டெஸ்லாவின் இரண்டாவது ஷோரூமும் ரெடியாகிடுச்சு!

டெஸ்லா நிறுவனம் இந்தியாவில் தனது காலடி தடத்தை எடுத்து வைத்துள்ள நிலையில் மும்பையை தொடர்ந்து தனது இரண்டாவது ஷோரூமை டில்லியிலும் திறக்க முடிவு செய்துள்ளது. இதற்காக இடத்தையும் தேர்வு செய்துள்ளது. வரும் ஆகஸ்ட் 11ம் தேதி இந்த ஷோரூம் திறக்கப்படவுள்ளது. இது குறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹீரோ பைக் மார்க்கெட்டுக்கு வந்ததும் தெரியல, போனதும் தெரியல!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp), இந்தியாவின் முன்னணி 2-வீலர் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான 2-வீலர்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான நிறுவனமாக ஹீரோ மோட்டோகார்ப் விளங்குகிறது. இந்த அளவிற்கான உயரத்தை எட்ட ஹீரோ நிறுவனம் கடந்த காலங்களில் இருந்து பல தரமான 2-வீலர்களை மார்க்கெட்டில் அறிமுகம் செய்துள்ளது.

7 மாதத்தில் 1.17 லட்சம் பேர் இந்த காரை வாங்கிட்டாங்க!

2025ம் ஆண்டு துவங்கிய பிறகு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான காராக ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இருக்கிறது. இந்த கார் கடந்த 7 மாதத்தில் அதிகமாக விற்பனையாகியுள்ளது. இவ்வளவு அதிகமாக விற்பனையாகும் அளவிற்கு இந்த காரில் என்ன இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரூ10 லட்சம் பட்ஜெட்டில் இவ்வளவு சூப்பரான காரெல்லாம் விக்குதா

இந்தியாவில் உள்ள மக்கள் கார் வாங்கும் போது விலை குறித்து அதிகம் யோசிப்பார்கள். குறைவான விலையில் அதிக அம்சங்கள் மற்றும் கொடுக்கும் காசுக்கு சரியான தேர்வு செய்ய நினைப்பார்கள். இந்நிலையில் பெரும்பாலான மக்கள் ரூ10 லட்சத்திற்கு குறைவான விலையில் காரை வாங்க நினைக்கிறார்கள். அதன்படி இந்த ஆகஸ்ட் மாதம் ரூ10 லட்சத்திற்கும் குறைவான பட்ஜெட்டில் விற்பனையாகும் டாப் 5 கார்களை பற்றி காணலாம்.
Advertisement

குறிப்பா தூத்துக்குடியை தேர்வு செய்ததற்கு காரணம் என்ன?

வின்ஃபாஸ்ட் (Vinfast) நிறுவனம் மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இந்தியாவில் அதன் தொழிற்சாலையை திறந்துள்ளது. வியட்நாமில் மிக பெரும் ஆட்டோமொபைல் நிறுவனமாக விளங்கும் வின்ஃபாஸ்ட், வியட்நாம் நாட்டிற்கு வெளியே திறந்துள்ள முதல் தொழிற்சாலை இந்தியாவில் ஆகும். அதுவும், நம் தமிழ்நாட்டில் தூத்துக்குடியில் ஆகும்.

34 கிமீ மைலேஜ்! வெறும் 5 லட்ச ரூபா ரேஞ்சுல புது கார்!

இந்திய சந்தையில் கடந்த 1999ம் ஆண்டில் இருந்து விற்பனையில் இருந்து வரும் ஒரு கார் மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கிட்டத்தட்ட 25 ஆண்டுகள் ஆன பின்னரும் கூட தற்போதும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை ஒவ்வொரு மாதமும் சிறப்பாக இருந்து வருகிறது.

மாசம் ரூ75,000 டிரைவர் வேலை பார்த்தே சம்பாதிக்கலாமா?

