அஜித்துக்கே டஃப் கொடுப்பாங்க போல.. பைக் டிரிப்பில் நடிகர்கள்

விலையுயர்ந்த பைக்குகளை வாங்கி பயன்படுத்த வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது ஆசையாக இருக்கும். ஆனால், இதனை நிஜமாக்குபவர்கள் என்று பார்த்தால், செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் மட்டுமே ஆகும். குறிப்பாக, சில சினிமா பிரபலங்கள் மக்களோடு மக்களாக கலந்து வாழ வேண்டும் என்பதற்காகவே கார்களை காட்டிலும் பைக்குகளை அதிகம் விரும்புகின்றனர். ஏனெனில், அப்போதுதான் ஹெல்மெட் அணிந்து முகத்தை மறைத்துக் கொண்டு பைக்கில் எங்கு வேண்டுமானாலும் சுத்தலாம் அல்லவா... அவ்வாறுதான் தற்போது இரு சினிமா நடிகர்கள் (Cinema Actors) பைக்கில் ஜாலியாக ஊர் சுற்றி வருகின்றனர்.

வெறும் ரூ29,999 எலெக்ட்ரிக் வண்டியா?

கோமகி எலெக்ட்ரிக் நிறுவனம் தனது புதிய தயாரிப்பான எக்ஸ்ஆர்1 எலெக்ட்ரிக் மொபட்டை அறிமுகப்படுத்தியுள்ளது. அதுவும் மிக குறைவான விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. வெறும் ரூ29,999 என்ற விலையில் இந்த மொபட் விற்பனக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஒரு டீசர்ல இவ்வளவு குறியீடு இருக்குதா?

மஹிந்திரா ஆட்டோ நிறுவனம் வரும் ஆகஸ்ட் 15ம் தேதி தனது புதிய கார் தயாரிப்பு பிளாட்ஃபார்மை வெளியிட திட்டமிட்டுள்ளது.இந்த புதிய பிளாட்ஃபார்மில் எதிர்காலத்தில் வரப்போகும் மஹிந்திரா கார்கள் தயாராக போகிறது. இந்நிலையில் இந்த பிளாட்ஃபார்ம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பெயர் மட்டும்தா இந்தியன், ஆனா பக்கா அமெரிக்கன் பைக் கம்பெனி!

இந்தியன் மோட்டார்சைக்கிள் (Indian Motorcycle), பெயர் மட்டும்தான் இந்தியா, ஆனால் இது அமெரிக்க பைக் நிறுவனம் ஆகும். எவ்வாறு இந்த நிறுவனத்துக்கு 'இந்தியன்' என்கிற பெயர் வந்தது என்பது எல்லாம் தனி கதை. ஐரோப்பாவில் தோன்றிய மோட்டார்சைக்கிள்களை முதன்முதலில் அமெரிக்காவில் உருவாக்கி விற்பனை செய்ய ஆரம்பித்தவர்கள் வைத்த பெயர் தான், இந்தியன் மோட்டார்சைக்கிள் ஆகும். அமெரிக்காவில் பைக்குகள் விற்பனையில் முன்னணியில் இருக்கும் இந்தியன் மோட்டார்சைக்கிள் நிறுவனம், இந்தியாவிலும் அதன் சில பைக்குகளை விற்பனை செய்கிறது. இந்த நிலையில் தற்போது, இந்தியாவில் விற்பனை செய்யப்படும் இந்தியன் பைக்குகள் என்னென்ன, அவற்றின் விலைகள் எவ்வளவு என்பது அறிவிக்கப்பட்டுள்ளது.
Advertisement

பெண் செய்த காரியத்தால் ஆட்டம் கண்டு போன இரயில்வே போலீசார்!

கார் விபத்துகளுக்கு இந்தியாவில் பஞ்சமே கிடையாது என்றுதான் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஒவ்வொரு நாளும் செய்தித்தாளை திறந்தாலே குறைந்தது ஒரு கார் விபத்து குறித்த செய்தியை ஆவது பார்க்க முடிகிறது. இந்த இடத்தில் நாங்கள் கார் விபத்தை மட்டுமே சொல்கிறோம். மற்ற வாகன விபத்துகளை எல்லாம் கணக்கிட்டால் எண்ணிக்கை எங்கேயோ போகும். கார் விபத்துகளை மட்டும் ஏன் குறிப்பிட்டு சொல்கிறோம் என்றால், இன்றைய கால மாடர்ன் கார்களில் ஏர்பேக் (Airbag), அடாஸ் (ADAS) என ஏகப்பட்ட பாதுகாப்பு தொழிற்நுட்ப அம்சங்கள் வழங்கப்படுகின்றன. அப்படியிருந்தும் கார் விபத்துகள் நடைபெறுகின்றன என்றால், நிச்சயமாக அவற்றை நாம் கவனத்தில் கொள்ள வேண்டியது அவசியமாகும்.

