இந்தியாவில் யாரிடமும் இல்லாத காரை வாங்கிய பூபேஷ் ரெட்டி
ஆட்டோமொபைல்
- 1 year, 6 month, 8 days ago
இந்தியாவின் பெரும் பணக்காரர்களான முகேஷ் அம்பானி மற்றும் அதானி போன்றோரிடமே இல்லாத கார் மாடல் ஒன்றை இந்தியாவைச் சேர்ந்த மற்றுமொரு பணக்காரர் வாங்கி இருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. பூபேஷ் ரெட்டி, இவரே அந்த பணக்காரர் ஆவார். இவர் புதிதாக லெக்சஸ் ஆர்சி-எஃப் எனும் ஸ்போர்ட்ஸ் கார் மாடலையே வாங்கி இருக்கின்றார். இந்தியாவில் இந்த காரை வாங்கும் முதல் நபர் இவரே ஆவார். ஆமாங்க, நம் நாட்டில் வேறு யாரிடும் இந்த கார் மாடல் இல்லை.