வாகன விபத்தில் இறந்தவர் மனைவிக்கு கோர்ட் வச்ச குட்டு!

வாகனங்களில் பயணிப்பவர்கள் சொந்த தவறுகளால் ஏற்படும் விபத்திற்கு இன்சூரன்ஸ் நிறுவனங்கள் காப்பீட்டு தொகையை வழங்க தேவையில்லை என சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு வழங்கியுள்ளது. வாகன இன்சூரன்ஸ் குறித்து பதிவு செய்யப்பட்ட வழக்கின் மேற் முறையீட்டில் இந்த தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது மிகப்பெரிய அளவில் பேசு பொருளாக மாறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அரசாங்கத்தின் மானியமே விலையை ரூ.1.5 லட்சம் குறைச்சிடும்!

எலக்ட்ரிக் வாகனங்களின் தாக்கம் அனைத்து விதமான வாகனங்களிலும் வந்துவிட்டது. எல்லா வாகனங்களிலும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியான பேட்டர்னில் தான் என்ஜின் வழங்கப்படுவதால், அவற்றை எலக்ட்ரிக் மோட்டாராக மாற்றுவதில் எலக்ட்ரிக் வாகனங்களை உற்பத்தி செய்யும் நிறுவனங்களுக்கு பெரியதாக எந்த பிரச்சனையும் இல்லை. இதனாலேயே டிராக்டர்களில் கூட எலக்ட்ரிக் டிராக்டர்கள் (Electric Tractors) வர ஆரம்பித்துவிட்டன. மஹாராஷ்டிராவில் எலக்ட்ரிக் ஒன்று பயன்பாட்டிற்கு வந்துள்ளது. இந்தியாவில் பல டிராக்டர் தயாரிப்பு நிறுவனங்கள் எலக்ட்ரிக்கில் டிராக்டர்களை உருவாக்க துவங்கிவிட்டன என்றாலும், எதுவும் இன்னும் அதிகாரப்பூர்வமாக பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படாமல் இருந்த நிலையில், இந்தியாவிலேயே முதல் எலக்ட்ரிக் டிராக்டர் ஆர்டிஓ-இல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

கருப்பு கலர் காரை வாங்கினாரா அஜித்? விலை எவ்வளவு தெரியுமா?

நடிகர் அஜித் குமார் தனது அஜித்குமார் ரேஸிங் அணிக்காக புதிய மெர்சிடீஸ் பென்ஸ் நிறவனத்தின் ரேஸ் காரை வாங்கியுள்ளார் என்ற தகவல் தற்போது சமூகவலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. இந்த காரில் நடிகர் அஜித் அமர்ந்திருப்பது போன்ற புகைப்படத்தை அவரது மேனேஜர் எக்ஸ் தளத்தில் பகிர்ந்திருந்த நிலையில் இந்த பேச்சு எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

முழுசா 33 கிமீ மைலேஜ் தரும் கார்! ஆனா விலை 4 லட்சம்தான்!

இந்திய சந்தையில் மிகவும் விலை குறைவான கார்கள் எல்லாம் விற்பனையில் சாதனைகளை படைத்தது அந்த காலம் என்று சொல்லும் நிலைமை வந்துள்ளது. ஆம், மிகவும் விலை குறைவான கார்களின் விற்பனை தற்போது 'டல்' அடிக்கிறது. இதற்கு மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso) ஒரு உதாரணம்.
Advertisement

ஹோண்டா கார் ஷோரூம்களில் கஸ்டமர்ஸ் வராமல் காத்து வாங்குது!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Car India), ஜப்பானை தலைமையிடமாக கொண்டு இந்தியாவில் செயல்படும் கார் நிறுவனம். ஒரு சமயத்தில் முன்னணி கார் நிறுவனமாக விளங்கிய ஹோண்டாவின் கார்கள் விற்பனை சமீப காலத்தில் வெகுவாக குறைந்துக் கொண்டே வருகிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த ஜூன் மாதத்தில் ஹோண்டா விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. கடந்த 2024 ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஜூன் மாதத்தில் ஹோண்டா கார்கள் விற்பனை ஆனது கிட்டத்தட்ட பாதியாக குறைந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ஒரு கி.மீ பயணிக்க வெறும் 25 பைசா தான் செலவாகும்!