மக்கள் பலர் வேலை தேடி வரும் நிலையில் பலர் ஓலா - உபேர் மூலம் வாகன ஒட்டிகளாக மாறி வருமானம் சம்பாதித்து வருகின்னர். இந்நிலையில் பலருக்கு ஓலா உபேர் போன்ற டாக்ஸி நிறுவனங்களில் எப்படி வேலைக்கு சேருவது? இதன் மூலம் எவ்வளவு சம்பாதிக்க முடியும்? எப்படி பணி செய்ய வேண்டும் என்ற கேள்வி பலருக்கு இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்பீரமான எலக்ட்ரிக் காரின் டெலிவிரிகளை துவங்கிய டாடா!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். ஏற்கனவே விற்பனையில் இருக்கும் டாடா ஹாரியர் காரின் எலக்ட்ரிக் வெர்சனாக ஹாரியர் இவி அறிமுகம் செய்யப்பட்டது.

வெளிநாட்டுகளை கம்பெனிகளை வளைச்சு போடும் தமிழ்நாடு!!

வின்ஃபாஸ்ட் (Vinfast), வியட்நாம் நாட்டை சேர்ந்த முன்னணி கார் நிறுவனம். குறிப்பாக, தாயக நாடான வியட்நாமில் பெரிய அளவிலான நெட்வொர்க்கை வின்ஃபாஸ்ட் கொண்டுள்ளது. 2-வீலர்களில் இருந்து விலையுயர்ந்த கார்கள் வரையில் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படுவதால், அதற்கேற்ப நன்கு பிரம்மாண்டமான தொழிற்சாலை இந்த நிறுவனத்திற்கு சொந்தமாக வியட்நாமில் செயல்படுகிறது. இத்தகைய ஆட்டோமொபைல் நிறுவனம் இந்தியாவிற்கு வருகிறது என்றவுடனே பலரது கவனம் வின்ஃபாஸ்ட் மீது விழுந்தது.

தமிழ்நாட்ல இப்படி ஒரு அம்மாவா!

அம்மாக்களுக்கு தங்கள் குழந்தைகள்தான் உலகம். எனவே தங்கள் குழந்தைகளின் கனவுகளை நிறைவேற்றுவதற்காக அவர்கள் மிக கடுமையாக உழைக்கின்றனர். எனினும் குழந்தைகள் எவ்வளவுதான் அடம்பிடித்தாலும், செயல்திறன் மிக்க பைக்குகளை வாங்கி தருவதற்கு, ஒரு சில அம்மாக்கள் தயக்கம் காட்டுகின்றனர். விபத்தில் சிக்க நேரிடுமோ? என்ற அச்சமே இதற்கு காரணமாக உள்ளது.

சென்னைக்கு மாடி பஸ் எல்லாம் வரப்போகுதாம்!

சென்னையில் மீண்டும் டபுள் டக்கர் பஸ்களை இயக்கத்திற்கு கொண்டு வர சென்னை பெருநகர கார்பரேஷன் திட்டமிட்டுள்ளது. இந்த பஸ்கள் கடந்த 2008ஆண்டு வரை பயன்பாட்டில் இருந்து பின்னர் நிறுத்தப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பஸ்களை பயன்பாட்டிற்கு கொண்டு வர முடிவு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

உடற்பயிற்சியாளர் ஆக துவங்கிய பயணம்... இப்போ லேண்ட் ரோவரில்!!

லேண்ட் ரோவர் (Land Rover) நிறுவனத்தின் டிஃபெண்டர் (Defender) கார்கள் உலகளவில் பிரபலமானவை ஆக உள்ளன. கம்பீரமான தோற்றம், பவர்ஃபுல்லான என்ஜின் உடன் பலரது கனவாக டிஃபெண்டர் கார்கள் உள்ளன. இதனாலேயே, சினிமா நட்சத்திரங்கள் மற்றும் அரசியல்வாதிகள் கொஞ்சம் அதிக பணம் சேர்ந்த உடனே டிஃபெண்டர் காரை வாங்கி விடுகின்றனர்.
Advertisement

டாடாவ ஒழிச்சரணும்னு கங்கணம் கட்டியிருக்காங்க!

இந்திய சந்தையில் மிகவும் வேகமாக வளர்ந்து வரும் கார் நிறுவனங்களில் ஒன்றாக ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) இருந்து வருகிறது. இந்த நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூலை மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது.

