35,000 பேர் இந்த காருக்காக வெயிட் பண்ணுறாங்க!

மாருதி நிறுவனத்தின் விக்டோரியஸ் காருக்கு 70,000 புக்கிங் குவிந்துள்ளதாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த கார் அறிமுகமானது முதல் நல்ல வரவேபற்ப்பை பெற்று வரும் நிலையில் புத்தாண்டு துவக்கத்திலேயே இந்த செய்தி வெளியாகியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நானோ போல் அடிமாட்டு விலையில் மீண்டும் ஒரு டாடா கார்!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த டாடா பன்ச் கார், கடந்த 2021ம் ஆண்டு அக்டோபர் மாதம் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஒரு வருடமான போதிலும் 5,000ஐ தாண்டாத ஹோண்டா கார்கள் விற்பனை!!

ஹோண்டா கார்ஸ் இந்தியா லிமிடெட் (HCIL) டிசம்பர் 2025-க்கான தனது மாதாந்திர விற்பனை விவரங்களை தற்போது வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம், உள்நாட்டு விற்பனை மற்றும் ஏற்றுமதிகள் உட்பட மொத்தமாக 8,159 யூனிட்களை விற்றது. இது டிசம்பர் 2024-ல் விற்கப்பட்ட 9,460 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் 13.75% சரிவையே பதிவு செய்துள்ளது, அதாவது 1,301 யூனிட்கள் குறைவாகும். எனினும், 2030 ஆம் ஆண்டுக்குள் ஏழு எஸ்யூவி ரக வாகனங்கள் உட்பட 10 புதிய மாடல்களை அறிமுகப்படுத்த ஹோண்டா பெரிய திட்டங்களை வைத்துள்ளது.

அந்த நிறுவனத்தின் காரா? அப்ப நிறுத்து!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்த கார் டாடா சியரா (Tata Sierra). சுமார் 22 வருட இடைவெளிக்கு பின்னர், கடந்த நவம்பர் மாதம் 25ம் தேதி, டாடா சியரா கார், இந்திய சந்தையில் மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.
Advertisement

34 கி.மீ மைலேஜ், ரூ4.98 லட்சம் விலை!

மாருதி நிறுவனம் விற்பனை செய்து வரும் வேகன் ஆர் என்ற கார் தான் கடந்த 2025ம் ஆண்டு இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான ஹேட்ச்பேக் காராக உருமாறியுள்ளது. இந்த காரை 2025ம் ஆண்டு 2 லட்சம் பேர் வாங்கியுள்ளார்கள். அப்படி அதிக அளவில் வாங்கும் அளவுக்கு இந்த காரில் என்ன இருக்கிறது விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

எக்ஸ்பிரஸ்வே சாலைகளில் மறைந்திருக்கும் ஆபத்துக்கள்

எக்ஸ்பிரஸ்வே சாலைகள் பெரும்பாலும் கான்கிரீட் மூலம் கட்டமைக்கப்படுகின்றன. டார்மேக்கை காட்டிலும் இது நீண்ட காலம் உழைக்கும். இதனை பராமரிப்பதும் எளிது. ஆனால் டார்மேக்கை விட கான்கிரீட்டில் உராய்வு அதிகமாக இருக்கும். அதிக உராய்வு காரணமாக டயர்கள் வேகமாக சூடேறி, டயர் வெடிப்பு நிகழ்வதற்கான வாய்ப்புகள் உள்ளன. ஆனால் டயர்கள் மோசமான நிலையில் இருந்தால் மட்டுமே இது நடக்கும்.

டெஸ்லாவுக்கு விழுந்த மரண அடி!

