மாருதி எர்டிகாவை விட 3.33 லட்சம் குறைவான விலை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஈக்கோ (Maruti Suzuki Eeco). அதிகம் பேர் பயணம் செய்ய முடியும் என்பதாலும், மிகவும் விலை குறைவானது என்பதாலும், இந்திய சந்தையில் மாருதி சுஸுகி ஈக்கோ காரின் விற்பனை, ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பாக இருந்து வருகிறது.

டொயோட்டா கார்கள் இந்தியாவில் விலை உயர்வு

இந்தியாவில் விற்பனை செய்யப்பட்டு வரும் கார்களின் விலைகளை உயர்த்தியுள்ளது டொயோட்டா. புதிய நிதியாண்டு தொடங்கும் போது கார்களின் விலைகளை நிறுவனங்கள் உயர்த்துவது அவ்வப்போது மேற்கொள்ளப்படும் நடைமுறை தான். ஏற்கனவே பல்வேறு நிறுவனங்கள் கார்களின் விலை உயர்வு அறிவிப்புகளை சில வாரங்களுக்கு முன்பு வெளியிட்டன. அந்த வரிசையில் டொயோட்டா நிறுவனமும் கார்களின் விலைகளை உயர்த்தியிருக்கிறது.

இன்னோவாவை விட 6.18 லட்சம் குறைவான விலையில் 9 சீட்டர் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எஸ்யூவி (SUV) ரக கார்களில் ஒன்று மஹிந்திரா ஸ்கார்பியோ (Mahindra Scorpio). தற்போதைய நிலையில் மஹிந்திரா ஸ்கார்பியோ கிளாசிக் (Mahindra Scorpio Classic) மற்றும் மஹிந்திரா ஸ்கார்பியோ என் (Mahindra Scorpio N) என மொத்தம் 2 வெர்ஷன்களில் இந்த கார் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

ரூ.2 லட்சம் விலைக்குள்ளான நியோ ரெட்ரோ பைக் மாடல்கள்

இந்திய பைக் வாடிக்கையாளர்களிடையே, அதுவும் இளம் வாடிக்கையாளர்களிடையே நியோ ரெட்ரோ வகை பைக் மாடல்களுக்கு நிறைய மவுசு இருக்கிறது. இதனால் கடந்த ஆண்டுகளில் கிட்டத்தட்ட அனைத்து முன்னணி பைக் தயாரிப்பு நிறுவனங்களும் நியோ ரெட்ரோல் டிசைன் கொண்ட பைக்குகளை இந்தியாவில் விற்பனைக்குக் கொண்டு வந்திருக்கின்றன. இன்றைய நிலையில் இந்தியாவில் விற்பனையில் இருக்கும் குறைவான விலை கொண்ட நியோ ரெட்ரோல் வகை பைக் மாடல்கள் எவை என்பதை இங்கே நாம் பார்க்கலாம்.
Advertisement

ட்ரையம்ப் 349 சிசி இன்ஜின் கொண்ட பைக்குகள் வெளியானது

குறைக்கப்பட்ட இன்ஜின் அளவு கொண்ட புதிய பைக் மாடல்களை இந்தியாவில் வெளியிட்டுள்ளது ட்ரையம்ப். இந்தியாவில் கடந்த சில ஆண்டுகளில் 398.15 சிசி இன்ஜின் கொண்ட தொடக்கநிலை பைக் மாடல்கள் பலவற்றை வெளியிட்டு விற்பனை செய்து வருகிறது. கடந்த ஆண்டு 350 சிசிக்கு மேலான இன்ஜின் கொண்ட பைக் மாடல்கள் மீதான வரியை உயர்த்தியது மத்திய அரசு. இதனால் 400 சிசி பைக்குளின் விலைகளை உயர்த்த வேண்டிய சூழ்நிலைக்குத் தள்ளப்பட்டது ட்ரையம்ப்.