மேட்டர் நிறுவனம் இந்தியாவில் தனது கியர் வைத்த முதல் எலெக்ட்ரிக் பைக்காக ஏரா என்ற பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. ரூ1.93 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள இந்த பைக் ஒரு முறை சார்ஜ் போட்டால் 173 கி.மீ வரை பயணிக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மிக குறைவான செலவில் இந்த பைக்கில் பயணிக்க முடியும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

6 மாசத்துல இவ்வளவு பேர் இந்த கம்பெனி காரை வாங்கிட்டாங்க!

ஸ்கோடா நிறுவனம் கடந்த 6 மாதத்தில் இதுவரை இல்லாாத அளவிற்கு அதிக அளவிலான கார்களை விற்பனை செய்து புதிய சாதனை படைத்துள்ளது. மொத்தம் 134 சதவீதம் அளவிற்கு இந்த வாகனத்தின் விற்பனை வளர்ச்சியடைந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதி கார்களை வாங்க ஒரே மாதத்தில் இவ்வளவு பெரிய கூட்டமா!!

மாருதி சுஸுகி (Maruti Suzuki), இந்தியாவின் நம்பர் ஒன் கார் நிறுவனம். ஒவ்வொரு மாதமும் இலட்சக்கணக்கிலான கார்களை விற்பனை செய்யக்கூடிய மாருதி சுஸுகியை விற்பனையில் முந்த இனி ஒரு நிறுவனம் பிறந்துதான் வர வேண்டும் போலிருக்கிறது. ஏனெனில், அந்த அளவிற்கு மற்ற அனைத்து கார் நிறுவனங்களை காட்டிலும் அதிக எண்ணிக்கையிலான கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக மாருதி சுஸுகி விளங்குகிறது. இதனை வெளிக்காட்டு வகையில் கடந்த 2025 ஜூன் மாதத்தில் மாருதி சுஸுகி விற்பனை செய்த கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ரோட்டுல ஒரு பழைய வண்டியும் ஓடாதுனு எல்லாம் சொன்னாங்க!!

டெல்லியில் பழைய வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அப்புறப்படுத்தி காற்று மாசடைவதை குறைக்கும் முயற்சியாக, பழைய வாகனங்களுக்கு எரிபொருள் வழங்கப்படாது என்கிற புதிய சட்டத்தை ஜூலை 1 முதல் டெல்லி அரசு கொண்டுவந்தது. இந்த சட்டம் எப்போதோ முன்மொழியப்பட்டாலும், ஜூலை 1இல் இருந்து அமல்படுத்தப்பட்ட நிலையில், அமல்படுத்தப்பட்ட வெறும் மூன்று நாட்களில் இந்த சட்டம் தற்காலிகமாக நிறுத்த உத்தரவிடப்பட்டுள்ளது. இந்தியா போன்ற ஒரு நாட்டில் புதியதாக ஒரு சட்டத்தை அமல்படுத்தி செயல்படுத்துவதில் எவ்வளவு கஷ்டம் உள்ளது என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்துள்ள இந்த அறிவிப்பை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம்.

கோடி ரூபாய்க்கு வாங்குன காரை சில லட்சங்களுக்கு விக்குறாங்க!

டில்லியில் காற்று மாசு காரணமாக பழைய கார்களை பயன்படுத்த தடை விதிக்கப்பட்டுள்ளது. அதனால் அந்த மாநிலத்தில் காஸ்ட்லியான கார்களை பயன்படுத்தி வரும் பலர் அதை ஸ்கிராப்பிற்கு போடுவதற்கு பதிலாக வெளிமாநிலங்களுக்கு விற்பனை செய்து வருகின்றனர். இதனால் டில்லியில் உள்ள பழைய கார்கள் குறைந்த விலையில் செகண்ட் ஹேண்ட் மார்கெட்டிற்கு வருகிறது. தமிழகத்தில் இருந்து கொண்டு இந்த காரை வாங்க முடியுமா? அப்படி வாங்க வேண்டும் என்றால் அதற்கான வழி முறைகள் என்ன ? விரிவாக காணலாம் வாருங்கள்.

