56கிமீ மைலேஜ் தரும் புதிய ஸ்கூட்டரை களமிறக்கியுள்ள ஹீரோ!!

உலகின் மிகப்பெரிய மோட்டார் சைக்கிள் மற்றும் ஸ்கூட்டர் தயாரிப்பாளரான ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம், தனது புத்தம் புதிய டெஸ்டினி 110 ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. "ஹீரோ கா ஸ்கூட்டர் - ஸ்கூட்டர் கா ஹீரோ" என்ற முழக்கத்துடன் வெளிவந்துள்ள இந்த ஸ்கூட்டர், தினசரி பயன்பாட்டிற்கு ஏற்ற அம்சங்களையும், சிறப்பான மைலேஜையும், தனித்துவமான ரெட்ரோ தோற்றத்தையும் ஒருங்கே கொண்டுள்ளது.

டிவிஎஸ் கம்பெனிக்கு ரொம்ப தாராள மனசு... புதிய அப்பாச்சி விலை

டிவிஎஸ் மோட்டார் (TVS Motor) நிறுவனம் தனது முதன்மை அப்பச்சி (Apache) ரக பைக்குகளான ஆர்ஆர் 310 (RR 310) மற்றும் ஆர்.டி.ஆர் 310 (RTR 310) ஆகிய மாடல்களின் விலைகளை குறைத்துள்ளது. இதன் மூலமாக, விலையுயர்ந்த இந்த டிவிஎஸ் அப்பாச்சி பைக்குகளை இன்னும் குறைவான விலையில் வாங்கும் வாய்ப்பு உருவாகி உள்ளது.

ஆல்டோ காருக்கு இப்படி ஒரு நிலைமையா?

இந்தியாவில் என்னதான் எஸ்யூவி கார்களுக்கான மார்கெட் அதிகமாக இருந்தாலும் சிறிய ரக கார்களை வாங்கும் மக்கள் அதிகமாகதான் உள்ளனர். குறிப்பாக முதல்தலைமுறையாக கார் வாங்கும் பலர் சிறிய ரக காரை தான் தேர்வு செய்கின்றனர். இப்படியாக இந்தியாவில் கடந்த ஜனவரி மாதம் விற்பனையான டாப் 10 கார் பட்டியல் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த டெக்னாலஜி இல்லாம, 10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்காதீங்க

இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் பல பிரபலமான கார்களில் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) எனும் பாதுகாப்பு அம்சம் அனைத்து வேரியண்ட்களிலும் தற்போது ஸ்டாண்டர்ட்டாக வழங்கப்படுகிறது. இந்த ESC ஆனது ESP (எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம்) என்றும் அழைக்கப்படுகிறது.
Advertisement

டாடா காரை யாரும் கண்டுக்குறது இல்ல... 1,000 பேர் கூட வாங்கல!

இந்தியாவில் சில காரணங்களால், கடந்த ஆகஸ்ட் மாத பயணிகள் கார்கள் விற்பனை சற்று சரிவை கண்டுள்ளது. இதனால் கார் உற்பத்தியாளர்கள் விநியோகத்தை மறுசீரமைக்க வேண்டியுள்ளது. மத்திய அரசின் ஜிஎஸ்டி திருத்தம் மற்றும் பண்டிகை கால சலுகைகள் இதற்கு உதவும் என எதிர்பார்க்கப்படுகிறது. இருப்பினும், அவை செடான் (Sedan) ரக கார்களின் விற்பனையில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

ஒரே வருசத்துல ரூ1.25 லட்சம் டீசல் செலவு மிச்சமாகும்!

யூலர் மோட்டார்ஸ் நிறுவனம் டர்போ இவி 1000 என்ற புதிய எலெக்ட்ரிக் மினி டிரக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. வெறும் ரூ5.99 லட்சம் பட்ஜெட்டில் இது அறிமுகமாகியுள்ளது. லாஸ்ட் மைல் டெலிவரி மற்றும் சிறிய பிஸ்னஸ் செய்பவர்களுக்கு இது பயனுள்ளதாக இருக்கும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எமனுக்கே சவால் விடலாம், டொயோட்டாவில் இதைதான் எதிர்பார்த்தோம்

