GST குறைப்பால் இந்தியாவில் 2-வீலர் சேல்ஸ் விண்ணை முட்டுது!

இந்திய இருசக்கர வாகன விற்பனை சந்தை, 2025 அக்டோபரில் பெரும் வளர்ச்சியைக் கண்டுள்ளது. இந்த மாதத்தில் மட்டும் 31 லட்சத்து 49 ஆயிரத்து 846 இருசக்கர வாகனங்கள் சில்லறை விற்பனையாக விற்பனை செய்யப்பட்டுள்ளன. இது 2024 அக்டோபரில் விற்கப்பட்ட 27 லட்சத்து 75 ஆயிரத்து 578 யூனிட்களுடன் ஒப்பிடுகையில் சுமார் 51.76% அதிகரிப்பாகும்.

பல வருடங்களுக்கு பின் களமிறங்கும் பிரபலமான கார்!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று ரெனால்ட் டஸ்டர் (Renault Duster). கடந்த 2012ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட ரெனால்ட் டஸ்டர் கார், கடந்த 2022ம் ஆண்டு வரை விற்பனையில் இருந்தது. 10 ஆண்டு காலம் மட்டுமே விற்பனையில் இருந்தாலும், இந்தியாவில் தனக்கென மிகப்பெரிய ரசிகர்கள் வட்டத்தை ரெனால்ட் டஸ்டர் உருவாக்கி கொண்டது.

ஷோரூமுக்கு வருபவர்களின் முதல் கண்ணு இந்த பைக் மேலே தான்!

ஹீரோ மோட்டோகார்ப் (Hero MotoCorp) நிறுவனம் தனது 2026 ஹீரோ எக்ஸ்ட்ரீம் 160ஆர் (Xtreme 160R) மோட்டார்சைக்கிளை விற்பனைக்கு அறிமுகம் செய்வதற்கு முன்னதாகவே, அது டீலர்ஷிப் ஷோரூம்களுக்கு வரத் தொடங்கியுள்ளது. சமீபத்தில் நடந்த ஒரு டீலர்ஷிப் நிகழ்வில், இந்த எக்ஸ்ட்ரீம் சீரிஸ் பைக்குகளின் மேம்படுத்தப்பட்ட வடிவங்கள் காட்சிப்படுத்தப்பட்டன.

பைக்கை காராக மாற்றிய ஹீரோ! விலை இவ்ளோதானா!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் பைக்குகளில் ஒன்று ஹீரோ எக்ஸ்ட்ரீம் 125ஆர் (Hero Xtreme 125R). இது ஸ்போர்ட்ஸ் கம்யூட்டர் ரகத்தை சேர்ந்த பைக் ஆகும். இந்த பைக்கின் புதிய வேரியண்ட் ஒன்றை ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் தற்போது சத்தமே இல்லாமல் விற்பனைக்கு அறிமுகம் செய்துள்ளது.
Advertisement

பாதசாரிகளுக்கு சிறந்த பாதுகாப்பை வழங்கும் கார்கள்!!

இந்தியாவில், 10 லட்சம் ரூபாய்க்கும் குறைவான விலையில் சிறந்த பாதசாரிகள் பாதுகாப்பு வசதியுடன் கூடிய கார்களைப் பற்றி இங்கு காணலாம். இவை, குளோபல் NCAP (GNCAP) மற்றும்/அல்லது பாரத் NCAP (BNCAP) ஆகிய மோதல் சோதனைகளில் முழுமையாகச் சோதிக்கப்பட்டு, பாதசாரிகள் பாதுகாப்பு உட்பட ஒட்டுமொத்த பாதுகாப்பிற்காக அதிக மதிப்பெண்களை பெற்றுள்ளன.

ஃபோக்ஸ்வேகனுக்கு கூரையை பிச்சிக்கிட்டு கொட்டும் விற்பனை!

