விலையை பார்த்தால் மயக்கமே வருது... புதிய கவாஸாகி இசட்1100

கவாஸாகி இந்தியா (Kawasaki India) நிறுவனம் அதன் புதிய இசட்1100 (Z1100) சூப்பர் பைக்கை இந்தியச் சந்தையில் அறிமுகப்படுத்தி உள்ளது. இதன் ஆரம்ப எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.12.79 லட்சம் (எக்ஸ்-ஷோரூம்) ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது. இந்த மோட்டார்சைக்கிள் முந்தைய இசட்1100 பைக்கை விட சில வடிவமைப்பு மற்றும் தொழில்நுட்ப மேம்பாடுகளைப் பெற்றுள்ளது.

காரை டெலிவரி எடுத்த கையோட இந்த ஸ்டிக்கரை கிழிச்சு வீசிருங்க!

புதிய கார்களை வாங்கும் பலர், சீட்களில் இருக்க கூடிய பிளாஸ்டிக் கவரை கிழிப்பது இல்லை. அதை கிழித்து விட்டால், புதிய கார் என்ற உணர்வு போய் விடும் என பலரும் கருதுகின்றனர். இன்னும் சிலரோ, இருக்கைகள் அழுக்காகி விடும் என பயப்படுகின்றனர். புதிய கார் என்பதால், ஒரு சில மாதங்களாவது கண்ணும் கருத்துமாக பார்த்து கொள்ள வேண்டும் என்பது பலரின் எண்ணம்.

டாடா நெக்ஸானை எந்த காராலும் நெருங்க கூட முடியல!

இந்தியாவின் சப்-காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் சந்தை, எப்போதும் கடும் போட்டி நிறைந்ததாகவே உள்ளது. கடந்த 2025 அக்டோபர் மாத விற்பனையில் மார்க்கெட்டின் இந்த சவாலான சூழல் தெளிவாக தெரிகிறது. டாடா மோட்டார்ஸ், மாருதி சுஸுகி, ஹூண்டாய் மற்றும் ஸ்கோடா போன்ற முன்னணி கார் நிறுவனங்கள், பண்டிகை காலத்தை சாதகமாக்கி காம்பாக்ட் எஸ்யூவி கார்கள் விற்பனையில் சிறப்பான பங்களிப்பை அளித்துள்ளன.

மாருதியோட கணக்கு தப்புமா... விக்டோரிஸ் சேல்ஸ் ரிப்போர்ட்!!

மாருதி சுஸுகி விக்டோரிஸ் நடுத்தர எஸ்யூவி கார், அறிமுகமான குறுகிய காலத்திலேயே, சந்தையில் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது. செப்டம்பர் மாத மத்தியில் அறிமுகப்படுத்தப்பட்ட இந்த கார், 25,000-க்கும் மேற்பட்ட முன்பதிவுகளைப் பெற்று சாதனை படைத்துள்ளது. அக்டோபர் மாதத்தில் மட்டும் 13,496 யூனிட்கள் விற்பனையாகி, நடுத்தர எஸ்யூவி பிரிவில் அதிக விற்பனையைப் பதிவு செய்துள்ளது.
Advertisement

தமிழக அரசு பஸ்களா இது!

தமிழகத்தில் தொலைதூர பயணங்களை மேற்கொள்ளும் பொதுமக்கள் பலரின் முதல் சாய்ஸ் தனியார் சொகுசு ஆம்னி பஸ்களாகதான் உள்ளன. ஏனெனில் தனியார் சொகுசு ஆம்னி பஸ்கள்தான், பொதுமக்களுக்கு சௌகரியமான பயணத்தை வழங்குகின்றன. அரசு பஸ்களில் அந்த அளவிற்கு சௌகரியம் கிடைப்பதில்லை என்பது பொதுமக்களின் குற்றச்சாட்டு.

