ஒரே மாதத்தில் 15 ஆயிரம் கஸ்டமர்களை ஈர்த்த மஹிந்திரா கார்!

2025 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா (Mahindra) 50,946 கார்களை இந்திய சந்தையில் விற்பனை செய்துள்ளது. இது 2024 டிசம்பர் மாதத்தில் மஹிந்திரா விற்பனை செய்ததை காட்டிலும் விட 23% வளர்ச்சி ஆகும். 2025 நவம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் விற்பனை 10% குறைந்தாலும், கடந்த டிசம்பரில் இந்தியாவின் இரண்டாவது பெரிய கார் தயாரிப்பு நிறுவனமாக 2025ஆம் ஆண்டை மஹிந்திரா நிறைவு செய்துள்ளது.

தமிழ்நாட்டில் தயாரிக்கப்பட்ட வண்டியா இது?

சிம்பிள் எனர்ஜி நிறுவனம் மேம்படுத்தப்பட்ட அம்சங்களுடன் 'சிம்பிள் ஒன் ஜென் 2' மின்சார ஸ்கூட்டரை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் விலை மற்றும் சிறப்பம்சங்களை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.

5 லட்சம் பேர் இந்த வசதி உள்ள காரை வாங்கிட்டாங்க!

கியா நிறுவனம் இந்தியாவில் 5 லட்சம் கனெக்டெட் கார்களை விற்பனை செய்து புதிய சாதனையை பதிவு செய்துள்ளது. இந்நிறுவனம் மக்கள் மத்தியில் கனெக்டெட் கார் குறித்த மிகப்பெரிய விழிப்புணர்வை ஏற்படுத்தியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

நம்பர் 1 இடத்தில் விற்பனையாவது இந்த காரா?

மாருதி நிறுவனத்தின் எர்டிகா கார் கடந்த டிசம்பர் மாதம் இந்தியாவிலேயே அதிகமாக விற்பனையான 7 சீட்டர் காராக உருவெடுத்துள்ளது. இந்த கார் நீண்ட காலமாக இந்த இடத்தில் நம்பர்1 இடத்தை பிடித்துள்ளது. தற்போதும் இதே இடத்தை பிடித்துள்ளது. இது குறித்து விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

எஸ்யூவி கார்களை வாங்குவதற்கு இவ்வளவு டிமாண்ட்-ஆ?

2025 ஆம் ஆண்டு, இந்தியாவில் SUV கார்களின் சந்தை ஆதிக்கத்துடன் நிறைவடைந்தது. இந்த வகைக் கார்களின் தொடர்ச்சியான வளர்ச்சி, நாட்டின் முன்னணி வாகன உற்பத்தியாளர்களுக்கு பெரும் விற்பனை அதிகரிப்பை அளித்துள்ளது. டிசம்பர் 2024 உடன் ஒப்பிடும்போது, மாருதி சுஸுகி ஃப்ரோன்க்ஸ் (Maruti Suzuki Fronx) 20,706 யூனிட்கள் விற்பனையாகி, 93% மாபெரும் ஆண்டுக்கு ஆண்டு வளர்ச்சியைப் பதிவுசெய்து SUV விற்பனைப் பட்டியலில் முதலிடம் பிடித்தது.

பைக்கை விட குறைவான விலையில் ஹூண்டாய் கார்!

இந்தியாவில் எஸ்யூவி ரக கார்களுக்கு (SUV Cars), வாடிக்கையாளர்கள் மத்தியில் தற்போது மிகப்பெரிய வரவேற்பு கிடைத்து வருகிறது என்பது நம் அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். குறிப்பாக மிகவும் விலை குறைவான மைக்ரோ எஸ்யூவி ரக கார்களுக்கு, வாடிக்கையாளர்கள் மத்தியில், அதிக 'டிமாண்ட்' உள்ளது.

பனிகாலத்தில் மட்டும்தான் இந்த பிரச்சனை - கார் டிப்ஸ்!!

பனிகாலம் (Winter)-இல் பெரிய பிரச்சனையே விண்ட்ஷீல்டு (Windshield)-இல் பனி படர்வது ஆகும். இது வாகனத்தை ஓட்டுவதற்கு இடையூறாக அமைவதில் இருந்து, விபத்துகளை ஏற்படுத்துவது வரையில் கூட பிரச்சனைகளை உண்டாக்கக்கூடியவை. ஏனெனில், பனித்துளிகள் சில சமயங்களில் டிரைவரின் பார்வையை முழுவதுமாக மறைக்கின்றன. தென்னிந்தியாவை பொறுத்தவரையில், பெரியது பெரியதாக பனி பொழிய போவது இல்லை; சாரல் போன்றுதான் வீசும். ஆனால், வேகமாக செல்லும்போது விண்ட்ஷீல்டில் படிய அந்த பனி சாரலே போதுமானது. இரவில் ஓரிடத்தில் நிறுத்திவிட்டு பின்னர் எடுத்தால், அதற்குள் மழை பொழிந்தது போன்று விண்ட்ஷீல்டு முழுக்க பனி படர்ந்திருப்பதை பார்க்க முடியும்.