60 நொடிகளில் 171 கார்கள் சர்வீஸ் பண்ணிட்டாங்க!

மாருதி நிறுவனம் கடந்த மே மாதம் சர்வீஸிங்கில் புதிய சாதனை மைல் கல்லை பதித்துள்ளுது. அதன்படி அந்நிறுவனம் 31 நாளில் 24.5 லட்சம் வாகனங்களுக்கு சர்வீஸை வழங்கியுள்ளது. அந்நிறுனம் மிகப்பெரிய சாதனையை படைத்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடி மாட்டு விலையில் களமிறங்கும் 7 சீட்டர் எலெக்ட்ரிக் கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியிருந்த கியா கேரன்ஸ் க்ளாவிஸ் (Kia Carens Clavis) கார் கடந்த மே மாத இறுதியில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. இது ஐசி இன்ஜின் மாடல் ஆகும். இதை தொடர்ந்து இதன் எலெக்ட்ரிக் வெர்ஷன் விரைவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படவுள்ளது.

1.85 டன் சரக்கை ஈஸியா எடுத்துத்து போகலாம்!

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ மேக்ஸ் பிக்அப் எச்டி 1.9 சிஎன்ஜி வாகனத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த வாகனம் ரூ11.19 லட்சம் என்ற விலையில் அறிமுகமாகியுள்ளது. இதில் ஓரு முறை சிஎன்ஜியை நிரப்பினால் 400 கி.மீ வரை பயணிக்க முடியும் என தெரிவித்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்வளவு சிறிய வயதில் எலக்ட்ரிக் பைக் கம்பெனி ஓனராக இளைஞர்!!

அல்ட்ராவொய்லெட் (Ultraviolette), பெங்களூருவை சேர்ந்த இவி ஸ்டார்ட்-அப் நிறுவனம். இந்தியாவின் மென்பொருள் தலைநகரமான பெங்களூருவில் பல இவி ஸ்டார்ட்-அப் நிறுவனங்கள் தோன்றியுள்ளன. அவற்றுள் அல்ட்ராவொய்லெட் நிறுவனமும் ஒன்றாகும். இந்தியாவிலேயே விலையுயர்ந்த முதல் சூப்பர் எலக்ட்ரிக் பைக்கை உருவாக்கிய நிறுவனம், அல்ட்ராவொய்லெட் ஆகும். எஃப்77 (F77) என்கிற பெயரில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்ட அந்த சூப்பர் எலக்ட்ரிக் பைக்கில் அதன்பின் பல்வேறு வெர்சன்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இருப்பினும், எஃப்77 எலக்ட்ரிக் பைக்கை தாண்டி அல்ட்ராவொய்லெட் வேறு எந்த வாகனத்தையும் அறிமுகம் செய்யாமல் இருந்து வந்த நிலையில், சமீபத்தில் முதல் எலக்ட்ரிக் ஸ்கூட்டரையும், குறைந்த விலையில் எலக்ட்ரிக் பைக் ஒன்றையும் அறிமுகம் செய்தது.

டூவீலர் ஓனர்களின் வயிற்றில் பாலை வார்த்த மத்திய அரசு!

இந்தியாவில் வாகன உரிமையாளர்களுக்கு இருக்கும் மிகப்பெரிய பிரச்னை டோல்கேட் கட்டணம் (Toll Fees). கார், லாரி மற்றும் பஸ் போன்ற வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு, அதிகமான டோல்கேட் கட்டணம் மிகப்பெரிய தலைவலியாக இருந்து வருகிறது. ஆனால் டூவீலர்களை வைத்திருப்பவர்களுக்கு மட்டும் இந்த பிரச்னை இல்லை.