உங்க வாழ்க்கையை அழகாக்கும் குழந்தைகளுக்கு குழந்தைகள் தினத்தன்று இத சொல்ல மறந்துடாதீங்க!

குழந்தைகள் என்றால், யாருக்கு தான் பிடிக்காது. குழந்தைகள் தினம் உலகின் பல நாடுகளில் ஆண்டுதோறும் வெவ்வேறு நாட்களில் விடுமுறை நாளாகவும் சிறப்பு நாளாகவும் கொண்டாடப்பட்டு வருகிறது. இந்தியாவின் முதல் பிரதமர் ஜவஹர்லால் நேரு, நவம்பர் 14, 1889 இல் பிறந்தார். இவர் குழந்தைகள் மீது மிகவும் அன்பு கொண்டவராக இருந்ததால், குழந்தைகளுக்கு மிகவும் பிடிக்கும். குழந்தைகள் நேருவை பாசமாக 'நேரு மாமா' என்று அழைத்தனர்.

500 எலெக்ட்ரிக் சைக்கிள்கள் உடன் 6 நகரங்களில் சேவை துவங்கம்!

புனேவைச் சேர்ந்த AI-ஆல் செயல்படும் நகர்ப்புற போக்குவரத்துத் தளமான எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் (ElektrikExpress), தனது முதல் 500 எலக்ட்ரிக் டெலிவரி வாகனங்களை இந்தியாவின் ஆறு முக்கிய நகரங்களில் வெற்றிகரமாகப் பயன்படுத்த துவங்கியுள்ளது. இந்த 6 நகரங்கள் டெல்லி, குர்கான், நொய்டா, புனே, மும்பை மற்றும் தானே ஆகும். இன்னும் சென்னையில் எலெக்ட்ரிக் எக்ஸ்பிரஸ் அதன் சேவையை துவங்கவில்லை.

நாவிகேஷன் வசதி உடன் 10 லட்ச ரூபாய்க்குள் விலை கொண்ட கார்கள்!

பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையுள்ள கார்களில், நவீன வழிக்காட்டும் (Navigation) வசதிகள், பெரிய தொடுதிரைகள் மூலமாகவும், ஸ்மார்ட்போன் (Android Auto மற்றும் Apple CarPlay) வாயிலாகவும் கிடைக்கின்றன. விலையுயர்ந்த சொகுசு கார்களில் உள்ள பில்ட்-இன் நாவிகேஷன் மென்பொருள் அளவிற்கு இல்லையென்றாலும், ரூ.10 லட்சத்திற்குள் விலை குறைவான கார்களில் ஸ்மார்ட்போன் இணைப்பு வசதி முக்கியப் பங்கு வகிக்கிறது.

எந்த விமானியும் விமானத்தில் இப்படி நடக்க விரும்ப மாட்டாங்க!!

என்ஜின்கள் அனைத்தும் செயலிழந்தாலும் விமானங்களால் பாதுகாப்பாக தரையிறங்க முடியும். ஏனென்றால், அவை காற்றின் வேகத்திலேயே திறமையாக செயல்படும் வகையில் பார்த்து பார்த்து கவனத்துடன் வடிவமைக்கப்படுகின்றன. அதாவது, முன்னோக்கி செல்வதற்கான வேகத்தைப் பராமரிக்கவும், விமானத்தின் கட்டுப்பாட்டை தக்க வைக்கவும், விமானம் பறக்கும் உயரத்தை தொடர்ந்து உயர்த்தியும், குறைத்தும் விமானிகள் தங்களது கண்ட்ரோலில் விமானத்தை வைத்திருக்க முடியும்.

நடு வழியில் சார்ஜ் காலியானாலும் இனி கவலை இல்ல...!!