தூத்துக்குடியில் தயாராகும் மேட் இன் தமிழ்நாட்டு இவி கார்கள்!

வியட்நாம் நாட்டைச் சேர்ந்த நிறுவனம் வின்ஃபாஸ்ட், இந்நிறுவனம் இந்தியாவில் ஆலை அமைத்து வாகனங்களை தயாரிக்க முடிவு செய்த நிலையில் தூத்துக்குடியில் தன் ஆலையை கட்டமைத்து வாகன தயாரிப்பை துவங்கவுளளது. இந்த ஆலையை தமிழக முதல்வர் ஸ்டாலின் துவக்கி வைத்துள்ளார். இந்த ஆலையில் என்னென் செயல்பாடுகள் நடக்கிறது? இங்கு தயாரிக்கப்படும் கார்கள் மற்றும் இந்த ஆலையின் செயல்பாடு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

காஸ்ட்லீயான ஜீப் காரில் கொஞ்ச நஞ்ச ஆட்டமா போட்டாங்க!!

கார்களில் சன்ரூஃப் (Sunroof) வழங்கப்படுவது என்பது ஒரு காலத்தில் ஆடம்பர விஷயமாக இருந்த நிலையில், சமீப காலத்தில் அது அத்தியாவசியமானதாக மாறி உள்ளது. இன்றைய காலத்தில் கார் வாங்குபவர்கள் தாங்கள் வாங்கும் காரில் சன்ரூஃப் இருக்கிறதா என்பதைதான் முக்கியமாக பார்க்க ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே, கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் தாங்கள் விற்பனை செய்யும் அனைத்து கார்களிலும் சன்ரூஃப் வசதியை வழங்க முயற்சிக்கின்றன.

செப் 2ல் ஹோண்டா எலெக்ட்ரிக் பைக் வெளியீடு!

ஹோண்டா நிறுவனம் விரைவில் புதிய எலெக்ட்ரிக் பைக்கை தயாரிக்க திட்டமிட்டுள்ளது. இந்த பைக் 500 சிசி பைக் போல செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் விரைவில் இந்த பைக்கை வெளியிட திட்டமிட்டுள்ளது. வரும் செப் 2ம் தேதி இந்த பைக் வெளியிடப்படுகிறது. இந்த பைக் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கம்மி ரேட்ல ஹார்லி டேவிட்சன் பைக்குகள் வரப்போகுது!

ஹார்லி டேவிட்சன் நிறுவனம் குறைந்த விலையில் என்ட்ரி லெவல் பைக்காக "ஸ்பிரின்ட்" என்ற பைக்கை அறிமுகப்படுத்த திட்டமிட்டு வருகிறது. இந்த பைக் இந்தாண்டு இறுதிக்குள் வெளியிடப்பட்டு அடுத்தாண்டு விற்பனைக்காக அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

10 லட்ச ரூபாயில் இவ்வளவு பெரிய காரை கொண்டுவந்ததன் பலன்!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் சமீப கால வளர்ச்சி கவனிக்கத்தக்க அளவில் உள்ளது. குறிப்பாக, இந்தியாவின் ஜே.எஸ்.டபிள்யூ நிறுவனமும், எம்ஜி மோட்டார் நிறுவனமும் இணைந்த பின்பே இந்த துரிதமான முன்னேற்றம் கை கூடியுள்ளது என சொல்ல வேண்டும். இதனை வெளிக்காட்டும் வகையில் கடந்த 2025 ஜூலை மாதத்தில் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை எம்ஜி பதிவு செய்துள்ளது. அதனை எம்ஜி நிறுவனமே புள்ளி விபரங்கள் உடன் அறிக்கையாக வெளியிட்டுள்ளது.

1 லட்ச ரூபா ரேஞ்சுல ராயல் என்பீல்டு பைக்கா!

இந்தியா உள்பட உலகின் பல்வேறு நாடுகளிலும் ராயல் என்பீல்டு பைக்குகளுக்கு (Royal Enfield Bikes) மிகப்பெரிய ரசிகர்கள் பட்டாளம் உள்ளது. இதன் காரணமாக ராயல் என்பீல்டு நிறுவனம் ஒவ்வொரு மாதமும் மிகவும் பிரம்மாண்டமான விற்பனை எண்ணிக்கையை தொடர்ச்சியாக பதிவு செய்து வருகிறது.

