22 வயசுல இந்த காரா!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் ஆரம்ப நிலை எஸ்யூவி (Entry-level SUV) ரக கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ எக்ஸ்1 (BMW X1). தற்போதைய நிலையில் மொத்தம் 2 வேரியண்ட்களில் (Variants) பிஎம்டபிள்யூ எக்ஸ்1 கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

எஸ்யூவி காரை விட அதிக விலையில் அறிமுகமான பைக்!

ஹோண்டா நிறுவனம் தனது கோல்டு விங் டூர் 50வது அனிவர்சரி எடிசன் பைக்கிற்கான புக்கிங்கை இன்று துவங்கியுள்ளது. இந்த பைக்கின் டெலிவரி அடுத்த மாதம் துவங்கும் என தெரிவிதக்கப்பட்டுள்ளது. இந்த பைக்கின் விலை இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி காரின் விலையை விட காஸ்ட்லியாக இருக்கிறது. அவ்வளவு விலை கொடுத்து வாங்கும் அளவிற்கு இந்த பைக்கில் என்ன அம்சம் இருக்கிறது? இதன் விலை என்ன? எப்படி புக் செய்வது என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெற்றோர் மனசை குளிர வெச்ச இந்திய கிரிக்கெட் வீரர்!!

அர்ஷ்தீப் சிங் (Arshdeep Singh), இந்திய கிரிக்கெட் வேகப்பந்து பந்து வீச்சாளர். சமீப காலமாக சர்வதேச போட்டிகளில் இந்திய அணிக்காக விளையாடும் அளவிற்கு சர்வதேச கிரிக்கெட் பந்து வீச்சாளராக உருவெடுத்து இருப்பவர். மத்திய பிரதேசம் மாநிலத்தை சேர்ந்தவரான அர்ஷ்தீப் சிங், நடைபெற்றுவரும் ஐபிஎல் 2025 தொடரில் பஞ்சாப் கிங்ஸ் (Punjab Kings) அணிக்காக விளையாடி வருகிறார். மே 29ஆம் தேதி நடைபெற்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (Royal Challengers Bengaluru) அணிக்கு எதிரான குவாலிஃபையர்-1 போட்டியில் கூட பஞ்சாப் கிங்க்ஸ் அணிக்காக பந்து வீசினார்.

ஜூலைக்கு பிறகு எலெக்ட்ரிக் வாகன விலை எக்குதப்பா ஏறப்போகுது?

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை சமீப நாட்களாக அதிகரித்து வருகிறது. இதனால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எலெக்ட்ரிக் வாகனங்களை அதிகம் தயாரிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் சீனா எடுத்துள்ள புதிய முடிவால் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை பெரும் அளவிற்கு பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. சீனா எடுத்த முடிவு என்ன? இது எப்படி இவி வாகன துறையை பாதிக்கிறது? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்தியாவுக்கே பிடிச்ச ஹோண்டா பைக் இனி கிடைக்காதா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் ஹோண்டா பைக்குகள் (Honda Bikes) மிகுந்த நம்பகத்தன்மையை பெற்றுள்ளன. இதில், ஹோண்டா சிடி 110 ட்ரீம் (Honda CD 110 Dream) பைக் மிகவும் முக்கியமானது. இது கடந்த 2014ம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

சென்னை டூ வேலூர் சிங்கிள் சார்ஜ்ல போகலாம்!

ஹோண்டா நிறுவனம் தனது முதல் எலெக்ட்ரிக் பைக்கை சீனாவில் தற்போது அறிமுகமாகியுள்ளது. இந்த கார் இ-விஓ என பெயர் வைத்துள்ளது. இந்த பைக்கை ஹோண்டா நிறுவனம் சீனாவில் உள்ள குவாங்சூ என்ற நிறுவனத்துடன் இணைந்து வூவாங்- ஹோண்டா என்ற நிறுவனத்தின் பெயரில் வெளியிட்டுள்ளது. இது மக்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பில் இருந்த பைக் ஆகும். இது குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

சுஸுகி இ-ஆக்ஸஸ் இ-ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

சுஸுகி மோட்டார்சைக்கிள்ஸ் (Suzuki Motorcycles) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் இ-ஆக்ஸஸ் (e-Access) என்கிற எலக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்டு இருந்த சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டர் கண்காட்சியில் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்து இழுத்தது. இத்தகைய, மார்க்கெட்டில் இன்னும் அறிமுகம் செய்யப்படாத எலக்ட்ரிக் ஸ்கூட்டரை நாங்கள் பெங்களூரு சாலைகளில் ஓட்டி பார்த்து டெஸ்ட் ரைடு (Test Ride) செய்தோம். அப்போது ஸ்கூட்டரை பற்றி எங்களுக்கு கிடைக்கப்பெற்ற அனுபவங்களை ரிவியூவாக இங்கே வழங்கியுள்ளோம்.

