தமிழ்நாட்டில் மீண்டும் கோடிகளை கொட்டும் வின்ஃபாஸ்ட் கம்பெனி!

வியட்நாம் நாட்டின் எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்ஃபாஸ்ட் (VinFast), தமிழ்நாட்டில் தனது உற்பத்தி ஆலையை விரிவாக்கம் செய்ய 500 மில்லியன் அமெரிக்க டாலர்களை முதலீடு செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது. இந்திய ரூபாயில் தற்சமயம் இதன் மதிப்பு ரூ.4,491 கோடி ஆகும். இந்த விரிவாக்கத்தின் மூலம் வின்ஃபாஸ்ட் எலெக்ட்ரிக் பேருந்துகள் (Electric Buses) மற்றும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) தயாரிக்கப்படும்.

கிரெட்டாக்கு இப்பவே நடுக்கம் வந்திருக்கும்!

நிஸான் நிறுவனம் தனது என்ட்ரி லெவல் காம்பேக்ட் காராக புதிய கைட் என்ற காரை வெளியிட்டுள்ளது.இந்த கார் நிஸான் கிக்ஸ் காருக்கு போட்டியாக களம் இறங்குகிறது.இந்த கார் இந்தியாவிற்கு வருமா? கடும் போட்டிக்கு நடுவே இந்த காரும் வந்தால் விற்பனை அதிகரிக்குமா? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஊரே தூங்கினாலும் எம்ஜி கார் ஷோரூம் மட்டும் திறந்தே கிடக்கும்

ஜேஎஸ்டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா (JSW MG Motor India), வளர்ச்சி மற்றும் வாடிக்கையாளர் நம்பிக்கையின் வெற்றிகரமான ஆண்டாக 2025ஐ குறிக்கும் விதமாக, வருகிற டிசம்பர் 5 முதல் 7 வரை நாடு தழுவிய 'மிட்நைட் கார்னிவல்' (Midnight Carnival) என்கிற பிரச்சாரத்தை அறிவித்துள்ளது. இந்த மூன்று நாட்களும், அனைத்து எம்ஜி ஷோரூம்களும் நள்ளிரவு வரை திறந்திருக்கும்.

இனி இந்த பஸ்லயும் பெண்கள் இலவசமாக போகலாம்!

இந்தியாவின் பல்வேறு மாநிலங்களிலும், அரசு பஸ்கள் தற்போது நவீனமயமாக்கப்பட்டு வருகின்றன. தமிழ்நாட்டில் (Tamil Nadu) வெகு சமீபத்தில் வால்வோ சொகுசு பஸ்கள் (Volvo Buses) அறிமுகம் செய்யப்பட்டிருப்பதை இதற்கு ஒரு உதாரணமாக கூறலாம். குறிப்பாக பழைய டீசல் பஸ்களுக்கு பதிலாக, எலெக்ட்ரிக் பஸ்களை (Electric Buses) அறிமுகம் செய்வதில், மாநில அரசுகளின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள போக்குவரத்து கழகங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன.
Advertisement

ஏவுகணையே வந்தாலும் தாங்கும் புதின் கார் பற்றி தெரியுமா?

ரஷ்ய அதிபர் புதின் இந்தியாவிற்கு வருகிறார் இந்தியா ரஷ்யா இடையே வான வருடாந்திர மாநாட்டிற்காக இவர் இந்தியா வருகிறார். இவரை பிரதமர் மோடிநேரில் சந்தித்து பேசுகிறார். இந்நிலையில் இந்த சந்திப்பு சர்வதேச அளவில் முக்கியத்துவம் வாய்ந்ததாக மாறியுள்ளது. இந்த சந்திப்பிற்காக ரஷ்ய அதிபர் பயன்படுத்தும் கார் இந்தியாவிற்கு வந்துள்ளது. இந்த காரில் தான் அவர் இந்தியாவில் பயணிக்கிறார். இவரது கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜிஎஸ்டி குறைச்சது ஒரேயொரு மாசம் தான் வொர்க்-அவுட் ஆச்சு...!!

2025 நவம்பர் மாத இருசக்கர வாகன விற்பனை நிலவரப்படி, உள்நாட்டு சந்தையில் ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) முன்னிலை வகிக்க, பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) ஏற்றுமதியில் உச்சம் தொட்டுள்ளது. பண்டிகைக் காலத்திற்குப் பிந்தைய மாதமான நவம்பரில், இந்தியாவில் 2-வீலர்கள் விற்பனை 2024 நவம்பரை காட்டிலும் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்திருந்தாலும், முந்தைய அக்டோபர் மாதத்துடன் (MoM) ஒப்பிடும்போது சற்று குறைந்துள்ளது.

