இந்த காரின் விலையை திடீரென உயர்த்திய டொயோட்டா!

டொயோட்டா நிறுவனம் மாருதி நிறுவனத்தின் ஃபிராங்க்ஸ் காரை ரீபேட்ஜ் செய்து டொயோட்டா டைசர் என்ற பெயரில் விற்பனை செய்து வரும் நிலையில் இந்த காரின் விலையை ரூ2500 வரை அனைத்து வேரியன்ட்களிலும் உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இந்த கார் விலை உயர்வு குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்டியின் பரபரப்பான சாலையை கிழித்துக் கொண்டு சென்றது இவரா?

முகேஷ் அம்பானி (Mukesh Ambani), இந்தியாவின் பெரும் பணக்காரரான இவருக்கு அறிமுகமே தேவை இருக்காது என நினைக்கிறேன். அந்த அளவுக்கு தனது அல்ட்ரா-லக்சரி வாழ்க்கையின் மூலமாக மற்றவர்கள் அனைவரையும் பொறாமைப்பட வைக்கும் முகேஷ் அம்பானியின் குடும்பத்தினர் பயன்படுத்தும் கார்களை எல்லாம் பார்த்தால் கோடி ரூபாய்களில் விலைமிக்கவை ஆக இருக்கும்.

இவ்வளவு பேர் இந்த காரை வாங்கிட்டாங்களா?

மஹிந்திரா நிறுவனத்தின் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் கடந்த ஜூன் மாதம் சிறப்பான விற்பனையை பெற்றுள்ளது. கடந்தாண்டு ஜூன் மாத விற்பனையை ஒப்பிடும் போது சிறிது சரிவு தான் என்றாலும், கடந்த ஜூன் மாத விற்பனை சிறப்பான எண்களாக இருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரஜினி பட நடிகையின் கணவர் வாங்கிய காஸ்ட்லி கார்!

பிரபல பாலிவுட் நடிகர் ரன்வீர் சிங் சமீபத்தில் தனது பிறந்தநாளை முன்னிட்டு புதிய காஸ்ட்லியான எலெக்ட்ரிக் கார் ஒன்றை வாங்கியுள்ளார். இந்த கார் டெலிவரி செய்யும் போது எடுக்கப்பட்ட வீடியோ ஒன்று வைரலாக பரவி வருகிறது. இந்த வீடியோவை பார்த்து கார் இவ்வளவு வித்தியாசமாக இருக்கிறதே பலர் புகழ்ந்து வருகின்றனர். இந்த நடிகர் யார் என தமிழ்நாட்டில் பலருக்கு தெரியவில்லை. இவர் ரஜினியுடன் கோச்சடையான் படத்தில் நடித்த நடிகை தீபிகா படுகோனேவின் கணவர் தான் இவர் வாங்கிய கார் குறித்து பார்ப்போமா?
Advertisement

டாடா கார் கம்பெனியை இப்படி பார்க்கவே கஷ்டமா இருக்கு!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), வாழ்ந்துக் கெட்ட குடும்பம் என்பது போல், கார்கள் விற்பனையில் கடந்த 2024ஆம் ஆண்டு வரையில் வேகமாக வளர்ந்துவந்த நிலையில், கடந்த சில மாதங்களாக பெரிதும் சரிவை சந்தித்து வருகிறது. வாழ்வில் நாம் எடுக்கும் ஒவ்வொரு சின்ன சிறு முடிவுகள் கூட நமது வாழ்வில் எந்த அளவிற்கு தாக்கத்தை ஏற்படுத்தக்கூடும் என்பதற்கு இணங்க, சமீபத்தில் டாடா மோட்டார்ஸ் எடுத்த ஒரு சிறிய முடிவு அதன் கார்கள் விற்பனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. அது என்ன என்பதை பின்னர் பார்க்கலாம், முதலில் டாடா மோட்டார்ஸில் இருந்து கடந்த ஜூன் மாதத்தில் எத்தனை கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன என்கிற விபரங்களை பார்ப்போம்.