எமன் லீவில் போய்ட்டார் போல, கொஞ்சம் தான் மிஸ் - வீடியோ!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து அதிக விலையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று ஹெரியர் (Harrier) ஆகும். 5 இருக்கைகளை மட்டுமே கொண்ட விலைமிக்க டாடா காராக இருப்பினும், அதற்கு இணையாக மிகவும் பாதுகாப்பானது டாடா ஹெரியர் கார் ஆகும். குளோபல் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டில் (Global NCAP Crash Test) மட்டுமின்றி, இந்தியாவில் மேற்கொள்ளப்பட்ட பாரத் என்சிஏபி கிராஷ் டெஸ்ட்டிலும் 5க்கு முழு 5 நட்சத்திர ரேட்டிங்கை டாடா ஹெரியர் பெற்றுள்ளது. அதனால்தான், இங்கு ஒருவர் டாடா ஹெரியர் காரை ஓட்டி தலைக்கீழாக கவிழ்ந்து விபத்துக்கு உள்ளான போதிலும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி உள்ளார்.

இனி ஒரு பய லஞ்சம் குடுத்து எஸ்கேப் ஆக முடியாது!

இந்தியா போன்ற மக்கள் தொகை அதிகம் கொண்ட நாடுகளில் டிராஃபிக் மிகப்பெரிய பிரச்சனையாக இருக்கிறது. இந்த பிரச்சனையை சரிய செய்ய இந்தியாவில் முதன் முறையாக செயற்கை நுண்ணறிவு தொழிற்நுட்பத்தை பயன்படுத்தி முதன் முறையாக அட்வான்ஸ்டு டிராஃபிக் மேனேஜ்மென்ட் சிஸ்டத்தை டில்லியில் உள்ள ஒரு சாலையில் பொருத்தியுள்ளனர். இது எந்த அளுவிற்கு செயல்படும். இதனால் டிராஃபிக் பிரச்சனை எப்படி குறையும் என்ற விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒன்னே கால் கோடி ரூபா கார்ல போறது அவங்களா!

இந்தியாவில் ஒரு சில நடிகைகள், பல மொழி திரைப்படங்களிலும், நடித்து வருகின்றனர். அப்படிப்பட்ட நடிகைகளில் ஒருவர்தான் இஷா கோபிகர் (Isha Koppikar). இவர் தமிழ், கன்னடா, தெலுங்கு, மராத்தி மற்றும் ஹிந்தி என பல மொழி திரைப்படங்களிலும் நடித்து கொண்டுள்ளார். எனவே இந்தியா முழுக்க இஷா கோபிகருக்கு ரசிகர்கள் உள்ளனர்.

டாடா கார்கள் பாதுகாப்பு ரகசியம் இது தான்!

இந்தியாவில் விற்பனையாகும் பெரும்பாலான கார்கள் இந்தியாவில் உள்ள பாதுகாப்பு ரேட்டிங்கை பெற பாரத் என்கேப் சோதனைக்கு உட்படுத்தப்படுகிறது. இந்த சோதனையில் நல்ல ரிசல்டை பெறும் கார்கள் இந்திய கண்டிஷன்களுக்கு ஏற்ப தயாரிக்கப்பட்டுள்ளது என்ற நம்பிக்கையை மக்கள் மத்தியில் பெறுவதால் இந்த காருக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. இதில் டாடா கார்கள் சிறப்பான ரேட்டிங்கை பெற்றுள்ளன. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எம்ஜி கார்களை வாங்குவதா வேண்டாமா? மீண்டும் வரும் விலை உயர்வு

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் நாம் எதிர்பார்த்ததை போல் வருகிற ஜூலை மாதம் முதல் இந்தியாவில் அதன் கார்களின் விலைகளை அதிகரிக்க திட்டமிட்டுள்ளது. கடந்த 2019ஆம் ஆண்டில் இருந்தே நம் இந்திய மார்க்கெட்டில் செயல்பட்டு வந்தாலும், கடந்த சில வருடங்களாக தான் எலக்ட்ரிக் கார்கள் (Electric Cars) மூலமாக இந்தியாவில் எம்ஜி நிறுவனம் விற்பனையில் வளர்ச்சியை பதிவு செய்து வரும் நிலையில், இந்த புதிய விலை அதிகரிப்பு கொண்டுவரப்படுகிறது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இனி இந்த வண்டி தான் செம கெத்து!

ஹோண்டா நிறுவனம் தனது ரெபெல் 500 க்ரூஸர் மற்றும் எக்ஸ்- ஏடிவி ஸ்கூட்டர் ஆகிய வாகனங்களின் டெலிவரியை இந்தியாவில் துவங்கியுள்ளது. இந்த வாகனங்கள் மார்கெட்டில் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் இந்த வாகனங்கள் நல்ல விற்பனையை பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குறைந்த செலவில் கார் சர்வீஸ் செய்ய சரியான நேரம் வந்தாச்சு!