மொத்த இந்தியாவையும் மிரள விட போகும் தமிழ்நாடு!

வியட்நாம் (Vietnam) நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன (Electric Vehicles) நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). அமெரிக்காவின் (US) டெஸ்லா (Tesla) நிறுவனத்திற்கு போட்டியாக கருதப்படும் வின்ஃபாஸ்ட் நிறுவனத்தின் பிரம்மாண்டமான தொழிற்சாலை தமிழ்நாட்டின் (Tamil Nadu) தூத்துக்குடி (Thoothukudi) பகுதியில் அமைக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் தயாராகப்போகும் பிரம்மாண்ட கார்!

வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் டொயோட்டா இன்னோவா ஹைகிராஸ் காருக்க போட்டியாக ஒரு புதிய எலெக்ட்ரிக் காரை களம் இறக்க திட்டமிட்டுள்ளது.இந்த கார் அந்நிறுவனம் விஎஃப்6 மற்றும் விஎஃப் 7 காரை தொடர்ந்து 3வது காராக களம் இறங்க வாய்ப்புள்ளது. இதுகுறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

19 மணி நேரத்தில் 1030 கீ.மீ பயணம் !

ஹூண்டாய் நிறுவனத்தின் எக்ஸ்டர் காருக்கு மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு இருக்கிறது. இந்நிலையில்இந்த காரை வாங்கி பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர் ஒருவர் 19 மணி நேரத்தில் இ்நத காரில் 1030 கி.மீ பயணத்துள்ளார். இந்த அனுபவத்தை சமூகவலைத்தளங்களில் அவர் பகிர்ந்துள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரோட்டில் இயங்கும் மினி சொகுசு கப்பல்! விலை எவ்வளவு தெரியுமா?

லெக்ஸஸ் இந்தியா தனது RX வரிசையில் புதிய எக்ஸ்குவிசிட் (Exquisite) மாடலை அறிமுகப்படுத்தி, ஆடம்பர SUV பிரிவில் வாடிக்கையாளர்களுக்கு ஒரு எளிதான மற்றும் மலிவான புதிய தேர்வை வழங்கியுள்ளது. புதிய RX 350h எக்ஸ்குவிசிட் வேரியண்ட்டின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ. 89.99 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த மாடலுடன் கூடுதலாக, ரூ. 2.03 லட்சம் செலுத்தி 21-ஸ்பீக்கர் கொண்ட மார்க் லெவின்சன் (Mark Levinson) பிரீமியம் ஆடியோ சிஸ்டத்தை விருப்பத் தேர்வாகப் பெறலாம்.

10 லட்ச ரூபாயில் இப்படிப்பட்ட கார்களை கூட வாங்கலாமா!!

வாய்ஸ் கண்ட்ரோல் (Voice Control) மூலம் கண்ட்ரோல் செய்யக்கூடிய சன்ரூஃப் (Sunroof) என்பது எலெக்ட்ரிக்கில் செயல்படும் ஒரு அமைப்பாகும். கார் ஓட்டும் போது, வாய்ஸ் கண்ட்ரோல் மூலம் கைகளை பயன்படுத்தாமல் சன்ரூஃப்பை திறக்கவோ அல்லது மூடவோ முடியும். ரூ.10 லட்சத்திற்குட்பட்ட எக்ஸ்-ஷோரூம் விலையில், வாய்ஸ் கண்ட்ரோல் சன்ரூஃப் வசதி கொண்ட சிறந்த கார்களின் பட்டியல் இதோ...

பஜாஜ் கம்பெனியின் 2-வீலர்களை வாங்க ஆள் இல்லையா?