குறுகிய கால சலுகை உடன் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர்!!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்வதற்காகவே 'விடா' (Vida) என்கிற நிறுவனத்தை நிறுவி, தற்போதைக்கு எலக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் (Electric Scooters) விற்பனை செய்யப்பட்டு வருகின்றன. ஹீரோ விடாவில் இருந்து முதலாவதாக வி1 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் அறிமுகம் செய்யப்பட்ட நிலையில், சமீபத்தில் 2வது எலக்ட்ரிக் ஸ்கூட்டராக வி.எக்ஸ்2 (VX2) அறிமுகம் செய்யப்பட்டது. வெறும் ரூ.59 ஆயிரத்து 490இல் அறிமுகம் செய்யப்பட்டதால் விடா விஎக்ஸ்2 எலக்ட்ரிக் ஸ்கூட்டர் மீது மக்களிடம் இருந்து பலத்த கவனம் உருவானது. இந்த நிலையில், இந்த விலை குறைவான எலக்ட்ரிக் ஸ்கூட்டரின் விலையை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் மேலும் குறைத்து ஆச்சிரியப்படுத்தி உள்ளது.

துபாய் ஷேக்குகள் போல் கோடீஸ்வரர்களாக மாற போகும் தமிழக மக்கள்

இந்திய ஆட்டோமொபைல் துறையின் தாயகமாக தமிழ்நாடு (Tamil Nadu) திகழ்கிறது. உள்நாடு மற்றும் வெளிநாடுகளை சேர்ந்த ஏராளமான வாகன நிறுவனங்கள், தமிழ்நாட்டில்தான் தொழிற்சாலையை அமைத்துள்ளன. இந்த வரிசையில் உலகப்புகழ் பெற்ற வெளிநாட்டு நிறுவனம் ஒன்று தமிழ்நாட்டில் தற்போது காலடி எடுத்து வைத்துள்ளது.

மாருதி செலவுல மஹிந்திராவுக்கு அடித்த ஜாக்பாட்!

இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் தார் கார் சிறப்பாக விற்பனையாகி வரும் நிலையில் அதற்கு போட்டியாக மாருதி நிறுவனம் ஜிம்னி காரை இந்திய மார்கெட்டில் களம் இறக்கியது. இந்த கார் தார் கார் விற்பனையை பெரிய அளவில் குறைக்கும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில் ஜிம்னி காரின் வருகைக்கு பிறகு தார் காரின் விற்பனை அதிகரித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

சிட்ரோன் சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் ஷோரூமுக்கு வர துவக்கம்!

சிட்ரோன் (Citroen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று, சி3 (C3) ஆகும். விலை குறைவான சிட்ரோன் காராக சி3 விற்பனை செய்யப்பட்டு வரும் நிலையில், இந்த காரில் புதியதாக 'ஸ்போர்ட்' (Sport) எடிசன் சமீபத்தில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. வழக்கமான சி3 கார்களை காட்டிலும் சற்று விலைமிக்கதாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டு இருக்கும் புதிய சி3 ஸ்போர்ட் கார் அந்த அளவிற்கு அழகானதாகவும் வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், சி3 ஸ்போர்ட் எடிசன் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதனை உறுதிப்படுத்தும் வகையில் சிட்ரோன் டீலர்ஷிப் ஷோரூம் ஒன்றில் சி3 ஸ்போர்ட் காரை நெருக்கமாக காட்டும் வீடியோ வெளியாகி உள்ளது.

டாடா நானோ போல் அடி மாட்டு விலையில் களமிறக்கப்பட்ட புதிய கார்

இந்திய சந்தையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்திற்கு சரியாக அமையவில்லை. ஆம், டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் பெரும்பாலான கார்கள் விற்பனையில் வீழ்ச்சியை சந்தித்துள்ளன. தற்போது வெளியாகியுள்ள சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) மூலமாக நமக்கு இது தெரிய வந்துள்ளது.

இந்த காரை வெறும் 17 பேர் தான் வாங்கியிருக்காங்க!