ஜெர்மன் கார் தயாரிப்பு நிறுவனமான ஃபோக்ஸ்வேகன் (Volkswagen), 2025 அக்டோபர் மாதத்தில் விர்டுஸ் (Virus) என்கிற தனது செடான் ரக காரை 2 ஆயிரத்து 453 யூனிட்கள் விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது. ஏனெனில், இதன் மூலம் இந்தியாவின் நம்பர்-1 பிரீமியம் செடான் கார் என்ற பெருமையை ஃபோக்ஸ்வேகன் விர்டுஸ் பெற்றுள்ளது.

ரூ.7.9 லட்சத்தில் புதிய வென்யூ பார்க்க இப்படி தான் இருக்குமா

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India), அதன் புதிய 2026 வென்யூ (Venue) காரை சமீபத்தில் அறிமுகப்படுத்தியதை பற்றி கேள்விப்பட்டு இருப்பீர்கள் என நினைக்கிறேன். பெரும்பாலான மக்களால் ஏற்கக்கூடிய பட்ஜெட் விலையில் மாடர்ன் தொழிற்நுட்ப அம்சங்கள் மிகுந்ததாக புதிய வென்யூ அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. எந்த அளவிற்கு என்றால், இதன் விலை குறைவான ஆரம்ப நிலை எச்.எக்ஸ்2 (HX2) வேரியண்ட் கூட, பல சிறப்பம்சங்களுடன் களமிறங்கியுள்ளது.

காரின் அளவை பார்த்து எடை போடாதீங்க... மினி கண்ட்ரிமேன் எஸ்.இ

புதிய மினி கன்ட்ரிமேன் எஸ்.இ ஆல்4 (MINI Countryman SE All4) எலக்ட்ரிக் கார் இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.66.90 லட்சம் ஆக நிர்ணயிக்கபட்டு உள்ளது. மினி நிறுவனத்தின் சில கார்களை போன்று JCW-தீம் கொண்ட இந்த புதிய கண்ட்ரிமேன் கார் முழுவதுமாக வெளிநாட்டில் தயாரிக்கப்பட்டு இந்தியாவில் இறக்குமதி செய்யப்பட்டு விற்பனை செய்யப்பட உள்ளது.

7 பேர் போற எலெக்ட்ரிக் காரை களமிறக்கும் மஹிந்திரா!

இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய எதிர்பார்ப்புகளை ஏற்படுத்தியுள்ள எலெக்ட்ரிக் கார்களில் ஒன்று மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் (Mahindra XEV 9S). இதுதான் மஹிந்திரா நிறுவனத்தின் முதல் 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி ரக கார் (Mahindra's First 7-Seater Electric SUV) ஆகும். பெங்களூர் நகரில் வரும் நவம்பர் 27ம் தேதி (November 27) நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், மஹிந்திரா எக்ஸ்இவி 9எஸ் அறிமுகம் செய்யப்படவுள்ளது. இந்த புதிய 7 சீட்டர் எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் குறித்த விரிவான தகவல்களை, இந்த செய்தியில் உங்களுக்காக தொகுத்து வழங்கியுள்ளோம். சரி, வாருங்கள். இனி செய்திக்குள் செல்லலாம்.

உலகையே மிரள வைத்த இந்திய நிறுவனத்தின் எலெக்ட்ரிக் கார்கள்!

இந்திய சந்தையில் அதிக எலெக்ட்ரிக் கார்களை (Electric Cars) விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக மஹிந்திரா (Mahindra) மாறியுள்ளது. இதற்கு மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6) மற்றும் மஹிந்திரா எக்ஸ்இவி 9இ (Mahindra XEV 9e) ஆகிய 2 எலெக்ட்ரிக் கார்கள்தான் மிகவும் முக்கியமான காரணம்.

டாடா நானோ எலெக்ட்ரிக் கார் மட்டுமே இதுக்கு டஃப் கொடுக்கும்!!

