22 வருடங்களுக்கு பிறகு மீண்டும் விற்பனைக்கு வந்தது சியரா!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ஒரு கார் டாடா சியரா (Tata Sierra). எஸ்யூவி (SUV) ரகத்தை சேர்ந்த இந்த காரின் விற்பனை கடந்த 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இந்த சூழலில், 22 வருடங்களுக்கு பின்னர், டாடா சியரா இந்திய சந்தையில் இன்று (நவம்பர் 25) மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என டாடா மோட்டார்ஸ் (Tata Motors) அறிவித்திருந்தது.

7 பேர் உயிரை காவு வாங்கிய தனியார் பஸ் விபத்து!

தென்காசியில் நேற்று 2 தனியார் பஸ்கள் நேருக்கு நேர் மோதிய நிலையில் 7 பேர் பலியாகியுள்ளனர். 40க்கும் மேற்பட்டோர் காயமடைந்ததாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் நடந்தது எப்படி? இந்த சம்பவத்தை எப்படி தடுத்திருக்க முடியும்? எதிர்காலத்தில் இது போன் சம்பவம் நடக்காமல் எப்படி தடுப்பது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நேரடியாக 5000 பேருக்கு வேலை! ஓசூரில் இப்படி ஒரு கம்பெனியா?

ஸ்டெலன்டிஸ் நிறுவனம் இந்தியாவில் அதுவும் நமது ஒசூரில் நடத்தி வரும் ஆலையை உலகளவில் இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ் தயாரிப்பின் மையமாக மாற்றியுள்ளது. இந்நிறுவனம் இந்தியாவிலேயே இன்ஜின் மற்றும் கியர் பாக்ஸ்களை தயாரித்து வெளிநாட்டுகளுக்கு ஏற்றுமதி செய்து வருகிறது. எதிர்காலத்திற்கு தேவையான இன்ஜின்களையும் இந்த ஆலையிலேயே தயாரிக்க அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

டாடாவில் இந்த கார் வந்த பிறகு மொத்த கதையும் மாறிடும்!

புதிய தோற்றப்பொலிவு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளுடன் டாடா பன்ச் ஃபேஸ்லிஃப்ட் கார் 2026 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீப மாதங்களாக பலமுறை சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டு, ஸ்பை ஷாட்கள் வெளியாகி வருகின்றன. இந்த ஸ்பை ஷாட்கள் காரின் முன், பக்கவாட்டு மற்றும் பின் தோற்றத்தை தெளிவாகக் காட்டுகின்றன.
Advertisement

10 லட்ச ரூபாய்க்குள் கார் வாங்கினால் இது இருக்கானு பாருங்க!!

பத்து லட்சம் ரூபாய்க்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில் கிடைக்கும் கார்களுள் சில கார்களில் பின் இருக்கை வரிசையில் இருக்கைகளுக்கு மத்தியில் ஆர்ம்ரெஸ்ட் (Arm Rest) வசதி வழங்கப்படுகிறது. இது, குறிப்பாக கார்களின் உயர்தர வேரியண்ட்களில், பயணிகளின் வசதியை மேம்படுத்தும் வகையில் வழங்கப்படுகிறது. இந்த பட்டியலில் காம்பாக்ட் செடான், எஸ்யூவி மற்றும் எம்பிவி ரக கார்கள் அடங்குகின்றன.

20 நிமிடங்களில் விற்று தீர்ந்த காரின் டெலிவரி தொடங்கியது!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த 2025 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் (2025 Skoda Octavia RS) கார், சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இந்திய சந்தைக்கு என மொத்தம் 100 ஸ்கோடா ஆக்டேவியா ஆர்எஸ் கார்கள் மட்டுமே ஒதுக்கப்பட்டிருந்தன.

30 லட்ச ரூபா காரில் சொகுசு கார்களுக்கே சவால்விடும் மஹிந்திரா

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் நவம்பர் 26 மற்றும் 27ஆம் தேதிகளில் பெங்களூருவில் 'ஸ்க்ரீம் எலக்ட்ரிக்' (Scream Electric) என்கிற நிகழ்ச்சியை நடத்த உள்ளது. இந்த நிகழ்ச்சியில் மஹிந்திராவின் இரண்டு புதிய எலெக்ட்ரிக் எஸ்யூவி (Electric SUV) கார்கள் அறிமுகப்படுத்தப்பட உள்ளன. இதன்படி, நவம்பர் 26 அன்று பிஇ 6 (BE 6) எலெக்ட்ரிக் காரின் சிறப்புப் பதிப்பு வெளியாக உள்ளது.

