பென்ஸ் ஆடம்பர காரை வாங்கிய மீனவர்.. இணையமே வியந்து பாக்குது!

மீனவர் ஒருவர் மிகவும் காஸ்ட்லியான மெர்சிடிஸ் பென்ஸ் சொகுசு காரை வாங்கி இருப்பதாக ஆச்சரியமளிக்கும் தகவல்கள் வெளியாகி உள்ளன. மீனவரின் இந்த கொள்முதல் நம்பிக்கையுடன் கடினமாக உழைத்தால் வாழ்க்கையின் எந்த உச்சிக்கும் போக முடியும் என்பதை வெளிக்காட்டும் வகையில் அமைந்திருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் சி கிளாஸ் செடான் (Mercedes-Benz C-Class sedan) ரக சொகுசு காரையே அவர் வாங்கி இருக்கின்றார். துள்ளியமாக சொல்ல வேண்டும் என்றால் அவர் வாங்கி இருப்பது மெர்சிடிஸ் பென்ஸ் டபிள்யூ205 நான்காம் தலைமுறை சி கிளாஸ் (W205 fourth-generation C-Class) கார் மாடல் ஆகும்.

வயிற்றில் குழந்தையுடன் காஸ்ட்லி காரில் வந்த வீடியோ வைரல்!

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் கைரா அத்வானி. இவர் பல மெகா ஹிட் திரைப்படங்களில் நடித்து பிரபலமானவர். இவர் தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இந்நிலையில் பழம்பெரும் நடிகர் டெப் முகர்ஜியின் மறைவுக்கு இவர் காஸ்ட்லியான கார் ஒன்றில் வந்திறங்கிய வீடியோ வைரலாக பரவி வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

முன் இருக்கையில் குழந்தை இருக்ககூடாதுனு இதனால்தான் சொல்றாங்க

துபாய் (Dubai)-இல் ஒருவர் தனது குழந்தையை மடியில் அமர வைத்துக்கொண்டு கார் ஓட்டியதற்காக போலீசாரிடம் சிக்கியுள்ளார். சாலையில் அமைக்கப்பட்டிருந்த ஸ்மார்ட் கேமரா மூலமாக பிடிப்பட்ட அந்த பி.எம்.டபிள்யூ (BMW) கார் ஓட்டிக்கு பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளது. நம்ம ஊரில் சர்வ சாதாரணமாக நடக்கக்கூடிய இவ்வாறான சம்பவத்திற்கு துபாயில் பெரிய தொகை அபராதமாக விதிக்கப்பட்டுள்ளதா என அதிர்ச்சியாக வேண்டாம். ஏனெனில், நம் நாட்டிலும் இந்த சட்டத்திற்கு வலியுறுத்தப்பட்டு வருகிறது. நம் நாட்டை பற்றி பார்ப்பதற்கு முன்னர், துபாயில் இந்த சட்டம் என்ன சொல்கிறது என்பதை பார்ப்போம்.

வாகனங்களை வெளிநாடுகளுக்கு அனுப்பிய வார்ட்விசார்ட்

வார்ட்விசார்ட் இன்னோவேஷன்ஸ் & மொபிலிட்டி (Wardwizard Innovations & Mobility), இந்தியாவில் செயல்படும் எலக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனம். தற்போதைக்கு எலக்ட்ரிக் 2-சக்கர மற்றும் 3-சக்கர வாகனங்களை மட்டுமே வார்ட்விசார்ட் நிறுவனம் உற்பத்தி செய்து, விற்பனை செய்து வருகிறது. இந்த நிறுவனத்தின் கீழ் 'ஜாய் இ-பைக்' (Joy e-bike), ஜாய் இ-ரிக் (Joy e-rik) என இரு நிறுவனங்கள் செயல்படுகின்றன. இதில் ஜாய் இ-பைக்கில் இருந்து எலக்ட்ரிக் 2-சக்கர வாகனங்களும், ஜாய் இ-ரிக்கில் இருந்து எலக்ட்ரிக் 3-சக்கர வாகனங்களும் விற்பனை செய்யப்படுகின்றன.
Advertisement