மஹிந்திரா நிறுவனம் கடந்த ஜூன் மாதம் விற்பனையில் கடந்த ஓரு ஆண்டில் இல்லாத அளவிற்கு அதிகமான விற்பனையை பெற்றது. இந்நிறுவனம் மொத்தம் 47,306 கார்களை கடந்த ஜூன் மாதம் மட்டும் விற்பனை செய்துள்ளது.ஆனால் அந்நிறுவனத்தின் ஒரு காரை வெறும் 12 பேர் மட்டுமே வாங்கியுள்ளனர். இந்த கார் குறித்த விரிவான விபரங்களையும் தகவல்களையும் காணலாம் வாருங்கள்

இந்த கார் இன்ஸ்சூரன்ஸ் திட்டம் இருக்குறதே பலருக்கு தெரியல!!

கார் இன்ஸ்சூரன்ஸ் (Car Insurance) என்பது பல ஆயிரம் கோடி ரூபாய் கணக்கில் பணம் புரளும் துறை ஆகும். புதியதாக கார் ஒன்றை ஷோரூமில் இருந்து டெலிவிரி பெறும்போதே அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை வசூலித்துவிடுவர். அந்த இன்ஸ்சூரன்ஸ் குறிப்பிட்ட வருடங்களுக்கு மட்டுமே பயன்பாட்டில் இருக்கும். அதன்பின் மீண்டும் இன்ஸ்சூரன்ஸை புதுப்பிக்க வேண்டும். இதுதான் தற்போதைக்கு உள்ள நடைமுறை ஆகும். கார்களை பொறுத்தும், அவற்றிற்கான காப்பீடை வழங்கும் நிறுவனங்களை பொறுத்தும் இன்ஸ்சூரன்ஸ் கட்டணம் மாறுப்படும். ஆனால், காரை பயன்படுத்தும் தூரத்தை பொறுத்து அவற்றிற்கான இன்ஸ்சூரன்ஸ் கட்டணத்தை செலுத்தலாம் என சொன்னால் நம்ப முடிகிறது. இதனை சுருக்கமாக PAYD (Pay As You Drive) என அழைக்கின்றனர்.
Advertisement

பாத்தாலே பத்திக்கற மாதிரி டிரெஸ்ல சைக்கிள் ஓட்டிட்டு போறாங்க

இந்தியாவில் உடல் பருமன் பிரச்னையால் பலர் அவதிப்பட்டு வருகின்றனர். தேசிய குடும்ப சுகாதார ஆய்வு-5-ன் (National Family Health Survey-5) தரவுகளின்படி பார்த்தால், இந்தியாவின் மொத்த மக்கள் தொகையில், சுமார் 24 சதவீத பெண்களும், 23 சதவீத ஆண்களும் உடல் பருமன் பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

கடலூர் பள்ளி பஸ் மீது ரயில் மோதியதற்கு இது தான் காரணம்!

கடலூர் மாவட்டம் செம்மங்குப்பம் பகுதியில் ரயில்வே கேட்டை கடக்கும் போது பள்ளி வேன் ஒன்று ரயிலில் அடிபட்டது. இதில் சம்பவ இடத்திலேயே 2 குழந்தைகள் பலியான நிலையில் சிலர் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவத்தில் யார் மீது தவறு இருக்கிறது என பேச்சு மக்கள் மத்தியில் இருக்கிறது.

ரொம்ப கம்மியான விலையில் புதிய பல்சர் பைக்கை கொண்டுவந்த பஜாஜ்

பஜாஜ் ஆட்டோ (Bajaj Auto) நிறுவனத்தில் இருந்து விற்பனை செய்யப்படும் பல்சர் (Pulsar) பைக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டே வருகிறது. அதாவது, பல்சர் பைக்குகளை வாங்குவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது மட்டுமின்றி, மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் பல்சர் பைக்குகளின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வரிசையில் தற்போது புதியதாக 'என்.எஸ்400இசட் யுஜி' (NS400Z UG) என்கிற புதிய பல்சர் பைக் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. இந்த புதிய பல்சர் பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

சென்னையில் எலெக்ட்ரிக் பஸ் வெடித்ததா?

சென்னை வியாசர்பாடி பஸ் டிப்போவில் கண்காணிப்பிற்காக நிறுத்தப்பட்டிருந்த எலெக்ட்ரிக் பஸ் பேட்டரி வெடித்து இரண்டு பேருக்க படுகாயம் ஏற்பட்டதாக செய்திகள் வெளியாகின? உண்மையில் எலெக்ட்ரிக் பஸ்ஸின் பேட்டரி தான் வெடித்ததா? இரண்டு பேர் படுகாயம் அடைந்தது எப்படி? இந்த சம்பவம் குறித்த முழுமையாக உண்மை தகவலை காணலாம் வாருங்கள்.