இந்த நிறுவனத்தின் கார்களை மக்கள் கண்ண மூடிட்டு நம்பறாங்க...

டொயோட்டா (Toyota) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டொயோட்டா நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் ஒட்டுமொத்தமாக 28,869 கார்களை விற்பனை செய்து அசத்தி உள்ளது.

3 வருஷத்துக்கு நாங்க இருக்கோம்னு நிஸான் வாரண்டி கொடுக்குது!!

சிஎன்ஜி (CNG) கார்களுக்கு இந்தியா முழுவதும் தொடர்ந்து வரவேற்பு அதிகரித்துக் கொண்டே வருகிறது. பெட்ரோல், டீசலுக்கு பதிலாக அழுத்தத்திற்கு உள்ளாக்கப்பட்ட விலை குறைவான இயற்கை எரிவாயுவில் இயங்குவதாலும், அதிக மைலேஜை வழங்குவதினாலும் சிஎன்ஜி கார்களை அதிக பேர் வாங்க ஆரம்பித்துள்ளனர். குறிப்பாக, டாக்ஸி (Taxi) தொழிலில் ஈடுப்படுபவர்கள் இலாபகரமான வணிகத்திற்காக சிஎன்ஜி கார்களை வாங்க விரும்ப ஆரம்பித்துள்ளனர். இதனால், மார்க்கெட்டில் விற்பனையில் உள்ள சிஎன்ஜி கார் மாடல்களின் எண்ணிக்கையும் அதிகரித்த வண்ணம் உள்ளது. அந்த வகையில் தற்போது புதியதாக நிஸான் மேக்னைட் சிஎன்ஜி (Nissan Magnite CNG) கார் தமிழ்நாட்டில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.
Advertisement

வெறும் 4 லட்சத்துக்கு புது காரா! 34 கிமீ மைலேஜ் தருது!

இந்திய வாடிக்கையாளர்கள் பொதுவாக மிகவும் குறைவான விலையில் (Price) கிடைக்கும் கார்களை வாங்குவதற்குதான் அதிக முக்கியத்துவம் கொடுப்பார்கள். கூடவே நல்ல மைலேஜ் (Mileage)தருகிறதா? என்பதையும் பார்ப்பார்கள். பெரும்பாலும் ஹேட்ச்பேக் ரக கார்கள்தான் (Hatchback Cars), வாடிக்கையாளர்களின் இந்த 2 எதிர்பார்ப்புகளையும் பூர்த்தி செய்யும்.

கல்யாணம் பண்ணாமலேயே ஒன்னா வீடு வாங்கிட்டாங்க!

மலையாள சீரியல் நடிகை அனு ஜோசப் மற்றும் அவரது நண்பர் அஸி ராக்கி ஆகியோர் இணைந்து மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்இவி 9இ காரை சொந்தமாக வாங்கியுள்ளனர். இந்த கார் ரூ33 லட்சம் என்ற விலையில் மார்கெட்டில் விற்பனையாகி வருகிறது. இந்த நடிகைக்கும் அவரது நண்பருக்கும் என்ன சம்மந்தம்? இவர்கள் இருவரும் யார்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

84 லட்ச ரூபா காரை ரூ.2.5 லட்சத்துக்கு விற்ற டெல்லிவாசி!!