35 கிமீ மைலேஜ் குடுக்கற காரை தரமட்ட ரேட்ல விக்கறாங்க!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் ஹேட்ச்பேக் ரக கார்களில் ஒன்று மாருதி சுஸுகி செலிரியோ (Maruti Suzuki Celerio). இதன் நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதத்திற்கான சேல்ஸ் ரிப்போர்ட் (Sales Report) தற்போது வெளியாகியுள்ளது. இதன்படி பார்த்தால் மாருதி சுஸுகி செலிரியோ கார், நடப்பு 2025ம் ஆண்டு பிப்ரவரி மாதம் 4,226 என்ற எண்ணிக்கையில் விற்பனையாகியுள்ளது. ஆனால் கடந்த 2024ம் ஆண்டு பிப்ரவரி மாதம் இந்த எண்ணிக்கை 3,586 ஆக மட்டுமே இருந்தது. இது 18 சதவீத வளர்ச்சி ஆகும்.

61 வயதில் பிஎம்டபிள்யூ காருக்கு ஓனர் ஆன பிரபல நடிகர்!!

பி.எம்.டபிள்யூ (BMW), ஜெர்மனியை சேர்ந்த உலகளவில் பிரபலமான லக்சரி கார் நிறுவனம். இந்தியாவில் மெர்சிடிஸ் (Mercedes) நிறுவனத்துக்கு அடுத்து அதிக எண்ணிக்கையில் சொகுசு கார்களை விற்பனை செய்யக்கூடிய நிறுவனமாக பிஎம்டபிள்யூ விளங்குகிறது. அப்பர் மிடில்-கிளாஸ் மக்களாலும் வாங்கக்கூடிய வகையில் சில கார்களை விற்பனை செய்யும் பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் கார்களை செல்வந்தர்களும், சினிமா பிரபலங்களும் அவ்வப்போது வாங்கி குவிக்கின்றனர். இந்த வகையில் தற்போது பிரபலமான பாலிவுட் நடிகர் (Bollywood Actor) ஒருவர் பிஎம்டபிள்யூ கார் ஒன்றை வாங்கியுள்ளார். புதிய கார் உடன் அவர் எடுத்துக் கொண்ட வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி கவனத்தை ஈர்த்துள்ளது.

15 நாளில் இந்த காரை நிறத்த போறாங்க! இப்ப சேல்ஸ் குவியுது!

மார்பூட்டி சுஸுகி 2025 ஏப்ரல் மாதத்தில் சியாஸை நிறுத்தத் திட்டமிட்டுள்ளது. சமீபத்தில் விற்பனை அதிகரித்திருந்தாலும், நிறுவனம் இருப்புப் பொருட்களை வெளியிடுவதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது.

மிடில்-கிளாஸ் மக்களுக்காக கொண்டுவரப்பட்ட காரை வாங்க ஆள் இல்ல

எம்ஜி மோட்டார் (MG Motor) நிறுவனம் 2021ஆம் ஆண்டில் மிகவும் நம்பிக்கை உடன் இந்தியாவில் அறிமுகம் செய்த கார், அஸ்டர் (Astor) ஆகும். ஆனால், இந்திய கார்கள் வரலாற்றிலேயே மிகவும் மோசமான தோல்வியை சந்தித்த கார்களுள் எம்ஜி அஸ்டரையும் சொல்லலாம். எம்ஜி மோட்டார் நிறுவனம் 2019இல் ஹெக்டர் (Hector) காரில் இருந்து சமீபத்திய விண்ட்சர் இவி (Windsor EV) எலக்ட்ரிக் கார் வரையில் பல தரமான கார்களை இந்தியாவில் அறிமுகம் செய்துள்ளது. அதே நம்பிக்கை உடன் தான் அஸ்டர் காரையும் களமிறக்கியது. ஆனால், இந்த காரின் கடந்த 2025 பிப்ரவரி மாத விற்பனை எண்ணிக்கை சிரிப்பாய் சிரிக்கிறது.

