நீண்ட நாட்களுக்கு பிறகு காரை எடுக்குறீங்களா? - கவனம் தேவை!

கொரோனாவால் அமல்படுத்தப்பட்ட ஊரடங்கு படிப்படியாக தளர்த்தப்பட்டு வரும் நிலையில், காரை மீண்டும் எடுத்து பயன்படுத்தும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. காரை எடுக்கும்போது டயர்களில் காற்றழுத்தம், பேட்டரி சார்ஜ் அளவு பார்க்க வேண்டும். எஞ்சின் ஆயில், கூலண்ட் அளவையும் செக்கப் செய்துவிடுங்கள். இல்லையெனில், அருகிலுள்ள பரிசோதனை மையத்தில் ஒருமுறை செக்கப் செய்துவிடுவது நல்லது.

புதிய கார்களில் வழங்கப்படும் 'மூன்றாவது கண்' தொழில்நுட்பம்

ஏடிஏஎஸ் தொழில்நுட்பத்திற்காக கார்களில் பிரத்யேக சென்சார்கள், கேமரா மற்றும் ரேடார் கருவி உள்ளிட்டவை பொருத்தப்படுகின்றன. இவை ஒரு சிறிய கம்ப்யூட்டருடன் இணைக்கப்பட்டு கார் இயக்கத்தை தொடர்ந்து கண்காணிக்கும். கார் செல்லும் பாதையில் இருக்கும் தடைகள், பாதசாரிகள் குறுக்கே வரும் தகவல்களை முன்கூட்டியே தெரிவிக்கும். ஓட்டுனரை தவிர்த்து இது காரின் மூன்றாவது கண் போன்று செயல்படும்.

இந்த 6 டீசல் கார்களுக்கு இணையா எதுவும் வர முடியாது!

டீசல் கார்கள் (Diesel Cars)-ஐ புதியதாக வாங்குவது என்பது குதிரை கொம்பாகிவிட்டது. ஏனெனில், அந்த அளவிற்கு டீசல் கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் வெகுவாக குறைந்துவிட்டன. குறிப்பாக, இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனமாக விளங்கும் மாருதி சுஸுகி (Maruti Suzuki) டீசல் கார்களின் விற்பனையை நிறுத்திய பிறகு சாலைகளில் ஓடும் டீசல் கார்களின் எண்ணிக்கை குறைந்துவிட்டது. ரெனால்ட் (Renault) நிறுவனத்தின் சிஇஓ மீண்டும் டீசல் என்ஜின் தொழிற்நுட்பம் பக்கம் எங்களது நிறுவனம் செல்லாது என சமீபத்தில் தெரிவித்துள்ளார்.

2026 கியா சிரோஸ் காரை எந்த வேரியண்ட்டில் வாங்குவது?

கியா (Kia) நிறுவனம் இந்தியாவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்த போதிலும் பெரியதாக சோபிக்காமல் போன காராக சிரோஸ் (Syros)-ஐ சொல்லலாம். நன்கு விசாலமான உட்புற கேபின் மற்றும் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்பட்ட போதிலும், ஏனோ மற்ற கியா கார்கள் அளவிற்கு கூட சிரோஸ் விற்பனையாகவில்லை. இந்த நிலையில், சிரோஸ் காரை கியா நிறுவனம் அப்கிரேட் செய்து ஏப்ரல் 20ஆம் தேதியான இன்று அறிமுகம் செய்துள்ளது.
Advertisement

18% ஜிஎஸ்டியால் விலை குறைந்த இரு கேடிஎம் பைக்குகள்...!!

கேடிஎம் (KTM) நிறுவனம் எதிர்பார்த்தப்படி இந்தியாவில் அதன் 390சிசி பைக்குகளை 350சிசி என்ஜினுக்கு மாற்றி உள்ளது. 350சிசி மற்றும் அதற்கு கீழான பைக்குகளுக்கான ஜிஎஸ்டியை மத்திய அரசு குறைத்ததை அடுத்து அதனை பயன்படுத்திக் கொள்ளும் விதமாக கேடிஎம் நிறுவனம் இவ்வாறான நடவடிக்கையை கையில் எடுத்துள்ளது. கேடிஎம் நிறுவனம் மட்டுமின்றி, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் கீழ் செயல்படும் டிரையம்ப் மோட்டார்சைக்கிள்ஸ் (Triumph Motorcycles) நிறுவனமும் இவ்வாறான நடவடிக்கையை சமீபத்தில் மேற்கொண்டதை பார்த்திருந்தோம்.

