மணியளவில் நிகழ்ந்த குண்டுவெடிப்பு சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. தற்போதைய நிலவரப்படி, இந்த கார் குண்டு வெடிப்பில் 13 பேர் உயிரிழந்து உள்ளதாகவும், மேலும் பலர் காயமடைந்து உள்ளதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன.
Advertisement

ஆடி காரை குறைந்த விலையில் வாங்க சரியான நேரம் வந்தாச்சு!!

இந்திய சந்தையில் ஆடி (Audi) நிறுவனம் அதன் க்யூ3 (Q3) மற்றும் க்யூ5 (Q5) கார்களில் புதியதாக சிக்னேச்சர் (Signature) வேரியண்ட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த புதிய வேரியண்ட்கள் ஆனது மேம்படுத்தப்பட்ட ஸ்டைலிங், பிரீமியம் அம்சங்கள் மற்றும் பிரத்யேக ஆக்சஸரீஸ்கள் உடன் வந்துள்ளன. இது வழக்கமான ஆடி க்யூ3 மற்றும் க்யூ5 கார்களில் இருந்து வேறுபட்டு, தனித்துவமான மற்றும் ஆற்றல்மிக்க தோற்றத்தை அளிக்கிறது.

அமைச்சரே நேரில் வந்து அறிமுகம் செய்யும் அளவுக்கு ஸ்பெஷலானதா?

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணை நிறுவனமான விடா (VIDA), இன்று வி.எக்ஸ்2 (VX2) எலெக்ட்ரிக் ஸ்கூட்டரில் 3.4 kWh பேட்டரியை கொண்ட கோ (Go) வேரியண்ட்டை புதியதாக அறிமுகப்படுத்தியுள்ளது. மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் நிதின் கட்கரி இந்த புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்தி வைத்தார்.

34 கிமீ மைலேஜ் குடுக்கும் காரை வாங்க கூட்டம் அலை மோதுது

கார்களில் நல்ல ஹெட்ரூம் (Headroom) இருப்பது மிகவும் அவசியம். அப்போதுதான் அதிக உயரம் கொண்டவர்களாலும் கூட, சௌகரியமாக பயணம் செய்ய முடியும். இந்தியாவை பொறுத்தவரை, ஓரளவிற்கு குறைவான விலையில், அதே நேரத்தில் நல்ல ஹெட்ரூம் கொண்ட கார்களில் ஒன்றாக மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R) காரை குறிப்பிடலாம்.

மாருதி சுஸுகி, ஹூண்டாய் கம்பெனிகளுக்கு பயங்கர ஷாக்!

2025 அக்டோபர் மாதம் கார்கள் விற்பனை பெரும் முன்னேற்றத்தை கண்டுள்ளது. பண்டிகைக் கால உத்வேகம், வாடிக்கையாளர்களின் ஆர்வம் மற்றும் விநியோகச் சங்கிலி மேம்பாடுகள் ஆகியவை இந்த விற்பனை உயர்வுக்கு முக்கிய காரணங்கள் ஆகும். இந்த மாதம், மாருதி சுஸுகி (Maruti Suzuki) மற்றும் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனங்கள் கார்கள் விற்பனையில் முதன்மையான இடத்தை பிடித்துள்ளன.

அனைத்து கண்களும் தமிழ்நாட்டை நோக்கி!

வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicle) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). தற்போதைய நிலையில் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) வின்ஃபாஸ்ட் நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. அவை வின்ஃபாஸ்ட் விஎஃப் 6 (VinFast VF 6) மற்றும் வின்ஃபாஸ்ட் விஎஃப் 7 (VinFast VF 7) ஆகியவை ஆகும்.