தலைநகர் டெல்லியில் கடந்த சில வருடங்களாகவே காற்று மாசு பிரச்சனை அரசாங்கத்திற்கு பெரும் தலைவலியாக உள்ளது. இமயமலை தொடருக்கு அடிவாரத்தில் கங்கை, யமுனா நதிகளுக்கு அருகே இயற்கை வளம் மிகுந்த பகுதியில் அமைந்திருப்பினும், டெல்லியில் தற்போதைய கால சூழ்நிலை முற்றிலுமாக வேறுப்பட்டதாக உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், டெல்லியிலும், அதனை சுற்றியுள்ள பகுதிகளிலும் தொடர்ந்து அதிகரித்துவரும் மக்கள் தொகை ஆகும். ஒட்டுமொத்த இந்தியாவிற்கும் அதிக மக்கள் தொகை தான் எதிர்காலத்தில் பெரும் பிரச்சனையாக இருக்கும் என்பது டெல்லியின் அதிகப்படியான மக்கள் தொகையினால் ஏற்படும் பிரச்சனைகள் நமக்கு எச்சரிக்கை விடுகின்றன.

ரெண்டரை கோடி ரூபா கார்ல போனது அவங்களா!

இந்தியாவில் கடந்த சில வருடங்களாக செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது. ஆனால் இந்தியாவின் பிரபலமான மனிதர்கள், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்றோர், செடான் ரக கார்களில் பயணம் செய்வதைதான் அதிகம் விரும்புகின்றனர்.

ரூ1 லட்சம் கம்மி விலையில் இந்த காரை புக் பண்ணலாம்!

டாடா நிறுவனம் தனது ஹாரியர் இவி காரின் புக்கிங்கை அதிகாரப்பூர்வமாக துவங்கியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ள நிலையில் இந்த கார் தான் எலெக்ட்ரிக் காரில் ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் கொண்ட காராக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹூண்டாய் கார் ஷோரூம்களில் கூட்டம் ரொம்ப குறைஞ்சிடுச்சு!!

ஹூண்டாய் (Hyundai), தென்கொரியாவை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம். இந்தியாவில் மாருதி சுஸுகிக்கு அடுத்து கார்கள் விற்பனையில் 2வது இடத்தை பிடித்துவந்த ஹூண்டாய் நிறுவனத்திற்கு கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனம் பெரிதும் ஆட்டம் காட்டி வருகிறது. அதாவது, கார்கள் விற்பனையில் ஹூண்டாயை முந்தி மஹிந்திரா கடந்த சில மாதங்களாக 2வது இடத்தை தனதாக்கி வருகிறது. இந்த நிலையில், ஹூண்டாய் நிறுவனம் நடந்து முடிந்த கடந்த ஜூன் மாதத்தில் விற்பனை செய்த கார்கள் எண்ணிக்கை குறித்த விபரங்கள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

தினம் 526 பேர் இந்த காரை வாங்கியிருக்காங்க!

ஹூண்டாய் நிறுவனம் தனது கிரெட்டா எஸ்யூவி காரை கடந்த ஜூன்மாதம் விற்பனை செய்து இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் பயணிகள் காராக மாற்றியுள்ளது. இந்த கார் விற்பனைக்கு அறிமுகமாகி கடந்த மாதத்துடன் சரியாக 10 ஆண்டுகள் ஆகும் நிலையில் இந்த மகுடத்தை அந்நிறுவனம் பிடித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடாவின் கோட்டையில் ஓட்டையை போட்ட 2 நிறுவனங்கள்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன மார்கெட் மிகப்பெரிய வளர்ச்சியை சந்தித்து வருகிறது தற்போது வரை தாடாட நிறுவனம் தான் அதிகமான எலெக்ட்ரிக் வாகனங்களை இந்திய மார்கெட்டில் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் தற்போது அதன் சாம்ராஜ்ஜியத்தை அழிக்க 2 நிறுவனங்கள் உருவெடுத்துள்ளது கடந்த ஜூன் மாத விற்பனை பார்க்கும் போது இது நமக்கு தெளிவாக தெரிகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

அப்பா அரசியல்வாதியாக இருந்தாலும் சொந்தமாக கார் வாங்கிய மகன்!