சர்வதேச அளவில் எலெக்ட்ரிக் கார்களை பிரபலப்படுத்தியது என்றால் அது டெஸ்லா நிறுவனம் என்று தான் சொல்ல வேண்டும். அந்த அளவுக்கு இந்த கார் பிரபலமாக இருக்கிறது. டெஸ்லா கார்களுக்கு முன்பு எலெக்ட்ரிக் கார்கள் என்றால் பொம்மை கார்கள் என்ற மனநிலை மக்கள் மத்தியில் இருந்தது. ஆனால் டெஸ்லா கார்களில் உள்ள தரம் மற்றும் தொழிற்நுட்பத்தை பார்த்த பிறகு உலக அளவில் எலெக்ட்ரிக் கார்கள் மீதான பார்வை மாறியது இதனால் எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை சர்வதேச அளவில் அதிகரித்தது. உலக அளவில் அதிக எலெக்ட்ரிக் கார்களை விற்பனை செய்யும் நிறுவனமாக டெஸ்லா நிறுவனம் தான் மாறியிருந்தது.

ஹெல்மெட்டில் முகத்தை மறைத்தப்படி போனது இந்த நடிகையா!!

நடிகை மஞ்சு வாரியர் சாகசப் பயணங்களை விரும்புபவர் என்பது அனைவரும் அறிந்ததே. தற்போது அவர் BMW R1250GS என்ற அட்வென்ச்சர் பைக்கில் மழையில் தனுஷ்கோடி வழியாகப் பயணிக்கும் காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. இக்காணொளியில், அவர் அமர்ந்தும், நின்றபடியும் பைக்கை ஓட்டி தனது சாகசப் பயணத்தை முழுமையாக அனுபவிப்பதைக் காணலாம்.

20 வருஷத்தில் எத்தனை பேரது கார் ஆசையை நிறைவேற்றி இருக்கும்!

இந்தியாவின் எம்பிவி (MPV) ரக கார்கள் சந்தையில் கடந்த இரண்டு தசாப்தங்களாக ஆதிக்கம் செலுத்தி வந்த டொயோட்டா இன்னோவா க்ரிஸ்டா (Toyota Innova Crysta) டீசல் காரின் உற்பத்தி, 2027 மார்ச் மாதத்திற்குள் முடிவுக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதன் மூலம் இந்திய வாகனச் சந்தையில் அதன் ஒரு சகாப்தம் முடிவுக்கு வரவுள்ளது.

லைசன்ஸ் வாங்கும் வயதை கூட இன்னும் எட்டல, அம்மா உடன் ஷோரூமில்

திருப்பூர் மாவட்டத்தின் கொடுவாய் பகுதியைச் சேர்ந்த பிரபலமான இளம் யூடியூபரும், சமூக ஊடகப் பிரபலமுமான 'கொடுவாய் அன்பு' (Koduvai Anbu), புதிய 2026ஆம் ஆண்டை பிராண்ட்-நியூ மஹிந்திரா தார் ராக்ஸ் (Mahindra Thar Roxx) வாகனத்துடன் ஆரம்பித்துள்ளார். யார் இந்த கொடுவாய் அன்பு என்பதையும், அவர் புதியதாக வாங்கியுள்ள மஹிந்திரா தார் ராக்ஸ் வாகனத்தை பற்றியும் இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

புல்லட் ரயில்களை தூக்கி சாப்பிட போகும் இந்திய ரயில்!

உலகின் மூன்றாவது மிகப்பெரிய ரயில்வே நெட்வொர்க்கை இந்தியா கொண்டுள்ளது. இந்தியா முழுக்க சுமார் 68 ஆயிரம் கிலோ மீட்டர்களுக்கு ரயில்வே தண்டவாளங்கள் உள்ளன. இதில், தினந்தோறும் ஆயிரக்கணக்கான ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. அவற்றில் பல லட்சக்கணக்கான மக்கள் பயணம் செய்து கொண்டுள்ளனர்.

பிப்ரவரி முதல் ஒவ்வொரு டோல் பூத்திலும் விதிமுறை மாறுது!!

