ஹூண்டாய் எஸ்யூவி மாருதி ஃபிராக்ஸுக்குப் போட்டியாக விரைவில்

மாருதி சுஸூகி நிறுவனத்திற்கு இந்தியாவில் அதிகம் விற்பனையாகும் மிகச்சிறப்பான கார்களுள் ஒன்றாக இருந்து வருகிறது கிராஸ்ஓவர் சப்-காம்பேக்ட் எஸ்யூவியான ஃபிராங்க்ஸ் (Fronx). இந்தக் காருக்குப் போட்டியாக முற்றிலும் புதிய கிராஸ்ஓவர் எஸ்யூவியை விரைவில் வெளியிடவுள்ளது ஹூண்டாய். இந்தப் புதிய காரை தற்போது சர்வதேச அளவில் அந்நிறுவனம் சோதனை செய்து வருகிறது. இந்தப் புதிய கார் என்ன? இதில் இருக்கும் அம்சங்கள் என்ன? ஆகிய தகவல்களை விரிவாகப் பார்க்கலாம்.

ஆட்டோவை விட குறைவான விலையில் புது கார்!

இந்திய சந்தையில் விற்பனை செய்யப்பட்டு வரும் மிகவும் விலை குறைவான ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10). இந்தியாவில் சமீப காலமாகவே மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களின் விற்பனை மிகவும் மந்தமாக இருந்து வருகிறது.

ஓசூர் ஆலையில் தயாராக போகும் ஓலாவின் புதிய பேட்டரி!

ஓலா எலெக்ட்ரிக் (Ola Electric) நிறுவனம் அதன் சொந்த முயற்சியில் லித்தியம்-இரும்பு-பாஸ்பேட் (LFP) பேட்டரியை தயாரிக்க அனைத்து விதங்களிலும் தயாராகி வருவதாக தெரிவித்துள்ளது. இதன் விளைவாக ஓலா எலெக்ட்ரிக் வாகனங்களின் விலைகள் குறையும் சூழல் உருவாகி உள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

இந்தியாவில் உயர்ந்த எலெக்ட்ரிக் கார் விற்பனை.. காரணம் என்ன?

இந்தியாவில் முன்பை விட எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரித்துள்ளது. 2025ம் நிதியாண்டில் (FY2025) இந்தியாவில் 1,08,873 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனையாகியிருந்தன. இது 2026ம் நிதியாண்டில் (FY2026) 83.63% அதிகரித்துள்ளது. 2025 ஏப்ரல் 1 முதல் 2026 மே 31 வரையிலான ஒரு வருட காலக்கட்டத்தில் 1,99,923 எலெக்ட்ரிக் கார்கள் இந்தியாவில் விற்பனையாகியுள்ளன. இது ஒட்டுமொத்த கார் விற்பனையில் 4.25% ஆகும்.
Advertisement

புதிய மிடில் வெயிட் அட்வென்சர் பைக்கை வெளியிடுகிறது BMW

இந்தியாவில் புதிய அட்வென்சர் பைக்கின் வெளியீட்டுத் தேதியை அறிவித்துள்ளது பிஎம்டபிள்யூ (BMW). இந்தியாவில் புதிதாக அந்நிறுவனம் உருவாக்கி வந்த F 450 GS பைக்கை வெளியிடலாம் என முன்பே தகவல்கள் வெளியாகி வந்தது. சர்வதேச அரங்கில் ஏற்கனவே இந்த பைக் அறிமுகமாகியிருக்கும் நிலையில், தற்போது இந்தியாவில் அறிமுகமாகும் தேதியும் அறிவிக்கப்பட்டுள்ளது.

உங்கள் வாகனத்திற்கு இன்ஜின் ஆயிலை மாற்ற செம டிப்ஸ்!

ஒரு வாகனத்திற்கான இன்ஜின் அயிலைத் தேர்வு செய்யும் போது கவனமாக இருக்க வேண்டும். அதே நேரம் மார்கெட்டில் இன்ஜின் ஆயில் மீது பல புரளிகள் உள்ளது. அதனால் இன்ஜின் ஆயில் மாற்றம் எதையெல்லாம் நம்ப வேண்டாம் என்பதை இதோ இங்கே உங்களுக்காக வழங்கியுள்ளோம்.

பயணத்தின் போது வாந்தி எடுப்பதைத் தடுப்பது எப்படி?

