டாடா ஹாரியர் இவி எலக்ட்ரிக் காரில் இதை எல்லாம் எதிர்பார்க்கல

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் சமீபத்தில் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அறிமுகம் செய்யப்பட்ட எலக்ட்ரிக் கார் (Electric Car), ஹாரியர் இவி (Harrier EV) ஆகும். இந்தியாவில் கடந்த சில வருடங்களாகவே எலக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதில் தீவிரமாக இருக்கும் டாடா நிறுவனம், அந்த வரிசையில் தற்போது களமிறக்கி இருக்கும் எலக்ட்ரிக் கார் தான் ஹாரியர் இவி ஆகும். இந்த புதிய காரில் பல அசத்தலான அம்சங்களை டாடா நிறுவனம் வழங்கியுள்ளது. அவற்றுள் கவனிக்கத்தக்க 7 அம்சங்களை பற்றி பார்ப்பதன் மூலம், ஹாரியர் இவி காரை வாங்கலாமா அல்லது வேண்டாமா என்கிற தெளிவு கிடைக்கும்.

இனி இந்த காரை பத்தி தான் ஊரே பேசும்!

மஹிந்திரா நிறுவனம் தனது பொலிரோ காரின் புதிய அவதாரத்தை வெளியிட திட்டமிட்டுள்ளது. இந்த கார் நீண்ட ஆண்டுகளாக விற்பைனயில் இருக்கும் நிலையில் தற்போது விற்பனையாகி வரும் ஸ்கார்பியோவை விட சிறந்த காராக இதன் வடிவமைப்பு மாற்றியமைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த கார் புதிய வடிவமைப்பை பெறப்போகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வெளியான விராட் கோஹ்லியின் வீடியோவால் ரசிகர்கள் அதிர்ச்சி!

ஆர்சிபி (RCB) என சுருக்கமாக அழைக்கப்படும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் (Royal Challengers Bengaluru) கிரிக்கெட் அணி, ஐபிஎல் (IPL) கோப்பையை வெல்ல வேண்டும் என்பது, அந்த அணி ரசிகர்களின் 18 வருட கனவு. ஒரு வழியாக நீண்ட போராட்டத்திற்கு பிறகு, நடப்பு 2025ம் ஆண்டு ஐபிஎல் தொடரில், ஆர்சிபி அணி சாம்பியன் கோப்பையை வென்றது.

டீசல் காருக்கும் இவி காருக்கும் என்ன வித்தியாசம்?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை சமீபத்தில் வெளியிட்டுள்ளது. இந்த கார் அந்நிறுவனத்தின் அதிக பவர்ஃபுல்லான, அதே நேரம் அட்வான்ஸாடான அம்சங்கள் நிறைந்த காராக இ்நத காரை உருவாக்கியுள்ளது. இந்த கார் அதன் டீசல் வேரியன்ட் காரின் லுக்கிலேயே இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் ஹாரியரின் டீசல் காருக்கும் இந்த எலெக்ட்ரிக் காருக்கும் என்ன வித்தியாசம் இருக்கிறது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம்.
Advertisement

இந்த வாய்ப்பை மிஸ் பண்ணிட்டா அப்புறம் வாங்குறது ரொம்ப கஷ்டம்

ஃபோக்ஸ்வேகன் (Volkswagen) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் விற்பனை செய்யப்படும் விலை குறைவான கார்கள் டைகுன் (Taigun) மற்றும் விர்டுஸ் (Virtus) ஆகும். ஃபோக்ஸ்வேகன் டைகுன் ஆனது எஸ்யூவி (SUV) ரக கார் ஆகும். அதுவே, விர்டுஸ் ஆனது தாழ்வான உடலமைப்பை கொண்ட செடான் (Sedan) ரக கார் ஆகும். இந்த இரு கார்களுக்கு தான் தற்போது அதிரடியாக ரூ.2.70 லட்சம் வரையிலான சலுகைகள் அறிவிக்கப்பட்டுள்ளன. வாடிக்கையாளர்களை கவரும் பொருட்டு கொண்டுவரப்பட்டு இருந்தாலும், குறுகிய காலத்திற்கு மட்டுமே அறிவிக்கப்பட்டுள்ள இந்த சலுகைகளை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம், வாங்க.