கார் ஷோரூமுக்கு மனைவியுடன் வந்தது போத்தீஸ் ஓனரோட பையனா..

தமிழ்நாட்டின் பிரபலமான துணிக் கடைகளில் போத்தீஸ்-ம் ஒன்றாகும். தென்னிந்தியா முழுக்க இந்த துணிக் கடை நெட்வொர்க் தற்போது பரவிக் காணப்படுகின்றது. இந்த துணிக் கடையை உருவாக்கியவர் ஸ்ரீவில்லிபுத்தூரை பூர்வீகமாகக் கொண்ட கேவி போத்தி மூப்பனார் என்பது குறிப்பிடத்தகுந்து. ஆரம்பத்தில் சைக்கிளில் சென்றே இவர் துணிகளை விற்று வந்தார். ஆனால், இப்போது தமிழகம், கேரளா என தென்னிந்தியாவின் பல்வேறு பகுதிகளில் போத்தீஸ் ஜவுளிக் கடை செயல்பட்டு வருகின்றது. இத்தகைய ஜாம்பவான் ஜவுளிக் கடையைச் சேர்ந்தவரே நிலேஷ் போத்தி.

சிவப்பு காரில் ஏறி சென்ற நடிகை இவங்களா?

பாலிவுட்டில் பிரபல நடிகையாக இருப்பவர் ஜாக்குலின் ஃபெர்னான்டஸ். இவர் பல இந்தி திரைப்படங்களில் நடித்து பரபலமாகியுள்ளார். இவர் திரைப்படங்களில் நடித்ததை விட சமீபத்தில் பணம் பரிமாற்ற வழக்கில் சிக்கியதில் பெரிய அளவில் பிரபலமானார். இவர் என்னதான் இந்தி நடிகையாக இருந்தாலும் இவர் இலங்கையை பூர்வீகமாக கொண்டவர். இவர் சமீபத்தில் காஸ்ட்லியான கார் ஒன்றில் ஏற்றி சென்ற வீடியோ வைரலாக பரவி வருகிறது.

சில இலட்சங்களில் பென்ஸ் காரை வரவழைத்த மஹிந்திரா கார் ஓனர்!!

மஹிந்திரா பொலிரோ (Mahindra Bolero), இந்தியாவில் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யப்படும் கார்களுள் ஒன்று. சொல்லப்போனால், சில வருடங்களுக்கு முன்பு வரையில் மஹிந்திரா நிறுவனம் ஒவ்வொரு மாதமும் அதிக எண்ணிக்கையில் விற்பனை செய்யும் நம்பர் ஒன் காராக பொலிரோ விளங்கியது. இப்போது வேறு சில மாடர்ன் மஹிந்திரா காரக்ள் அந்த நம்பர் ஒன் இடத்தை பிடித்துவிட்டன. இருப்பினும், மஹிந்திரா பொலிரோ கார்களின் விற்பனை குறைந்துவிட்டது என சொல்ல முடியாது. எப்போதும்போல், குறிப்பிட்ட எண்ணிக்கையிலான கஸ்டமர்கள் தொடர்ந்து வாங்கிக் கொண்டுதான் இருக்கின்றனர்.

காரை வாங்கியதில் இருந்து ஜாலியா ரவுண்ட் அடிக்கும் நடிகர்!!

போர்ஷே (Porsche) கார்களுக்கு உலகளவில் நல்ல வரவேற்பு மக்கள் மத்தியில் இருப்பதை பற்றி நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். ஏனெனில், அந்த அளவிற்கு நம்மில் நிறைய பேருக்கு போர்ஷே கார்கள் கனவு வாகனங்களாக உள்ளன. அவற்றை வாங்கும் அளவிற்கு பணம் இல்லாவிடினும், வாழ்வில் எப்படியாவது வாங்கிவிட வேண்டும் என ஏதாவது ஒரு போர்ஷே கார் மீது ஆசை கொண்டிருப்போம். ஆனால், இங்கு ஒரு நடிகர் சர்வ சாதாரணமாக தனது புத்தம் புதிய போர்ஷே காரில் வந்து இறங்கியுள்ளார். அப்போது எடுக்கப்பட்ட வீடியோக்களும் படங்களும் இணையத்தில் கவனத்தை பெற்றுள்ளன.
Advertisement

