வெயில் காலம் வந்தாச்சு! பயப்படாமல் இந்த டிப்ஸை பின்பற்றுங்க!

கோடைக்காலம் (Summer) துவங்கிவிட்டது. வெப்பமான நாடான நம் இந்தியாவில் வெயில் காலம் என்றாலே பல விதங்களில் அசவுகரியங்கள் தான் கடைசியில் மிஞ்சுகின்றன. உடலில் அதிகளவில் ஏற்படும் வியர்வையில் இருந்து, தண்ணீர் பற்றாக்குறை வரையில் என தனிநபர் பிரச்சனையில் இருந்து சமூக பிரச்சனை வரையில் என எல்லாமே கோடைக்காலத்தில் தான் ஏற்படுகிறது. அதேபோன்று, வாகனங்களும் கோடைக்காலத்தில் தான் பாதிப்படைகின்றன. குறிப்பாக, எலக்ட்ரிக் வாகனங்களுக்கு சவாலான எதிரியாக இருப்பது அதிகமான வெப்பத்தை கக்கும் கோடைக்காலம் ஆகும். சில வருடங்களுக்கு முன்னர், வெயில் காலம் வந்துவிட்டாலே ஆங்காங்கே எலக்ட்ரிக் வாகனங்கள் தீப்பிடித்து எரியும் சம்பவங்களை பார்த்திருப்பீர்கள்.

கோடி ரூபா சொகுசு காரில் வலம் வரும் நடிகை!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று பிஎம்டபிள்யூ 6 சீரிஸ் ஜிடி (BMW 6 Series GT). இந்தியாவை சேர்ந்த திரையுலக நட்சத்திரங்கள், விளையாட்டு வீரர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் போன்ற கோடீஸ்வரர்கள் மத்தியில் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களுக்கு பொதுவாகவே நல்ல வரவேற்பு காணப்படுகிறது. குறிப்பாக பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் 6 சீரிஸ் ஜிடி காரை பயன்படுத்துவதற்கு பிரபல மனிதர்கள் பலரும் ஆர்வமாக உள்ளனர். இதில், பாலிவுட் நடிகர் ஜிம் ஷர்பா (Jim Sarbh) மற்றும் தொலைக்காட்சி நடிகை கிரிஸ்டில் டிசௌசா (Krystle D'Souza) போன்றவர்கள் குறிப்பிடத்தக்கவர்கள் ஆவர்.

விலை 4.20 கோடி ரூபா.. ரெண்டே பேர் மட்டும்தான் போக முடியும்..

மெர்சிடிஸ் மேபேக் எஸ்எல் 680 மோனோகிராம் சீரிஸ் (Mercedes-Maybach SL 680 Monogram Series) சொகுசு கார் மாடல் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு இருக்கின்றது. இதுவே இந்தியாவில் விற்பனைக்கு வரும் முதல் மேபேக் எஸ்எல் கார் மாடல் ஆகும். இதற்கு அறிமுகமாக ரூ. 4.20 கோடி விலை நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கின்றது. இது வெறும் எக்ஸ்-ஷோரூம் விலை மட்டுமே ஆகும். மெர்சிடிஸ் ஏஎம்ஜி எஸ்எல் 55 (Mercedes-AMG SL 55) கார் மாடலைக் காட்டிலும் ரூ. 1.50 கோடி அதிக விலையைக் கொண்டதாக இது காட்சியளிக்கின்றது.

மார்ச் 31க்கு பிறகு தலையில் இடியை இறக்க போகும் டாடா!!

டாடா மோட்டார்ஸ் (Tata Motors), இந்தியாவின் மிக பெரும் கமர்ஷியல் வாகன உற்பத்தி நிறுவனம் (Commercial Vehicle Manufacturer). தற்சமயம் கார்கள் விற்பனையில் இந்திய அளவில் முன்னணியில் இருக்கும் டாடா மோட்டார்ஸ் நிறுவனம், கார்கள் விற்பனையில் ஈடுப்படுவதற்கு முன்பே கனரக லாரிகள் (Lorries), பேருந்துகள் (Buses) உள்ளிட்ட கமர்ஷியல் வாகனங்களை உற்பத்தி செய்யும் பணியில் ஈடுப்பட்டு வந்தது. அதன்மூலம், மக்கள் மத்தியில் கிடைத்த வரவேற்பு கொடுத்த தைரியத்தில்தான் 1990ஆம் காலக்கட்டத்தில் கார்கள் விற்பனையில் டாடா மோட்டார்ஸ் இறங்கிய விஷயம் எல்லாம் உங்களுக்கு தெரிந்திருக்கும் என நினைக்கிறேன்.
Advertisement

இதை செய்யாம பாதி பேரு லட்ச கணக்குல செலவு பண்ணுறாங்க!