கொஞ்சம் கூட பந்தா இல்லாம சாதாரண கார்ல போறாரு!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் (Toyota Innova Hycross). எம்பிவி (MPV) ரகத்தை சேர்ந்த டொயோட்டா இன்னோவா ஹைக்ராஸ் கார், விசாலமான கேபின், பிரீமியம் வசதிகள் மற்றும் சக்தி வாய்ந்த இன்ஜின் ஆப்ஷன்களுக்காக பெயர் பெற்றது.

டாடா கார் மட்டும்தானே பரிசுனு சொன்னாங்க... பென்ஸ் காருமா?

ஐபிஎல் (IPL) கிரிக்கெட் தொடர் முடிந்ததில் இருந்து அதனை தொடர்ந்து கொண்டாட்டங்களையும் சர்ச்சைகளையும் அடுத்தடுத்து பார்த்து வருகிறோம். நான் எதை பற்றி கூறுகிறேன் என்று இந்நேரம் உங்களுக்கு புரிந்திருக்கும் என நினைக்கிறேன். 2025ஆம் ஆண்டிற்கான கோப்பையை வென்ற ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு (RCB) அணியின் கொண்டாட்டத்தில் கூட்ட நெரிசலில் சிக்கி பரிதாபமாக 11 பேர் உயிரிழந்த சம்பவம் நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் வரையில் இந்த துயர சம்பவத்திற்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

ரோட்டுல எங்க திரும்பினாலும் இந்த கம்பெனி காரை பார்க்கலாம்!

இந்தியாவில் கடந்த மே மாத விற்பனை விபரங்களை வெளியிட்டுள்ளது. இதன்படி எந்தெந்த நிறுவனங்கள் எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளது. கடந்தாண்டு விற்பனையை விட தற்போது எவ்வளவு அதிகரித்துள்ளது. அல்லது குறைந்துள்ளது என்ற விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.

வெறும் ரூ13.79 லட்சத்திற்கு இப்படி ஒரு காரா?

ஹூண்டாய் நிறுவனம் தனது எஸ்எக்ஸ் பிளஸ் வேரியன்டை தற்போது வெளயிட்டுள்ளது. இந்த கார் மக்கள் மத்தயில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது வெளியாகியுள்ளது. இதில் பல்வேறு புதிய அம்சங்கள் இருக்கும் நிலையில் இந்த வாகனம் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ரெனால்ட் சலுகைகளை வழங்க முடிவு பண்ணிடுச்சு... ஜூன் 6 - 16

ரெனால்ட் (Renault), உலகளவில் பிரபலமான பிரெஞ்சு கார் நிறுவனம். ஐரோப்பாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இருந்தாலும், இந்திய சந்தையில் தனக்கான இடத்தை பிடிக்க போராடி வருகிறது. இருப்பினும், எளிதில் நம்பிக்கையை இழக்காமல் இருக்கும் ரெனால்ட் நிறுவனம், இந்தியாவில் 'டிஸ்கவரி டேஸ்' (Discovery Days) என்கிற பெயரில் ஒரு திட்டத்தை ஜூன் 6ஆம் தேதி முதல் செயல்படுத்த உள்ளது. இந்த செயல்திட்டத்தின் ஒரு பகுதியாக, ரெனால்ட் கார்களுக்கு அசத்தலான சலுகைகள் நாடு முழுவதும் வழங்கப்பட உள்ளன. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் காணலாம்.

ரோல் மாடல் பயன்படுத்திய காரை ரூ.15 கோடியில் வாங்கிய அஜித்!!

