அசோக் லேலண்ட்-இன் புதிய பேருந்து உற்பத்தி ஆலை திறப்பு!

அசோக் லேலண்ட் (Ashok Leyland), இந்தியாவின் முன்னணி வாகன உற்பத்தி நிறுவனங்களில் இதுவும் ஒன்று. இந்த நிறுவனமே தன்னுடைய புதிய வாகன உற்பத்தி ஆலையை தற்போது திறந்து இருக்கின்றது. பிரமாண்டமாக 75 ஏக்கர் பரப்பளவிலேயே தன்னுடைய புதிய ஆலையை அசோக் லேலண்ட் திறந்திருக்கின்றது. நமது அண்டை மாநிலமான ஆந்திராவிலேயே புதிய ஆலை திறக்கப்பட்டு உள்ளது. துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் விஜயவாடாவில் அசோக் லேலண்டின் புதிய ஆலை திறக்கப்பட்டு இருக்கின்றது.

இனி இந்த கம்பெனி கார்களை ஒரு பய திருட முடியாது!

மேம்படுத்தப்பட்ட திருட்டு தடுப்பு நடவடிக்கைகளால் ஹூண்டாய் மற்றும் கியா திருட்டுகள் 37.5% குறைந்துள்ளதாக அவர்கள் தெரிவித்துள்ளனர், இது 2024 ஆம் ஆண்டில் அமெரிக்க வாகன திருட்டுகளில் பரவலான வீழ்ச்சிக்கு பங்களிக்கிறது.

8 லட்சம் யூனிட் விற்பனையை எட்டிய எஸ்யூவி கார்..

இந்தியாவில் எஸ்யூவி (SUV) கார் மாடல் ஒன்று '8 லட்சம் யூனிட்டுகள் விற்பனை' எனும் மாபெரும் சாதனையைப் படைத்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. கூடுதல் ஆச்சரியம் என்னவென்றால் அது மாருதி சுஸுகி (Maruti Suzuki) தயாரிப்பு அல்ல என்பதுதான். இதேபோல், மஹிந்திரா (Mahindra) மற்றும் ஹூண்டாய் (Hyundai) இந்த நிறுவனங்களின் தயாரிப்பும் அது அல்ல என்பது குறிப்பிடத்தகுந்தது. "அப்போ அது வேறு யாரோடைய தயாரிப்புதாங்க" என கேக்குறீங்களா.. எல்லாம் நம்ம டாடா மோட்டார்ஸ் (Tata Motors)-ஓட தயாரிப்புதான்.

பைக்கை ஓட்டி பார்த்த எங்களுக்கு அல்லு இல்ல... ரிவியூ வீடியோ!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் அதன் புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக்கை சமீபத்தில் அறிமுகம் செய்தது. 2023ஆம் ஆண்டில் இத்தாலியில் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட 2.5ஆர் க்ஸ்டண்ட் (2.5R Xtunt) கான்செப்ட்டின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதாக புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் விளங்குகிறது. இந்தியாவில் 250சிசி பைக்குகள் பிரிவில் ஏற்கனவே கேடிஎம் (KTM), பஜாஜ் (Bajaj), ஹஸ்க்வர்னா (Husqvarna) உள்ளிட்ட நிறுவனங்களின் ஆதிக்கம் இருக்கும் நிலையில், அந்த வரிசையில் ஹீரோ மோட்டோ நிறுவனமும் தன்னை புதிய எக்ஸ்ட்ரீம் 250ஆர் பைக் உடன் இணைத்துக் கொண்டுள்ளது.
Advertisement

வெறும் 11 மாதத்தில் 4 லட்சம் பேர் இந்த வண்டிய வாங்கிட்டாங்க!

2025 நிதியாண்டில் 4 லட்சத்திற்கும் அதிகமான யூனிட்கள் விற்பனையானதன் மூலம், TVS அப்பாச்சி தொடர் 150-200cc மோட்டார் சைக்கிள் பிரிவில் முன்னிலை வகிக்கிறது, சந்தை சவால்களுக்கு மத்தியில் 17% அதிகரிப்பைக் காட்டுகிறது.