இந்தியாவின் மிகப்பெரிய நான்கு சக்கர எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான டாடா.இவி (TATA.ev), வோல்ட்ரான் (Voltran) நிறுவனத்துடன் இணைந்து ஆந்திரப் பிரதேசம் மற்றும் தெலங்கானா மாநிலங்களில் பெரிய அளவில் 14 டாடா எலெக்ட்ரிக் வாகன ஃபாஸ்ட்-சார்ஜிங் (Fast-Charging) நிலையங்களை திறந்துள்ளது. ஆந்திரா மற்றும் தெலுங்கானாவில் அமைக்கப்பட்டுள்ள இந்த சார்ஜிங் நிலையங்களால் தமிழ்நாட்டு வாகன ஓட்டிகளுக்கு என்ன மாதிரியான நன்மைகள் என்பதை பற்றி இனி இந்த தொகுப்பில் காணலாம்.

செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்கும்போது உஷார்...!!

சமீபத்திய டெல்லி கார் வெடிகுண்டு சம்பவத்தில் இருந்து கற்றுக்கொள்ள வேண்டிய முக்கியப் பாடம் என்னவென்றால், டெல்லியில் மட்டுமின்றி, நாட்டின் எந்தவொரு மூலையில் வசிப்பவரும் செகண்ட்-ஹேண்டில் கார் வாங்க/ விற்ற பின் உடனடியாகவும் சட்டபூர்வமாகவும் வாகன உரிமையை (ஆர்.சி பரிமாற்றம்) வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்தில் (RTO) மாற்றுவதும், வாகனம் விற்கப்பட்டவுடன் காப்பீட்டை ரத்து செய்வதும் அல்லது மாற்றுவதும் அவசியம் ஆகும்.

நாடே எதிர்பார்த்தது இந்த ரெண்டு கார்களுக்கு தான்!

நீண்ட எதிர்பார்ப்பிற்கிடையில் டாடா நிறுவனம் தனது ஹாரியர் மற்றும் சஃபாரி கார்களில் பெட்ரோல் இன்ஜின் வெர்ஷன்களை அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்தஇரண்டு கார்களிலும் டர்போ பெட்ரோல் இன்ஜின் கார்கள் வரும் டிசம்பர் 9ம் தேதி முதல் விற்பனைக்கு வருகிறது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

ஒரே மாதத்தில் 22 மடங்கு அதிகரித்த விற்பனை!

இந்தியாவில் இவி மார்கெட் மிகப்பெரிய அளவில் வளர்ந்து வருகிறது. தற்போது டாடா மற்றும் மஹிந்திரா ஆகிய நிறுவனங்கள் தான் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. எம்ஜி நிறுவனம் கணிசமான மார்கெட் பங்கை பெற்றுள்ள நிலையில் புதிதாக வியட்நாம் நாட்டைச் சேர்ந்த விண்ஃபாஸ்ட் நிறுவனம் இந்தியாவில் தனது ஆலையை துவங்கி விற்பவனையை துவங்கிய 2வது மாதமே நல்ல வளர்ச்சியை பெற்றுள்ளது.

நீண்ட வருடங்களாக இந்திய இளைஞர்கள் எதிர்பார்த்த யமஹா பைக்!!

யமஹா (Yamaha) நிறுவனம், நீண்டகாலமாக இந்திய இளைஞர்களால் எதிர்பார்க்கப்பட்ட எக்ஸ்.எஸ்.ஆர்155 (XSR155) மோட்டார்சைக்கிளை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரபலமான யமஹா ஆர்15 மற்றும் எம்டி-15 (MT-15) பைக்குகளின் புதிய-ரெட்ரோ வகையாக அறிமுகம் செய்யப்பட்டுள்ள இது ரூ.1.50 லட்சம் விலையில் கிடைக்கும். இந்த புதிய அட்டகாசமான யமஹா பைக்கை பற்றிய கூடுதல் விபரங்களை இனி இந்த தொகுப்பில் பார்க்கலாம்.

யமஹாவின் இந்த வண்டி தான் இனி செம ஹிட்டாக போகுது!