நடிகர் அஜித்குமார் (Actor Ajithkumar) ஓர் கார் & பைக் பிரியர் என்பதை பல நிகழ்வுகளில் பார்த்துள்ளோம். இன்னும் சொல்லப்போனால், சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கார் ரேசராக தான் நடிகர் அஜித்குமார் இருந்தார் என்பது உங்களில் சிலருக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன். கார் பந்தயங்களில் கலந்துக் கொள்வதற்கு பணம் தேவை என்பதினால்தான் சினிமாவில் வாய்ப்பு தேட அஜித் ஆரம்பித்தார் எனவும் கூறப்படுகிறது. வயதான நிலையில், தற்போது திரைப்படங்களில் நடிப்பதை காட்டிலும் கார் பந்தயங்களில் அதிகமாக ஈடுப்படுவதை வைத்து பார்க்கும்போது நடிகர் அஜித்துக்கு கார் பந்தயங்களில் தான் ஆரம்ப காலக்கட்டத்தில் இருந்தே ஆர்வம் அதிகம் என்பது உறுதியாகிறது.

இந்த ரெண்டு கார்ல எது பெஸ்ட்?

டாடா ஹாரியர் இவி கார் தற்போது இந்தியாவில் அறிமுமாகியுள்ளது. இந்த கார் மார்கெட்டில் நேரடியாக மஹிந்திரா எக்ஸ்இவி 9இ என்ற காருக்கு போட்டியாக களம் இறக்கி வருகிறது. இந்த காரை நாம் இங்கே ஓப்பிட்டு பார்க்கப்போகிறோம். இதன் விலை, ரேஞ்ச், பேட்டரி உள்ளிட்ட அம்சங்களை ஒப்பிட்டு பார்க்கப்போகிறோம். இந்த இரண்டு கார்கள் குறித்த விரிவான விபரங்களை இங்கே காணலாம்.
Advertisement

சென்னையில் யமஹா எத்தனை பேரது வாழ்க்கையை மாற்றியிருக்கு!!

யமஹா (yamaha) நிறுவனம் சென்னையில் தொழிற்சாலை கொண்டிருப்பதை உங்களில் பலர் அறிந்திருப்பீர்கள் என நினைக்கிறேன். சென்னைக்கு அருகே ஸ்ரீபெரும்புதூரில் 2015ஆம் ஆண்டில் 2-வீலர் உற்பத்தி தொழிற்சாலையை யமஹா நிறுவியது. இந்த வகையில் பார்த்தால், யமஹா நிறுவனத்தின் சென்னை தொழிற்சாலை நிறுவப்பட்டு 10 வருடங்கள் நிறைவடைந்து விட்டது. இதனை தற்போது யமஹா மோட்டார் இந்தியா நிறுவனம் கொண்டாடி வருகிறது. மேலும், மற்றொரு சாதனைக்காகவும் சென்னை தொழிற்சாலையில் நிகழ்ச்சி ஒன்றை நடத்தி யமஹா கொண்டாடியுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

மனைவியின் பிறந்த நாளில் கணவர் வாங்கிக் கொடுத்த கார்!!

எத்தனை கார் & பைக்குகளை வாங்கி இருப்பினும், மனைவிக்காக புதியதாக கார் அல்லது பைக் வாங்வது என்றாலே எப்போதுமே அது ஸ்பெஷலானது என்றுதான் சொல்ல வேண்டும். பெரும் பணக்காரர்கள் கூட தங்களது மனைவிக்கு விலையுயர்ந்த வாகனத்தை பரிசாக வழங்கி மகிழ்ந்துள்ளதை பார்த்திருக்கிறோம். பணக்காரர்களுக்கே அப்படியென்றால், ஓட்டல் நடத்திவரும் சாதாரணமான மிடில்-கிளாஸ் கணவருக்கு எப்படி இருந்திருக்கும் என்று யோசித்து பாருங்கள். இந்த தொகுப்பில் நாம் பார்க்க போகும் நபர், மனைவியின் பிறந்த நாளுக்காக அவருக்கு பிராண்ட்-நியூ காரை பரிசாக வழங்கி சிறப்பித்துள்ளார்.

இந்த கார் மட்டும் வந்துச்சுன்னா எல்லாரும் காலி தான்!

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது எலெக்டரிக் வாகன அணி வகுப்பை விரிவுபடுத்தும் வகையில் புதிதாக ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த காருடன் சேர்த்து மொத்தம் 6 எலெக்ட்ரிக் கார்களை அந்நிறுவனம் விற்பனை செய்து வருகிறது. இந்நிலையில் இந்தாண்டு இறுதிக்குள் மற்றொரு எலெக்ட்ரிக் காராக டாடா சியாரா இவி காரை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இதற்கிடையில் பல ஆண்டுகளாக கான்செப்டில் இருக்கும்டாடா அவ்னியா காருக்கு என்னதான் ஆச்சு என்ற கேள்வி மக்கள் மத்தியில் எழுந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ராயல் என்பீல்டுக்கு சங்கு ஊத போகும் விலை குறைவான பைக்!