2025 நவம்பர் மாதத்தில், பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தின் வாகன விற்பனை கணிசமான வளர்ச்சியை பெற்றுள்ளது. வெளிநாட்டுச் சந்தைகளில் கிடைத்த வலுவான ஆதரவினாலும், குறிப்பாக வர்த்தக (Commercial) வாகனப் பிரிவில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க வளர்ச்சியினாலும் இந்த முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

102 கிமீ மைலேஜ்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று பஜாஜ் ஃப்ரீடம் (Bajaj Freedom). உலகின் முதல் சிஎன்ஜி பைக் (World's First CNG Bike) என்ற பெருமை இதற்கு உண்டு. கடந்த 2024ம் ஆண்டு ஜூலை மாதம்தான், பஜாஜ் ஃப்ரீடம் பைக், இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

குறுகிய காலத்தில் திறக்கப்பட்ட 15வது எம்ஜி செலக்ட் ஷோரூம்!!

இந்தியாவின் சொகுசு கார் சந்தையில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடிப்பதற்காக, ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் இந்தியா நிறுவனம், தனது "எம்ஜி செலக்ட்" (MG SELECT) சொகுசு சில்லறை விற்பனை ஷோரூம்களை விரிவுபடுத்துவதாக அறிவித்துள்ளது. தற்போது, இந்தியாவின் 14 முக்கிய நகரங்களில் 15 எம்ஜி செலக்ட் எக்ஸ்பீரியன்ஸ் ஷோரூம் மையங்களுடன், இந்த நிறுவனம் சொகுசு கார் வாங்குபவர்களுக்கு ஒரு மேம்பட்ட மற்றும் பிரத்யேக வாகன கொள்முதல் அனுபவத்தை வழங்கி வருகிறது.

மாருதியே நினைச்சாலும் முதல் இடத்தை விட முடியாது போல!

டிசம்பர் மாதம் துவங்கியுள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் தங்கள் கடந்த நவம் மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளனர். இதன்படி இந்தியாவில் கடந்த நவம்பர் மாதம் அதிக கார்களை விற்பனை செய்த டாப் 10 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த வரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த 5 விஷயத்துக்காகவே புதிய இ-விட்டாரா காரை வாங்கலாம்!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில், மாருதி சுஸுகி இ-விட்டாரா (Maruti Suzuki e-Vitara) எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார் சமீபத்தில் வெளியீடு செய்யப்பட்டது. சுஸுகி ஏற்கெனவே இந்தியாவில் உற்பத்தி செய்யப்படும் இ-விட்டாரா எஸ்யூவி கார்களை உலக சந்தைகளில் விற்பனை செய்து வந்தாலும், இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான மாருதி சுஸுகி, இந்தியாவில் இந்த காரை அறிமுகம் செய்வதற்கு தொடர்ந்து தாமதித்து வருகிறது.
Advertisement

சிதம்பர ரகசியத்தை வெளியிட போகும் டாடா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கார்களில் ஒன்று புதிய தலைமுறை டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி ரகத்தை சேர்ந்த இந்த காரை, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கடந்த ஒரு சில நாட்களுக்கு முன்பு விற்பனைக்கு அறிமுகம் செய்தது.

சென்னை டூ கொடைக்கானல் ஒரே சார்ஜ்ல போகலாம்!

மாருதி நிறுவனம் நேற்று தனது முதல் எலெக்ட்ரிக் காரான இ-விட்டாரா காரை நேற்று வெளியிட்டது. அறிமுகமாகும் என மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கிடையில் நேற்று வெளியீடு மட்டுமே செய்யப்ப்டடுள்ளது. விற்பனைக்கு விரைவில் அறிமுகமாகும் என எதிர்பார்க்கலாம். ஆனால் நேற்று வெளியீட்டின் போது இந்த காரின் ரேஞ்ச் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளது. அதன்படி இந்த கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் 543 கி.மீ பயணிக்கும் திறன் கொண்டதாக வடிவமைக்கப்பட்டுள்ளது.

எங்கிருந்து பார்த்தாலும் வெள்ளை கலரில் சியரா தனியா தெரியுது!

இந்திய ஆட்டோமொபைல் சந்தையில் பெரும் எதிர்பார்ப்புகளுடன் வெளியாகியுள்ள டாடா சியரா (Tata Sierra) காரின் ஆரம்ப விலையாக ரூ.11.49 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சியரா தனது பிரம்மாண்டமான தோற்றத்தால் அனைவரின் கவனத்தையும் ஈர்த்து, கார் உலகில் பேசுபொருளாக மாறியுள்ளது. பழம்பெரும் சியரா காரின் நினைவுகளை மீட்டெடுக்காவிட்டாலும், நவீன வடிவமைப்பில் வெளிவந்துள்ள புதிய சியரா கார் மிகவும் கவர்ச்சிகரமாக உள்ளது.