7 பேர் போற கார் இவ்ளோ மைலேஜை வாரி வழங்குதா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எம்பிவி ரக கார்களில் (MPV Cars) ஒன்று மாருதி சுஸுகி எர்டிகா (Maruti Suzuki Ertiga). இதன் அடிப்படையில் உருவாக்கப்பட்டுள்ள ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான் (Toyota Rumion). சுஸுகி நிறுவனத்துடனான கூட்டணியின் அடிப்படையில் இந்திய சந்தையில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் பல்வேறு கார்களை டொயோட்டா நிறுவனம் ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்து கொண்டுள்ளது. இந்த வரிசையில் மாருதி சுஸுகி எர்டிகாவை ரீ-பேட்ஜ் செய்து விற்பனை செய்யப்படும் ஒரு கார்தான் டொயோட்டா ரூமியான்.

மதுரை வழியா சுத்திட்டு போகணும்னு இனி அவசியம் இல்ல!

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) சட்டசபையில் இன்று (மார்ச் 14) மாநில நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) அவர்களால் தாக்கல் செய்யப்பட்டது. அடுத்த 1 வருடத்தில் தமிழ்நாட்டில் மேற்கொள்ளப்பட போகும் திட்டங்களை கொண்டதாக உருவாக்கப்பட்டுள்ள இந்த பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் மற்றும் போக்குவரத்துத் துறை தொடர்பாக வகுக்கப்பட்டுள்ள திட்டங்களை ஒன்றன்பின் ஒன்றாக பார்த்து வருகிறோம். அந்த வரிசையில் தற்போது ஓர் அசத்தலான திட்டத்தை பற்றி தான் பார்க்க போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

792 கிமீ ரேஞ்ச் தரும் இ-கார் வெளியீடு..

உலக புகழ்பெற்ற கார் உற்பத்தி நிறுவனம் ஒன்று தன்னுடைய புதுமுக கார் மாடலை வெளியீடு செய்ய ரோம் நகரத்திற்கு சென்றிருக்கின்றது. மெர்சிடிஸ் பென்ஸ் (Mercedes-Benz), இதுவே அந்த நிறுவனம் ஆகும். புதிய சிஎல்ஏ (CLA) எனும் சொகுசு கார் மாடலையே அது வெளியீடு செய்திருக்கின்றது. மிகவும் அட்வான்ஸ்டு தொழில்நுட்பங்களைத் தாங்கிய கார் மாடலாக இதனை அந்நிறுவனம் தயார் செய்திருக்கின்றது என்பது குறிப்பிடத்தகுந்தது. மிக முக்கியமாக ஏஐ (AI) தொழில்நுட்பத்தை எல்லாம் இந்த காரில் பென்ஸ் நிறுவனம் வழங்கி இருக்கின்றது.

பால் வண்டியாக மாறியிருப்பது என்ன காருனு தெரியுதா?..

ஏழை மற்றும் எளிய மக்களுக்கான கார் என்றால் அது மாருதி ஆல்டோ (Maruti Suzuki Alto)-தான். இது பலரும் அறிந்த ஒன்று. இது அடித்தட்டு மக்களுக்கான கார் என்பது மாறி தற்போது பால் வாகனம் என்கிற புதிய ரோலையும் சுமக்கத் தொடங்கி இருக்கின்றது. ஆமாங்க, ஆல்டோவே தற்போது பால் வண்டியாக மாறி இருக்கின்றது. பஞ்சாப் மாநிலத்திலேயே இந்த விநோத நிகழ்வு அரங்கேறி இருக்கின்றது. வாகன மாடிஃபிகேஷன் வாயிலாகவே இந்த மாற்றத்தை ஆல்டோ காரில் செய்திருகின்றனர்.

சென்னையை மொத்த நாடும் திரும்பி பார்க்க இதைவிட என்ன வேண்டும்?

