2030க்குள் மொத்த இந்தியாவும் மாருதி சுஸுகியால் மாற போகுது!!
ஆட்டோமொபைல்
- 3 month, 9 days ago
இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன், இந்த பத்தாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. மின்சார வாகனங்கள் மீதான நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஹிரோஷி டேகுச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,100 நகரங்களில் 2,000 பிரத்யேக சார்ஜிங் நிலையங்களை மாருதி சுஸுகி அமைத்துள்ளது.