யமஹா நிறுவனம் தனது இசி 06 என்ற எலெக்ட்ரிக் ஸ்கூட்டரை இன்று வெளியிட்டுள்ளது. இந்த ஸ்கூட்டர் ஏராக்ஸ் இ என்ற ஸ்கூட்டர் உடன் சேர்ந்து வெளியிடப்பட்டுள்ளது. இந்தியாவில் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்கள் சிறப்பாக விற்பவனையாகிவரும் நிலையில் இந்த ஸ்கூட்டர்களை அந்நிறுவனம் வெளியிட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நியூமரோஸ் என்-ஃபர்ஸ்ட் ஸ்கூட்டர் ஓட்டுவதற்கு எப்படி இருக்கு?

நியூமரோஸ் என்-ஃபர்ஸ்ட் மின்சார ஸ்கூட்டர் இந்தியாவில் அறிமுகம்: விலை, சிறப்பம்சங்கள் மற்றும் செயல்திறன் குறித்த விவரங்களை இங்கே தெரிந்து கொள்ளுங்கள்.

ரூ.1.17 லட்சம் மட்டும்தான் விலையா... யமஹாவின் எஃப்.இசட்-ரேவ்

இந்தியாவில், யமஹா மோட்டார் இந்தியா (Yamaha Motor India) நிறுவனம் புதிய எஃப்.இசட்-ரேவ் (FZ-RAVE) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் மூலம் 150சிசி மோட்டார்சைக்கிள் பிரிவில் தனது நிலையை மேலும் வலுப்படுத்தியுள்ளது. ரூ.1.17 லட்சம் என்கிற எக்ஸ்-ஷோரூம் (டெல்லி) விலையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ள புதிய எஃப்.இசட்-ரேவ் ஒரு புதிய வடிவமைப்பு, நம்பகத்தன்மை மற்றும் அன்றாட பயன்பாட்டிற்கான சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக உள்ளது.

டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறிய 2 கார்கள்!

இந்தியாவில் மாருதி நிறுவனத்தின் ஈக்கோ மற்றம் பிரெஸ்ஸா ஆகிய கார்கள் நீண்ட காலமாக டாப் 10 கார் பட்டியலில் இருந்தது. இந்த கார்கள் மக்கள் மத்தியில் நீண்ட காலமாக நல்ல விற்பவனையில் இருந்தநிலையில் கடந்த அக்டோபர் மாதம் விற்பனை விபரங்களில் இந்த இரண்டு கார்களும் டாப் 10 பட்டியலில் இருந்து வெளியேறியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

குழந்தை வெச்சிருப்பவங்க இதில் ஒரு காரை வாங்குறது பெஸ்ட்!!

ரூபாய் 10 லட்சத்திற்கும் குறைவான எக்ஸ்-ஷோரூம் விலையில், மோதலை உணர்ந்து கதவுகளைத் தானாக திறக்கும் வசதியுடன் கிடைக்கும் கார்கள் பட்டியலில் டாடா அல்ட்ராஸ், டாடா பன்ச் இவி, கியா சைரோஸ், ஹூண்டாய் ஐ20 என் லைன் மற்றும் நிசான் மேக்னைட் போன்ற கார்கள் உள்ளன. மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களுடன், பட்ஜெட் விலையில் பல வாகனங்களில் இந்த வசதி தற்போது அதிகரித்து வருகிறது. மோதலை உணர்ந்து கதவுகளைத் தானாக திறக்கும் வசதியுடன் கூடிய கார்களை இங்கே காணலாம்.