இன்னோவா கிரிஸ்டா விற்பனை இனி இல்லை

2016ம் ஆண்டு முதல் இந்திய வாடிக்கையாளர்களிடம் மிகவும் பிரபலமான எம்பிவி கார் மாடலாக இருந்து வருகிறது இன்னோவா கிரிஸ்டா. டீசல் இன்ஜினுடன் விற்பனை கிரிஸ்டா விற்பனை செய்யப்பட்டு வந்த நிலையில், 2022ல் பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் பவர்ட்ரெயின்கள் கொண்ட இன்னோவா ஹைகிராஸ் மாடலையும் விற்பனைக்குக் கொண்டு வந்தது டொயோட்டா.

கிரேட் காளியே உக்காந்தாலும் தலை இடிக்காது!

இந்தியாவில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் 'டால் பாய் ஹேட்ச்பேக்' (Tall Boy Hatchback) ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R). இதன் சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), ரஸ்லேன் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

பைக்குல திடீர்ன்னு மைலேஜ் குறைஞ்சுடுச்சா? இதான் காரணம்!

சிலருக்கு திடீர்ன்னு அவங்க பைக்குல மைலேஜ் குறைஞ்ச மாதிரி ஒரு ஃபீல் இருக்கும். வழக்கத்தை விடச் சீக்கிரமே பெட்ரோல் காலியாகிட்டதா உணருவாங்க. புதுசா பைக் வாங்குனப்ப இருந்த மைலேஜ் இப்ப இல்லன்னு நினைப்பு வரும். இது ஏன் நடக்கிறது? இது வெறும் மனப்பிராந்தியா? அல்லது இதற்குப் பின்னால் ஏதேனும் அறிவியல் உள்ளதா? விரிவாகக் காணலாம் வாருங்கள்.

குறைவான விலையில் க்ரூஸ் கண்ட்ரோல் வசதி கொண்ட பைக்குகள்

முன்னதாக விலையுயர்ந்த, பெரிய இன்ஜின் கொண்ட பைக்குகளில் மட்டுமே கொடுக்கப்பட்டு வந்த க்ரூஸ் கண்ட்ரோல் (Cruise Control) வசதி தற்போது சிறிய இன்ஜின் கொண்ட பட்ஜெட் பைக்குகளிலும் கொடுக்கப்பட்டு வருகிறது. அதற்கு ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனத்திற்கு தான் நன்றி சொல்ல வேண்டும். பைக்கின் ஆக்சிலரேட்டரை முறுக்காமலேயே நிலையான வேகத்தில் தொடர்ந்து பைக்கை செலுத்துவதற்குப் பயன்படுத்தப்படும் வசதி தான் க்ரூஸ் கண்ட்ரோல்.

பைக் ஹெல்மெட்டை ஒவ்வொருத்தரும் இப்படித்தான் பாத்துக்கணும்!!

பைக்கை இயக்க என்ஜின் எந்த அளவிற்கு முக்கியமானதோ அதைவிட முக்கியமானது ஹெல்மெட் ஆகும். பாதுகாப்பான பயணத்திற்கு ஹெல்மெட் அணியவும் என போலீஸார் தொடர்ந்து வலியுறுத்திவரும் நிலையில், ஹெல்மெட்களை முறையாக பராமரிப்பது எவ்வாறு என்பது உங்களில் சிலருக்கு சந்தேகமாக இருக்கலாம். அத்தகையவர்களுக்கானதே இந்த பதிவு...

வெளிநாட்டிலும் 400 சிசி பல்சர் பைக்கை வெளியிட்டுள்ளது பஜாஜ்

இந்தியாவில் புதிதாக 350 சிசி இன்ஜினுடன் கூடிய பல்சர் மற்றும் டாமினார் மாடல்களை வெளியிட பஜாஜ் திட்டமிட்டு வருவதற்கு இடையில் வெளிநாடுகளிலும் புதிய பைக்கை வெளியிட்டுள்ளது. ஸ்பெயின் நாட்டில் புதிய பல்சர் NS400Z பைக் மாடலை வெளியிட்டுள்ளது பஜாஜ். இதனை பல்சர் NS400 என்ற பெயரில் அந்நாட்டில் வெளியிட்டுள்ளது.