இந்த இரு பைக்குகளில் ஒன்றை தேர்வு செய்வதுதான் கஷ்டம்!!

ஆஸ்திரிய மோட்டார்சைக்கிள் பிராண்டான கேடிஎம் (KTM), விலை குறைவான தனது புதிய எண்ட்ரி-லெவல் ஆர்சி160 (RC160) பைக்கை இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த மோட்டார்சைக்கிள், அதிக போட்டி நிலவும் 150சிசி பைக்குகள் பிரிவில் களமிறங்கியுள்ளது. இந்த பிரிவில் அதிகம் விற்பனையாகும் யமஹா ஆர்15 (Yamaha R15) பைக் உடன் இது நேரடியாக போட்டியிடுகிறது.

தூத்துக்குடியில் எவ்வளவு ஆசை ஆசையாய் ஃபேக்ட்ரியை திறந்துச்சு

வியட்நாம் நாட்டை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தி நிறுவனமான வின்பாஸ்ட் (VinFast), அதன் பிரபலமான விஎஃப்6 (VF 6) மற்றும் விஎஃப்7 (VF 7) எலெக்ட்ரிக் எஸ்யூவி கார்களின் விலைகளை இந்தியாவில் உயர்த்தியுள்ளது. அறிமுகச் சலுகைக் காலம் அதிகாரப்பூர்வமாக நிறைவடைந்ததைத் தொடர்ந்து இந்த விலை மாற்றம் அறிவிக்கப்பட்டுள்ளது.

முதல்வரின் ஒரே கையெழுத்தில் வருஷத்துக்கு 10000 பேருக்கு வேலை

ஹிந்துஜா (Hinduja) குழுமத்தின் முதன்மை நிறுவனமும், இந்தியாவின் முன்னணி வர்த்தக வாகன உற்பத்தி நிறுவனமான அசோக் லேலண்ட் (Ashok Leyland), தனது புதிய ஒருங்கிணைந்த வாகன ஆலையை உத்தரபிரதேச மாநிலம் லக்னோவில் இன்று (2026 ஜனவரி 9) உ.பி முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் (Yogi Adityanath) முன்னிலையில் திறந்துள்ளது.

நம்பர் 1 இடத்துல இந்த கார் தான் விக்குது!

இந்தியாவில் சமீப காலமாக கார்களின் விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் இந்தியா முழுவதும் எவ்வளவு கார்களை விற்பனையாகி உள்ளன என்ற அறிக்கைகள் தற்போது வாகன தயாரிப்பு நிறுவனங்களால் வெளியிடப்பட்டுள்ளன. இதன்படி இந்தியாவில் கடந்த டிசம்பர் மாதம் மட்டும் விற்பனையான டாப் 10 கார்கள் பற்றிய விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

19ம் தேதி யாரும் எதிர்பாராத சர்ப்பிரைஸ்!

டொயோட்டா நிறுவனத்தின் அக்பன் க்ரூஸர் பிஇவி என்ற எலெக்ட்ரிக் கார் வரும் 19ம் தேதி அறிமுகமாகப் போவதாக தன் நிறுவனம் டீசரை வெளியிட்டுள்ளது. இந்நிறுவனம் இ-விட்டாரா காரை அடிப்படையாகக் கொண்டு உருவாக்கப்பட்ட எலெக்ட்ரிக் காராக இருக்கிறது. டொயோட்டா நிறுவனத்தின் முதல் எலெக்ட்ரிக் காராக இந்த கார் விற்பனைக்கு வருகிறது. இந்த கார் குறித்த விரிவான விபரங்களை காணலாம் பாருங்கள்.
Advertisement

சார்ஜ் முழுசா நிரப்பிட்டா 95கிமீ-க்கு சார்ஜ் பற்றி கவலையில்ல

இந்திய இருசக்கர வாகனச் சந்தையில், சுஸுகி மோட்டார்சைக்கிள் இந்தியா (Suzuki Motorcycle India) தனது முதல் எலெக்ட்ரிக் ஸ்கூட்டராக 'இ-ஆக்ஸஸ்' (e-Access) மாடலை அறிமுகம் செய்து, அதற்கான முன்பதிவுகளைத் தொடங்கியுள்ளது. புதிய சுஸுகி இ-ஆக்ஸஸ் ஸ்கூட்டரின் எக்ஸ்-ஷோரூம் விலை ரூ.1.88 லட்சம் என நிர்ணயிக்கப்பட்டுள்ளது. சில்லறை விற்பனை தொடங்கியவுடன் ஃப்ளிப்கார்ட் (Flipkart) மூலமாகவும் இந்த ஸ்கூட்டர் கிடைக்கும்.