பராமரிப்பு, குளிர்விக்கும் திரவ அளவுகள் மற்றும் காற்று ஓட்டத்தை நிர்வகித்தல் குறித்த நடைமுறை குறிப்புகளுடன் கோடையில் எஞ்சின் அதிக வெப்பமடைவதை எவ்வாறு தடுப்பது என்பதை அறியவும்.

சிஇஓ-கள் வேற வேறயா இருந்தாலும், இதை செய்து காட்டி இருக்காங்க

ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா (Skoda Auto Volkswagen India) நிறுவனம் இந்தியாவில் கார்கள் விற்பனையில் முன்னணியில் உள்ளது. இதற்கு முக்கியமான காரணம், கார்களை இந்தியாவிலேயே இந்த கூட்டணி நிறுவனம் உற்பத்தி செய்வது ஆகும். இந்தியாவில் ஓய்வில்லாமல் ஓடிக் கொண்டிருக்கும் நிறுவனங்களுள் ஸ்கோடா ஆட்டோ ஃபோக்ஸ்வேகன் இந்தியா நிறுவனத்தின் தொழிற்சாலையும் ஒன்றாகும். கார்களை உருவாக்குவதுடன், அவற்றிற்கான என்ஜின்களையும் இந்த ஸ்கோடா- ஃபோக்ஸ்வேகன் கூட்டணியில் உருவாக்குகின்றனர். இந்த நிலையில், கார்களுக்கான என்ஜின்களை உற்பத்தி செய்வதில் இந்த கூட்டணி நிறுவனம் பிரம்மாண்ட மைல்கல்லை கடந்துள்ளது.

அடுத்த வருஷம் முதல் பெட்ரோல் டூ-வீலர் பதிவு செய்யப்படாது..

காற்று மாசுபாட்டைக் காரணம் காட்டி உலக நாடுகள் ஐசிஇ (ICE) வாகனங்களுக்கு எதிராகக் கடுமையான நடவடிக்கையை எடுத்து வருகின்றன. அதாவது, பெட்ரோல் மற்றும் டீசல் போன்ற உள் எரிப்பு எஞ்சின் கொண்ட வாகனங்களை பயன்பாட்டில் இருந்து அகற்றுவதற்கான பணிகளை மேற்கொண்டு வருகின்றன. இந்தியாவிலும் இந்த பணிகள் மிக தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது என்பது கவனிக்கத்தகுந்தது. ஒவ்வொரு முறையும் அவற்றிற்கு எதிராக புதிய பாலிசிகளை மத்திய மற்றும் மாநில அரசுகள் முன்னெடுத்து வருகின்றன.

ஒரே மாசத்துல இத்தனை லட்சம் வண்டிகளை வித்துட்டாங்களா?

இந்தியாவின் இருசக்கர வாகன விற்பனையில் பிப்ரவரி 2025 இல் ஏற்பட்ட வீழ்ச்சியைக் கண்டறியவும், சவால்களுக்கு மத்தியில் சந்தை போக்குகளையும் சிறந்த செயல்பாட்டு மாதிரிகளையும் வெளிப்படுத்துகிறது.

டென்னிஸ் வீராங்கனையிடம் இவ்வளவு காஸ்ட்லி கார்களா?

இந்திய டென்னீஸ் வீராங்கனை சானியா மிர்ஸா மற்றும் பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர் சோயப் மாலிக் ஆகியோர் கடந்த 15 ஆண்டுகளுக்கு முன்னர் இஸ்லாமிய முறைப்படி திருமணம் செய்து கொண்டனர். இவர்களுக்கு ஒரு மகனும் இருக்கும் நிலையில் தற்போது இருவரும் விவாகரத்து செய்து பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் இரண்டு மாதத்தறி்கு ஒரு முறை துபாயில் நேரில் சந்தித்துக்கொள்வதாக செய்திகள் வெளியாகின. இது குறித்து மக்கள் அதிகம் பேசி வரும் நிலையில் சானியா மிர்ஸாவின் கார் கலெக்ஷனும் தற்போது வைரலாகி வருகிறது.