அந்த நிறுவனம் ஸ்கூட்டர்களை அறிமுகம் செய்ய போகுதா...

இந்தியாவின் எலெக்ட்ரிக் கார் (Electric Car) சந்தையில் மிகவும் வேகமாக பிரபலமடைந்து வரும் நிறுவனங்களில் ஒன்று வின்ஃபாஸ்ட் (VinFast). வியட்நாம் நாட்டை சேர்ந்த வின்ஃபாஸ்ட் நிறுவனம் தமிழ்நாட்டின் தூத்துக்குடியில் பிரம்மாண்டமான தொழிற்சாலையை அமைத்துள்ளது. தற்போதைய நிலையில் வின்ஃபாஸ்ட் நிறுவனம் இந்திய சந்தையில் 2 எலெக்ட்ரிக் கார்களை மட்டுமே விற்பனை செய்து வருகிறது.
Advertisement

15.89 லட்சத்தில் கிடைக்கும் புதிய ரெனால்ட் கார் ஷோரூமில்!

ரெனால்ட் (Renault) நிறுவனத்தில் இருந்து புதிய தலைமுறை டஸ்டர் (Duster) கடந்த மார்ச் மாதத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், புதிய டஸ்டர் காரின் மிட்-வேரியண்ட்டான டெக்னோ (Techno) டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளது. இதுதொடர்பாக இணையத்தில் வெளியாகி உள்ள படங்களை பற்றி இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

ஐபிஎல்-க்கு மத்தியில் 12 கோடி ரூபாய் காரில் உலா வந்த வீரர்!

ஹர்திக் பாண்ட்யா (Hardik Pandya), இந்திய கிரிக்கெட் (Cricket) அணியின் நட்சத்திர வீரர் என்பது நம் எல்லாருக்கும் தெரிந்த விஷயம். நடைபெற்றுவரும் 2026 ஐபிஎல் (IPL) தொடரில் மும்பை இந்தியன்ஸ் (Mumbai Indians) கேப்டனாக அணியை வழிநடத்தி வரும் ஹர்திக் பாண்ட்யா அதற்கு மத்தியில் தனது விலையுயர்ந்த கார்களிலும் அவ்வப்போது காட்சித்தந்து வருகிறார். அந்த வகையில் தற்போது தனது ரூ.12 கோடி மதிப்பிலான ஃபெராரி (Ferrari) காரில் மும்பை சாலைகளில் உலா வந்துள்ளார்.

டியூப்லெஸ் டயர் மாட்டினால் மைலேஜ் அதிகமாகுமா?

டியூப்லெஸ் மற்றும் ட்யூப் பைக் டயர்களுக்கு இடையே உள்ள வேறுபாடுகள், செலவு, செயல்திறன் நன்மைகள் மற்றும் டியூப்லெஸ் விருப்பங்கள் ஏன் முதலீட்டிற்கு மதிப்புள்ளதாக இருக்கலாம் என ஆராயுங்கள்.

எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை எந்த பிராண்டில் வாங்குவதுனு குழப்பமா?

இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களுக்கான மார்க்கெட் மெல்ல மெல்ல விரிவடைந்து வருவதாக கடந்த சில வருடங்களாகவே கூறி வருகிறோம். இதன் காரணமாகவே, கடந்த மார்ச் 31ஆம் தேதியோடு நிறைவடைய இருந்த பிரதமர் இ-டிரைவ் (PM E-Drive) திட்டத்தை மத்திய அரசாங்கம் இந்த ஜூலை மாதம் வரையில் நீட்டித்து எலெக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கான மானியத்தை தொடர்ந்து வழங்கி வருகிறது.

பைக் தாருமாறா மைலேஜ் தரனுமா இதை பண்ணுங்க!