இந்தியாவில் பெட்ரோலை ஏன் அதிக விலையில் விக்குறாங்க?

இந்தியாவில் தற்போது பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ101 என்ற விலையில் விற்பனையாகி வருகிறது. சர்வதேச அளவில் ஒப்பிடும் போது இந்தியர்கள் பெட்ரோலுக்காக மிக அதிகமான தொகையை செலவு செய்வதாக சமீபத்தில் வெளியான ஆய்வு முடிவு ஒன்று தெரிவிக்கிறது. மற்ற நாடுகளை விட இந்தியாவில் ஏன் பெட்ரோல் விலை அதிகமாக இருக்கிறது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டாவால் எவ்வளவு முக்குனாலும் ஹீரோவை முந்த முடியல!!

உலகளவில் இருசக்கர வாகனங்கள் அதிக எண்ணிக்கையில் விற்பனையாகும் நாடுகளுள் நமது இந்தியா ஒன்று என சொன்னால் அது மிகை இல்லை. அந்த அளவிற்கு ஒவ்வொரு மாதத்திலும் பல லட்சக்கணக்கிலான இருசக்கர வாகனங்கள் இந்தியாவில் விற்பனை செய்யப்படுகின்றன. நம் நாட்டு மார்க்கெட்டில் இருசக்கர வாகனங்களை விற்பனை செய்யும் நிறுவனங்கள் ஏகப்பட்டவை உள்ளன. குறிப்பாக, எலக்ட்ரிக் இருசக்கர வாகனங்களுக்கு தேவை அதிகரித்த பிறகு பல புதிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் மார்க்கெட்டில் நுழைந்துள்ளன. ஆதலால், அவை அனைத்தை பற்றியும் ஒரே தொகுப்பில் பார்ப்பது முடியாத காரியம். எனவே, இந்தியாவில் இருசக்கர வாகனங்கள் விற்பனையில் முன்னணியில் உள்ள 6 இருசக்கர வாகன நிறுவனங்களை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

7 லட்ச ரூபா காரை இதைவிட சிறப்பா எப்படி உருவாக்க முடியும்?

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் (Altroz Facelift) கார் அறிமுகம் செய்யப்பட்டதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். கடந்த சில வருடங்களுக்கு பிறகு அல்ட்ராஸ் காரில் முக்கியமான அப்டேட்கள் கொண்டுவரப்பட்டு உள்ளதால், புதிய அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் கார் மக்கள் மத்தியில் கவனத்தை ஏற்படுத்தி உள்ளது. இந்த நிலையில், புதிய டாடா அல்ட்ராஸ் ஃபேஸ்லிஃப்ட் காரின் விலை குறைவான வேரியண்ட்கள் டீலர்ஷிப் ஷோரூம்களை வந்தடைய துவங்கியுள்ளன. இதுதொடர்பாக இணையத்தில் வெளியிடப்பட்டுள்ள வீடியோவை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

தீபாவளிக்கு ஜவுளி எடுக்கற மாதிரி இந்த காரை வாங்க போறாங்க!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் விற்பனையில் கொடி கட்டி பறந்து கொண்டிருந்த கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). ஆனால் சமீப காலமாக டாடா பன்ச் காரின் விற்பனை மிகவும் மந்தமாக உள்ளது. இந்த வரிசையில் நடப்பு 2025ம் ஆண்டு ஜூன் மாதமும், டாடா பன்ச் கார் விற்பனையில் மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது.
Advertisement

இப்படி பண்ணா ஈஸியா ரூ2 லட்சத்தை மிச்சம் பண்ணலாம்!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களை தயாரிக்கும் பல நிறுவனங்கள் வந்துவிட்டன. மக்கள் மத்தியிலும் எலெக்ட்ரிக் கார்கள் மீதான மோகம் அதிகமாகிவிட்டது.இருந்தாலும் மக்கள் மத்தியில் பேட்டரியின் ஆயுள் குறித்த கவலை இருக்கிறது. வாகன தயாரிப்பு நிறுவனங்கள் அதிக பேட்டரி வாரண்டியை வழங்கினாலும் மக்கள் மத்தியில் அது திருப்தியை தராததால் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் பேட்டரியை சர்வீஸாக வழங்க துவங்கிவிட்டனர்.