இந்திய சந்தையில் அட்வென்ஜர் பைக்குகளுக்கான (Adventure Bikes) டிமாண்ட் நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. இந்தியாவில் தற்போது பைக்குகளில் தொலை தூர பயணங்களை மேற்கொள்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து கொண்டே உள்ளது. அது மட்டுமல்லாது, ஆஃப்-ரோடு சாகச பயணங்களை மேற்கொள்வதில் ஆர்வம் காட்ட கூடியவர்களின் எண்ணிக்கையும் அதிகரித்து கொண்டே செல்கிறது.

வேலியே பயிரை மேய்ந்த கதை... கியா தொழிற்சாலையில் திருட்டு!!

கியா (Kia), உலகளவில் பிரபலமான தென்கொரிய கார் நிறுவனம். இந்தியாவில் 2019ஆம் ஆண்டில் நுழைந்த கியா, குறுகிய காலத்திலேயே இந்தியாவின் முன்னணி கார் நிறுவனங்களுள் ஒன்றாக வளர்ந்து நிற்கிறது. இந்தியாவில் மட்டும் மாதத்திற்கு சராசரியாக 20 ஆயிரம் கார்களை விற்பனை செய்யும் கியா நிறுவனம், இந்திய மார்க்கெட்டிற்குள் நுழையும்போதே ஆந்திராவில் கார் உற்பத்தி தொழிற்சாலை உடன் தான் நுழைந்தது. ஆந்திர பிரதேசம் மாநிலத்தில் அனந்தபுரம் மாவட்டத்தில் சுமார் 536 ஏக்கர் பரப்பளவில் உள்ள கியா தொழிற்சாலையில் தற்போது பெரிய அளவிலான திருட்டு சம்பவம் நடந்துள்ளது.

இன்னும் அஞ்சே மாசம்தான்! பழைய வண்டிகளுக்கு ஆப்பு வைத்த அரசு!

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னையில் சிக்கி தடுமாறி கொண்டுள்ளன. இதற்கு பெட்ரோல் (Petrol) மற்றும் டீசல் (Diesel) மூலமாக இயங்கும் பழைய வாகனங்கள் மிகவும் முக்கியமான காரணங்களாக இருக்கின்றன. எனவே பழைய பெட்ரோல், டீசல் வாகனங்களின் இயக்கத்தை கட்டுப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் கார்களின் விலை குறையப்போகுது!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகன தயாரிப்பை அதிகப்படுத்த வெளிநாட்டிலிருந்து இறக்குமதி செய்யப்படும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான வரியை 110 சதவீதத்தில் இருந்து 15 சதவீதமாக குறைக்க முடிவு செய்துள்ளது. ஆனால் இது அனைத்து விதமான நிறுவன கார்களுக்கும் கிடையாது. குறிப்பிட்ட விதிமுறையை பின்பற்றும் வாகன நிறுவனங்களுக்கு மட்டுமே இந்த இறக்குமதி விலையில் தள்ளுபடி பொருந்தும். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

பாகிஸ்தான் சாலைகளை பார்த்து இந்திய யூடியூபர் சொன்ன வார்த்தை!

விலையுயர்ந்த பிஎம்டபிள்யூ (BMW) பைக்கில் பாகிஸ்தானில் சாலை மார்க்கமாக சுற்றுப்பயணம் மேற்கொண்ட இந்திய யூடியூப்பர் (Youtuber)-ஐ பற்றி சமீபத்தில் கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். இந்த நிலையில், இந்த நபர் தேசிய புலனாய்வு குழுவினரால் (NIA) கைது செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. சென்னை விமான நிலையத்திற்கு வந்தவரை அதிரடியாக என்.ஐ.ஏ கைது செய்துள்ளது. என்ன நடந்தது? பாகிஸ்தான் சாலைகளில் இந்த இந்தியர் ஓட்டிய பிஎம்டபிள்யூ பைக் எத்தகையது என்பதை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.
Advertisement

ஹாரியர் இவி காரில் எத்தனை வேரியன்ட் இருக்குது தெரியுமா?