டாடா நானோ மாதிரி இந்தியாவையே மிரள விட போகும் புது கார்!

இந்தியர்களை தற்போது எஸ்யூவி மோகம் ஆட்கொண்டுள்ளது. குறிப்பாக மிகவும் குறைவான விலையில் கிடைக்கும் எஸ்யூவி ரக கார்களுக்கு, இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகப்பெரிய 'டிமாண்ட்' உள்ளது. இதை மிகவும் சரியாக புரிந்து கொண்டு, விலை குறைவான எஸ்யூவி கார் சந்தையை, தன் கைவசம் வைத்துள்ள நிறுவனமாக டாடா மோட்டார்ஸ் (Tata Motors) உள்ளது.

சென்னை பனையூரில் பங்களா, கூடவே புதிய டெஸ்லா சைபர்டிரக்!!

டெஸ்லா சைபர்டிரக் (Tesla Cybertruck) உலகின் தனித்துவமான எலெக்ட்ரிக் வாகனம் என சொன்னால் அது மிகையில்லை. ஏனெனில், அந்த அளவிற்கு அதன் அசாதாரண வடிவமைப்பாலும், புதுமையான தோற்றத்தாலும் உலகம் முழுவதும் பல வசதி படைத்த தொழிலதிபர்களை ஈர்த்து வருகிறது. அந்த வகையில், சென்னையில் தொழில் நடத்திவரும் ஆந்திர தொழிலதிபர் ஒருவர் டெஸ்லா சைபர்ட்ரக்கை வாங்கி உள்ளார்.

உலகிலேயே விலை குறைவான கார்! 34 கிமீ மைலேஜ்!

இந்திய சந்தையில் மிகவும் குறைவான விலையில் ஒரு புத்தம் புதிய காரை வாங்க வேண்டும் என்றால், அனைவரின் மனதிற்கும் முதலில் நினைவிற்கு வருவது, கண்டிப்பாக மாருதி சுஸுகி ஆல்டோ கே10 (Maruti Suzuki Alto K10) காராகதான் இருக்கும். இது இந்திய அளவில் மட்டுமல்லாது, உலகிலேயே மிகவும் விலை குறைவான கார்களில் ஒன்றாக உள்ளது.

இனி கார்களில் இதை மாட்ட வேண்டும்!

இந்தியாவில் நடக்கும் சாலை விபத்துகளின் எண்ணிக்கையை குறைக்க மத்திய அரசு பல்வேறு விதமான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக தற்போது வெஹிகிள் டூ வெஹிகிள் கம்யூனிகேஷன் தொழில்நுட்பத்தை இந்தியாவில் அமல்படுத்த மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இது குறித்து மத்திய போக்குவரத்து துறை அமைச்சர் நிதின் கட்கரி பேசியுள்ளார். இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

28 கிமீ மைலேஜ்! எமனே வந்தாலும் உங்க நிழலை கூட தொட முடியாது!

இந்தியாவில் ஹேட்ச்பேக் ரக கார்களுக்கு (Hatchback Cars) மிகப்பெரிய வாடிக்கையாளர்கள் வட்டம் இருக்கிறது. ஹேட்ச்பேக் கார்கள் 5 பேர் பயணம் செய்ய கூடிய வகையில் 'காம்பேக்ட்' ஆக இருக்கும். எனவே போக்குவரத்து நெரிசல் மிகுந்த சாலைகளிலும் அவற்றை எளிமையாக இயக்க முடியும்.

டாடா தான் நம்பர் 1, மாருதி லிஸ்ட்லயே இல்ல!

இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான விற்பனை அதிகரித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 2025ம் ஆண்டு விற்பனையான எலெக்ட்ரிக் கார்கள் குறித்த தரவுகள் வெளியாகி உள்ளது. இதில் எந்தெந்த பிராண்டுகளில் எவ்வளவு வாகனங்களை விற்பனையாகியுள்ளன என்ற தரப்புகள் கிடைக்கப்பட்டுள்ளன. இதன்படி நாம் டாப் 10 இடத்தில் உள்ள எலெக்ட்ரிக் வாகன விற்பனை பிராண்டுகள் குறித்த விவரங்களை காணலாம் வாருங்கள்.

தனியாக டிராவல் என்றால் இது எல்லாம் ஞாபகத்தில் இருக்கட்டும்!!