இந்திய தேசிய நெடுஞ்சாலைகள் ஆணையம் (NHAI) 2026 பிப்ரவரி 1 முதல் கார், ஜீப், வேன்களுக்கு புதிய ஃபாஸ்டேக் (FASTag) பெறுபவர்களுக்கு 'உங்கள் வாகனத்தை அறிந்து கொள்ளுங்கள்' (Know Your Vehicle - KVY) சரிபார்ப்பு செயல்முறையை நீக்குவதாக அறிவித்துள்ளது. தேசிய நெடுஞ்சாலைகளில் பயணம் செய்வோருக்கு சிரமமில்லாத பயண அனுபவத்தை வழங்குவதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.
Advertisement

இந்த 6 கம்பெனி லட்சகணக்குல கார் வித்திருக்காங்களா?

இந்தியாவில் கடந்த 2025 ஏகப்பட்ட வாகனங்கள் விற்பனையாகியுள்ளன. தற்போது 2025ம்ஆண்டு நிறைவடைந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் எல்லாம் கடந்தாண்டு எவ்வளவு வாகனங்களை விற்பனை செய்துள்ளன என்ற விபரங்களை வரிசையாக வெளியிட்டு வருகின்றனர். அதன்படி டாப் 6 வாகன தயாரிப்பு நிறுவனங்கள் குறித்த விபரங்களை காணலாம் வாருங்கள்.

25 ஆண்டு வரலாற்றை ஒரே கார் அடித்து உடைத்தது!

ஸ்கோடா இந்தியா நிறுவனம்இந்தியாவில் சொகுசு ரக வாகனங்களை தயார் செய்யும் முக்கியமான நிறுவனங்களில் ஒன்றாக இருக்கிறது.இந்நிறுவனம் கடந்த 2025ம் ஆண்டு விற்பனை விபரங்கள் மற்றும் கடந்த டிசம்பர் மாத விற்பனை விபரங்களை தற்போது ெவளியிட்டுள்ளது. இதன்படி இந்நிறுவனம் ஒரே ஆண்டில் கிட்டத்தட்ட டபுள் மடங்கு வளர்ந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

அடிமாட்டு விலையில் புது காரை களமிறக்கும் டாடா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று டாடா பன்ச் (Tata Punch). இது மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி (Micro SUV) ரகத்தை சேர்ந்த கார் ஆகும். இதன் வெகுவாக அப்டேட் செய்யப்பட்ட ஃபேஸ்லிஃப்ட் (Facelift) மாடலை விற்பனைக்கு அறிமுகம் செய்யும் பணிகளில் டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.

ஓலா நம்பர் 1 இடத்தில் இருக்கும்னு நினைப்பீங்க... அதான் இல்ல!

2025ஆம் ஆண்டில், இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகன சந்தை குறிப்பிடத்தக்க வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. வழக்கமான பெட்ரோல் ஸ்கூட்டர்கள் மற்றும் மோட்டார்சைக்கிள்களில் இருந்து எலெக்ட்ரிக் வாகனங்களுக்குப் பெரும் எண்ணிக்கையிலான வாடிக்கையாளர்கள் மாறியதே இதற்குக் காரணம் ஆகும். ஆட்டோகார் இந்தியா (Autocar India) செய்தித்தளம் வெளியிட்ட அறிக்கையின்படி, 2024 உடன் ஒப்பிடும்போது இந்திய எலெக்ட்ரிக் இரு சக்கர வாகனப் பிரிவு 11% வளர்ச்சி கண்டுள்ளது.

டாடாவுக்கு போட்டியா கியா கம்பெனி சொன்னதை செய்து காட்டிடுச்சு

இன்று (ஜன.2) விலைகள் அறிவிக்கப்பட்டு அதிகாரப்பூர்வமாக விற்பனைக்கு கொண்டுவரப்பட்டுள்ள புத்தம் புதிய கியா செல்டோஸ் (Kia Seltos) மற்றும் சமீபத்திய டாடா சியரா (Tata Sierra) எஸ்யூவி கார்களின் அறிமுகம், இந்தியாவின் நடுத்தர அளவிலான எஸ்யூவி (SUV) கார்கள் சந்தையில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த இரண்டு கார் மாடல்களும் ஏராளமான நவீன அம்சங்களுடன் வந்துள்ளன. அவற்றின் விலை மற்றும் தொழில்நுட்ப விவரங்கள் வெளியான நிலையில், வாங்குபவர்களுக்கு ஒரு சுவாரஸ்யமான தேர்வு காத்திருக்கிறது.