ஹூண்டாய் (Hyundai), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் கார்களை விற்பனை செய்யும் நிறுவனம். எந்த அளவிற்கு அதிக எண்ணிக்கையில் என்றால், ஒவ்வொரு மாதத்திலும் சராசரியாக 50 ஆயிரம் கார்களை விற்பனை செய்யக்கூடிய பிரம்மாண்டமான கார் நிறுவனமாக ஹூண்டாய் விளங்குகிறது. கடந்த சில மாதங்களாக மஹிந்திரா (Mahindra) நிறுவனத்தால் கார்கள் விற்பனையில் சற்று பின்தங்கினாலும், ஹூண்டாயை நாம் குறைத்து மதிப்பிட முடியாது. கார்கள் விற்பனை குறைவை சரிசெய்யும் முயற்சிகளில் ஹூண்டாய் ஏற்கனவே இறங்கிவிட்டது. அதன் ஒருபகுதியாக ஹூண்டாய் அறிவித்துள்ள மழைக்கால சேவை முகாமை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

முன்னாள் முதலமைச்சர் என்று எந்த பரிதாபமும் பார்க்கல!!

டொயோட்டா ஃபார்ச்சூனர் (Toyota Fortuner), இந்தியா மட்டுமின்றி உலகளவில் பிரபலமான டொயோட்டா கார் என சொன்னால் அது மிகையில்லை. குறிப்பாக, நம் நாட்டில் ஃபார்ச்சூனர் கார் ஒன்றை வாங்க வேண்டும் என்பது நம்மில் நிறைய பேரது கனவாக உள்ளது. ஆனால், அதன் சற்று அதிகப்படியான விலையினால் சிலரால் மட்டுமே ஃபார்ச்சூனர் காரை சொந்தமாக்க முடிகிறது. டொயோட்டா ஃபார்ச்சூனரின் எக்ஸ்-ஷோரூம் விலைகள் தற்சமயம் இந்தியாவில் ரூ.45.61 லட்சத்தில் இருந்து ஆரம்பிக்கின்றன. டொயோட்டா ஃபார்ச்சூனர் கார்களின் தரமான உடலமைப்பினாலும், சொகுசான பயணத்தினாலும் கோடி ரூபாய் மதிப்பிலான சொகுசு கார்களை வைத்திருப்பவர்கள் கூட அவசரத்திற்கு தேவைப்படும் என ஃபார்ச்சூனர் காரை வாங்குகின்றனர்.

2026ல் ஆட்சி மாற்றம் உறுதியா? டாடா-வின் ரகசிய பிளான்!

டாடா மற்றும் ஜாக்குவார் லேண்ட்ரோவர் நிறுவனம் சேர்ந்து தமிழகத்தில் ராணிபேட்டை பகுதியில் புதிய வாகன கட்டுமான ஆலையை தயார் செய்து வருகிறது. இந்நிலையில் வரும் 2026ம் ஆண்டு முதல் இந்த ஆலையில் தயாரிப்புகள் துவங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி இந்த ஆலையில் வேறு என்ன வாகனங்கள் எல்லாம் தயாரிக்கப்படவுள்ளன? இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இளம் வயதில் இந்த லம்போர்கினி காரை வாங்கிய இந்திய தொழிலதிபர்!

லம்போர்கினி (Lamborghini) கார்களை பிடிக்காதவர்கள் யார் தான் இருப்பார்கள். உலகளவில் பல லம்போர்கினி கார் பிரியர்கள் பரவலாக நிறைய இடங்களில் உள்ளனர். ஆனால், நம் நாட்டில் லம்போர்கினி கார்களை மிகவும் செல்வந்தர்கள் மட்டுமே வாங்குகின்றனர். இப்படிப்பட்ட நிலையில், இந்தியாவில் மிகவும் இளம் வயதில் தொழிலதிபர் ஒருவர் லம்போர்கினி ரெவால்டோ (Lamborghini Revuelto) காரை வாங்கியுள்ளார். யார் இந்த இளம் இந்திய தொழிலதிபர் என்பதையும், இவர் வாங்கியுள்ள லம்போர்கினி காரை பற்றியும் இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம். அபிஷேக் அகர்வால் (Abhishek Agarwal) இந்த பெயரை சமீப காலமாக நமது டிரைவ்ஸ்பார்க் செய்தித்தளத்தில் அவ்வப்போது பார்த்து வருகிறோம்.
Advertisement