சினிமா (Cinema) பிரபலங்கள் மற்றும் அரசியல்வாதிகளின் வாரிசுகள் புதியதாக விலையுயர்ந்த கார்களை வாங்கினாலே அது அவர்களது பெற்றோர்கள் வாங்கி கொடுத்ததாக இருக்கும் என்றே நாம் நினைக்கிறோம். அந்த வகையில், மலையாள திரைப்பட நடிகரும், கேரளாவின் ஒரேயொரு பாஜக எம்பி-யுமான சுரேஷ் கோபி (Suresh Gopi) அவர்களின் மகன் மாதவ் சுரேஷ் (Madhav Suresh) சமீபத்தில் ஃபோக்ஸ்வேகன் கோல்ஃப் ஜிடிஐ (Volkswagen Golf GTI) காரை வாங்கிய போதும் இந்த காரை நிச்சயமாக சுரேஷ் கோபி தான் வாங்கி கொடுத்திருப்பார் என நம்மில் பலர் நினைத்தோம். ஆனால், இந்த ஃபோக்ஸ்வேகன் காரை தனது சொந்த முயற்சியில் வாங்கியுள்ளதாக மாதவ் சுரேஷ் தனது சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

லாரி டிரைவர்களை கேட்டு பாருங்க... இதை செய்றதுதான் கஷ்டம்!!

பொதுவாகவே கமர்ஷியல் வாகனங்களை ஓட்டுவது என்பது மற்ற கார், வேன்களை ஓட்டுவதை காட்டிலும் கடினமானது என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஒருமுறையாவது பெரிய அளவிலான கனரக லாரி அல்லது பேருந்தை ஓட்டியவர்களுக்கு அந்த கஷ்டம் தெரியும். பொதுவாக, 4-சக்கர வாகனத்தை ஓட்டும்போது டிரைவருக்கு அதிக பிளைண்ட் ஸ்பாட் (Blind Spot) பகுதிகள் இருக்கும். அதாவது, காரில் இருந்து தொலைவில் உள்ள பகுதிகளை கூட பார்க்க முடியும், ஆனால் காருக்கு முன்னாலோ அல்லது பின்னாலோ நெருக்கமாக இருக்கும் பகுதியை பார்க்க முடியாது. இதனை தான் டிரைவர்களால் பார்க்க முடியாத பிளைண்ட் ஸ்பாட் என்கின்றனர்.

குறைவான விலையில் வரும் ராயல் என்பீல்டு பைக்!

ராயல் என்பீல்டு (Royal Enfield) நிறுவனத்தின் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், ராயல் என்பீல்டு நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம், இந்தியாவின் உள்நாட்டில், 76,957 பைக்குகளை விற்பனை செய்து அசத்தியுள்ளது.

30 நாளில் 4.29 லட்சம் வண்டிகளை வித்துட்டாங்க!

ஹோண்டா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் மட்டும் மொத்தம் 4.29 லட்சம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இந்நிறுவனம் கடந்த காலாண்டிற்கான விற்பனை விபரங்களையும் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வாங்கும் கார் கூட சீனா கம்பெனி தானா? கிரிக்கெட் வீரரின் கார்

சனத் ஜெயசூர்யா (Sanath Jayasuriya), பிரபலமான இலங்கை கிரிக்கெட் வீரர். க்ளென் மெக்ராத், அனில் கும்பிளே போன்ற டாப் கிளாஸ் பவுலர்கள் விளையாடிய காலக்கட்டத்தில் அதிரடி மட்டை பந்து வீரராக வலம்வந்தவர். கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற பின் இலங்கை நாடாளுமன்ற உறுப்பினராக பதவி வகித்தவர். பதவி காலம் முடிந்த பின் மீண்டும் கிரிக்கெட்டுக்கு வந்த ஜெயசூர்யா, தற்சமயம் இலங்கை கிரிக்கெட் ஆண்கள் அணியின் தலைமை பயிற்சியாளராக உள்ளார். இவரது தலைமைக்கு பிறகே உள்நாட்டு கலவரங்களினால் பாதிக்கப்பட்டு இருந்த இலங்கை கிரிக்கெட் அணி மெல்ல மெல்ல மீண்டுவர ஆரம்பித்துள்ளது. சமீபத்தில், இந்தியாவிற்கு எதிரான ஒருநாள் கிரிக்கெட் தொடரை இலங்கை வென்றது சனத் ஜெயசூர்யா தலைமை ஏற்ற பின்பே ஆகும்.