கார்களில் செல்லும் போது பலருக்கு வாந்தி எடுக்கும் பிரச்சனை இருக்கும். பலருக்குப் பயணம் என்றாலே சேராது எனச் சொல்லுவார்கள். இது ஏன் நடக்கிறது? இதை எப்படித் தடுப்பது? இதற்கு நிரந்தர தீர்வு என்ன? முழுமையாகக் காணலாம் வாருங்கள்.

நேரம் பார்த்து டிராக்டர்களின் விலைகளை உயர்த்தும் மஹிந்திரா!

மஹிந்திரா டிராக்டர்ஸ் (Mahindra Tractors) மற்றும் சுவராஜ் டிராக்டர்ஸ் (Swaraj Tractors) நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து தங்களது டிராக்டர்களின் விலைகளை உயர்த்துவதாக அறிவித்துள்ளன. மஹிந்திரா க்ரூப்பின் கீழ் செயல்படும் இந்த இரு டிராக்டர் நிறுவனங்கள் எதற்காக இந்த விலை அதிகரிப்பைக் கொண்டு வருகின்றன என்பதை பற்றியும், இந்த புதிய விலை உயர்வு எப்போதில் இருந்து அமலுக்குவர உள்ளன என்பதை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

அல்ட்ராவைலட் ஐரோப்பாவில் மேலும் 6 நாடுகளுக்கு விரிவாக்கம்

பெங்களூருவை தலைமையகமாகக் கொண்டு செயல்பட்டு வரும் அல்ட்ராவைலட் (Ultraviolette) நிறுவனம், ஐரோப்பாவில் மேலும் ஆறு நாடுகளில் கால்பதித்திருக்கிறது. கடந்தாண்டு ஜூன் மாதம் தான் முதன்முதலாக ஐரோப்பாவில் கால்பதித்தது அல்ட்ராவைலட். தற்போது அங்கே விரிவாக்கம் செய்துள்ளது. புதிதாக கால் பதித்திருக்கும் 6 நாடுகளுடன், தற்போது ஐரோப்பாவில் சுமார் 19 நாடுகளில் எலெக்ட்ரிக் பைக்குகளை விற்பனை செய்கிறது அந்நிறுவனம்.

பல மாத எதிர்பார்ப்புக்கு பின் வந்த புதிய கார் அறிமுகங்கள்!

2026ஆம் ஆண்டின் முதல் மூன்று மாதங்கள் முடிந்துவிட்ட நிலையில், இந்த மூன்று மாதங்களில் கிட்டத்தட்ட அனைத்து கார் நிறுவனங்களில் இருந்தும் புதிய கார்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன. இது நேரடியாக இந்தியாவில் கார்கள் விற்பனையில் எதிரொலித்துள்ளது. கடந்த 3 மாதங்களில் மட்டும் இந்தியாவில் சுமார் 13 இலட்சம் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது கடந்த 2025ஆம் ஆண்டின் முதல் 3 மாதங்களில் விற்பனையான கார்களின் எண்ணிக்கையை காட்டிலும் 16% அதிகமாகும். இதற்கு காரணமான புதிய கார் அறிமுகங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

ஊழியர்களுக்கு மறக்க முடியாத அதிர்ச்சி கொடுத்த சென்னை கம்பெனி

கடினமாக உழைக்கும் போதிலும் சரியாக ஊதிய உயர்வே வழங்குவதில்லை என தனியார் நிறுவன ஊழியர்கள் பலர் குமுறும் நிலையில், சென்னையில் ஒரு தனியார் நிறுவனம் அதன் நிறுவனத்தில் சிறப்பாக பணியாற்றும் 12 ஊழியர்களுக்கு விலையுயர்ந்த கார்களை பரிசாக வழங்கி ஆச்சிரியப்படுத்தி உள்ளது. அதுவும் நீங்கள் நினைப்பதுபோல் மாருதி காரோ அல்லது ஹூண்டாய் காரோ கிடையாது; பல இலட்ச ரூபாய் மதிப்பிலான ஆடி (Audi) கார் ஆகும்.

சென்னையை தாக்கிய எம்டன் போர்க்கப்பல் குறித்த தகவல்கள்!