புதிய மஹிந்திரா எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனைக்கு அறிமுகம்!

மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தில் இருந்து கடந்த 2024ஆம் ஆண்டு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட கார், எக்ஸ்.யூ.வி 3எக்ஸ்ஓ (XUV 3XO) ஆகும். முன்பு விற்பனையில் இருந்த மஹிந்திரா எக்ஸ்யூவி300 (XUV300) காருக்கு பதிலாக அப்டேட்டான தோற்றத்தில் எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ கார் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டது. இதை விட இந்த காரின் சிறப்பம்சம் என்னவென்றால், டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் பணியாற்றிய பிரதாப் போஸ் (Pratap Bose) அவர்கள் மஹிந்திராவுக்கு மாறிய பின்னர் உருவாக்கிய முதல் மஹிந்திரா கார், எக்ஸ்யூவி 3எக்ஸ்.ஓ ஆகும். முன்பு விற்பனையில் இருந்த எக்ஸ்யூவி300 காரின் அப்டேட் வெர்சனாக அறிமுகம் செய்யப்பட்ட எக்ஸ்யூவி 3எக்ஸ்ஓ காரில் புதியதாக சில வேரியண்ட்கள் அறிமுகம் செய்யப்பட்டுள்ளன.

இந்தியாவிலேயே அதிக மக்கள் இந்த காரை தான் வாங்குறாங்க! ஏன்?

கடந்த ஜூன் மாதம் இந்தியாவில் அதிகம் விற்பனையான கார்களின் டாப் 10 பட்டியல் தற்போது வெளியாகியுள்ளது. வழக்கம் போல இந்த பட்டியலில் மாருத நிறுவனத்தின் கார்கள் தான் அதிகமாக உள்ளது. முதலிடத்தில் ஹூண்டாய் நிறுவனத்தன் கார் இருகு்கிறது. இது போக மஹிந்திரா டாடா, ஆகிய நிறுவனங்களின் கார்களும் உள்ளன. இந்த பட்டியலை விரிவான காணலாம் வாருங்கள்.

34 கிமீ மைலேஜ் தர்ற 5 ஸ்டார் ரேட்டிங் கார் விலை இவ்ளோதானா!

இந்திய சாலைகளை ஒரு காலத்தில் செடான் ரக கார்கள்தான் (Sedan Cars) ஆட்சி செய்து கொண்டிருந்தன. ஹிந்துஸ்தான் அம்பாஸிடர் (Hindustan Ambassador) மற்றும் பிரீமியர் பத்மினி (Premier Padmini) போன்றவை எல்லாம் செடான் ரகத்தை சேர்ந்த கார்கள்தான். ஆனால் தற்போது காலம் மாறி விட்டது.

நடிச்சது ஒரே படம் தான்... டிவி சீரியல் நடிகை வாங்கிய கார்!!

டிவி சீரியலில் கலக்கிக் கொண்டிருக்கும் இளம் நடிகை, தியா தீபன் (Diya Deepan) ஆவார். நான் தினமும் டிவி சீரியல்களை பார்த்துக் கொண்டுத்தான் இருக்கிறேன், ஆனால் இவரை பார்த்தது இல்லையே என நீங்கள் கேட்பது புரிகிறது. தியா தீபன், மலையாள டிவி சீரியல்களில் நடிப்பவர் ஆவார். டிவி சீரியல்கள் மூலமாக சினிமா துறைக்குள் நுழைந்தவர்கள் பலர் உள்ளனர். சில சீரியல் தொடர்களில் கதாநாயகி வேடத்தை காட்டிலும், வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பவர் பிரபலமாகுவது உண்டு. அவ்வாறு, வில்லி கதாபாத்திரத்தில் நடித்து கேரள மக்கள் மத்தியில் நடிகை தியா தீபன் கவனம் பெற்றுள்ளார்.