எம்ஜி M9 மற்றும் சைபர்ஸ்டர் எலெக்ட்ரிக் கார்கள் விலை உயர்வு

இந்த ஏப்ரல் மாதம் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் மாஸ் மார்க்கெட் கார் மாடல்களின் விலைகளை உயர்த்தியது எம்ஜி. இதில் மூன்று எரிபொருள் கார்களும், மூன்று எலெக்ட்ரிக் கார்களும் அடக்கம். இவற்றிலிருந்து தனியாக இரண்டு ப்ரீமியம் எஸ்யூவி கார்களையும் அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. எம்ஜி செலக்ட் என்ற பிரத்தியேக டீலர்ஷிப்கள் மூலமாக M9 மற்றும் சைபர்ஸ்டர் ஆகிய இரண்டு ப்ரீமியம் எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டு வருகின்றன.

லாரியே மோதினாலும் பாறாங்கல்லு மாதிரி ஸ்ட்ராங்கா நிக்கும்!

இந்திய வாடிக்கையாளர்களின் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளுக்கு மத்தியில் புதிய தலைமுறை ரெனால்ட் டஸ்டர் (New-gen Renault Duster) கார், வெகு சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. சுமார் 4 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, ரெனால்ட் டஸ்டர் கார், இந்திய சந்தைக்கு மீண்டும் வந்துள்ளது.

புதிய டஸ்டரை கம்மி விலையில் வாங்க இந்த வேரியண்ட்டே போதும்!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதிய மேம்படுத்தப்பட்ட டஸ்டர் (Duster) எஸ்யூவி கார் இந்திய மார்க்கெட்டில் அறிமுகப்படுத்தப்பட்டு வரவேற்பை பெற்று வருகிறது. புதிய ரெனால்ட் டஸ்டர் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ள நிலையில், இந்த காரின் விலை குறைவான வேரியண்ட் ஷோரூம் ஒன்றின் வளாகத்திற்குள் காட்சித் தந்துள்ளது. இதனை உறுதிப்படுத்தும் வகையிலான படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

டெஸ்லா மாடல் Y L எலெக்ட்ரிக் கார் இந்திய வெளியீடு விரைவில்

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார் விற்பனையில் முன்னணியில் அருக்கும் அமெரிக்காவைச் சேர்ந்த ஆட்டோமொபைல் நிறுவனமான டெஸ்லா (Tesla), கடந்த ஆண்டு இந்தியாவில் தங்களுடைய முதல் எலெக்ட்ரிக் காராக 'மாடல் Y' (Model Y) எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை வெளியிட்டது. வெளிநாடுகளில் விற்பனை செய்யப்படுவதை விட கிட்டத்தட்ட இரண்டு மடங்கு அதிக விலையில் வெளியான இந்த எலெக்ட்ரிக் கார் வாடிக்கையாளர்களிடயே அந்நிறுவனம் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பைப் பெறவில்லை.

எத்தனை கோடினு கணக்கே இல்ல!

இந்தியாவில் மங்களகரமான நாட்களில், நகை மற்றும் கார் போன்றவற்றை வாங்குவது வழக்கம். குறிப்பாக அட்சய திரிதியை (Akshaya Tritiya) நாளில் நகை கடைகளில் (Jewellery) கூட்டம் அலை மோதும். அதற்கு இணையாக கார் ஷோரூம்களிலும் (Car Showrooms), வாடிக்கையாளர்கள் கூட்டம் அலை மோதுவது வழக்கம்.

உள்ளே காலை நீட்டி படுத்துட்டு போனாலும் இன்னும் இடமிருக்கும்!

கியா (Kia) நிறுவனம் புதியதாக 3 வரிசைகளில் இருக்கைகளை கொண்ட ஒரு எஸ்யூவி காரை இந்தியாவில் அறிமுகம் செய்ய தயாராகி வருகிறது. அதுதான், சொரெண்டோ ஹைப்ரீட் (Sorento Hybrid) கார் ஆகும். வெளிநாடுகளில் ஏற்கனவே விற்பனையில் உள்ள இந்த ஹைப்ரீட் கார் இந்தியாவில் முதல்முறையாக சோதனை ஓட்டத்தில் உட்படுத்தப்பட்டுள்ளது.