அதுக்குள்ள ஷோரூமுக்கு வந்தாச்சா... ஹோண்டா சிட்டி ஸ்போர்ட்!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா (Honda Cars India) நிறுவனத்தில் இருந்து புதியதாக சமீபத்தில் சிட்டி ஸ்போர்ட் (City Sport) கார் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. பிரபலமான ஹோண்டா சிட்டி காரின் புதிய விலைமிக்க டாப் வேரியண்ட்டாக சிட்டி ஸ்போர்ட் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. ரூ.14.89 லட்சம் மற்றும் ரூ.14.97 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் விலைகளில் விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புதிய ஹோண்டா சிட்டி ஸ்போர்ட் காரை பற்றிய விபரங்களை ஏற்கனவே நமது செய்தித்தளத்தில் பார்த்து இருந்தோம். இந்த நிலையில், சிட்டி ஸ்போர்ட் கார்கள் டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வர துவங்கி உள்ளன. இதனை உறுதி செய்யும் படங்கள் ஹோண்டா ஷோரூம் ஒன்றில் இருந்து இணையத்தில் வெளியிடப்பட்டுள்ளன.

இந்த ஆப் இருந்தா மாசம் 50 ஆயிரம் சம்பாதிக்கலாம்!

உலகிலேயே சாலை விபத்துக்களால் (Road Accidents) அதிக உயிரிழப்புகளை சந்திக்கும் நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்திய சாலைகளில் சாலை விபத்துக்களால் ஒரு ஆண்டுக்கு மட்டும் 1.50 லட்சம் முதல் 1.80 லட்சம் பேர் வரை உயிரிழப்பதாக புள்ளி விபரங்கள் தெரிவிக்கின்றன.

மகன் கேட்டதும் ஸ்கூட்டருக்காக ரூ.12 லட்சம் வாரி இரைத்த தந்தை

ஹோண்டா மோட்டார்சைக்கிள் & ஸ்கூட்டர் இந்தியா (Honda Motorcycle & Scooter India) நிறுவனத்தில் இருந்து சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்ட ஸ்கூட்டர், எக்ஸ்-அட்வ் (X-ADV) என்கிற அட்வென்ச்சர் ரக ஸ்கூட்டர் ஆகும். இதனை ஸ்கூட்டர் என்றே சொல்ல முடியாத அளவிற்கு பெரிய அளவிலான தோற்றத்துடன் பார்ப்பதற்கு பைக் போன்று உள்ளது. இதனாலேயே இத்தகைய ஸ்கூட்டர்களை மேக்ஸி-ஸ்கூட்டர் என அழைக்கின்றனர். இவ்வாறான மேக்ஸி-ஸ்கூட்டர்கள் பல பிராண்ட்களில் உலகின் பல நாடுகளில் விற்பனை செய்யப்பட்டாலும், இந்தியாவிற்கு இத்தகைய ஸ்கூட்டர்கள் ஏற்றவையாக இருக்காது என்கிற தயக்கத்தினாலேயே பல முன்னணி 2-வீலர்கள் கூட மேக்ஸி-ஸ்கூட்டர்களை இந்திய சந்தையில் அறிமுகம் செய்ய தயக்கம் காட்டி வந்தன.

சென்னைல டிக்கெட் எடுக்க இனி க்யூல நிக்க வேணாம்!

சென்னையில் மெட்ரோ, பஸ், ஆட்டோ, கேப் உள்ளிட்ட வாகனங்களில் ஒரே டிக்கெட்டில் பயணிக்க புதிய ஆப்பை தமிழக அரசு அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. இந்த ஆப்பிற்கான சோதனைகள் ஏற்கனவே துவங்கிய நிலையில் அடுத்த மாதம் இது பயன்பாட்டிற்கு வரும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இது என்ன ஆப்? இதை எப்படி பயன்படுத்துவது? இது மக்களுக்கு எந்த வகையில் பலனளிக்கவுள்ளது? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடையாளமே தெரியாத அளவுக்கு மாறிய ஆல்டோ!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). தற்போதைய நிலையில் இதன் ஆரம்ப நிலை வேரியண்ட்டின் விலை 4.23 லட்ச ரூபாயாக மட்டுமே உள்ளது. அதே நேரத்தில் டாப் வேரியண்ட்டின் விலையோ 6.21 லட்ச ரூபாயாக மட்டுமே இருக்கிறது.