 

  • ஜெர்மனியின் எம்டன் போர்க்கப்பல் சென்னையை தாக்கி இன்றுடன் 103 ஆண்டுகள் ஆகிறது.
  • போர் தந்திர முறைகளில் சிறந்து விளங்கிய இந்த கப்பல் நேசநாட்டு படையினருக்கு சிம்ம சொப்பனமாக இருந்தது.
  • 1914ம் ஆண்டு ஆஸ்திரேலிய போர்க்கப்பலால் சுட்டு மூழ்கடிக்கப்பட்டது.

 

Advertisement

கேடிஎம் 390 சீரிஸ் பைக்குகள் விலை உயர்வு

இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் இரண்டு 390 சீரிஸ் பைக்குகளின் விலையை உயர்த்தியுள்ளது கேடிஎம். இந்தியாவில் தற்போது விற்பனை செய்யப்பட்டு வரும் ஸ்ட்ரீட் நேக்கட் பைக் மாடலான 390 டியூக் மற்றும் ஆஃப்-ரோடு அட்வென்சர் பைக் மாடலான 390 அட்வென்சர் எக்ஸ் ஆகிய பைக் மாடல்களின் விலையை உயர்த்தியுள்ளது.

ஒரு மணிநேரத்தில் 80% சார்ஜ் ஆகக்கூடிய டாடா பிக்-அப் டிரக்!

டாடா மோட்டார்ஸ் வணிக வாகனங்கள் (Tata Motors Commercial Vehicles) நிறுவனத்தில் இருந்து 'இண்ட்ரா இவி பிக்-அப்' (Intra EV Pick-up) என்கிற பெயரில் புதிய எலெக்ட்ரிக் கமர்ஷியல் வாகனம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.11.95 லட்சம் என்கிற விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய டாடா இண்ட்ரா இவி பிக்-அப் டிரக் வாகனத்தை பற்றிய விரிவான விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஹோண்டா ஷைன் 100 என்ன விலையில் விற்பனை செய்யப்படுகிறது?

எவ்வளவு விலை உயர்ந்த பைக் மாடல்கள் இந்தியாவில் விற்பனை இருந்தாலும், அதிகம் விற்பனையாகும் பைக்குகள் என்றால் அது விலை குறைவான 100 சிசி பைக்குகள் தான். 97.2 சிசி இன்ஜின் கொண்ட ஸ்ப்ளெண்டர் பிளஸ்ஸுக்கு இணையாக விற்பனையாகக் கூடிய பைக்கை இன்னும் எந்த நிறுவனமும் தயாரிக்கவில்லை. ஆனாலும், அதற்குப் போட்டியாக ஒரு பைக் இந்திய சந்தையில் விற்பனையாகி வருகிறது.

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் அறிமுக தேதி விபரம்

ராயல் என்ஃபீல்டின் முதல் மின்சார பைக் Flying Flea C6 ஏப்ரல் 2026-ல் களமிறங்குகிறது. Get ready for the ultimate urban electric ride with 154km range and retro-modern tech.

புதிய ஸ்கிராம்பிளர் பைக்கை வெளியிடுகிறது கிளாஸிக் லெஜெண்ட்ஸ்

ஏப்ரல் 23ம் தேதியன்று புதிய ஸ்கிராம்பிளர் (Scrambler) வகை பைக் மாடலை வெளியிடவுள்ளது கிளாஸிக் லெஜெண்டஸ். மஹிந்திரா குழுமத்தைச் சேர்ந்த இந்த நிறுவனம் தான் இந்தியாவில் தற்போது ஜாவா, யெஸ்டி மற்றும் BSA ஆகிய பழைய கிளாஸிக் பிராண்டுகளின் பைக்குகளை தயாரித்து விற்பனை செய்து வருகிறது.

இன்னும் 2 நாளில் அறிமுகமாக போகும் புதிய ஃபோக்ஸ்வேகன் கார்!

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனம் இந்தியாவில் புதிய டைகுன் ஃபேஸ்லிஃப்ட் (Taigun Facelift) கார்களை உற்பத்தி செய்யும் பணிகளை துவங்கியுள்ளது. வருகிற ஏப்ரல் 9ஆம் தேதி மார்க்கெட்டில் அறிமுகம் செய்யப்பட உள்ள நிலையில், அதற்கு முன்னதாக தற்போது தொழிற்சாலையில் காரை உற்பத்தி செய்யும் பணிகள் துவங்கப்பட்டுள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

வாகனங்களை தண்ணீர் இல்லாமல் கழுவ முடியுமா!..