பிரேக்குகள் மற்றும் கியர்களின் சரியான பயன்பாடு பைக் மைலேஜை எவ்வாறு கணிசமான அளவு பெட்ரோலைச் சேமிப்பது மற்றும் மேம்படுத்தப்பட்ட எரிபொருள் திறன் ஆகியவற்றிற்கு வழிவகுக்கும் என்பதைக் கண்டறியவும்.

இரவில் கார் ஓட்டும்போதுதான் இன்னும் உஷாரா இருக்கனும்...

பகல் நேரங்களை விட இரவு நேரங்களில் வாகனம் ஓட்டும்போது வேகத்தையும்,தூரத்தையும் கணிப்பதில் பல சிரமங்கள் ஏற்படுகின்றன.தவிர,எதிரே வரும் வாகனங்களின்ம முகப்பு விளக்குகளின் வெளிச்சம் நம் கண்களை சில வினாடிகள் இருளாக்கி விடும்.இதனால்,இரவு நேரங்களில் அதிக விபத்துக்கள் நடக்கின்றன.பகல் நேரத்தைவிட இரவு நேரத்தில்,விபத்துக்கள் மூன்று மடங்கு அதிகம் நிகழ்வதாக புள்ளிவிபரங்கள் தெரிவிக்கின்றன.பகல் நேரத்தை போன்று இரவு நேரங்களில் வாகன ஓட்டிகளுக்கு போதிய வெளிச்சமும்,பார்வை திறனும் கிடைப்பதில்லை.வாகனத்தின் முகப்பு விளக்குகள் குறைந்த தூரத்திற்கு மட்டுமே வெளிச்சத்தை தருகின்றன.இதனால்,இரவு நேரங்களில் வாகன ஓட்டிகள் சாலையை கணித்து ஓட்டுவதில் பல்வேறு சிக்கல்கள் எழுகின்றன. எனவே,இரவு நேர பயணங்களில் டிரைவர்கள் மிகவும் விழிப்புடன் செயல்படுவதற்கான சில முன் யோசனைகள்...•கார்களில் இரவு நேர பயணம் செல்வதை பெரும்பாலும்,தவிர்த்து விடுங்கள்.தவிர்க்க முடியாத காரணங்களால் செல்லும்போது,டிரைவர் இருந்தாலும் கார் ஓட்ட தெரிந்த மற்றொருவர் காரில் இருப்பது அவசியம்.அவசர சமயங்களிலோ அல்லது டிரைவருக்கு அயர்ச்சி ஏற்பட்டாலோ மற்றொருவர் காரை ஓட்டலாம்.•கார்களில் அடிக்கடி இரவு பயணங்கள் செல்லும் தேவை இருந்தால்,வெள்ளை நிற காரில் செல்வது பாதுகாப்பானது.கார் வாங்கும்போதே இதை நினைவில் கொள்ளுங்கள். இரவில் சாலை ஓரங்களில் நிறுத்தினாலோ அல்லது இருளான பகுதிகளில் செல்லும்போதோ பின்னால் வரும் வாகன ஓட்டிகள் மற்றும் எதிரே வரும் வாகன ஓட்டிகளுக்கு வெள்ளை நிறம் கொண்ட கார் தெளிவாக தெரியும்.•பவர் ஸ்டியரிங் மற்றும் அதிக எஞ்சின் திறன் கொண்ட கார்களை ரத்த அழுத்தம்,சர்க்கரை வியாதி உள்ளவர்கள் இரவில் ஓட்டுவதை தவிர்க்க வேண்டும்.•இரவு நேர பயணத்தின்போது முகப்பு கண்ணாடிகள்,முகப்பு விளக்குகள்,பின்பக்கமுள்ள எச்சரிக்கை விளக்குகளை துடைத்து சுத்தமாக வைத்திருக்க வேண்டும்.•முகப்பு விளக்குகள் எதிரில் சரியான திசையில் ஒளிரும் வகையில் பொருத்தி இருக்க வேண்டும்.இல்லையென்றால் உங்களுக்கு மட்டுமல்ல எதிரில் வாகன ஓட்டிகளுக்கும் சிரமத்தை ஏற்படுத்தும்.•மது அருந்திவிட்டு இரவில் வாகனம் ஓட்டுவதை முற்றிலும் தவிர்த்து விடுங்கள்.ஆல்கஹால் தரும் ஒரு சில மணி நேர சந்தோஷம்,ஒரு சில வினாடிகளில் உங்கள் உயிரையே பறித்துவிடக்கூடும். •முன்னால் செல்லும் வாகனத்துக்கும்,உங்கள் வாகனத்துக்கும் இடையே போதுமான இடைவெளி இருக்குமாறு பார்த்து வாகனத்தை ஓட்டுங்கள்.மேலும்,வாகனத்தை பின்தொடரும்போதும்,எதிரில் வாகனம் வரும்போதும் முகப்பு விளக்கை டிம் செயது ஓட்டுங்கள்.•தொடர்ந்து கார் ஓட்டுவதை தவிர்த்து விடுங்கள்.குறிப்பிட்ட தூரத்திற்கு ஒரு முறை காரை நிறுத்தி டீ,காபி அல்லது கூல் டிரிங்ஸ் குடித்து உடலை ரிலாக்ஸ் செய்து கொள்ளுங்கள்.•எதிரில் அதிக வெளிச்சத்துடனும்,அதிவேகமாகவும் வாகனங்கள் வருவதை உணர்ந்தால்,வேகத்தை குறைத்து கவனமாக ஓட்டுங்கள்.நள்ளிரவில் தூக்கம் வருவதாக தோன்றினால்,பார்க்கிங் லே-பை அல்லது மக்கள் நடமாட்டமிக்க பகுதிகளில் காரை நிறுத்திவிட்டு குட்டி தூக்கம் போடுங்கள்.அதன்பின்,முகத்தை தண்ணீரில் நன்றாக கழுவிக்கொண்டு பயணத்தை தொடர்வது நல்லது.•எதிர் திசையில் வாகனம் வருவது தூரத்தில் தெரிந்தாலும்,முன்னாள் செல்லும் வாகனத்தை அவசரப்பட்டு ஓவர்டேக் செய்ய வேண்டாம்.இரவு நேரத்தில் எதிரில் வரும் வாகனம் தொலைவு மற்றும் வேகத்தை கணிப்பது கடினம்.இதுபோன்று ஓவர்டேக் செய்வதால்தான் அதிக விபத்துக்கள் நிகழ்கின்றன.காரில் இரவு பயணம் செல்லும்போது மேற்கண்ட சில எளிய வழிமுறைகளை பின்பற்றினால்,உங்கள் இரவு பயணமும் மகிழ்ச்சியானதாகவே அமையும் என்பதில் எள் அளவும் ஐயமில்லை.