இப்ப புக் பண்ணா அடுத்த வருஷம் தான் வாங்க முடியும்!

மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 700 எஸ்யூவி கார்களுக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்த காருக்கு அதிகமான டிமாண்ட் இருக்கிறது. 3எக்ஸ்ஓ கார் சமீபத்தில் தான் 1 லட்சம் என்ற மைலே கல்லை எட்டி பிடித்தது. அதுவே எக்ஸ்யூவி 700 கார் 2.5 லட்சம் என்ற மைல் கல்லை எட்டி பிடித்தது. இந்நிலையில் தொடர்ந்து இந்த கார்களுக்கு அதிக டிமாண்ட் இருப்பதால் இதற்கான காத்திருப்பு காலம் நீடித்துள்ளது. இது குிறத்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

இந்த மாநிலத்தில் சாலையில் கூட உசுருக்கு உத்தரவாதம் இல்ல!!

இந்தியாவில் சாலை விபத்துகளுக்கு பஞ்சமே இல்லை. தினந்தோறும் சர்வ சாதாரணமாக ஆயிரக்கணக்கிலான சாலை விபத்துகள் நாடு முழுவதும் ஆங்காங்கே நடக்கின்றன. தினமும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு சாலை விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இதற்கு முக்கிய காரணம், நம்மில் பலரிடத்தில் சாலை விபத்து குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாதது ஆகும். அதேபோல், சாலைகளின் தரமும் இதில் முக்கிய பங்கு வகிக்கின்றன. இதனால்தான், இந்தியாவிலேயே அதிக சாலை விபத்துகள் நடைபெறும் மாநிலமாக மோசமான சாலைகளை கொண்ட வட இந்திய மாநிலம் ஒன்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இவி விற்பனையில் முதலிடம் பிடித்த மாநிலம் இது தான்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனை மிக வேகமாக அதிகரித்து வருகிறது. பல மாநிலங்களில் மக்கள் அதிக அளவில் அளவில் எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கி குவித்து வருகின்றனர். இதன்படி ஒவ்வொரு மாநிலங்களிலும் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற தகவல் வெளியாகியுள்ளது. இந்த பட்டியலில் முதலிடம் பிடித்த மாநிலம் எது? எவ்வளவு வாகனங்கள் விற்பனையாகியுள்ளது என்ற விபரத்தை காணலாம் வாருங்கள்.

கொஞ்சம் மிஸ் ஆகியிருந்தால் நேரா பழைய இரும்பு கடைக்கு தான்!

மஹிந்திரா தார் (Mahindra Thar), இந்தியாவில் அதிக பேரால் வாங்கப்படும் ஆஃப்-ரோடு எஸ்யூவி வாகனம். கரடு முரடான பாதையிலும், ஏற்ற இறக்கமான மலைப்பாதைகளிலும் வாகனம் ஓட்ட விரும்புபவர்கள் முதலாவதாக வாங்குவது மஹிந்திரா தார் வாகனத்தை ஆகும். குறிப்பாக, மலைப்பிரதேச மாநிலங்களான கேரளா (Kerala) போன்றவற்றில் தார் வாகனங்களை அதிகமாக பயன்படுத்துகின்றனர். அவ்வாறு கேரளாவில் பயன்படுத்தப்படும் தார் வாகனம் ஒன்று சாலையில் மார்பளவு தேங்கி கிடந்த மழைநீரில் அசால்ட்டாக சென்றுள்ளது. இதுதொடர்பான வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி பலரது கவனத்தை ஈர்த்துள்ளது. அதனை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

90 கிமீ மைலேஜ் தரும் ஸ்கூட்டரின் விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஸ்கூட்டர்களில் ஒன்று டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter). நடப்பு 2025ம் ஆண்டு ஏப்ரல் மாதம் டிவிஎஸ் ஜூபிடர் விற்பனையில் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்துள்ளது. டிவிஎஸ் ஜூபிடர் ஸ்கூட்டரின் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலம் இது தெரிய வந்துள்ளது.
Advertisement

கமுக்கமா சென்னைக்கு அருகே உருவாக்கப்படும் எலக்ட்ரிக் கார்!!