ஹூண்டாய் வென்யூ நைட் எடிஷன் இந்தியாவில் வெளியானது

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் கார் மாடல்களின் நைட் எடிஷனை (Knight Edition) வெளியிடுவதை வழக்கமாகக் கொண்டிருக்கிறது ஹூண்டாய். அந்த வகையில் கடந்தாண்டு அப்டேட் செய்யப்பட்ட வென்யூ (Venue) சப்-காம்பேக்ட் எஸ்யூவி மாடலின் நைட் எடிஷனை தற்போது வெளியிட்டுள்ளது அந்நிறுவனம். காஸ்மெடிக்காக பல்வேறு மாற்றங்கள் இந்த நைட் எடிஷனில் செய்யப்பட்டுள்ளன. இதனைத் தவிர்த்து வென்யூ லைன்-அப்பிற்கு சில கூடுதல் வசதிகள் மற்றும் நிறங்களையும் கொடுத்து அப்டேட் செய்துள்ளது ஹூண்டாய்.
Advertisement

போணி ஆகாத காரை பட்டி டிங்கரிங் பாத்த கியா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று கியா சைரோஸ் (Kia Syros). கடந்த 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அறிமுகம் செய்யப்பட்ட கியா சைரோஸ் காரின் விற்பனை ஆரம்பத்தில் மிகவும் சிறப்பாகவே இருந்து வந்தது. ஆனால் நாளடைவில் கியா சைரோஸ் காரின் விற்பனை மந்தமாக தொடங்கியது.

கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை வாங்கலாமா? வேண்டாமா?

நால்டாஜியாவை விரும்பும் ஸ்கூட்டர் வாடிக்கையாளர்களுக்கான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் தேர்வாக கைனடிக் DX எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலைச் சொல்லலாம். 1990-களில் இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வந்த ஐகானிக்கான கைனடிக் ஹோண்டா DX ஸ்கூட்டர் மாடலின் டிசைனை, புதிய கைனடிக் DX ஸ்கூட்டரிலும் கிட்டத்தட்டக் கொண்டு வந்து விட்டது 'கைனடிக் வால்ட்ஸ் & வோல்ட்ஸ்' (Kinetic Watts & Volts) நிறுவனம்.

ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் என்றால் என்ன?

எலெக்டரிக் மற்றும் ஹைபிரிட் கார்களில் பயன்படுத்தப்படும் ரீஜெனரேட்டிவ் பிரேக்கிங் சிஸ்டம் குறித்த முழு தொழிற்நுட்ப ரீதியிலான தகவல்களைக் காணலாம் வாருங்கள்.

நடிகர் அஜித்குமாரால் பெல்ஜியத்தில் பறந்த இந்திய மூவர்ண கொடி!

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) என கூறுவதை தாண்டி, கார் பந்தய வீரர் என கூறும் அளவிற்கு அஜித்குமார் மற்றும் அவரது ரேசிங் குழு (Racing Team) தொடர்ச்சியாக பதக்கங்களை வாரி குவித்து வருகிறது. அதில் மேலும் ஒரு முத்திரையாக, அஜித்குமார் ரேசிங் (AKR) குழு பெல்ஜியத்தில் நடைபெற்ற கார் பந்தயத்தில் இரண்டாவது பிடித்து ஒட்டுமொத்த இந்திய நாட்டிற்கே பெருமை சேர்த்துள்ளது.

ADAS என்றால் என்ன? அதனால் என்ன பயன்?

புதிய கார்களில் சேஃப்ட்க்காக ADAS தொழிற்நுட்பம் கொடுக்கப்படுகிறது. அப்படி என்றால் என்ன? அதனால் காருக்கு என்ன புரோஜனம்? இது குறித்த முழு விபரங்களைக் காணலாம் வாருங்கள்

டொயோட்டா ஹைலக்ஸில் டீசல் மைல்டு ஹைபிரிட் பவர்ட்ரெயின்

கடந்தாண்டு நவம்பர் மாதம் தொடங்கி சர்வதேச அளவில் பல்வேறு நாடுகளிலும் 9ம் தலைமுறை ஹைலக்ஸ் (Hilux) பிக்-அப் டிரக்குகளை விற்பனை செய்து வருகிறது டொயோட்டா. சமீபத்தில் கூட போலாந்தில் இந்தப் புதிய மாடலை விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கிறது. இந்தியாவிலும் ஹைலக்ஸ் ட்ரக் விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்தாண்டு இறுதிக்குள் மேம்படுத்தப்பட்ட மாடலே இங்கேயும் அந்நிறுவனம் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. புதிய 9ம் தலைமுறை ஹைலக்ஸ் மாடலின் சிறப்பம்சங்களைப் பார்க்கலாம்.