மாருதி காரை இந்தவொரு காரணத்திற்காகவே தைரியமாக வாங்கலாம்!

மாருதி சுஸுகி இந்தியா லிமிடெட் (Maruti Suzuki India Limited) நிறுவனம் கடந்த மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த 2025-26 நிதியாண்டில் நாடு முழுவதும் கூடுதலாக 502 சர்வீஸ் மையங்களை அமைத்துள்ளது. இந்தியாவில் கார்களுக்கான சேவைகளை வழங்குதில் பெரிய நெட்வொர்க் உடன் செயல்படும் மாருதி சுஸுகி கடந்த நிதியாண்டில் மேலும் 502 சர்வீஸ் செண்டர்கள் மூலமாக தனது நெட்வொர்க்கை விரிவுப்படுத்தி உள்ளது.

ஆல்டோ விலையில் களமிறங்கிய புது கார்!

இந்திய சந்தையில் சமீப காலமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனம் மிகவும் சிறப்பான வளர்ச்சியை பதிவு செய்து வருகிறது. இதற்கு மிக முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருப்பது டாடா பன்ச் (Tata Punch) ஆகும். டாடா பன்ச் கார், ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை பதிவு செய்து கொண்டுள்ளது.
Advertisement

மாருதி கார்களுக்கு இணையாக விற்பனையாகும் இரு டாடா கார்கள்!