தமிழ்நாடு பட்ஜெட் (Tamilnadu Budget) 2025-26ஆம் நிதியாண்டிற்காக பல அட்டகாசமான திட்டங்களுடன் இன்று (மார்ச் 14) சட்டசபையில் அறிவிக்கப்பட்டுள்ளது. வழக்கம்போல் இந்த முறையும் பல்வேறு துறைகளை சார்ந்த திட்டங்கள் அடங்கிய கலவையாக தமிழ்நாட்டு அரசாங்கத்தின் பட்ஜெட் உள்ளது. மகளிருக்கான உரிமைத்தொகை திட்டத்தில் இருந்து விண்வெளி சார்ந்த தொழிற்நுட்பங்களை கண்டுப்பிடிப்பதற்கான நிதி வரையில் என பல துறைகளுக்கு தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு மாநில பட்ஜெட்டை வகுத்துள்ளார். குறிப்பாக, மாநில போக்குவரத்து துறையை மேம்படுத்தும் வகையில் நிறைய திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெற்றுள்ளன.

இந்தியாவுக்கு கப் வர இவர் முக்கியமான காரணம்!

அக்‌ஷர் படேல் தனது லக்ஸரி கார் சேகரிப்பை ரேஞ்ச் ரோவர் ஆட்டோபயோகிராஃபி மூலம் மேம்படுத்தியுள்ளார், இது இந்திய பிரபலங்களின் மத்தியில் இதன் செயல்திறன் மற்றும் ஈர்ப்புத்தன்மையைக் காட்டுகிறது.

விலை குறைவான சேத்தக்-இன் ஸ்பை படம்!

பஜாஜ் நிறுவனம் (Bajaj), இந்தியாவின் மின்சார இரண்டு சக்கர வாகன பிரிவின் உச்ச இடத்தை ஏற்கனவே அடைந்துவிட்டது. ஆனால், இது அந்த நிறுவனத்திற்கு போதவில்லை என தெரிகின்றது. இதை உறுதிப்படுத்தும் விதமாகவே அதன் சமீபத்திய செயல்பாடுகள் அமைந்திருக்கின்றன. நிறுவனம் எலெக்ட்ரிக் டூ-வீலர் விற்பனையில் மாபெரும் சாதனைகளைப் படைக்க வேண்டும் என்பதில் மிக தீவிரமாக உள்ளது. இதன் அடிப்படையில் சேத்தக் (Chetak) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மாடலில் விலை குறைவான வேரியண்ட் ஒன்றை அது தயார் செய்திருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் இந்த திட்டத்தை கவனித்தீர்களா?

2025-26ஆம் நிதியாண்டிற்கான தமிழ்நாடு பட்ஜெட் (Tamil Nadu Budget) சட்டசபையில் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தமிழ்நாடு நிதியமைச்சர் தங்கம் தென்னரசு (Thangam Thennarasu) சட்டசபையில் தாக்கல் செய்துள்ளார். கல்லூரி மாணவர்களுக்கு மடிக்கணிணி, பெற்றோர்களை இழந்த குழந்தைகளுக்கு மாதம் ரூ.2,000 என பல அசத்தலான திட்டங்களை கொண்டிருக்கும் 2025-26 தமிழ்நாடு பட்ஜெட்டில் ஆட்டோமொபைல் துறையை பொறுத்தவரையில், ஆன்லைன் சார் தொழிலில் ஈடுப்படுவோருக்கு வாகனங்களை வாங்குவதற்கு மானியம் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், மோட்டார் வாகனங்களை உற்பத்தி செய்ய பயன்படும் குறைக்கடத்திகளை உருவாக்குவதற்கு ஆலை அமைக்க ரூ.500 கோடி ஒதுக்கிடப்பட்டுள்ளது.
Advertisement

கார், பைக் மட்டும் கிடையாது இது கப்பலையும் தயாரிக்க போறாங்க

தமிழக அரசு 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்த போது தமிழகத்திற்கான கடல்வழிப் போக்குவரத்து தயாரிப்பு கொள்கையை வெளியிட்டுள்ளது. அதன்படி தமிழகத்தில் இனி கப்பல் படகு போன்ற கடல் வழி போக்குவரத்து வாகனங்களை கட்டமைக்க வழிகளையும் ஏற்பாடுகளையும் செய்து வைத்துள்ளது. இதனால் தமிழகத்தில் இனி கப்பல் கட்டுமானம் செய்யும் கம்பெனிகள் அதிகம் முதலீடு செய்ய வாய்ப்பிருக்கிறது. இந்த கொள்கைகள் தமிழகத்திற்கு எந்த அளவுக்கு பயனுள்ளதாக இருக்கும் என்ற விபரங்களை காணலாம் வாருங்கள்.