கர்வ் காரில் எதிர்பாராத நேரத்தில் அப்டேட்களை கொண்டுவந்த டாடா

டாடா மோட்டார்ஸ் (Tata Motors) நிறுவனத்தின் பயணிகள் வாகனப் பிரிவு, புதிய மேம்படுத்தப்பட்ட எக்ஸிகியூட்டிவ் அம்சங்களுடன் கூடிய 'கர்வ்' (Curvv) கார்களை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த சிறப்பான பொறியியல் புதுமைகள் உடன், அனைத்து கர்வ் வேரியண்ட்களிலும் (ICE மற்றும் EV) உட்புற இடவசதி கணிசமாக அதிகரிக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சவுகரியம் மற்றும் நடைமுறை பயன்பாட்டில் சிறந்த அனுபவத்தை வழங்கக்கூடியதாக டாடா கர்வ் மாறியுள்ளது.
Advertisement

ஓசூரில் ஃபேக்ட்ரி வெச்சவங்க தோற்று போனதா சரித்தரமே இல்ல!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனங்களுள் ஒன்றான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), கடந்த 2024 ஏப்ரல் மாதத்தில் துவங்கிய 2025-26ஆம் நிதியாண்டின் இரண்டாம் காலாண்டில் வலுவான வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது. சிறப்பான விற்பனை மூலமாக இந்தியாவின் எலெக்ட்ரிக் 2-வீலர் சந்தையில் குறிப்பிடத்தக்க பங்கை பெற்றிருப்பதுடன் பொருளாதார அடிப்படையிலும் ஏத்தர் எனர்ஜி குறிப்பிடத்தக்க முன்னேற்றத்தை கண்டுள்ளது.

போட்டி நிறுவனங்களின் ஈரக்குலையை நடுங்க வைத்த மாருதி!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி இ விட்டாரா (Maruti Suzuki e Vitara). இதுதான் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் கார் ஆகும். மாருதி சுஸுகி இ விட்டாரா எலெக்ட்ரிக் கார் எப்போது விற்பனைக்கு வரும்? என்ற கேள்வி மிக நீண்ட காலமாக இருந்து வருகிறது.

2022இல் ஹூண்டாய் எவ்வளவு ஆசை ஆசையாய் அறிமுகம் செய்த கார்!

ஹூண்டாய் டக்சன் (Hyundai Tucson) காரின் பெயர் ஹூண்டாய் நிறுவனத்தின் இந்திய இணையதளத்தில் இருந்து நீக்கப்பட்டதால், அதன் உற்பத்தி நிறுத்தப்பட்டிருக்கலாம் என்கிற செய்திகள் தற்போது உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. ஹூண்டாய் நிறுவன வட்டாரங்களின்படி, இந்த நிறுவனத்தின் விலையுயர்ந்த மற்றும் முதன்மையான எஸ்யூவி (SUV) காரான டக்சன் அதிகாரப்பூர்வமாக நிறுத்தப்பட்டுள்ளது. இருப்பினும், ஸ்டாக்கில் உள்ளவரை சில ஹூண்டாய் ஷோரூம்களில் இன்னும் சில வாரத்திற்கு கிடைக்கலாம்.

ஸ்கூட்டரில் பயணித்தவருக்கு ரூ21 லட்சம் அபராதம்!

இந்தியாவில் தற்போது வாகனங்கள் மோட்டார் வாகன சட்ட விதிகளை மீறும் போது அவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த அபராத விதிப்பில் தற்போது ஒரு குழப்பம் ஏற்பட்ட சம்பவம் வைரலாக பரவி வருகிறது. ரூ1 லட்சம் மதிப்பிலான ஸ்கூட்டரில் ஹெல்மெட் இல்லாமல் போதற்காக ஒருவருக்க ரூ21 லட்சம் அரபாதமாக விதிக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

9 பேர் போகலாம்! ஆனா விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையை பொறுத்தவரையில் ஒரு சில கார்கள் விற்பனைக்கு வருவதும் தெரியாது. விற்பனையில் இருந்து விலக்கப்படுவதும் தெரியாது. வாடிக்கையாளர்கள் மத்தியில் வரவேற்பு கிடைக்காத காரணத்தால், அவை பிரபலம் அடைவதில்லை. ஆனால் ஒரு சில கார்கள் மட்டும் இதற்கு விதிவிலக்காக இருந்து வருகின்றன.