சலூன் தொழிலை கத்துக்கிட்டவர் இன்று பென்ஸ் காருக்கு ஓனர்!!

இந்தியாவின் பிரபலமான சிகை அலங்கார நிபுணர்களுள் ஒருவர், அலீம் ஹகீம் (Aalim Hakim) ஆவார். நடிகர் சல்மான் கான், விராட் கோலி போன்ற பல பிரபலங்களுக்கு இவர் முடி அலங்காரம் செய்பவராக உள்ளார். இந்த நிலையில் சமீபத்தில், அலீம் ஹகீம் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்தின் புதிய சொகுசு கன்வெர்ட்டிபிள் ஸ்போர்ட்ஸ் கார் ஒன்றை வாங்கியுள்ளார்.

கால் நூற்றாண்டுக்கு பின் மறுபடியும் வருது!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டு தொடங்கப்பட்ட டாடா சியரா காரின் விற்பனை 2003ம் ஆண்டு நிறுத்தப்பட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, புதிய தலைமுறை டாடா சியரா கார், இந்திய சந்தையில் நாளை (நவம்பர் 25) விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

13 வருஷமா ஒரே இடத்தில் நிற்கும் ஏர் இந்தியா விமானம் விற்பனை!

மூன்று ஆண்டுகளுக்கு முன்பு டாடா சன்ஸ் மற்றும் சிங்கப்பூர் ஏர்லைன்ஸ் (Tata Sons And Singapore Airlines)-க்கு விற்கப்பட்டு தனியார்மயமாக்கப்பட்ட ஏர் இந்தியாவின் போயிங் 737 (Boing 737) விமானம், தற்போது வேறொரு நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்பட்டுள்ளது. விமானங்கள் வேறொரு நிறுவனத்திற்கு விற்கப்படுவது வழக்கமாக நடக்கக்கூடிய ஒன்றுதான் என்றாலும், இந்த குறிப்பிட்ட போயிங் விமானம் 3 வருடங்களுக்கு முன் வேறொரு நிறுவனத்தின் வசம் சென்றாலும், கடந்த சுமார் 13 ஆண்டுகளாக பயன்படுத்தப்படாமல் ஒரே இடத்தில் நிறுத்தப்பட்டு இருந்த நிலையில், தற்போது விற்பனை செய்யப்பட்டு இருப்பது கவனத்தை ஈர்த்துள்ளது.

உலகையே மிரள விட்ட 36 கிமீ மைலேஜ் கார் இந்தியாவுக்கு வருது!

இந்தியாவை சேர்ந்த வாடிக்கையாளர்கள் மிகவும் விலை குறைவான அதே நேரத்தில் அதிக மைலேஜ் (Mileage) வழங்க கூடிய கார்களுக்கு அதிக முக்கியத்துவம் வழங்குவார்கள். எனவே அப்படிப்பட்ட கார்களை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில், பல்வேறு முன்னணி நிறுவனங்களும் தீவிரம் காட்டி வருகின்றன. இதில், டொயோட்டா (Toyota) நிறுவனமும் ஒன்று.

நாளை அறிமுகமாகும் புது டாடா காரை எந்த கலரில் வாங்கலாம்?

புதிய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார் நாளை (நவம்பர் 25) சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட உள்ளது. ஹூண்டாய் கிரெட்டா, மாருதி சுஸுகி கிராண்ட் விட்டாரா மற்றும் டாடா கர்வ் போன்ற ஏற்கனவே விற்பனையில் இருக்கும் சவாலான கார்களுடன் இது போட்டியிடும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த நிலையில், புதிய சியரா காருக்கு வழங்கப்பட உள்ள கலர் ஆப்ஷன்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.
Advertisement

இவங்களா மஹிந்திரா தார் வாகனத்தை ஓட்டிட்டு வந்தது?