உலகையே திரும்பி பார்க்க வைத்த அம்பாஸிடரின் வாரிசு!

இந்தியா உள்பட உலகம் முழுவதும் தற்போது செடான் ரக கார்களின் (Sedan Cars) விற்பனை குறைந்து கொண்டே வருகிறது. வாடிக்கையாளர்களின் கவனம் எஸ்யூவி ரக கார்களின் (SUV Cars) மீது திரும்பியிருப்பதுதான் இதற்கு காரணம். வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிக டிமாண்ட் இருப்பதால், கார் நிறுவனங்களும் கூட, எஸ்யூவி ரக கார்களின் அறிமுகத்திற்குதான் அதிக முக்கியத்துவம் வழங்குகின்றன.

கியா செல்டோஸ் எல்லா வேரியன்ட் விலையும் இது தான்!

கியா நிறுவனம் தனது செல்டோஸ் காரை தற்போது அப்டேட் செய்து விற்பனைக்காக அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த கார் 4 முக்கியமான வேரியன்ட்களில் 3 விதமான இன்ஜின் ஆப்ஷன்களுடன் அறிமுகமாகியுள்ளது. இந்த காரின் ஒவ்வொர வேரியன்ட்டின் விலை விபரங்களை அடுத்தடுத்து காண்போம்.

டயர்களுக்கு நைட்ரஜன் நிரப்புவது சரியா?

சென்னை: கார் டயர்களுக்கு நைட்ரஜன் வாயுவை நிரப்புவது சரியா என்பது குறித்து பலருக்கும் பெருத்த சந்தேகமும், தயக்கமும் இருக்கிறது. ஆனால், நைட்ரஜன் வாயுவை நிரப்பினால், டயர்களின் ஆயுட்காலம் அதிகரிப்பதோடு, நமது பாதுகாப்பையும் அது உறுதி செய்வதாக ஆட்டோமொபைல் வல்லுனர்கள் தெரிவிக்கின்றனர்.இயற்கையாகவே நைட்ரஜன் (N2) தீப்பிடிக்காத தன்மையும், எளிதில் விரிவடையாத தன்மையையும் கொண்டது. எனவே, நைட்ரஜன் வாயு நிரப்பும்போது, டயர்கள் சூடாவதை தவிர்ப்பதோடு மட்டுமின்றி, எந்தவொரு தட்பவெப்ப நிலையிலும் டயர்களை விரிவடைய செய்யாது.இதனால், டயர்கள் வெடிப்பதை 90 சதவீதம் தவிர்க்க முடியும் என்று அடித்து கூறுகின்றனர் ஆட்டோ எஞ்சினியர்கள். நீண்டதூரம் பயணம் மேற்கொள்ளும்போதும், அதிக வேகத்தில் செல்லும்போதும் நைட்ரஜன் நிரப்பப்பட்ட டயர்களில் சூடாகாது.மேலும், டயர்களில் வெப்பம் அதிகரிக்காமல் சீரான குளிர்ச்சியை தக்கவைக்கும் குணமும் நைட்ரஜனுக்கு உண்டு. இதனால், விபத்துக்களை வெகுவாக தவிர்க்க முடியும் என்பதோடு, டயர்களின் ஆயுட்காலமும் அதிகரிக்கும் என்கின்றனர். நைட்ரஜன் வாயு டயர்களில் நிரப்புவதற்கு செலவு கூடுதல் என்றாலும், அது நம் பாதுகாப்பை உறுதி செய்வதையும் கருத்தில்கொள்ளவேண்டும் என்பதே நமது விருப்பம்.
Advertisement

ஒட்டுமொத்த இந்தியாவே இந்த சென்னை பைக் கம்பெனியை விரும்புது!!