பெற்றெடுத்த தாய்க்கு செல்வ, செழிப்பில் திகழும் மகனின் பரிசு!

ஜெரோதா (Zerodha), பங்குச்சந்தையில் இந்தியாவின் மிக பெரும் பங்குத்தரகர் நிறுவனங்களுள் ஒன்று. இதனை யூனிகார்ன் நிறுவனம் என அழைக்கின்றனர். அதாவது, தற்சமயம் சுமார் 100 கோடிக்கும் அதிகமான சொத்து மதிப்பு கொண்ட இந்த நிறுவனத்தை 2010ஆம் ஆண்டில் நிகில் கமத் (Nikhil Kamath) மற்றும் நிதின் கமத் (Nithin Kamath) என்கிற சகோதரர்கள் தங்களது சொந்த உழைப்பில் நிறுவினர். அதாவது, இந்த நிறுவனத்தை நிறுவுவதற்காக வெளியில் இருந்து கடனுதவி பெறப்படவில்லை. இதுதான் உண்மையில் சொந்த காலில் நிற்பது போல...

ரூ. 3.50 லட்சத்தில் கிடைக்கும் மினி ரோல்ஸ் ராய்ஸ் கார்!

உலக பணக்காரர்களின் பிரியமான கார் மாடலாக ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் காட்சியளிக்கின்றது. ஆடம்பரத்திற்கும், தாராளமான இட வசதிக்கும் பெயர்போன ஓர் கார் மாடலே இது ஆகும். இதேபோல், அட்வான்ஸ்டு மற்றும் நவீன கால அம்சங்களையும் மிக தாராளமாக இந்த கார் மாடல் தன்னுள் கொண்டிருக்கும். இத்தகைய ஓர் கார் மாடலுக்கு போட்டி அளிக்கும் நோக்கிலேயே சீன வாகன உற்பத்தி நிறுவனம் மினி ரோல்ஸ் ராய்ஸ் கல்லினன் (Rolls Royce Cullinan) கார் மாடலை உருவாக்கி இருக்கின்றது.

ஆம்புலன்ஸ்க்கு கூட வழி விடாம அம்மணி எங்க போறாங்க?

இந்தியாவில் பல பெரு நகரங்களிில் டிராஃபிக் ஜாம் மிகவும் சாதாரண வினுயம் தான். பல சாலைகளில் நீண்ட தூர டிராஃபிக் ஜாம் அல்லது வெகு நேரம் காத்திருப்பது காரணமாக மக்கள் அடிக்கடி கோப்பட்டு பார்த்திருப்போம். பல நேரங்களில் அவசர வாகனங்களான ஆம்புலன்ஸ், தீயணைப்பு வாகனங்கள் கூட இப்படியாக போக்குவரத்து நெருக்கடியில் சிக்கி விடுகின்றன. இந்த வாகனங்கள் எல்லாம் டிராஃபிக் நெருக்கடி இருந்தாலும் அதற்கு மற்ற வாகன ஓட்டிகள் வழி விட வேண்டும் என்பது விதிமுறை. பலர் இதை செய்தும் விடுவார்கள்.
Advertisement

அதிர்ச்சியில் ஆழ்த்திய மாருதி சுஸுகியின் திடீர் முடிவு!

இந்தியாவின் நம்பர்-1 கார் நிறுவனம் என்ற பெருமையை மாருதி சுஸுகி (Maruti Suzuki) தன்வசம் வைத்துள்ளது. தற்போதைய நிலையில் அதன் அரேனா (Arena) ஷோரூம்கள் மூலம் 9 கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இதில், ஹேட்ச்பேக் ரகத்தை சேர்ந்தவை 5. அவை மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10), மாருதி சுஸுகி எஸ்-பிரெஸ்ஸோ (Maruti Suzuki S-Presso), மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio), மாருதி சுஸுகி வேகன் ஆர் (Maruti Suzuki Wagon R), மாருதி சுஸுகி ஸ்விஃப்ட் (Maruti Suzuki Swift) ஆகியவை ஆகும்.

டிரைவரே இல்லாமல் பயணிகளுடன் இயங்கும் காரை உருவாக்கும் டாடா!!