போரூர்-பூந்தமல்லி மெட்ரோ ரயில் எப்போது பயன்பாட்டிற்கு வரும்?

சென்னை வாசிகள் மத்தியில் மெட்ரோ ரயில் சேவைக்கு நல்ல வரவேற்புக் கிடைத்துக் கொண்டிருக்கின்றது. லக்சூரி மற்றும் சொகுசான டிராவல் அனுபவத்தை இந்த ரயில் சேவை மக்களுக்கு வழங்கிக் கொண்டிருக்கின்றது. எனவேதான் இதனை விரிவாக்கம் செய்வதில் தமிழக அரசும் தீவிரம் காட்டிக் கொண்டிருக்கின்றது. இதை மேலும் உறுதிப்படுத்தும் விதமாகவே 2025-2026 ஆம் ஆண்டிற்கான பட்ஜெட் அறிவிப்பு அமைந்திருக்கின்றது. இந்த பட்ஜெட் பல்வேறு துறைக்களுக்கான பலன்களை உள்ளடக்கியதாக இருந்தது. குறிப்பாக, வாகன உலகம் சார்ந்த திட்டங்களை மிக அதிகளவில் இந்த பட்ஜெட் கொண்டிருப்பதை நம்மால் காண முடிகின்றது.

தமிழக அரசு அறிமுகப்படுத்தப்போகும் அதிவேக ரயில்!

தமிழக பட்ஜெட்டில் தற்போது டெல்லி - மீரட் இடையே இயங்கி வரும் ஆர்ஆர்டிஎஸ் ரயில் போல தமிழக அரசு தமிழகத்தில் ஒரு ரயில்வே பாதையை உருவாக்கவுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. சற்று தொலைவில் உள்ள இரண்டு நகரங்களை இணைக்கும் விதமாக இந்த ரயில்வே நெட்வொர்க் உருவாக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

தமிழக அரசு பஸ்களில் வரப்போகும் புதிய மாற்றம்!

தமிழக சட்டமன்றத்தில் தமிழக பட்ஜெட் 2025-26ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இதில் ஆட்டோமொபைல் துறையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியாகியுள்ளன. அதன்படி மிக முக்கியமாக தமிழகத்தில் இயங்கி வரும் அரசு பஸ்களை எல்லாம் டீசல் பஸ்களில் இருந்து சிஎன்ஜி பஸ்களாக மாற்ற நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

8 பேர் போகக்கூடிய டொயோட்டா காருக்கு தான் கூட்டம் கூடுது!

டொயோட்டா (Toyota), ஜப்பானை சேர்ந்த உலகளவில் பிரபலமான கார் உற்பத்தி நிறுவனம் என்பதை நான் கூற வேண்டியது இருக்காது என நினைக்கிறேன். மாருதி சுஸுகி (Maruti Suzuki) உடன் இணைந்து செயல்பட்டு வருவதினாலேயே டொயோட்டா கார்கள் விற்பனை ஆனது சிறப்பாக உள்ளது. இன்னும் சொல்லப்போனால், மேலும் மேலும் டொயோட்டா கார்கள் விற்பனை மாதத்திற்கு மாதம் அதிகரித்துக்கொண்டே செல்கிறது. இதனை வெளிக்காட்டும் வகையில், கடந்த 2025 பிப்ரவரி மாதத்தில் விற்பனை செய்யப்பட்ட டொயோட்டா கார்கள் குறித்த விபரங்கள் கிடைக்க பெற்றுள்ளன.