ராயல் என்பீல்டு நிறுவனம், 2025 டிசம்பர் மாதத்தில் சிறப்பான விற்பனையைப் பதிவு செய்துள்ளது. ஆண்டுக்கு ஆண்டு மற்றும் மாதத்துக்கு மாதம் என இரண்டிலும் நிலையான வளர்ச்சியைப் பதிவு செய்ததுடன், 2026 நிதியாண்டின் ஏப்ரல் முதல் டிசம்பர் வரையிலான காலப்பகுதியிலும் வலுவான ஒட்டுமொத்த எண்ணிக்கையைக் எட்டியுள்ளது. இது, அதன் முக்கிய 350 சிசி மாடல்களுக்கான தொடர்ச்சியான தேவையை எடுத்துக்காட்டுகிறது. அதேசமயம், 350 சிசிக்கு மேற்பட்ட பிரிவில் சற்று குறைவான விற்பனை காணப்படுகிறது.

கியா செல்டோஸ் கார் வந்தாச்சு!

கியா நிறுவனம் இன்று தனது செல்டோஸ் காரின் 2ம் தலைமுறை அப்டேட்டை வெளியிட்டுள்ளது. இதன் மூலம் இந்த காரின் உட்பகுதியில் வெளிப்பகுதியிலும் ஏகப்பட்ட மாற்றங்கள் கொண்டுவரப்பட்டுள்ள புதிய அம்சங்கள் இடம்பெற்றுள்ளது. இந்த கார் ரூபாய் 10.99 லட்சம் என்ற விலையில் விற்பனைக்கு வந்துள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

வருஷம் முழுக்க விற்பனை செய்தது மொத்தமே 4,510 கார்கள் தான்!!

சவால்கள் நிறைந்த சந்தை நிலைகளுக்கு மத்தியிலும், சில்லறை விற்பனை மற்றும் பயன்படுத்தப்பட்ட வாகன வர்த்தகத்தில் வளர்ச்சியைக் கண்ட ஆடி இந்தியா (Audi India) நிறுவனம், 2025ஆம் ஆண்டை சிறப்பாக நிறைவு செய்துள்ளது. மேலும், 2026ஆம் ஆண்டுக்கான உத்திகளுக்கும் ஏற்கனவே வலுவான அடித்தளம் அமைத்துள்ளது. 2025ஆம் ஆண்டில் ஆடி இந்தியா நிறுவனம் மொத்தம் 4 ஆயிரத்து 510 ஆடம்பர கார்களை விற்பனை செய்துள்ளது.

23 லட்சம் வீடுகளை அலங்கரித்த மாருதி!

2025ம் ஆண்டு பிறந்துள்ள நிலையில் வாகன தயாரிப்பு நிறுவனங்கள் வரிசையாக தங்கள் வாகன விற்பனை விபரங்களை வெளியிட்டு வருகின்றனர். அதன்படி கடந்த டிசம்பர் மற்றும் 2025ம் ஆண்டிற்கான விற்பனை விபரங்கள் வெளியாகியுள்ளது. மாருதி நிறுவனத்தின் இந்த விற்பனை விபரங்களை தான் இங்கே விரிவாக காணப்போகிறோம்.

டாடா ஷோரூம்கள் கடந்த பல நாட்களா காலியா இருக்குறது இதனால்தானா

டாடா மோட்டார்ஸ் பயணிகள் வாகன லிமிடெட் (Tata Motors Passenger Vehicle Limited) நிறுவனம் 2025 டிசம்பர் மாத உள்நாட்டில் பயணிகள் கார்கள் விற்பனை எண்ணிக்கையில் 50,046 யூனிட்டுகளை எட்டியதாக அறிவித்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் பதிவான 44,230 யூனிட்டுகளை விட 13.1 சதவீதம் அதிகமாகும்.