தந்தையை சர்பிரைஸ் பண்ண குடும்பத்தின் முதல் காரை வாங்கிய மகன்

குடும்பத்தில் முதல் கார் வாங்குவது எப்போதுமே ஸ்பெஷலான ஒன்றாகும். இன்றைய கால உலகில் கார்கள் மிகவும் அத்தியாவசியமானதாக மாறி உள்ளதால், வீட்டிற்கு ஒரு கார் தேவை என்பது கட்டாயமாகி வருகிறது. அதுவும், குடும்பத்தின் அடுத்த தலைமுறை வாரிசு குடும்பத்தின் முதல் காரை வாங்குகிறார் என்றால் அது உணர்ச்சி மிகுந்த விஷயமாகும்.
Advertisement

நாடே எதிர்பார்த்த காரின் டெலிவரியை துவங்கிய மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் பிஇ6 மற்றும் எக்ஸ்இவி 9இ ஆகிய கார்களின் பேக் 2 வேரியன்ட்களில் டெலிவரி துவங்கியுள்ளது. ஏற்கனவே இந்த காரின் பேக் 3 வேரியன்ட் ஏற்கனவே டெலிவரி செய்யப்படும் நிலையில் தற்போது பேக் 2 வேரியன்டின் டெலிவரி துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

31 நாளில் 1.13 லட்சம் பேர் இந்த கம்பெனி வண்டிய வாங்கிட்டாங்க

சுஸூகி மோட்டார் சைக்கிள் நிறுவனம் கடந்த ஜூலை மாதம் அதிக எண்ணிக்கையிலான டூவீலர்களை விற்பனை செய்து கம்பேக் குடுத்துள்ளது. இந்நிறுவனம் கடந்த 31 நாளில் 1.13 லட்சம் டூவீலர்களை விற்பவனை செய்துள்ளது. ரோட்டுல இந்த கம்பெனி வண்டி ஓடுவது போலவே தெரியவில்லை ஆனால் இவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்பது ஆச்சரியமாக இருக்கிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த கார் மறுபடியும் வரப்போகுதா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). முன்பு இந்த காரில் குரோ எடிசன் (Kuro Edition) என்ற ஸ்பெஷல் எடிசன் மாடல் ஒன்று விற்பனை செய்யப்பட்டு வந்தது. எனினும் நிஸான் மேக்னைட் காரின் குரோ எடிசன் தற்போது விற்பனையில் இல்லை.

உள்ளே இருந்தவர் யார்னு தெரிஞ்சதுக்கு அப்புறம்தான் பெரிய ஷாக்

மாருதி ஆல்டோ (Maruti Alto) காருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு ஒரு காலத்தில் இந்தியா முழுவதும் பிரபலமாக இருந்த கார், மாருதி ஆல்டோ ஆகும். குறிப்பாக, மிடில்-கிளாஸ் மக்களின் கார் கனவை நிஜமாக்கிய கார் மாருதி ஆல்டோ ஆகும். ஆரம்பத்தில் மாருதி 800 என்கிற பெயரில் அழைக்கப்பட்டு வந்த மாருதி ஆல்டோ கார் ஆனது இப்போதும் மாருதி சுஸுகி ஆல்டோ கே10 என்கிற பெயரில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அமெரிக்காவுக்கு இணையாக இந்தியாவை மாற்றும் டெஸ்லா!

எலக்ட்ரிக் வாகனங்களை பயன்படுத்துவதில் உள்ள பிரச்சனைகளுள் ஒன்று, அவற்றை விரைவாக சார்ஜ் செய்வதற்கான ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) வசதிகள் நாடு முழுவதும் பரவலாக இல்லாதது ஆகும். ஃபாஸ்ட் சார்ஜிங் வசதிகளை கொண்டுவர ஆட்டோமொபைல் நிறுவனங்கள் உள்பட சில தனியார் நிறுவனங்களும் முயற்சிகளை மேற்கொண்டு வருகின்றன.