ஹீரோ மோட்டோகார்ப் நிறுவனம் EICMA 2025 கண்காட்சியில் தனது புதிய மைக்ரோ எலக்ட்ரிக் நான்கு சக்கர வாகனமான NEX 3-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. இந்நிறுவனம் தனது VIDA துணை பிராண்டின் கீழ் வரும் 'Novus' வரிசையின் ஒரு பகுதியாக இதை வெளியிட்டுள்ளது. NEX 3, ஹீரோவின் காம்பாக்ட் எலக்ட்ரிக் வாகனப் பிரிவில் ஒரு முக்கியமான அடியை எடுத்து வைத்துள்ளது. இது ஒரு காலத்தில் டாடா நானோ வழங்கிய வசதிகளைப் போல, எதிர்கால நகரப் பயணங்களுக்கான ஒரு சிறந்த தீர்வாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிஎம் மகனே நெனச்சாலும் இந்த காரை வாங்க முடியாது!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் கார்களில் (Electric Cars) ஒன்று மஹிந்திரா பிஇ 6 (Mahindra BE 6). இதன் பேட்மேன் எடிசன் (Batman Edition) மாடலை, மஹிந்திரா நிறுவனம் சமீபத்தில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இது ஒரு லிமிடெட் எடிசன் (Limited Edition) மாடல் ஆகும்.
Advertisement

புதிய ஸ்கோடா ஆக்டேவியா காரை விட்டு கீழே இறங்கவே மனசு வரல!!

Skoda Octavia RS launched in India at ₹45.00 Lakh. It features powerful engine, attractive design & advanced safety. Check features, specs & more. | ஸ்கோடா ஆக்டேவியா RS இந்தியாவில் ₹45.00 லட்சத்தில் அறிமுகம். சக்திவாய்ந்த எஞ்சின், கவர்ச்சிகரமான வடிவமைப்பு மற்றும் மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. விவரக்குறிப்புகள் மற்றும் பலவற்றைச் சரிபார்க்கவும்.

இத்தாலி கண்காட்சியில் நம்ம நாட்டு ஹீரோ பைக்குகள்!!

2025 ஆம் ஆண்டுக்கான EICMA கண்காட்சியில், Hero MotoCorp நிறுவனம் தனது புதிய வாகனக் கருத்துருக்களையும், எதிர்காலப் போக்குவரத்துத் திட்டங்களையும் பெரிய அரங்கில் காட்சிப்படுத்தியுள்ளது. இவற்றில் எதிர்கால 3 சக்கர மோட்டார் சைக்கிள், கலுவிங் கதவுகள் கொண்ட எலக்ட்ரிக் கார் ஆகியவை பார்வையாளர்களைக் கவர்ந்தன.

கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் உடன் 10 லட்ச ரூபாய் கார்கள்

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் பல கார்கள் கார்னரிங் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (CSC) எனப்படும் எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் (ESC) அல்லது எலெக்ட்ரானிக் ஸ்டெபிலிட்டி புரோகிராம் (ESP) அம்சங்களுடன் கிடைக்கின்றன. டாடா பன்ச், டாடா நெக்ஸான், மாருதி சுஸுகி டிசையர் போன்ற பிரபலமான கார் மாடல்கள் இதில் அடங்கும். இதனாலேயே இந்த கார்கள் சிறந்த பாதுகாப்பு மதிப்பீடுகளைப் பெற்றுள்ளன. CSC அல்லது அதற்கு சமமான ஸ்டெபிலிட்டி கண்ட்ரோல் அம்சத்துடன் கிடைக்கும் சில சிறந்த கார்களை இனி பார்க்கலாம். இவற்றின் விலையும் பத்து லட்ச ரூபாய்க்குள் உள்ளது.

