வேகத்தை கடைபிடிப்பதில்தான், கார் ஓட்டும் கலையின் சூட்சுமம் அடங்கி இருக்கிறது. எந்த இடத்தில் அல்லது சாலை நிலவரத்திற்கு தக்கவாறு வேகத்தை கடைபிடிப்பதுதான் கார் ஓட்டுவதற்கான அடிப்படை சூட்சுமம். அடுத்து கார் ஓட்டும்போது முழு கவனத்தையும் சாலையில் வைப்பது அவசியம். ஆனால், பலரும் தங்களிடம் அதி உயர் பாதுகாப்பு தொழில்நுட்பங்கள் கொண்ட கார் இருப்பதாக நினைத்துக் கொண்டு அதி வேகத்தில் செல்வதால் பல்வேறு மோசமான விளைவுகளை சந்திக்கின்றனர்.
பொதுவாக ஆட்டோமேட்டிக் கார்களை ஓட்டும்போது கார் ஓட்டுனர் எண்ண ஓட்டத்திற்கு தக்கவாறு பிக்கப் கிடைப்பதில் சிரமம் இருக்கிறது. இதனை தவிர்க்க, சரியான எஞ்சின் சுழல் வேகத்தில் பேடில் ஷிஃப்டர்களை பயன்படுத்தி கியர்களை கூட்டிக் குறைக்கும் வாய்ப்பை ஓட்டுனர் பெற முடியும். ஈரப்பதமான சாலைகள், ஏற்றமான மலைச்சாலைகளில் செல்லும்போது ஓட்டுனர் அதிக கட்டுப்பாட்டுடன் செலுத்துவதற்கான வாய்ப்பை பெறலாம்.