எலக்ட்ரிக் கார்களுக்கு (Electric Cars) இந்தியா உள்பட உலகம் முழுவதுமே நல்ல தேவை உருவாகி வருகிறது. பெட்ரோல், டீசல் கார்களுக்கு பதிலாக எலக்ட்ரிக் காரை வாங்க மக்கள் நிறைய பேர் விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனாலேயே கார் நிறுவனங்களும் முடிந்தவரையில் புதியதாக எலக்ட்ரிக் கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்ய முயற்சிக்கின்றன. அதுவும், குறைந்த விலையிலான எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்யவே கார் கம்பெனிகள் விரும்புகின்றன. ஏனெனில், இந்தியாவில் விலை குறைவான கார்களுக்கே பெரிய அளவிலான மார்க்கெட் உள்ளது.

27 கிமீ மைலேஜ் தரும் விலை குறைவான கார் வருது!

இந்திய சந்தையில் டாடா பன்ச் (Tata Punch) கார் கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த பன்ச் கார் விற்பனைக்கு வந்த பின்னர் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் ரேஞ்ச் எங்கயோ சென்று விட்டது.

டொயோட்டா ரூமியன் vs கியா கேரன்ஸ் கிளாவிஸ்!!

டொயோட்டா (Toyota) நிறுவனத்தில் இருந்து சில வருடங்களுக்கு முன் அறிமுகம் செய்யப்பட்ட லேட்டஸ்ட் கார், ரூமியன் (Rumion) ஆகும். இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் நம்பர் ஒன் எம்பிவி (MPV) ரக காரான மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga) அடிப்படையில் உருவாக்கப்பட்ட டொயோட்டா கார் தான், ரூமியன் ஆகும். ஜப்பானிய கார் நிறுவனங்களான சுஸுகியும், டொயோட்டாவும் கூட்டணியில் இருப்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். எர்டிகாவில் வழங்கப்படும் நிறைய அம்சங்கள் டொயோட்டா ரூமியனிலும் வழங்கப்படுகின்றன. இருப்பினும், தோற்றத்தில் இரண்டிற்கும் இடையே சில வித்தியாசங்கள் உள்ளன.

கம்மி விலையில இப்படி ஒரு ஸ்கூட்டரா?

டிவிஎஸ் மோட்டார் நிறுவனம் தனது ஜூபிடர் 125 DT SXC ஸ்கூட்டரை தற்போது வெளியிட்டுள்ளது.இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனம் விற்பனைக்காக அறிமுகமாகியுள்ளது. அதுவும் குறைந்த விலையில் அறிமுகமாகியுள்ளதால் இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் விற்பனையை அதிகரிக்கும் என எதிர்பார்க்கலாம். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

மூனரை கோடி ரூபா கார்ல வந்த இந்த நடிகர் தமிழ் நடிகையின் மகனா!

சினிமாவில் ஒரு சில அறிமுக காட்சிகள் ரசிகர்கள் மனதில் என்றென்றும் நிலைத்திருக்கும். அப்படி ஒரு காட்சியை அனிமல் (Animal) திரைப்படம் கொண்டுள்ளது. கடந்த 2023ம் ஆண்டு வெளியான அனிமல் திரைப்படத்தில் பாபி தியோலின் (Bobby Deol) அறிமுக காட்சிக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது.

நானோவை விஞ்சும் குட்டி கார் இது!

பெரிய சிட்டிக்குள் பயணிப்பதில் இருக்கும் மிகப்பெரிய சவால் நெருக்கடி மிகுந்த சாலைகளில் பயணிப்பது தான். இந்தியாவில் உள்ள பெரு நகரங்களில் சாலை நெருக்கடிகள் அதிகமாவிட்டது. இந்தியா மட்டுமல்லாமல் வெளிநாடுகளிலும் இதே நிலை தான். இதில் பெரிய காரை ஓட்டி செல்வது சவாலான விஷயம். சிட்டிக்கும் அதிகம் பயணிப்பவர்கள் தற்போது சிறிய ரக கார்களைதான் தேர்வு செய்கிறார்கள். இந்தியாவில் 4 பேர் பயணிக்கும் சிறிய கார்கள் தான் அதிகம் விற்பனையாகிறது.

ஒருவழியா 72 வயதில் ஃபெராரி காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்!!

ஃபெர்ராரி (Ferrari) கார்களை உலகளவில் பலர் வாங்கி பார்த்திருக்கிறோம். பெரும் செல்வந்தர்களில் இருந்து, சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் பிரமுகர்கள் என பலர் விரும்பி வாங்கும் கார்களாக ஃபெராரி கார்கள் விளங்குகின்றன. இந்த நிலையில், இங்கு ஒரு முதியவர் ஒருவர் விலையுயர்ந்த ஃபெராரி காரை தற்போது வாங்கியுள்ளார். இந்தியாவிலேயே ஃபெராரி காரை வாங்கிய வயதானவர் என அழைக்கப்படும் இந்த முதியவரை பற்றியும், அவர் வாங்கியுள்ள ஃபெராரி கார்களை பற்றியும் தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்தியாவிலேயே தயாராகும் அடுத்த 2 இவி களத்திற்கு வரப்போகுது!

