வாகன அழிப்பு திட்டத்தால் இத்தனை விஷயம் நடக்குமா?

அரசாங்கத்தின் வாகன அழிப்பு கொள்கை (Vehicle Scrappage Policy), பழைய வாகனங்களை மக்களின் பயன்பாட்டில் இருது அகற்றுவதன் மூலம் யூஸ்டு-கார் சந்தையின் மதிப்பை அதிகரிக்கிறது. இது எப்படி சாத்தியமாகிறது என்பது உங்களில் சிலருக்கு குழப்பமாக இருக்கலாம். இந்த தொகுப்பில் அதைதான் விளக்கி கூற போகிறோம். வாருங்கள் செய்திக்குள் போகலாம்.

பயோ கேஸ் மூலம் இயங்கும் மாருதி சுஸுகி கார் அறிமுகம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் கார்களில் ஒன்று மாருதி சுஸுகி விக்டோரிஸ் (Maruti Suzuki Victoris). மிட்-சைஸ் எஸ்யூவி (Mid-size SUV) ரகத்தை சேர்ந்த மாருதி சுஸுகி விக்டோரிஸ் கார், வெகு சமீபத்தில்தான் இந்திய சந்தையில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது.

ஹூண்டாய் நவ.4இல் கொண்டுவரும் காரை எந்த என்ஜினில் வாங்கலாம்?

ஹூண்டாய் மோட்டார் இந்தியா (Hyundai Motor India) நிறுவனம், தனது புதிய வென்யூ (Venue) காரை அறிமுகப்படுத்த தயாராகி வருகிறது. புதிய வென்யூ, இந்தியாவின் காம்பாக்ட் எஸ்யூவி (Compact SUV) கார்கள் பிரிவில் மகிழ்ச்சியான பயணம், சிறந்த செயல்திறன் மற்றும் மேம்பட்ட தொழில்நுட்பத்தை வழங்கும் என்று ஹூண்டாய் கூறியுள்ளது.

இன்னோவா கார் விலையில் ஒரு பைக்கா?

டுகாட்டி நிறுவனம் இந்தியாவில் தனது பேனிகேல் வி2 மற்றம் வி2 எஸ் ஸ்போர்ட்ஸ் பைக்குகளை அறிமுகப்படுத்தியுள்ளது, இந்த பைக்கின் விலைக்கு இந்தியாவில் ஒரு பெரியஎஸ்யூவி காரையே வாங்கிவிடலாம். இந்த அளவிற்கு காஸ்ட்லியான பைக்கில் அப்படி என்ன தான் இருக்கிறது? இந்தபைக்கின் விலை என்ன? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.
Advertisement

பிரதமர் தீபாவளியை கொண்டாடிய போர் கப்பல்களின் விபரங்கள்!!

இந்தியாவின் கடற்படைக்கு வலிமை சேர்க்கும் இரண்டு விமானந்தாங்கி போர் கப்பல்களான ஐ.என்.எஸ் விக்ராந்த் (INS Vikrant) மற்றும் ஐ.என்.எஸ் விக்ரமாதித்யா (INS Vikramaditya) ஆகியவை நாட்டின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமானவை ஆக விளங்குகின்றன. இதனாலேயே, பாரத பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் சமீபத்தில் தீபாவளியை இந்த போர் கப்பல்களில் ஓர் இரவு தங்கி கொண்டாடினார்.

தரமட்ட விலையில் சுஸூகி இவி மைக்ரோ கார்

சுஸூகி நிறுவனம் முதன் முறையாக தனது எலெக்ட்ரிக் மைக்ரோ காரை ஜப்பானில் நடந்துவரும் மொபிலிட்டி ஷோவில் காட்சிப்படுத்தியள்ளது.இந்த குறைந்த விலையில் சிட்டி பயன்பாட்டிற்கு ஏற்றவாறு வடிவமைக்கப்பட்டுள்ளது. இந்நிறுவனம் இந்த காருக்கு இ-ஸ்கை என பெயர் வைத்துள்ளது. இது குறித்தவிரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

இவ்ளோ கம்மியான விலையில் ஏத்தர் எலெக்ட்ரிக் ஸ்கூட்டரா!

இந்திய சந்தையில் ஒவ்வொரு மாதமும் மிகவும் அதிகமான எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களை (Electric Scooters) விற்பனை செய்து வரும் நிறுவனங்களில் ஒன்று ஏத்தர் (Ather). இதற்கு ஏத்தர் ரிஸ்டா (Ather Rizta) எலெக்ட்ரிக் ஸ்கூட்டர் மிகவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக இருந்து வருகிறது.

நாடே எதிர்பார்த்த கார் மீண்டும் வருகிறது!