2026 மார்ச் மாதத்தில் இந்தியாவில் கார்கள் விற்பனை வலுவான வேகத்தைப் பதிவு செய்துள்ளது. குறிப்பாக, கடந்த மாதத்தில் அதிகம் விற்பனையான முதல் 10 கார்களின் விற்பனை எண்ணிக்கை 1,76,586 யூனிட்களை எட்டி, கடந்த 2025 ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனையான 1,58,063 யூனிட்களை விட 11.72% என்கிற ஆண்டுக்கு ஆண்டு (YoY) வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.

ஹீரோவின் இந்த ஸ்கூட்டரை ஏன் வாங்க வேண்டும்?

இந்தியாவில் ஹீரோ மோட்டோகார்ப் விற்பனை செய்து வரும் 110 சிசி ஸ்கூட்டர்களில் ஒன்று டெஸ்டினி 110. ஹோண்டா ஆக்டிவா 110, டிவிஎஸ் ஜூப்பிட்டர் 110 ஆகிய மற்ற 110 சிசி ஸ்கூட்டர்களுக்குப் போட்டியாக விற்பனை செய்யப்பட்டு வருகிறது ஹீரோ டெஸ்டினி 110 ஸ்கூட்டர்.

எல்லாரும் வாங்கக்கூடிய மலிவான விலையில் புதிய ஹண்டர் 350 பைக்

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் அதன் ஹண்டர் 350 (Hunter 350) மோட்டார்சைக்கிளில் புதியதாக விலை குறைவான 'பிரீமியம்' (Premium) என்கிற வேரியண்ட்டை விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது. ஹண்டர் 350 பைக்கின் ஏற்கனவே உள்ள எண்ட்ரி-லெவல் வேரியண்ட்டான ரெட்ரோ (Retro) மற்றும் மிட் வேரியண்ட்டான மெட்ரோ (Metro)-க்கு மத்தியில் புதிய பிரீமியம் வேரியண்ட் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.

வெளிநாட்டு கார் கம்பெனிகளை அடித்து ஓட விட்ட டாடா & மஹிந்திரா

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களுக்கான தேவை கடந்த சில வருடங்களில் வெகுவாக அதிகரித்துள்ளது. எந்த அளவிற்கு என்றால், கடந்த பிப்ரவரி மாதத்தில் 14 ஆயிரத்து 712 எலெக்ட்ரிக் கார்கள் (Electric Cars) விற்பனை செய்யப்பட்டு இருந்த நிலையில், அதற்கடுத்த கடந்த மார்ச் மாதத்தில் 22 ஆயிரத்து 315 எலெக்ட்ரிக் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. அதாவது, அந்த மாதத்தில் விற்பனை செய்யப்பட்டு இருந்தவற்றை காட்டிலும் பாதிக்கு மேல் கூடுதலாக இந்த ஆண்டு மார்ச் மாதத்தில் விற்பனை செய்யப்பட்டுள்ளது.

யமஹா ஸ்கூட்டர்கள் இந்தியாவில் விலை உயர்த்தப்பட்டது

யமஹா நிறுவனமானது இந்தியாவில் தாங்கள் விற்பனை செய்து வரும் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. இந்தியாவில் தற்போது ரேZR 125, ஃபேஸினோ 125 மற்றும் ஏராக்ஸ் 155 ஆகிய ஸ்கூட்டர் மாடல்களை விற்பனை செய்து வருகிறது யமஹா. இதில் ரேZR மற்றும் ஏராக்ஸ் ஸ்கூட்டர் மாடல்களின் விலைகளை உயர்த்தியுள்ளது. ஃபேஸினோ மாடலினை விரைவில் யமஹா அப்டேட் செய்யவிருப்பதால் தற்போது விலையை உயர்த்தவில்லை எனத் தெரிகிறது.