டொயோட்டா கிர்லோஸ்கர் மோட்டார் நிறுவனம் (Toyota Kirloskar Motor) தனது பிரபலமான ஃபேமிலி காரான ரூமியான் (Rumion)-இல் பாதுகாப்பை மேம்படுத்தி, வாடிக்கையாளர் நலனை மையமாகக் கொண்ட தனது கொள்கையை மீண்டும் உறுதிப்படுத்தியுள்ளது. அது என்ன என்பதை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

பைக்கை புக் பண்ணிவிட்டால், வீட்டிற்கே ஹோம் டெலிவிரி!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள் (Electric Motorcycle) உற்பத்தியாளரான ஓபன் எலக்ட்ரிக் (Oben Electric) தனது ரோர் இ.இசட் சிக்மா (Rorr EZ Sigma) மற்றும் ரோர் இ.இசட் (Rorr EZ) எலெக்ட்ரிக் பைக்குகளை ஃபிளிப்கார்ட் (Flipkart) ஆன்லைன் விற்பனை தளத்தில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த அறிவிப்பு, ஓபன் நிறுவனத்தின் டிஜிட்டல் ரீடெயில் (Retail) விரிவாக்கப் பயணத்தில் ஒரு முக்கிய நடவடிக்கையாகப் பார்க்கப்படுகிறது.
Advertisement

இந்தியாவே எதிர்பார்த்த பைக் நாளை வெளியாகிறது!

அல்ட்ராவைலட் நிறுவனம் இந்தியாவில் புதிய நேக்கட் பைக்கை அந்நிறுவனம் நாளை (செப் 23) வெளியிட தயாராக உள்ளது. இந்நிறுவனம் ஏற்கனவே உலக தர தயாரிப்புகளை வெளியிட்டுள்ள நிலையில் இந்த வாகனம் மீதான எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது. மக்கள் பலர் இந்த வாகனத்தை எதிர்பார்த்து காத்திருந்த நிலையில் இது குறித்த சில முக்கியமான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்தியாவிலேயே ஆபத்தான 2 நகரங்கள் இது தான்

இந்தியாவில் கடந்த 2023ம் ஆண்டு நடந்த சாலை விபத்து மற்றும் அதில் உயிரிழந்தவர்களின் தரவுகளை வைத்து 2 நகரங்கள் அதிக பாதுகாப்பு குறைவான நகரங்களாக பட்டியலிடப்பட்டுள்ளன. இந்தியாவில் நடந்த மொத்த விபத்துக்களில் இந்த இரண்டு நகரங்களில் தான் அதிகமாக உள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மஹிந்திரா பெருசா ஒண்ணுக்கு ரெடியாகிட்டு இருக்கு...!!

மஹிந்திரா பொலேரோ (Mahindra Bolero) கார் 25 வருடங்களுக்கும் மேலாக இந்தியச் சந்தையில் நீடித்து வருகிறது. இந்த 25 வருட காலகட்டத்தில் பெரிய அளவில் பொலேரோவின் வடிவமைப்பில் மாற்றங்கள் செய்யப்படாவிட்டாலும், இதன் தனித்துவமான கவர்ச்சி குறையாமல் உள்ளது. தற்போது, பொலேரோவின் வெள்ளி விழா கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக, 2025 பொலேரோவில் முக்கியமான பெரிய மாற்றங்களை மஹிந்திரா நிறுவனம் கொண்டுவரவுள்ளது.

இது தெரியாம தான் அடிக்கடி மெக்கானிக் ஷாப் எடுத்துட்டு போறோமா

இந்திய சாலைகளில் ஸ்கூட்டர்கள் மிகவும் பிரபலமான இருசக்கர வாகனங்களாக திகழ்கின்றன. குறிப்பாக, நகரப் பயணங்களுக்கு இவை வசதியாகவும், பயன்படுத்த எளிதாகவும், நடைமுறைக்கு உகந்ததாகவும் இருப்பது இதற்கு முக்கிய காரணங்கள் ஆகும். இதனாலேயே, இந்தியாவில் மட்டுமின்றி உலகளவில் பல நாடுகளில் நகரங்களில் பைக்குகளை காட்டிலும் அதிகமாக ஸ்கூட்டர்களை பயன்படுத்த மக்கள் துவங்கி உள்ளனர்.
Advertisement

28 கி.மீ மைலேஜ் தரும் காரின் டெலிவரி இன்று துவங்குகிறது!