ரெனால்ட் நிறுவனத்தின் டஸ்டர் கார் சிறப்பாக விற்பனையாகி வந்தது. குறிப்பாக இந்தியாவில் இந்த கார் பிரபலமானது. இந்நிலையில் இந்த காரின் விற்பனை நிறுத்தப்பட்டதிலிருந்தே இதை மீண்டும் கொண்டு வர வேண்டும் என்ற பேச்சு இருந்தது. இந்நிலையில் ரெனால்ட் நிறுவமன் வரும் ஜனவரி மாதம் 26ம் தேதி இந்த காரை மீண்டும் இந்திய மார்கெட்டிற்கு அறிமுகப்படுத்த திட்டமிட்டுள்ளது. இந்நிலையில் இந்த காரில் உள்ள டாப் 5 தகவல்களை காணலாம் வாருங்கள்.

ஜனாதிபதி பயணம் செய்த ஜெட்டை உருவாக்கியது யார் தெரியுமா?

இந்திய குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு (Droupadi Murmu), ஹரியானாவின் அம்பாலாவில் உள்ள விமானப்படை நிலையத்தில், ரஃபேல் போர் விமானத்தில் இன்று (அக்டோபர் 29) பயணம் மேற்கொண்டுள்ளார். இந்திய நாட்டின் பாதுகாப்புத் திறன்களை உலகிற்கு வெளிக்காட்டும் வகையிலும், பாகிஸ்தான் அரசாங்கம் கூறி வந்த பொய்யை அம்பலப்படுத்தும் விதமாகவும் அமைந்த இந்திய ஜனாதிபதியின் இந்த போர் விமான பயணம் குறித்தும், இதில் பயன்படுத்தப்பட்ட ரஃபேல் போர் விமானம் குறித்தும் இனி கொஞ்சம் விரிவாக பார்க்கலாம்.

உலகையே மிரள விட போகும் தமிழ்நாட்டு ஸ்கூட்டர்!

இந்திய சந்தையில் தற்போது சிஎன்ஜி கார்கள் (CNG Cars), மிகவும் வேகமாக பிரபலமடைந்து வருகின்றன. குறிப்பாக கடந்த 2024-25ம் நிதியாண்டில், டீசல் கார்களை (Diesel Cars) விட, சிஎன்ஜி கார்கள்தான் மிகவும் அதிகமாக விற்பனை செய்யப்பட்டன. இந்தியாவில் ஒரு நிதியாண்டில், டீசல் கார்களை விட, சிஎன்ஜி கார்கள் அதிகமாக விற்பனை செய்யப்பட்டிருப்பது இதுவே முதல் முறையாகும்.

கம்மி ரேட்டுக்கு விற்பனைக்கு வரும் பணக்காரர்கள் கார்!

டொயோட்டா நிறுவனம் தனது லேண்ட்க்ரூஸர் எஃப்ஜே மாடல் காரை முதன் முறையாக ஜப்பானில் நடந்து வரும் ஜப்பான் மொபிலிட்டி ஷோ 2025ல் உருவாக்கியுள்ளது. இந்த வாகனம் மிகப்பெரிய அளவில் எதிர்பார்க்கப்பட்ட நிலையில் தற்போது சர்வதேச அரங்கில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.இந்த வாகனம் மிகப்பெரிய வரவேற்ப்பைபெற்றுள்ளது. இது குறித்த விரிவானவிபரங்களை காணலாம் வாருங்கள்.

எதிர்பார்க்காத நேரத்தில் அதிரடியான விஷயத்தை செய்த டிவிஎஸ்!!

டிவிஎஸ் அப்பாச்சி ஆர்டிஎக்ஸ் 300 பில்ட்-டு-ஆர்டர் (BTO) மாடலின் விலை அதிகரிக்கப்பட்டுள்ளது. அறிமுகமாகி சில வாரங்களிலேயே இந்த விலை உயர்வு அறிவிக்கப்பட்டுள்ளது. மற்ற பேஸ் மற்றும் டாப் வேரியன்ட்களின் விலையில் எந்த மாற்றமும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Advertisement

கோடீஸ்வரர்களே இந்த காரை வாங்க தயங்குறாங்க!