பாலிவுட் நடிகர் மற்றும் தயாரிப்பாளர் ஜான் ஆபிரகாம் ஒரு தீவிர வாகன ஆர்வலர். அவர் எஸ்யூவிகள் மீது மிகுந்த ஆர்வம் கொண்டவர். மேலும், பல உயர்ரக மோட்டார் சைக்கிள்கள் மற்றும் சூப்பர்பைக்குகளையும் வைத்துள்ளார். இந்த மாத தொடக்கத்தில், சர்வதேச ஆண்கள் தினத்தை (நவம்பர் 19) முன்னிட்டு, ஏழு பெண்கள் தங்கள் மஹிந்திரா தார் எஸ்யூவிகளை ஓட்டி மும்பையில் உள்ள அவரது அலுவலகத்திற்கு வந்து அவருக்கு இன்ப அதிர்ச்சி அளித்தனர். மஹிந்திரா தார் மீதான தங்கள் ஆர்வத்தையும் அவர்கள் பகிர்ந்துகொண்டனர். இந்தச் சம்பவத்தின் காணொளி பின்னர் மஹிந்திரா தாரின் அதிகாரப்பூர்வ இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிரப்பட்டது.

சின்ன விளக்கு தான்... இரவு பயணத்தில் ரொம்ப தேவையா இருக்கும்!

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் சில கார்களில், பின் இருக்கைகளில் வாசிப்பதற்கான விளக்கு (Rear Reading Lamp) வசதி கிடைக்கிறது. குறிப்பாக, இந்த விளக்கு இரவு நேர பயணங்களின் போதும், காரில் பயணத்தப்படி புத்தகம் வாசிப்பதற்கும் பெரிதும் உதவியாக இருக்கின்றன. இந்த வசதி உடன் வரும் கார்களை பற்றிய விவரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

33 கிமீ மைலேஜ் தரும் காரை இந்த ரேட்ல விக்க பெரிய மனசு வேணும்

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift). இதன் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report), காடிவாடி தளத்தில் வெளியாகியுள்ளது.

4 லட்சம்பேர் இந்த காரை நம்பி வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ மற்றும் எக்ஸ்யூவி 300 ஆகிய கார்களை இதுவரை 4 லட்சம் பேர் வாங்கியுள்ளதாக அந்நிறுவனம் தெரிவித்துள்ளது. இ்நத சாதனையை வெறும் 7ஆண்டுகளில் அந்நிறுவமன் செய்துள்ளுது. அதுவும் 3எக்ஸ்ஓ என பெயர் மாறிய பிறகு அதிக அளவில் வாகனங்கள் விற்பனையாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அவரை போலவே ஸ்டைலான காரை வாங்கிய கிரிக்கெட் வீராங்கனை!

ஜே.எஸ்.டபிள்யூ எம்ஜி மோட்டார் (JSW MG Motor) நிறுவனம் இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்வதில் சமீப காலமாக தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறது. இந்தியாவின் விலை குறைவான எலெக்ட்ரிக் காராக கோமெட் இவி (Comet EV) எலெக்ட்ரிக் காரை அறிமுகப்படுத்தி ஷாக் கொடுத்த எம்ஜி, அதன்பின் BaaS என்கிற பேட்டரி சுழற்சி முறை உடன் அறிமுகம் செய்த விண்ட்சர் இவி (Windsor EV) எலெக்ட்ரிக் காரை ஒவ்வொருத்தரும் போட்டிப் போட்டு வாங்கி வருகின்றனர்.

ரூ10 கோடிக்கு கார் வாங்கி நடிகைக்கு பரிசளித்த கணவர்!

பாலிவுட் நடிகை ஒருவருக்கு அவரது பணக்கார கணவர் பிறந்தநாள் பரிசாக ரூ10 கோடி மதிப்பிலான காரை வாங்கி பரிசளித்துள்ளார். இந்த காரில் இருந்து எடுக்கப்பட்ட புகைப்படத்தை அவர் சமூகவலைதளங்களில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வெறும் நாலே கால் லட்சத்துக்கு புது காரா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் மிகவும் விலை குறைவான ஆரம்ப நிலை ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று ரெனால்ட் க்விட் (Renault Kwid). இந்த காரின் நடப்பு 2025ம் ஆண்டு அக்டோபர் மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) வி3 கார்ஸ் தளத்தில் தற்போது வெளியாகியுள்ளது.

