பெருந்தொகை செலவிட்டு பிரைவேட் ஜெட்டை வாங்கிய இந்தியர்!
ஆட்டோமொபைல்
- 1 year, 4 month, 12 days ago
ரவி பிள்ளை, இந்த பெயரை அறியாத பிசினஸ்மேன்களே இருக்க முடியாது. இந்தியாவைச் சேர்ந்த இவர் பஹ்ரைனின் மிகப் பெரிய தொழிலதிபராக வலம் வந்துக் கொண்டிருக்கின்றார். இவரே ஊரையே வளச்சுப் போடும் அளவிற்கு அதிக விலைக் கொண்ட பிரைவேட் ஜெட் விமானத்தை வாங்கி இருக்கின்றார். இந்த கொள்முதலின் வாயிலாக அவர் தலைப்பு செய்தியில் இடம் பிடித்திருக்கின்றார். முன்னதாக பிசினஸ் விஷயத்தில் சாதனைகளைப் படைத்து, அதன் வாயிலாக செய்திகளில் இடம் பிடித்து வந்த ரவி பிள்ளை பிரைவேட் ஜெட்டை வாங்கியதன் வாயிலாக தலைப்பு செய்தியாக மாறியிருக்கின்றார்.