ஹீரோ பைக்குகளிலேயே இது வேற ரகம் - எக்ஸ்ட்ரீம் 250ஆர் ரிவியூ!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனம் கடந்த 2023ஆம் ஆண்டில் இத்தாலியின் மிலான் நகரில் நடைபெற்ற EICMA கண்காட்சியில் தனது புதிய மோட்டார்சைக்கிள்களையும், எதிர்காலத்தில் தனது மோட்டார்சைக்கிள்கள் எவ்வாறு இருக்கும் என்பதையும் வெளிக்காட்டி இருந்தது. அந்த வகையில், ஹீரோ நிறுவனம் சார்பில் கண்காட்சியில் காட்சிக்கு நிறுத்தப்பட்ட கான்செப்ட் 2.5ஆர் க்ஸ்டண்ட் (Concept 2.5R Xtunt) என்கிற பைக் கான்செப்ட் பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்திழுத்தது. அப்படியே ஒரு வருடம் ஓடிப்போனது. இந்த ஒரு வருடத்தில் கான்செப்ட் 2.5ஆர் க்ஸ்டண்ட் தனது தோற்றத்தை பெற ஆரம்பித்தது. அதாவது, இந்த கான்செப்ட்டில் இருந்து ஒரு பைக்கை உருவாக்கும் பணிகளில் ஹீரோ மோட்டோகார்ப் ஈடுப்பட்டு வந்தது.

இந்த முறை குறி வெச்சா தப்பாது! ஹீரோ மோட்டோகார்பின் பிளான்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தில் இருந்து அடுத்ததாக பலத்த எதிர்பார்ப்புக்கு மத்தியில் எக்ஸ்பல்ஸ் 210 (Xpulse 210) மற்றும் எக்ஸ்ட்ரீம் 250ஆர் (Xtreme 250R) பைக்குகள் விற்பனை செய்யப்பட உள்ளன. சமீபத்தில் டெல்லியில் கோலாக்கலமாக நடைபெற்ற ஆட்டோ எக்ஸ்போ 2025 (Auto Expo 2025) கண்காட்சியில் அறிமுகம் செய்யப்பட்ட இந்த புதிய பைக்குகளின் முன்பதிவுகள் அறிவிக்கப்படி இன்று (மார்ச் 20) துவங்கப்பட உள்ளது. இந்த புதிய ஹீரோ பைக்குகளை பற்றி இனி இந்த தொகுப்பில் விரிவாக பார்க்கலாம், வாங்க.

100 கிலோ கம்மி எடையில் ரெடியாகிட்டு இருக்கு புதிய ஆல்டோ..

இந்தியர்களின் பேரன்புமிக்க கார் மாடலாக உள்ளது மாருதி சுஸுகி ஆல்டோ (Maruti Suzuki Alto). இந்த கார் மாடலின் புதிய தலைமுறை வெர்ஷனையே சுஸுகி (Suzuki) நிறுவனம் உருவாக்கிக் கொண்டிருப்பதாக தற்போது தகவல்கள் வெளியாகி உள்ளன. நாம் இதுவரை பார்த்திராத ஓர் ஆல்டோவாகவே இந்த புதிய தலைமுறை ஆல்டோ (New Gen Alto) இருக்கும் என கூறப்படுகின்றது. இதுகுறித்த தகவலே தற்போது வெளியாகி உள்ளது. அதாவது, புதிய தலைமுறை ஆல்டோவின் குறிப்பிட்ட சில முக்கிய சிறப்புகள் பற்றிய விபரங்களே வெளியாகி உள்ளன.

ராயல் என்ஃபீல்டு தொடுவது எல்லாமே பொன்னாக மாறுது!

ராயல் என்ஃபீல்டு (Royal Enfield), நம் சென்னை (Chennai)-இல் செயல்படும் உலகளவில் பிரபலமான பைக் நிறுவனம். இன்னும் சொல்லப்போனால், சென்னையின் அடையாளமாக கூட ராயல் என்ஃபீல்டை சொல்லலாம். அந்த அளவிற்கு மாதத்திற்கு மாதம் வளர்ந்துக் கொண்டே வரும் ராயல் என்ஃபீல்டு நிறுவனம் நடந்து முடிந்த 2025 பிப்ரவரி மாதத்தில் மொத்தம் 80 ஆயிரத்து 799 பைக்குகளை விற்பனை செய்துள்ளது. அதுவே, கடந்த 2024ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் வெறும் 67 ஆயிரத்து 922 பைக்குகளை மட்டுமே ராயல் என்ஃபீல்டு விற்பனை செய்திருந்தது. இதில் இருந்து ராயல் என்ஃபீல்டு ஒரே வருடத்தில் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என்பதை அறியலாம்.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு திடீர் தடை?