ஒரே காரை 9.17 லட்சம் கி.மீ ஓட்டிய பாட்டி

இந்தியாவில் கார் வாங்கும் உரிமையாளர்கள் பலர் அதை நீண்ட காலம் மற்றும் நீண்ட தூரம் பயன்படுத்த மாட்டார்கள். புதிதாக கார் வாங்கபவர்கள் கூட அதிகபட்சம் 1-2 லட்சம் கி.மீ வரை காரை ஓட்டி விட்டு அதை விற்று வேறு காரை வாங்கிவிடுார்கள். நீண்ட தூரம் காரை பயன்படுத்தினால் காரில் பிரச்சனைகள் வரும் என்பதால் இப்படியான முறையை கையாளுகின்றனர். ஆனால் 92 வயது பாட்டி ஒருவர் ஒரே காரை 9.1 லட்சம் கி.மீ ஓட்டினார் என்றால் நம்ப முடிகிறதா அதுவும் வெறும் 4 ஆண்டுகளில் இவ்வளவு பயன்படுத்தியுள்ளார். இது குறித்த விரினா விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.
Advertisement

இந்த காரை 1.65 லட்சம் பேர் வாங்கிட்டாங்க!

மாருதி நிறுவனத்தின் பிரபலமான காரான வேகன்ஆர் கார் கடந்த 10 மாதங்களில் 1.65 லட்சம் பேர் வாங்கியுள்ளனர். இந்த கார் நீண்ட காலமாக சிறப்பான விற்பனையில் இருக்கும் நிலையில் தற்போதும் இந்த காரின் விற்பனை குறையாமல் இருக்க என்ன காரணம்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

27கிமீ மைலேஜ் தரும் இந்த காரை 1.40 லட்சம் பேர் வாங்கிட்டாங்க

டாடா நிறுவனத்தின் பஞ்ச் கார் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் பிரபலமான காராக இருக்கிறது. இந்த 2025ம் ஆண்டு சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் கடந்த ஜனவரி முதல் அக்டோர்பர் மாதம் வரையிலான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

கார் டேஸ்போர்டுக்கு மேல் மறைவா இப்படியொரு மிரர் வழங்கப்படுதா

கார்களில் வேனிட்டி மிரரை பற்றி கேள்விப்பட்டு உள்ளீர்களா? காருக்குள் முன் இருக்கைகளுக்கு எதிராக சன்ஷேடிற்கு உள்ளே வழங்கப்படும் கண்ணாடியை தான் இவ்வாறு அழைக்கின்றனர். பெரும்பாலும் இது முக ஒப்பனையை சரிபார்க்கவும், தலைமுடியைச் சீர்படுத்தவும் தான் அதிகமாக பயன்படுகிறது. இருப்பினும், சில ஓட்டுநர்கள் இவற்றை காரின் பக்கவாட்டில் பார்க்க முடியாத பகுதிகளைக் கவனிக்க உதவும் இரண்டாம் நிலை ஓட்டுநர் உதவி கருவியாகவும் பயன்படுத்துகின்றனர்.

இதற்கு அப்புறம் ராயல் என்ஃபீல்டின் ரேஞ்ச் எங்கேயோ போக போகுது

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield) நிறுவனம் கான்டினென்டல் ஜிடி750 (Continental GT750) பந்தய பைக்கின் முன்மாதிரியை, கோவாவில் நடைபெற்றுவரும் மோட்டோவெர்ஸ் 2025 (Motoverse 2025) நிகழ்ச்சியில் காட்சிப்படுத்தி உள்ளது. சமீபத்தில், சர்வதேச அளவில் இத்தாலியில் நடைபெற்ற EICMA 2025 கண்காட்சியில் காட்சிப்படுத்தப்பட்ட பிறகு, இந்தியாவில் முதல்முறையாக தற்போது இந்த கான்செப்ட் பைக் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.

பைக்குல போகும் போது குழந்தைகளும் ஹெல்மெட் போடனுமா?

பைக்கில் குழந்தைகளை அழைத்து செல்லும் போது கடைபிடிக்க வேண்டிய விதிகளை உடனடியாக அமலுக்கு கொண்டு வருமாறு கர்நாடக மாநில உயர்நீதிமன்றம் அம்மாநில அரசுக்கு அறிவுறுத்தியுள்ளது. இது என்ன குழந்தைகளை அழைத்து செல்லும் புதி விதிமுறை என்ற குழப்பம் உங்களுக்கு ஏற்படலாம். இது குறித்த விரிவான விபரங்களை தான் இங்கே காணப்போகிறோம்.