கர்நாடகா மாநிலத்தின் தலைநகரம் பெங்களூருவில் தற்போது கடும் தண்ணீர் பற்றாக்குறை ஏற்பட்டு இருக்கின்றது. கோடை வெயில் காலம் இப்போதே அதன் தாக்கத்தைக் காண்பிக்க ஆரம்பித்து இருக்கின்றது. ஆனால், அதற்குள்ளாக கடும் தண்ணீர் பஞ்சத்தில் சிக்கி தவிக்கத் தொடங்கி இருக்கின்றது பெங்களூர் நகரம்.

மார்ச் மாதத்தில் விண்ணை பிளந்த எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனை

பிப்ரவரி மாதத்துடன் ஒப்பிடும் போது மார்ச் மாதம் எலெக்ட்ரிக் இருசக்கர வாகன விற்பனை விண்ணைப் பிளந்திருக்கிறது. இதில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களே அதிகளவில் விற்பனையாகியிருக்கின்றன. எலெக்ட்ரிக் பைக்குகளின் அளவு மிகவும் குறைவு தான். வருடங்களுக்கு இடையில் அதிகளவிலான விற்பனை உயர்வு என்பது வழக்கமான விஷயம் தான் ஆனால் இரண்டு மாதங்களுக்கு இடையில் அதிளவில் விற்பனை உயர்ந்திருப்பது ஆச்சரியம் அளிக்கும் ஒன்றாக இருக்கிறது.
Advertisement

7-சீட்டர் காராக 20 ஆயிரம் கஸ்டமர்ஸின் நம்பிக்கையை பெற்ற கார்

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தின் பிரபலமான மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரக காரான எக்ஸ்.யூ.வி 7.எக்ஸ்.ஓ (XUV 7XO)-இன் டெலிவிரிகள் (Deliveries) எண்ணிக்கை 20 ஆயிரம் யூனிட்களை எட்டியுள்ளது. அதாவது, 20 ஆயிரம் கஸ்டமர்களை இந்த மஹிந்திரா கார் சென்று சேர்ந்துள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

டெஸ்லாவின் ஐந்தாவது சூப்பர் சார்ஜிங் நிலையம் திறப்பு

இந்தியாவில் தங்களது ஐந்தாவது சூப்பர்சார்ஜிங் நிலையத்தை திறந்திருக்கிறது டெஸ்லா. நவி மும்பையில், நவி மும்பை சர்வதேச விமான நிலையலத்தில் இருந்து சுமார் 8 கிமீ தொலைவில் இந்தப் புதிய சூப்பர் சார்ஜிங் நிலையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்தப் புதிய நிலையத்துடன் தற்போது சுமார் 20 டெஸ்லா சூப்பர் சார்ஜர்கள் இந்தியாவில் பயன்பாட்டில் உள்ளன.

எம்ஜி கம்பெனியை உச்சத்திற்கு கொண்டு சென்ற விண்ட்சர் இவி!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை கடந்த ஒரு வருடத்தில் சுமார் 66% அதிகரித்துள்ளதாக புள்ளி விபரங்கள் வெளியாகி உள்ளன. இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் மெல்ல மெல்ல ஆதிக்கம் செலுத்த ஆரம்பித்திருக்கும் எம்ஜி பிராண்டின் வளர்ச்சிக்கு தற்போது வெளியாகி இருக்கும் புள்ளி விபரங்கள் ஆதாரமாக அமைந்துள்ளன.

டீசல் கார்களை விட அதிகம் விற்பனையான சிஎன்ஜி கார்கள்

தொடர்ச்சியாக இரண்டாவது முறையாக டீசலை பின்தள்ளி அதிக வாடிக்கையாளர்கள் விரும்பும் எரிபொருளாக இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது CNG. அட ஆமாங்க, இனி பெட்ரோல்/ டீசல் கார்கள் என்று சொல்லாமல், பெட்ரோல்/ CNG கார்கள் என்றே சொல்லலாம். 2025ம் நிதியாண்டில் தான் முதல் முறையாக இரண்டாவது அதிக பயன்பாடு கொண்ட எரிபொருளானது CNG. கடந்த மார்ச் 31ல் நிறைவடைந்த 2026ம் நிதியாண்டில் டீசல் மற்றும் CNG-க்கு இடையிலான இடைவெளி மேலும் அதிகரித்துள்ளது.

GST-ஆல் பைக்குகளின் விலை கம்மி ஆகிடுச்சுனு சந்தோஷ படாதீங்க!