புது சிம்பிள் அல்ட்ரா எலெக்ட்ரிக் ஸ்கூட்டரின் சிறப்பம்சங்கள்

சிம்பிள் எனர்ஜி (Simple Energy), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் (Start-up) நிறுவனம். சிம்பிள் ஒன் என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) மூலமாக மார்க்கெட்டில் கவனத்தை பெற்ற சிம்பிள் எனர்ஜி நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் புதியதாக 'அல்ட்ரா' (Ultra) என்கிற எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

ஏப்ரல் 23 ஓட்டு போடும் நாளில் விற்பனைக்கு வரும் 2 புதிய பைக்

புதிய 2026-27ஆம் நிதியாண்டின் முதல் மாதமான ஏப்ரல் முடியும் தருவாயில் உள்ள நிலையில், அடுத்த ஒரு வாரத்திற்குள் புதியதாக இரு மோட்டார்சைக்கிள்கள் இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளன. இதில் சுவாரஸ்யமான விஷயம் என்னவென்றால், இந்த இரு பைக்குகளும் சரியாக தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தலுக்கான வாக்குப்பதிவுகள் நடைபெறவுள்ள ஏப்ரல் 23ஆம் தேதி அறிமுகம் செய்யப்பட உள்ளன.
Advertisement

டிவிஎஸ் ஆலையில் உற்பத்தி செய்யப்படும் புது BMW பைக் இதுதான்!

பி.எம்.டபிள்யூ மோட்டார்ராட் (BMW Motorrad) நிறுவனம் அதன் எஃப்450 ஜிஎஸ் (F450 GS) மோட்டார்சைக்கிளுக்கான முன்பதிவுகளை இந்தியாவில் துவங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 23ஆம் தேதி, தமிழ்நாடு சட்ட பேரவை தேர்தல் வாக்குப்பதிவு நாளின் போது அதிகாரப்பூர்வமாக இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்னதாக தற்போது இந்த பிஎம்டபிள்யூ பைக்கிற்கான முன்பதிவுகள் இந்தியாவில் துவங்கப்பட்டுள்ளன.

மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டலாமா ?

மகப்பேறு காலங்களில் வாகனம் ஓட்டுவது என்பது அவர் அவர்களின் விருப்பம் சார்ந்தது. அதில் உள்ள ரிஸ்க்களை அவர்களால் சமாளிக்க முடியும் என்றால் அவர்கள் வாகனம் ஓட்டலாம். எனினும் அவர்களுக்கு பயணித்தின் போது பல்வேறு ஆபத்துக்கள் இருக்கிறது. மிகவும் தவிர்க்க முடியாத காரணத்தை தவிர மற்ற நேரங்களில் மகப்பேறு காலத்தில் பெண்கள் வாகனம் ஓட்டுவதை தவிர்க்கலாம்.

கொளுத்தும் வெயிலுக்கு இனிமையான கூலிங்கை தரும் 7 கார்கள்!

தமிழ்நாடு முழுக்க கோடை வெயில் (Summer Heat) கொளுத்துகிறது. இந்த சூழலில், காரில் ஏசி (Air Conditioner) வசதி இல்லை என்றால் காருக்குள் அமரவே முடியாது. ஏனெனில், கார்களின் உடலமைப்பானது உலோகங்களால் செய்யப்படுகிறது. இந்திய கோடைக்காலம் ஆனது சில இடங்களில் 45 டிகிரி செல்சியஸ் வரையில் கூட செல்லக்கூடியது என்பதால், இந்தியாவில் கார்களை விற்பனை செய்யும் கார் நிறுவனங்கள் தங்களது கார்களில் சிறந்த ஏசி வசதிகளை வழங்குவதில் நிபுணத்துவம் வாய்ந்தவைகளாக உள்ளன. அந்த வகையில் சிறந்த ஏசி மற்றும் க்ளைமேட் கண்ட்ரோல் (Climate Control) சிஸ்டத்துடன் குறைந்த விலையில் கிடைக்கும் கார்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

காரில் உள்ள ஹெட்லைட்கள் பற்றி தெரியாத பல விஷயங்கள்

பொதுவாக வாகனங்களில் பல்வேறு விதமான லைட்டுகள் பயன்படுத்துவார்கள். குறிப்பாக ஹெட்லைட், டெயில் லைட், சிக்னல் லைட், கார்களின் உட்புறத்தில் பொருத்தப்படும் லைட் என பல்வேறு இடங்களில் லைட்கள் பொருத்தப்படுகிறது.
இதில் ஒவ்வொரு காருக்கும் ஒவ்வொரு விதமாக ஹெட்லைட் பொருத்தப்படுகிறது. சில லைட்கள் பிரகாசமாகவும், சில லைட்கள் மங்களாகவும் எரியும்.

புது கார்களின் விலை ரூ.2.50 லட்சம் குறைய போகுது...

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் (Electric Vehicles) பயன்பாடு அதிகரிக்க வேண்டும் என மத்திய அரசும், மாநில அரசுகளும் விரும்புகின்றன. பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) வாகனங்களால் ஏற்படும் காற்று மாசுபாட்டை (Air Pollution) குறைக்க வேண்டும் என்பதுதான் இதற்கான முக்கிய காரணம்.