நாகரீகத்தில் வளர்ந்துக் கொண்டிருக்கிறோம் என மார்தட்டிக் கொண்டாலும், ஒருபக்கம் பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல்களும், துன்புறுத்தல்களும் தொடர்ந்து நடந்துக் கொண்டிருப்பது வருத்தமளிக்கக்கூடியதாக உள்ளது. ஒரு கார் டாக்ஸியை பிடித்து செல்ல வேண்டிய இடத்திற்கு செல்வது எவ்வளவு எளிதான செயல்முறை. ஆனால், இதுவே ஒரு இளம்பெண் கார் டாக்ஸியை புக் செய்வதில் இருந்து, செல்ல வேண்டிய இடத்திற்கு சென்று சேருவதற்குள் அவரது மனதில் பல்வேறு விதமான கேள்விகள் எழுகின்றன. ஆகையால், கார் டாக்ஸி, ஆட்டோ ரிக்‌ஷாக்கள் போன்றவற்றில் பயணம் செய்யும்போது பெண்கள் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டிய சில டிப்ஸ்களை பற்றி தான் இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

7 பேர் போகக்கூடிய காரை உருவாக்கும் ஃபோக்ஸ்வாகன்...!!

ஃபோக்ஸ்வாகன் தனது புதிய மூன்று வரிசை எஸ்யூவி டாரோன் (Tayron)-ஐ விரைவில் இந்திய சந்தையில் அறிமுகப்படுத்தவுள்ளது. டிகுவானுக்கு மேலாக நிலைநிறுத்தப்படும் இது, பிராண்டின் முதன்மையான ஃபேமிலி எஸ்யூவியாக இருக்கும். இதன் சமீபத்திய டீசர் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

2025இல் பி.எம்.டபிள்யூ ஷோரூம்களுக்கு ஓய்வே இல்ல!!

சவாலான வர்த்தகச் சூழலிலும், பிஎம்டபிள்யூ குழுமம் இந்தியா (BMW Group India) 2025ஆம் ஆண்டில் தனது மிக உயர்ந்த கார் விற்பனையை மீண்டும் பதிவு செய்துள்ளது. இந்த ஆண்டில், நிறுவனம் 18,001 கார்களை விற்று, இதற்கு முந்தைய 2024ஆம் ஆண்டை விட 14% உயர்வான வளர்ச்சியை எட்டியுள்ளது.

லண்டனில் வீடு வாங்கிய இந்திய தொழிலதிபரின் நிசான் ஜிடிஆர்!!

இந்திய கோடீஸ்வரரும் தீவிர கார் ஆர்வலருமான யோகன் பூனாவாலா (Yohan Poonawalla) தனது பல கோடி ரூபாய் மதிப்புள்ள வாகன சேகரிப்பில், புகழ்பெற்ற டொயோட்டா சுப்ரா ஏ80 (Toyota Supra A80) காருக்குப் பிறகு, புதியதாக 2025 நிசான் ஜிடிஆர் ஆர்35 நிஸ்மோ (Nissan GTR R35 NISMO) காரை இணைத்துள்ளார்.

உலகையே திரும்பி பார்க்க வைக்கும் மைலேஜ்!

ஜப்பானை சேர்ந்த உலகப்புகழ் பெற்ற வாகன நிறுவனங்களில் ஒன்று சுஸுகி (Suzuki). இந்நிறுவனம் கடந்த 2006ம் ஆண்டில் இருந்து, இந்தியாவில் டூவீலர்களை உற்பத்தி செய்து வருகிறது. அதாவது சுஸுகி நிறுவனம் இந்தியாவில் டூவீலர் உற்பத்தியை தொடங்கி, சுமார் 20 வருடங்கள் கடந்து விட்டன.

ஏத்தர் ஸ்கூட்டர் உடன் கனெக்டரை சேர்த்து வாங்கிட்டா போதும்!!

இந்தியாவின் முன்னணி எலெக்ட்ரிக் இருசக்கர வாகன உற்பத்தி நிறுவனமான ஏத்தர் எனர்ஜி (Ather Energy), தனது வாடிக்கையாளர்கள் தற்போது நாடு முழுவதும் 5000க்கும் மேற்பட்ட பொது ஃபாஸ்ட் சார்ஜிங் (Fast Charging) நிலையங்களை பயன்படுத்த முடியும் என அறிவித்துள்ளது. இந்த சார்ஜர்கள், ஏத்தர் உருவாக்கிய எடை குறைவான எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான சார்ஜிங் சிஸ்டம் (Light Electric Combined Charging System - LECCS) கனெக்டர் உடன் இயங்குகின்றன.