இந்தியாவில் காற்று மாசுபாடு (Air Pollution) பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே செல்கிறது. உலகில் காற்று மாசுபாடு பிரச்னையால் மிக கடுமையாக பாதிக்கப்பட்ட நகரங்களின் பட்டியலில், இந்தியாவை சேர்ந்த முன்னணி நகரங்கள் இடம்பெறுவது வாடிக்கையான ஒரு விஷயமாக மாறி விட்டது. இதற்கு தலைநகர் டெல்லியை (Delhi) உதாரணமாக கூற முடியும். ஒரு சில சமயங்களில், தலைநகர் டெல்லியில் காற்றின் தரம் மிக மோசமான நிலைக்கு சென்று விடுகிறது. எனவே டெல்லியில் வசிக்கும் பொதுமக்கள் சுவாசம் தொடர்பான பல்வேறு பிரச்னைகளுக்கு ஆளாக நேரிடுகிறது.

நமக்கு பக்கத்து மாநிலத்துக்கு இந்த பஸ் வந்துடுச்சா?

கோழிக்கோடு சர்வதேச விமான நிலையத்தில், பசுமை போக்குவரத்து தீர்வுகளை ஊக்குவிக்கும் வகையில், EKA மொபிலிட்டியின் ஹைட்ரஜன் எரிபொருள் செல் பேருந்து கேரளாவில் தொடங்கப்பட்டது.

5 நிமிஷ ஜாலிக்காக... எல்லாமே மொத்தமா முடிஞ்சிடுச்சி!


Advertisement

டாடா சொந்த செலவில் சூன்யம் வச்சுக்க ரெடி ஆகிட்டு இருக்கு..

இந்தியர்கள் கொஞ்சமும் விரும்பாத, குறிப்பாக, மிகவும் வெறுக்கக் கூடிய காரியம் ஒன்றை டாடா மோட்டார்ஸ் (Tata Motors) விரைவில் செய்ய இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. வேறு ஒன்றுமில்ல, அந்நிறுவனம் அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்து இருக்கின்றது. சமீபத்தில் பிரபல கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி (Maruti Suzuki) அதன் புதிய வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்தது. இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த கார் காதலர்களுக்கும் பேரதிர்ச்சியை ஏற்படுத்தும் வகையில் அமைந்தது.

டெஸ்லா முதல்ல கொண்டு வரும் காரில் இவ்வளவு வசதிகள் இருக்குதா

டெஸ்லா மும்பையில் தனது முதல் காட்சியகத்தைத் திறக்கத் திட்டமிட்டுள்ளது, புதிய அம்சங்கள் மற்றும் உள்ளூர் உற்பத்தி சாத்தியங்கள் கொண்ட மாடல் Y மற்றும் மாடல் 3 ஆகியவற்றை அறிமுகப்படுத்துகிறது.

உலகின் முதல் ஹைட்ரஜன் பவர்டு விமானத்தை தயாரிக்கும் பிபிசிஎல்

இந்தியாவின் முன்னணி ஆயில் உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக பாரத் பெட்ரோலியம் கார்பரேசன் லிமிடெட் (Bharat Petroleum Corporation Limited) உள்ளது. இந்த நிறுவனம் உலகின் முதல் ஹைட்ரஜனில் இயங்கும் பறக்கும் வாகனத்தை தயாரிக்க இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. பாரத் பெட்ரோலியம் மட்டுமே இந்த பணியில் ஈடுபடப் போவதில்லை, இன்னும் சில நிறுவனங்களும் இணைந்தே இந்த பறக்கும் வாகனத்தைத் தயாரிக்க இருக்கின்றன. இதற்கான ஒப்பந்தத்திலேயே நிறுவனங்கள் சமீபத்தில் கையெழுத்திட்டிருக்கின்றன.