லைசன்ஸ் எல்லாம் தேவையே இல்ல... மொத்த டாப்-ஸ்பீடே 25kmph தான்

எலெக்ட்ரிக் இருசக்கர மற்றும் மூன்று சக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஜெலியோ இ-மொபிலிட்டி (Zelio E-Mobility), தனது வளர்ச்சியில் ஆண்டுதோறும் இரு மடங்காக முன்னேறி வருகிறது. தற்போது, இந்த நிறுவனம் தனது ஈவா (Eeva) ஸ்கூட்டர் வரிசையில் மூன்று மேம்படுத்தப்பட்ட எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை அறிமுகப்படுத்தி, இந்தியாவின் குறை-வேக (டாப்-ஸ்பீடு மணிக்கு 25கிமீ) எலெக்ட்ரிக் வாகனப் பிரிவில் தனது இருப்பை வலுப்படுத்தி உள்ளது.

உலகமே தமிழ்நாட்டை ஆச்சரியமா பாக்க போகுது!

தமிழ்நாட்டின் (Tamil Nadu) தலைநகர் சென்னையை (Chennai) ஆசியாவின் டெட்ராய்டு (Detroit of Asia) என்பார்கள். ஏனெனில் இங்கு ஏராளமான ஆட்டோமொபைல் நிறுவனங்கள் நிரம்பி வழிகின்றன. இதில், டிவிஎஸ் (TVS) குறிப்பிடத்தக்க ஒன்றாகும். சென்னையை தலைமையிடமாக கொண்டுதான் டிவிஎஸ் நிறுவனம் இயங்கி வருகிறது.

கடைசியில் தலைமையக கட்டிடத்தையே விற்ற நிசான் கம்பெனி!!

நிசான் (Nissan) நிறுவனம் ஜப்பானில் உள்ள அதன் யோகோஹாமா தலைமையகக் கட்டிடத்தை 97 பில்லியன் யென் (தற்போதைய நிலவரப்படி சுமார் ரூ.5,598 கோடி) விலைக்கு விற்றுள்ளதாக அறிவித்துள்ளது. இந்த நடவடிக்கை, இந்த ஜப்பானிய கார் நிறுவனம் தற்போது எதிர்கொள்ளும் சவால்களில் இருந்து மீள்வதற்கான ஒரு முயற்சியாகப் பார்க்கப்படுகிறது.

ஒருமுறை சார்ஜ் பண்ணிட்டா 109கிமீ-க்கு கவலையே வேண்டாம்!

இந்திய சந்தையில் நியூமரஸ் (Numeros) நிறுவனம் தனது புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் (Electric Scooter) ஆக 'என்-ஃபர்ஸ்ட்' (n-First)-ஐ அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் 1,000 வாடிக்கையாளர்களுக்கு ரூ.64,999 (எக்ஸ்-ஷோரூம்) என்கிற அறிமுக விலையில் இந்த புதிய எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், ஸ்கூட்டருக்கான முன்பதிவுத் தொகை ரூ.499 ஆக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

இந்த விஷயம் மட்டும் வெளிய வந்துச்சுனா மாருதி, டாடாலாம் காலி!

இந்திய வாடிக்கையாளர்கள் தற்போதெல்லாம் கார்களின் பாதுகாப்பு வசதிகளுக்கு (Safety Features) அதிக முக்கியத்துவம் வழங்குகிறார்கள். பாரத் என்சிஏபி (Bharat NCAP) மற்றும் குளோபல் என்சிஏபி (Global NCAP) போன்ற அமைப்புகளின் மோதல் சோதனைகளில், ஒரு கார் எவ்வளவு பாதுகாப்பு ரேட்டிங் (Safety Rating) வாங்கியுள்ளது? என்பதை பொறுத்துதான், அந்த காரை வாங்கலாமா? அல்லது வேண்டாமா? என்ற முடிவையே ஒரு சில வாடிக்கையாளர்கள் எடுக்கின்றனர்.
Advertisement

நீர் நிரம்பிய டம்ளர் வைத்து நடத்தப்பட்ட சோதனை ஓட்டம்!