டாடா மோட்டார்ஸ் நிறுவனம் தனது ஹாரியர் இவி காரை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் ரூ21.49 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு அறிமுகமாகியுள்ளது. இந்த காருக்கான புக்கிங் ஜூலை 2ம் தேதி முதல் துவங்குகிறது. இந்த காரின் வேரியன்ட் விபரங்கள் மற்றும் அதன் அம்சங்கள் குறித்த தகவல்கள் தற்போது வெளியாகியுள்ளது. விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

70 நாளில் 10,000 கார்களை டெலிவரி செய்த மஹிந்திரா!

மஹிந்திரா நிறுவனம் தனது எக்ஸ்இவி 9இ மற்றும் பிஇ6 ஆகிய கார்களில் முக்கிய மைல் கல்லை எட்டி பிடித்துள்ளுது. இந்நிறவனம் கடந்த 2 மாதங்களில் அதிக எண்ணிக்கையான வாடிக்கையார்களுக்கு இந்த காரை டெலிவரி செய்தது. இந்த காருக்கு ஏகப்பட்ட புக்கிங் குவிந்துள்ள நிலையில் முடிந்த அளவிற்க அதிக அளவிலான வாடிக்கையாளர்களுக்கு கார்களை டெலிவரி செய்து வருகிறது.இத குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இந்த ஹூண்டாய் காரை இதுக்கு அப்புறமாவது யாராவது வாங்குவார்களா

ஹூண்டாய் (Hyundai) நிறுவனத்தில் இருந்து இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார், கிரெட்டா (creta) ஆகும். ஹூண்டாயில் இருந்து மட்டுமில்லாமல், ஒட்டுமொத்தமாகவே இந்தியாவில் சிறப்பாக விற்பனையாகும் கார்களுள் ஒன்று, கிரெட்டா ஆகும். இதனாலேயே கிரெட்டாவின் 6/7-சீட்டர் வெர்சனாக ஹூண்டாய் அல்கஸார் (Alcazar) கார் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த 2021ஆம் ஆண்டில் அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால், மஹிந்திராவின் ஸ்கார்பியோ (Scorpio) மற்றும் எக்ஸ்யூவி700 (XUV700) கார்களின் ஆதிக்கத்தால், அல்கஸாரின் விற்பனை பெரிய அளவிற்கு இல்லை என்றுதான் சொல்ல வேண்டும்.

எலக்ட்ரிக் கார்கள் விற்பனையில் மஹிந்திரா கண்ட புதிய சாதனை!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தில் இருந்து மிகுந்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் (Harrier.ev Electric Car) அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. விற்பனையில் இந்த டாடா எலக்ட்ரிக் காருக்கு போட்டியாக ஏற்கனவே மஹிந்திரா நிறுவனம் அதன் பிஇ 6 (BE 6) மற்றும் எக்ஸ்.இ.வி 9இ (XEV 9e) எலக்ட்ரிக் கார்களை கடந்த ஆண்டு இறுதியில் அறிமுகம் செய்தது. இன்னும் சொல்லப்போனால், டாடா ஹெரியர்.இவி எலக்ட்ரிக் கார் அறிமுகம் செய்யப்படுவதற்கு முன்பே மேற்கூறப்பட்ட மஹிந்திரா எலக்ட்ரிக் கார்கள் 10 ஆயிரம் கார்கள் சாலைக்கு வந்துவிட்டன. இதனை பற்றிய கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

இவ்ளோ கம்மியான விலையில் 130 கிமீ ஓடும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் (Electric Scooters) ஒன்று ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta). கடந்த 2024ம் ஆண்டு ஏப்ரல் மாதம் ஏத்தர் ரிஸ்டா எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது. ஆனால் இதன் டெலிவரி பணிகள் 2024ம் ஆண்டு ஜூலை மாதம்தான் தொடங்கப்பட்டன.