மாருதி நிறுவனம் தனது விக்டோரிஸ் என்ற காரை இந்திய மார்கெட்டில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காரின் டெலிவரி இன்ற துவங்குகிறது. இ்நத் கார் மிட்-சைஸ் எஸ்யூவி செக்மெண்டில் குறைந்த விலையில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

வெறும் ரூ3.49 லட்சத்திற்கு புது காரா?

இன்று முதல் ஜிஎஸ்டி வரி குறைக்கப்பட்டுள்ளது. இதனால் இன்று முதல் வாகனம் வாங்குபவர்கள் குறைவான விலையில் வாகனங்களை வாங்க முடியும். இதனால் இன்று முதல் வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் குறைந்த விலையில் விற்பனை செய்யப்படும் டாப் 5 கார்கள் குறித்த தகவல்கள வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

லாரிகள் மீது கற்களை வீசி தாக்கிய போலீஸ்காரங்க கதை முடிஞ்சுது

இந்தியாவில் வாகன தணிக்கையின்போது, காவல் துறையின் செயல்பாடுகள், ஒரு சில சமயங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி விடுகின்றன. வாகன தணிக்கை என்ற பெயரில், காவல் துறை அதிகாரிகள், வசூல் வேட்டை நடத்துவதாக குற்றச்சாட்டுக்கள் இருக்கின்றன. எனவே காவல் துறை அதிகாரிகளை பார்த்து விட்டால், வாகனங்களை நிறுத்தாமல் செல்வதை ஒரு சிலர் வாடிக்கையாக வைத்துள்ளனர்.

இந்த காரை இத்தனை பேர் வாங்கிட்டாங்களா?

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்க மக்கள் பலர் பெரிய ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இந்தியாவில் மக்கள் பலர் அதிகம் எம்பிவி கார்களை விரும்பி வருகின்றனர். அதிக சீட்டர் எண்ணிக்கை, அதிக இட வசதி மற்றும் அதிக சொகுசு இருப்பதால் மக்கள் பல இந்த ரக கார்களை அதிகம் விரும்புகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

டெலிவரி எடுக்கும் போதே வழுக்கிய கார்! வீடியோ செம வைரல்!

புதிய காரை டெலிவரி எடுக்கும் போதே கார் ரேம்பிலிருந்து கீழே இறங்கி விபத்தில் சிக்கி பார்த்தது. ஆனால் இந்த காரில் இருந்த அதிக கிரவுண்ட் கிளியரன்ஸ் காரணமாக இந்த வாகனம் பெரிய அளவில் விபத்தில் சிக்காமல் தப்பித்தது. இந்த வீடியோ சமூகவலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது. பலர் இந்த வீடியோவை பகிர்ந்து கிரவுண்ட் கிளியரன்ஸ் வாகனத்திற்கு எவ்வளவு முக்கியம் என பேசி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

34 கிமீ மைலேஜ் தரும் காரின் விலை தரமட்டத்துக்கு குறையுது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). கடந்த 1999ம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் இருந்து, மாருதி சுஸுகி வேகன் ஆர் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அறிமுகம் செய்யப்பட்டு சுமார் 25 வருடங்களாகி விட்டாலும் கூட, இன்றளவும் மாருதி சுஸுகி வேகன் ஆர் காரின் விற்பனை மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

வருஷ கடைசில கார் வாங்குனா விலை கம்மியா கிடைக்குமா?

இந்தியாவில் நாளை (செப்22ம்தேதி) முதல் ஜிஎஸ்டி வரி குறைப்பு அமலுக்கு வருகிறது. இதனால் வாகனங்களின் விலை கணிசமாக குறைகிறது. இந்த நேரத்தில் வாகனம் வாங்கினால் விலை குறைவாக இருக்கும் என்பதால் சிலர் வாகனங்களை வாங்க நினைக்கிறார்கள். அதே நேரம் 2025ம் ஆண்டு இறுதியில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் இந்தாண்டு தயாரிக்கப்பட்ட வாகனங்களின் ஸ்டாக்கை காலியாக்க தள்ளுபடிகளை வழங்கும். அப்பொழுது விலை இதை விட குறைவாக இருக்கும் என்பதால் வருட இறுதியில் வாகனம் வாங்க முடிவு செய்துள்ளனர். உண்மையில் எது லாபமாக இருக்கும்? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம்.