இந்திய ரயில்வேயின் எதிர்காலத் திட்டமான வந்தே பாரத் ஸ்லீப்பர் ரயிலின் அதிவேக சோதனை வெற்றிகரமாக நிறைவடைந்துள்ளது. மேற்கு மத்திய ரயில்வே சவாய் மாதோபூர்-கோட்டா-நாக்டா பிரிவில் நடத்திய இந்தச் சோதனையின்போது, ரயில் மணிக்கு 180 கி.மீ. வேகத்தை எட்டியது.

டீசர் வீடியோ விட்டதுக்கே மார்க்கெட் கதிகலங்கி போயிருச்சு!

இந்திய சந்தையில் கடந்த 1991ம் ஆண்டு விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட கார் டாடா சியரா (Tata Sierra). ஆனால் கடந்த 2003ம் ஆண்டிலேயே டாடா சியரா காரின் விற்பனை நிறுத்தப்பட்டு விட்டது. இருப்பினும் சுமார் 22 ஆண்டு கால இடைவெளிக்கு பிறகு, டாடா மோட்டார்ஸ் நிறுவனம், சியரா காரை மீண்டும் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளது.

3 லட்சம் எலெக்ட்ரிக் வாகனங்களை விற்பனை செய்வது சும்மா இல்ல!!

இந்தியாவின் நம்பர் 1 மின்சார வர்த்தக வாகன உற்பத்தியாளரான மஹிந்திரா லாஸ்ட் மைல் மொபிலிட்டி லிமிடெட் (MLMML), 3 லட்சம் மின்சார வாகன விற்பனை என்ற மாபெரும் மைல்கல்லை எட்டியுள்ளது. இதன் மூலம் மின்சார வாகன சந்தையில் ஒரு புதிய அத்தியாயத்தை MLMML தொடங்கியுள்ளது. இந்தியாவின் வர்த்தக மின்சார வாகன பிரிவில் இந்த சாதனையை எட்டிய முதல் அசல் உபகரண உற்பத்தியாளர் (OEM) மஹிந்திரா ஆகும். இது, நிலையான இறுதி-மைல் போக்குவரத்தில் மஹிந்திராவின் தலைமையை எடுத்துக்காட்டுகிறது.

காரில் இந்த விளக்கு இல்லாம தான் சிலர் தவிக்குறாங்க!!

கார்னரிங் விளக்குகள் என்பவை, கார்களின் முகப்பு விளக்குகள் அல்லது ஃபாக் விளக்குகளுடன் இணைக்கப்படும் துணை விளக்குகளாகும். இவை தானாகவே செயல்பட்டு, கார் திரும்பும் திசையில் ஒளியைப் பாய்ச்சி, பார்வைக்குத் தெரியாத பகுதிகளை மேம்படுத்த உதவுகின்றன. குறைந்த வேகத்தில் பயணிக்கும் போதும், ஓட்டுநர் ஸ்டீயரிங் சக்கரத்தைத் திருப்பும் போதும் அல்லது டர்ன் இண்டிகேட்டர் சிக்னலை பயன்படுத்தும் போதும் இந்த விளக்குகள் இயங்குகின்றன.

இந்திய மகளிர் கிரிக்கெட் அணிக்கு இப்படி ஒரு பரிசா!

இந்திய மகளிர் கிரிக்கெட் அணி சமீபத்தில் நடைபெற்ற ஐசிசி மகளிர் உலக கோப்பையை (ICC Women's World Cup) வென்றது. நவி மும்பையில் (Navi Mumbai) நடைபெற்ற இறுதி போட்டியில், தென் ஆப்ரிக்க (South Africa) மகளிர் அணியை வீழ்த்தி, இந்திய மகளிர் கிரிக்கெட் அணி, சாம்பியன் பட்டத்தை வென்றது.