நான்கு சக்கர வாகன உலகின் ஜாம்பவான் நிறுவனம் டாடா மோட்டார்ஸ் (Tata Motors). இந்த நிறுவனமே டிரைவரே இல்லாமல் பயணிகளுடன் பயணிக்கின்ற மாதிரியான ஓர் தன்னாட்சி திறன் மிக்க வாகனத்தை தயாரிக்கும் பணியில் களமிறங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதை உறுதிப்படுத்தும் விதமாக அந்நிறுவனம் ஓர் தனித்துவமான தோற்றம் கொண்ட வாகனத்திற்கு பேடண்ட் உரிமம் பெற்றிருக்கின்றது. டாடா ஒய்யு (Tata Yu.) எனும் வாகனத்திற்கே டாடா தற்போது பேடண்ட் பதிவைச் செய்திருக்கின்றது.

7 பேருடன் குடும்பமாக போக சரியான கார் - எபோனி எடிசன் கார்!!

மஹிந்திரா (Mahindra), இந்தியாவின் முன்னணி கார் உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்று. இந்த நிறுவனத்தில் இருந்து அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று எக்ஸ்யூவி700 (XUV700) ஆகும். இந்த காரின் விற்பனையை மேலும் அதிகரிக்கும் முயற்சியாக, புதிய 'எபோனி எடிசன்' (Ebony Edition) எக்ஸ்யூவி700 காரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது. எபோனி என்பது கருமை நிறத்தை குறிக்கிறது. அதற்கு ஏற்ப புதிய எக்ஸ்யூவி700 எபோனி எடிசன் கார் முழுவதுமாக கருப்பு நிறத்தில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

அடி மாட்டு விலையில் களமிறங்கிய புது ஹோண்டா பைக்...

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹோண்டா ஷைன் 100 (Honda Shine 100). இது இந்திய சந்தையில் விற்பனை செய்யப்படும் மிகவும் விலை குறைவான ஹோண்டா நிறுவனத்தின் பைக்குகளில் ஒன்றாகும். இதன் காரணமாக ஒவ்வொரு மாதமும் மிகவும் சிறப்பான விற்பனை எண்ணிக்கையை ஹோண்டா ஷைன் பதிவு செய்து வருகிறது. இந்த விற்பனை எண்ணிக்கையை மேலும் அதிகரிக்க வேண்டும் என்பதற்காக, ஷைன் பைக்கின் 2025ம் ஆண்டு மாடலை, ஹோண்டா நிறுவனம் தற்போது விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.

இந்த காரை வாங்குன 37 பேர் யாருப்பா?

சிட்ரோயன் பாசால்ட் கூப்பின் விற்பனை இந்தியாவில் கணிசமாக குறைந்துள்ளது, இதனால் அதன் சந்தைப்படுத்தல் உத்தி மற்றும் நுகர்வோர் ஈர்ப்பு ஆகியவற்றை மறு ஆய்வு செய்ய வேண்டியிருக்கிறது.

நடிகை அமலா பாலுக்கு கார் பரிசளித்த கணவர்!

தமிழ் திரையுலகை ஒரு கலக்கு கலக்கிய நடிகைகளில் அமலா பால்-ம் ஒருவர். இவர் தற்போது மிக மிக விலை உயர்ந்த ஆடம்பர கார் ஒன்றை வாங்கி இருக்கின்றார். தன்னுடைய கார் கொள்முதல் பற்றிய தகவலை அவர் இன்ஸ்டா பதிவின் வாயிலாக உறுதிப்படுத்தி இருக்கின்றார். இந்த கார் அவரின் நண்பரும், கணவருமான ஜெகத் தேசாய் பரிசாக வழங்கி இருக்கின்றார். கடந்த நாட்களில் மிக அதிக அளவில் படங்களில் நடித்து வந்த அமலா பால் தற்போது மிகவும் குறைவாகவே படங்களில் நடித்து வருகின்றார். குறிப்பாக, தமிழ் படங்களில் அவர் பெரிய அளவில் நடிப்பதே இல்லை.

20 வருஷமா மஹிந்திரா வித்துட்டு இருக்கும் காருக்கு அதிக தேவை!

எஸ்யூவி கார்கள் (SUV Cars)-க்கு நம் இந்தியர்களிடம் இருந்து நல்ல வரவேற்பு கடந்த சில வருடங்களாகவே கிடைத்து வருகிறது. பொதுவாக, எஸ்யூவி கார்கள் பல்வேறு விதமான உடலமைப்புகளில் விற்பனை செய்யப்படுகின்றன. அவற்றுள் ஒன்றுதான், மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் ஆகும். 4.4 மீட்டர்களில் இருந்து 4.7 மீட்டர்கள் வரையிலான நீளத்துடன், கொஞ்சம் நீளமான எஸ்யூவி கார்களாக மிட்-சைஸ் எஸ்யூவி கார்கள் விற்பனை செய்யப்படுகின்றன. இவற்றின் கடந்த பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கைகள் வெளியாகி உள்ளன. அவற்றை பற்றி தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.