டிவிஎஸ் ஷோரூம்ல நாளை கூட்டம் கூடப்போகுது!

டிவிஎஸ் நிறுவனம் இந்தியாவில் நாளை அமலுக்கு வரவுள்ள ஜிஎஸ்டி மாற்றத்தால் ஏற்படும் விலை குறைப்பின் பலனை நேரடியாக மக்களுக்க வழங்க முடிவு செய்துள்ளது. இதன் மூலம் நாளை மூலம் டிவிஎஸ்ர ரோனின் பைக்கின் விலை ரூ14,300 வரை குறைகிறது. இதன்படி இந்நிறுவனம் வெளியிட்டுள்ள முழுமையான விபரங்களை இங்கே காணலாம்.
Advertisement

டிராஃபிக் அபராதங்களுக்கு 80% தள்ளுபடி!

சமீபத்தில் கர்நாடக மாநிலம் பெங்களூருவில் டிராஃபிக் அபராதங்களை செலுத்த 50 சதவீதம் தள்ளுபடி அறிவிக்கப்பட்டிருந்தது. இதற்கு வரவேற்பு அளிக்கும் வகையில் மக்கள் பலர் தள்ளுபடி விலையில் அபராதங்களை கட்டிய நிலையில் தற்போது இதே யுக்தியை ஓடிசா மாநில அரசும் கையில் எடுத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

5 வருஷமா கஷ்டப்பட்டு சேத்த காசுல மனைவி செய்த காரியம்!

இன்ஸ்டாகிராம் (Instagram) தளத்தில் ஹரினி வாசுதேவன் (Harini Vasudevan) என்பவர் வெளியிட்டுள்ள பதிவு, தற்போது பலரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது. இந்த பதிவில் அவர் கூறியிருப்பது பின்வருமாறு: குழந்தை பருவத்தில் இருந்து தற்போது வரை, நான் என்ன ஆசைப்பட்டாலும், அது எப்படியாவது ஒரு வழியில், எனக்கு எளிதாக கிடைத்து விடும்.

விலை ரொம்ப கம்மி, அதிக மைலேஜ், குடும்பதோட போகலாம்!

இந்தியாவில் குடும்பத்துடன் பயணிக்கும் ரக வாகனங்களின் விற்பனை சமீபகாலமாக அதிகமாக உள்ளது. குறிப்பாக குறைந்த விலையில் அதிக நபர்கள் பயணிக்கும் ரக கார்கள் அதிகமாக விற்பனையாகிறது. இதன்படி கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவில் விற்பனையான டாப் 10 7 சீட்டர் வாகனங்கள் குறித்த பட்டியல் வெளியாகி வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குடிபோதையில் வந்து ரகளை செய்தவரை சுற்றி வளைத்த பொதுமக்கள்!

மது போதையில் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி தவறு. எனவே மது போதையில் வாகனங்களை இயக்குபவர்களுக்கு எதிராக மிக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. ஆனால் ஒரு சில சமயங்களில், நடவடிக்கை எடுக்க வேண்டிய அதிகாரிகளே, மது போதையில் வாகனங்களை இயக்கி, சட்டத்தை மீறுகின்றனர்.
Advertisement

போலீஸ் கேண்டீனில் இனி இந்த காரை வாங்கலாம்!

கியா நிறுவனம் மாஸ் மார்கெட் பிரிமியர் எஸ்யூவி கார்களை விற்பவனை செய்யும் முன்னணி நிறுவனமாக இருகு்கிறது. இந்நிறுவனம் பல பிரிமியம் அம்சங்களை தனது கார்களில் பொருத்தியுள்ளது. இதனால் இந்த நிறுவன வாகனங்களை வாங்குபவர்களுக்கு கியா நிறுவனம் பிரிமியம் அனுபவத்தை வழங்கி வருகிறது. இந்நிறுவனம் கியா நிறுவனம் தனது கார்களை போலீஸ் மற்றும் பாராமிலிட்டரியில் பணியாற்றுபவர்களுக்கும் விற்பனை செய்ய முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.