திருப்பதி கோயில் மீது விமானங்களால் பறக்க முடியாது!

உலகின் மற்ற பெரும்பாலான நாடுகளை போலவே, இந்தியாவிலும் ஒரு சில 'நோ-ஃப்ளையிங் ஜோன்கள்' (No-Flying Zones) உள்ளன. அதாவது 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் விமானங்கள், ஹெலிகாப்டர்களால் பறக்க முடியாது. அப்பகுதிகளில் அவற்றை இயக்குவதற்கு தடை விதிக்கப்பட்டிருக்கும். விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்கள் மட்டுமல்லாது, ட்ரோன்களை கூட, 'நோ-ஃப்ளையிங் ஜோன்' என வரையறுக்கப்பட்ட பகுதிகளில் இயக்க முடியாது.
Advertisement

கம்மி விலையில் இப்படி ஒரு இவி கார் வரப்போகுதா?

கியா நிறுவனம் இவி2 என்ற சிறிய ரக எலெக்ட்ரிக் காரை உருவாக்கி வருகிறது.இந்நிறுவனம் ஏற்கனவே இந்தாண்டு நடந்த கியா இவி தினம் என்ற நிகழ்வில் இந்த காரை காட்சிப்படுத்தியிருந்தது. இந்த காரை பல்வேறு இடங்களில் அந்நிறுவனம் சோதனை செய்து வந்தது.இந்நிலையில்இந்த காரை வரும் 2026 ஜனவரி மாதம் சர்வதேச அளவில் வெளியிட திட்டமிட்டுள்ளது.2026ம் ஆண்டு இந்த கார் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரே மாதத்தில் ஒரு லட்சத்திற்கும் அதிகமான சுஸுகி கஸ்டமர்ஸ்

சுசுகி மோட்டார்சைக்கிள் இந்தியா பிரைவேட் லிமிடெட் (SMIPL), 2025 நவம்பரில் தனது விற்பனையில் கணிசமான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. நிறுவனம் மொத்தம் 1,22,300 யூனிட்களை விற்பனை செய்துள்ளது, இது கடந்த ஆண்டு நவம்பரில் விற்பனையான 94,370 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 30% உயர்வாகும்.

நம்பர் 1 இடத்தில் டாடா! மாருதி லிஸ்ட்லயே இல்ல!

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாக இருக்கிறது. மக்கள் பலர் எலெக்ட்ரிக் கார்களை விரும்பி வாங்கி வருகின்றனர். பல முன்னணி வாகன தயாரிப்பு நிறுவனங்கள் கூட எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்க துவங்கிவிட்டனர். இந்நிலையில் கடந்த நவம்பர் மாதம் எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்துள்ளனர் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள். இது வாகன் தளத்திலிருந்துபெறப்பட்ட தகவல் ஆகும்.

காரில் மைலேஜை அதிக பெறனும்னா இந்த வசதி இருக்கனும்!

இந்தியாவில் ரூ.10 லட்சத்திற்கும் குறைவான விலையில், எரிபொருள் சிக்கனத்தை மேம்படுத்தும் ஐடல் ஸ்டார்ட்-ஸ்டாப் அமைப்பு (Idle Start-Stop System) உடன் கூடிய பல கார்கள் சந்தையில் உள்ளன. மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களின் கார் மாடல்கள் இதில் பிரதானமானவை ஆகும். அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

2030க்குள் மொத்த இந்தியாவும் மாருதி சுஸுகியால் மாற போகுது!!

இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி தனது முதல் மின்சார வாகனத்தை அறிமுகப்படுத்தும் திட்டத்துடன், இந்த பத்தாண்டின் இறுதிக்குள் நாடு முழுவதும் 1 லட்சத்திற்கும் அதிகமான சார்ஜிங் மையங்களை நிறுவ இலக்கு நிர்ணயித்துள்ளது. மின்சார வாகனங்கள் மீதான நுகர்வோர் நம்பிக்கையை அதிகரிக்க இந்த நடவடிக்கை உதவும் என நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் மற்றும் CEO ஹிரோஷி டேகுச்சி தெரிவித்துள்ளார். ஏற்கனவே 1,100 நகரங்களில் 2,000 பிரத்யேக சார்ஜிங் நிலையங்களை மாருதி சுஸுகி அமைத்துள்ளது.