பேருந்தில் அடைச்சி கொண்டு போறது எல்லாம் அந்த காலம்!

பிஎம்டபிள்யூ க்ரூப் இந்தியா (BMW Group India), சொகுசு கார்களை விற்பனை செய்வதில் இந்தியாவிலேயே முன்னணி நிறுவனங்களுள் ஒன்றாக விளங்குகிறது. மெர்சிடிஸ்-பென்ஸ் (Mercedes-Benz) நிறுவனத்துக்கு அடுத்து, இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யும் நிறுவனம் பிஎம்டபிள்யூ ஆகும். இந்த நிலையில், பெங்களூர் சர்வதேச விமான நிலையத்தில் விஐபி முனையத்தின் லக்சரி மொபிலிட்டி பார்ட்னர் (Luxury Mobility partner)-ஆக பிஎம்டபிள்யூ தன்னை இணைத்துக் கொண்டுள்ளது. இதுகுறித்த கூடுதல் விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

வெயிலால் கருத்துப் போன உங்க சருமத்தை வெள்ளையாக்க போட வேண்டிய ஃபேஸ் பேக்குகள்!


முன்னணி கார் மாடலின் விலையை குறைத்தா மஹிந்திரா!

மஹிந்திரா (Mahindra) நிறுவனம் அதன் முன்னணி கார் மாடல் ஒன்றின் விலையை குறைத்து இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. எக்ஸ்யூவி 700 (Mahindra XUV700) கார் மாடலின் விலையையே அது குறைத்திருக்கின்றது. முன்னணி நிறுவனங்கள் பல தங்களின் வாகனங்களின் விலையை உயர்த்த இருப்பதாக அறிவித்துக் கொண்டிருக்கின்றன. மாருதி சுஸுகி (Maruti Suzuki), கியா (Kia), டாடா மோட்டார்ஸ் (Tata Motors) மற்றும் ஹூண்டாய் (Hyundai) உள்ளிட்ட நிறுவனங்கள் விரைவில் அதன் கார்களின் விலையை உயர்த்த இருக்கின்றது.

மார்ச் 31க்குள் வாங்கினால் கம்மி ரேட்ல கிடைக்கும்!

ஹூண்டாய் மோட்டார் இந்தியா லிமிடெட் ஏப்ரல் 2025 முதல் வாகன விலைகளை அதிகபட்சமாக 3% வரை உயர்த்தும் என அறிவித்துள்ளது. அதிகரித்த செலவுகளே இதற்கு காரணம். பாதிக்கப்பட்ட மாடல்கள் மாறுபடும்.

அடி மாட்டு விலையில் களமிறங்கிய குட்டி எலெக்ட்ரிக் கார்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று எம்ஜி கோமெட் இவி (MG Comet EV). இதன் 2025 மாடல் இந்திய சந்தையில் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. 2025 எம்ஜி கோமெட் இவி எலெக்ட்ரிக் கார், பிஏஏஎஸ் (BaaS) திட்டத்தின் கீழும் கிடைக்கும். Battery as a Service என்பதன் சுருக்கம்தான் BaaS. செய்திக்குள் நுழையும் முன்பு இந்த திட்டம் குறித்து நீங்கள் தெரிந்து கொள்வது நல்லது என நாங்கள் கருதுகிறோம்.
Advertisement

விண்கலத்தை தொடவே பயந்த விஞ்ஞானிகள்! ஏன்?

9 மாதத்திற்கு பிறகு சர்வதேச விண்வெளி நிலையத்திலிருந்து மீண்டும் பூமிக்கு சுனிதா வில்லியம்ஸ் திரும்பியுள்ளார். இது ஒரு சரித்திர நிகழ்வாக பார்க்கப்படுகிறது. இந்த நிகழ்வில் சுனிதா வில்லியம்ஸ் வந்த ஸ்பேஸ் கிராஃப்ட் கடலில் வந்து விழுந்ததும் ஒரு பெண் துணிச்சலாக அந்த ஸ்பேஸ் கிராஃப்ட் மீது ஏறி அதை சோதனை செய்தார். இந்த ஸ்பேஸ் கிராஃப்ட் பூமிக்கு வந்த பிறகு என்ன நடந்தது? இதற்கு பின்னால் உள்ள தொழிற்நுட்ப காரணங்கள் என்ன? விரிவாக காணலாம் வாருங்கள்.