அம்பானி மகன் ஓட்டி வந்த கார் இவ்வளவு காஸ்ட்லியா?

இந்தியாவின் மிகப்பெரிய பணக்காரரான முகேஷ் அம்பானியின் மகன் ஆகாஷ் அம்பானி சமீபத்தில் ரூ10.5 கோடி மதிப்பிலான ஒரு எஸ்யூவி காரில் பயணம் செய்து வந்த வீடியோ வைரலாக பரவி வருகிறது. இந்த காரை சாலையில் காண்பதே அரிதான விஷயமாக இருக்கிறது. இந்த கார் பலரது கனவு காராக இருக்கிறது. அவ்வளவு காஸ்ட்லியான கார் என்றால் அதில் என்னலாம் இருக்கும்? இந்த காரை தயாரிக்கும் நிறுவனம் எது? விரிவான விபரங்களை இங்கே காணலாம் வாருங்கள்.
Advertisement

வெறும் 5 லட்சத்துக்கு இப்டி ஒரு காரை வித்துட்டு இருக்காங்களா

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா டியாகோ (Tata Tiago). ஹேட்ச்பேக் (Hatchback) ரகத்தை சேர்ந்த டாடா டியாகோ காரின் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் ஒட்டுமொத்தமாக 6,954 டியாகோ கார்களை விற்பனை செய்துள்ளது. ஆனால் இந்த எண்ணிக்கை கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 6,947 ஆக இருந்தது.

வெயில் காலத்தில் காரில் இதை சமாளிப்பதுதான் பெரிய பிரச்சனையே!

மார்ச் மாதம் வந்துவிட்டாலே கிட்டத்தட்ட கோடைக்காலம் துவங்கிவிட்டது என்றுதான் அர்த்தம். மேற்கத்திய நாடுகளுக்கு கோடைக்காலம் என்றாலே மகிழ்ச்சியாக இருக்கும். ஆனால், நம் இந்தியாவில் அப்படியே நேர்மாறாக இருக்கும். குறிப்பாக, பூமத்திய ரேகைக்கு அருகே அமைந்துள்ள தமிழ்நாட்டில் ஒவ்வொரு வருடமும் கோடைக்காலம் வாட்டி வதைப்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது. அதிக வெப்பத்தினால் இயந்திரங்கள் பாதிப்படைவது மட்டுமின்றி, வாகனங்களும் கோடைக்காலத்தில் பழுதடைவதற்கு வாய்ப்புள்ளது. ஆதலால், அதனை எதிர்கொள்வதற்கும், பெரிய பழுதுகளில் சிக்காமல் தவிர்ப்பதற்கும் காரில் சில முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டியுள்ளது.

சீட்டை மடிச்சு போட்டு ஏகப்பட் சாமானை ஏத்திட்டு போகலாம்

எம்ஜி மோட்டார்ஸ், 2025 பிப்ரவரி மாதத்திற்கான குளோஸ்டர் விற்பனையில் 39% வீழ்ச்சியைக் கண்டறிந்துள்ளது. இந்திய எஸ்யூவி சந்தையில் உள்ள அம்சங்கள், விலை மற்றும் போட்டி பற்றி ஆராயுங்கள்.

இந்த காரை வெறும் 2 பேர் தான் வாங்கியிருக்காங்க!

2025 பிப்ரவரி மாதத்தில் வோக்ஸ்வாகனின் விற்பனை எண்ணிக்கை 2.34% அதிகரித்துள்ளது, டைகுவான் மாடலில் சவால்கள் இருந்த போதிலும் விர்டஸ் முன்னிலை வகிக்கிறது.

பென்ஸ் ஆடம்பர காரை வாங்கிய மீனவர்.. இணையமே வியந்து பாக்குது!

மீனவர் ஒருவர் மிகவும் காஸ்ட்லியான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீனவரின் இந்த கொள்முதல் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையின் எந்த உச்சிக்கும் போக முடியும் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் செடான் (Mercedes-Benz C-Class sedan) ரக சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ205 நான்காம் தலைமுறை சி கிளாஸ் (W205 fourth-generation C-Class) கார் மாடல் ஆகும்.