ஹூண்டாய் நிறுவனம் ஏற்கனவே இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனை செய்ய துவங்கிவிட்டது. இந்நிலையில் ஹூண்டாய் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா நிறுவனமும் தற்போது எலெக்ட்ரிக் கார்களை உருவாக்கும் முயற்சியில் இறங்கியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இந்த எலெக்ட்ரிக் கார்களை தயாரித்து விற்பனைக்கு கொண்டு வருகிறது.இந்நிறுவம் முதற்கட்டமாக 2 எலெக்ட்ரிக் கார்களை இந்தியாவில் தயாரிக்க முடிவு செய்துள்ளது.
Advertisement

இந்த காரில் சிஎன்ஜி வேரியன்ட் வந்தாச்சு!

நிஸான் நிறுவனம் தனது மேக்னைட் காரின் சிஎன்ஜி ரெட்ரோஃபிட்மென்ட் காரை அந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ75 ஆயிரம் கூடுதல் விலையில் சாதாரண பெட்ரோல் மேக்னைட் காரை சிஎன்ஜி காராக மற்ற முடியும் என அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த ரெட்ரோஃபிட்மென்ட் எங்கு நடத்தப்படுகிறது. இதை செய்வது எப்படி . இ்நத தொழிற்நுட்பம் எப்படி வேலை செய்கிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

23 வயசு நடிகையிடம் இப்போவே இத்தனை கார்களா!!

அவ்னீத் கவுர் (Avneet Kaur), இந்தி தொலைக்காட்சி மற்றும் திரைப்படங்களில் நடித்துவரும் 23 வயதான இளம் நடிகை. கடந்த சில நாட்களாக அவ்னீத் கவுரின் பெயரின் அடிக்கடி செய்திகளில் இடம்பெற்று வருகிறது. குறிப்பாக, சர்ச்சையான செய்திகளிலும், காதல் வதந்திகளிலும் இவரது பெயர் அதிகம் இடம்பெறுகிறது. பிரபல இந்திய கிரிக்கெட் வீரர் சுப்மன் கில் உடன் இணைத்து வைத்து பேசப்படும் நடிகை அவ்னீத் கவுர் சில தினங்களுக்கு முன்பு மற்றொரு பிரபல கிரிக்கெட் வீரர் விராட் கோலியால் சமூக வலைத்தளங்களில் கவனத்தை பெற்றார்.

இந்த ஸ்கூட்டர்களுக்கு எங்கிருந்து கஸ்டமர்ஸ் வராங்கனே தெரியல!

உலகில் அதிக எண்ணிக்கையில் ஸ்கூட்டர்கள் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியாவும் ஒன்றாகும். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான ஸ்கூட்டர்கள் நம் நாட்டில் விற்பனை செய்யப்படுகின்றன. இது கடந்த ஏப்ரல் மாதத்திலும் தொடர்ந்துள்ளது. கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் இந்தியாவில் 2 ஸ்கூட்டர்கள் சுமார் 1 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அந்த இரு ஸ்கூட்டர்கள் என்னென்ன என்பதையும், அவற்றின் விற்பனை எண்ணிக்கைகளை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

இந்த ஒரு கார் மட்டும் இல்லேனா கம்பெனியை மூட வேண்டியதுதான்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி ரக கார்களில் ஒன்று நிஸான் மேக்னைட் (Nissan Magnite). இந்த காரில் நிஸான் நிறுவனம் தற்போது 'சிஎன்ஜி கிட்' (CNG Kit) ஆப்ஷனை அறிமுகம் செய்துள்ளது. இந்த நேரத்தில் மற்றொரு முக்கியமான அறிவிப்பு ஒன்றையும் நிஸான் நிறுவனம் வெளியிட்டுள்ளது.
Advertisement

டாடா கார் எந்த அளவுக்கு பாதுகாப்பானதுனு இப்போ தெரிந்துவிடும்

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து புதியதாக அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரை ஓட்டி பார்த்து சமீபத்தில்தான் எங்களது விரிவான ரிவியூவை வழங்கி இருந்தோம். காரின் தோற்றம் மற்றும் தொழிற்நுட்ப அம்சங்களை பற்றி விரிவாக நமது செய்தித்தளத்தில் பார்த்திருந்தோம். இந்த நிலையில், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் டாடா மோட்டார்ஸ் தொழிற்சாலைக்குள் மோத செய்து சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுதொடர்பான வீடியோவை டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது அதிகாரப்பூர்வ யூடியூப் (Youtube) சேனலில் வெளியிட்டுள்ளது.