2.5 மணிநேரம் படம் முடியுறதுக்குள்ள பெங்களூர் போய்டலாம்!

சென்னை- பெங்களூர் (Chennai- Bengaluru) நெடுஞ்சாலை ஆனது இந்தியாவின் மிக முக்கியமான நெடுஞ்சாலைகளுள் ஒன்றாக விளங்குகிறது. குறிப்பாக, தென்னிந்தியாவின் இரு பெரும் மாநகரங்களை இணைக்கக்கூடிய முக்கியமான போக்குவரத்து வழித்தடமாக சென்னை- பெங்களூர் நெடுஞ்சாலை விளங்குகிறது. சென்னை துறைமுகத்திற்கு வரும் பொருட்களை சாலை வழியாக இந்தியாவின் மென்பொருள் தலைநகரமாக பார்க்கப்படும் பெங்களூருக்கு கொண்டு செல்வதற்கு இந்த நெடுஞ்சாலை முக்கியமானதாக விளங்குகிறது. ஆனால், இந்த நெடுஞ்சாலையின் நிறைய பகுதிகள் சேதமடைந்து கிடப்பதை அவ்வழியாக சமீபத்தில் சென்றவர்களுக்கு தெரிந்திருக்கும்.

டெலிவரி இந்த வருஷத்துல இல்லனு தெரிஞ்சும் புக்கிங் குவியுது!

உலக தரத்திற்கு தயார் செய்யப்பட்டு இருக்கும் இந்திய தயாரிப்பு இ-ஸ்கூட்டருக்கு நாட்டு மக்கள் மத்தியில் மிக அமோகமான வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பெங்களூருவை மையமாகக் கொண்டு இயங்கும் மின்சார இரண்டு சக்கர வாகன உற்பத்தி நிறுவனம் அல்ட்ராவைலட் (Ultraviolette). இந்த நிறுவனத்தின் சமீபத்திய வெளியீடாக டெஸ்ஸேரேக்ட் (Tesseract) உள்ளது. இந்த மின்சாரத்தில் இயங்கும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலுக்கே இந்தியர்கள் தங்களின் பேராதரவை வழங்கத் தொடங்கி இருக்கின்றனர்.

கருப்பு ட்ரெஸ், சிகப்பு காருக்கு காரணம் இதுதானா!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars) மிகப்பெரிய 'டிமாண்ட்' உருவாகி விட்டது. செடான் ரக கார்களை (Sedan Cars) யாரும் பெரிதாக கண்டு கொள்வதில்லை. இருப்பினும் ஒரு சில சொகுசு செடான் கார்கள் (Luxury Sedan Cars) வாடிக்கையாளர்கள் மத்தியில், குறிப்பாக திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வருகின்றன. அப்படி திரையுலக நட்சத்திரங்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் சொகுசு செடான் ரக கார்களில் ஒன்றுதான் ஆடி ஏ4 (Audi A4).

சுனிதா வில்லியம்ஸ் பத்திரமாக பூமிக்கு வர இதான் காரணம்

இந்தியாவை பூர்வீகமாக கொண்ட விண்வெளி வீராங்கனையான சுனிதா வில்லியம்ஸ் சுமார் 9 மாதங்கள் விண்வெளியில் சிக்கிக்கொண்ட நிலையில் தற்போது அவர் பத்திரமாக பூமிக்கு திரும்பியுள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் டிராகன் என்ற ஸ்பேஸ் கிராஃப்ட் தான் அவரை பத்திரமாக பூமிக்கு மீட்டு கொண்டு வந்துள்ளது. தற்போது உலகம் முழுவதும் சுனிதா வில்லியம்ஸிற்கு வரவேற்பு அளித்து வருகின்றனர். இந்நிலையில் அவர் பயணித்து வந்த டிராகன் ஸ்பேஸ் கிராஃப்ட் பற்றி பலர் தேடி வருகின்றனர். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.