கடந்த 6 மாதத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கிரெட்டா கார் தான் இந்தியாவிலேயே அதிகம் விற்பனையான காராக இருக்கிறது. ஆனால் அதே ஹூண்டாய் நிறுவனம் விற்பனை செய்யும் மற்றொரு வாகனம் மிக குறைவான எண்ணிக்கையிலேயே விற்பனையாகியுள்ளது. இந்த காருக்கு ரூ7 லட்சம் தள்ளுபடி வழங்கியும் விற்பனை பெரியதாக இல்லை. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஸ்மார்ட்போன் இணைப்புடன் 10 லட்சத்திற்குள் கிடைக்கும் கார்கள்

இந்தியாவில் பத்து லட்ச ரூபாய்க்கும் குறைவான விலையில் கிடைக்கும் பல கார்கள், தங்கள் நடுத்தர மற்றும் உயர் ரக வேரியண்ட்களில் ஆண்ட்ராய்டு ஆட்டோ (Android Auto) மற்றும் ஆப்பிள் கார்ப்ளே (Apple CarPlay) வழியாக ஸ்மார்ட்போன் இணைப்பு வசதியை வழங்குகின்றன. இவற்றில் சில கார்கள் வயர்லெஸ் இணைப்பையும் கொண்டிருக்கின்றன. ஆகையால், தொழில்நுட்ப ஆர்வலர்களுக்கு கீழே காணும் கார்களுள் ஒன்றை ரூ.10 லட்சத்திற்குள் வாங்குவது சிறந்த தேர்வாக இருக்கும்.

இதைவிட கம்மி விலை கவாஸாகியால் பைக்கை கொண்டுவர முடியாது!

இந்தியாவில் கவாஸாகி (Kawasaki) நிறுவனம் புதிய வெர்சிஸ்-எக்ஸ் 300 (Versys-X 300) பைக்கை அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் எக்ஸ்-ஷோரூம் விலை (Ex-Showroom Price) ரூ.3.49 லட்சமாக நிர்ணயிக்கபட்டு உள்ளது. கவாஸாகியின் வெர்சிஸ் அட்வென்ச்சர் பைக்குகள் வரிசையில் இது மிகவும் கச்சிதமான, விலை குறைவான மற்றும் முதல்முறையாக பைக் ஓட்டுபவர்களுக்கும் ஏற்ற மாடலாக வந்துள்ளது.

நவம்பர் 1 முதல் இந்த வாகனங்களுக்கு தடை!

டில்லியில் மாசு கட்டுப்பாட்டை குறைப்பதற்காக பிஎஸ் 6 இல்லாத கமர்ஷியல் வாகனங்கள் டில்லிக்குள் நுழைய வரும் நவம்பர் 1 முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது. குளிர் காலம் நெருங்கும் நிலையில் இந்த காலகட்டத்தில் மாசு அதிகமாக இருப்பதால் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

மாருதிக்கு இப்பவே ஒடம்பெல்லாம் வெடவெடத்து போயிருக்கும்!

இந்திய சந்தையில் ஒரு சமயத்தில் மிகவும் பிரபலமாக இருந்த கார்களில் ஒன்று டாடா சியரா (Tata Sierra). கடந்த 1991ம் ஆண்டில் இருந்து 2003ம் ஆண்டு வரை டாடா சியரா கார் உற்பத்தி செய்யப்பட்டது. இந்த சூழலில், சுமார் 22 வருடங்களுக்கு பிறகு, டாடா சியரா 'கம்பேக்' கொடுக்கவுள்ளது.

எந்த ஏர்போர்ட்டிலும் இனி இப்படியொரு சம்பவம் நடக்க கூடாது!

டெல்லி விமான நிலையத்தில் ஏர் இந்தியா சாட்ஸ் (Air India SATS) பேருந்தில் ஏற்பட்ட தீ விபத்துக்கான சரியான காரணம் குறித்து தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. எனினும், ஆரம்பகட்ட தகவல்கள் மற்றும் விமான நிலைய அதிகாரிகளின் அறிக்கைகள், தொழில்நுட்பக் கோளாறுகள் காரணமாக இந்த தீ விபத்து நடந்திருக்கலாம் என தெரிவிக்கின்றன.

இந்த பேரை வச்சதுக்காகவே வாங்கலாம்!

இந்திய சந்தையில் மிகவும் பிரபலமாக இருந்து வரும் எலெக்ட்ரிக் ஸ்கூட்டர்களில் ஒன்று பஜாஜ் சேத்தக் (Bajaj Chetak). ஒரு காலத்தில் இந்திய சாலைகளை ஆட்சி செய்த பஜாஜ் சேத்தக் ஸ்கூட்டரின் பெயரில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்டது உள்ளிட்ட பல்வேறு காரணங்களால், இதற்கு இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

உள்நாட்டில் விமானங்களை தயாரிக்க ரஷ்யா உடன் இணைந்த இந்தியா!!

இந்தியாவில் முதன்முறையாக பயணிகள் விமானம் தயாரிப்பதற்கான முக்கிய ஒப்பந்தத்தில் இந்தியாவின் ஹிந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் லிமிடெட் (HAL) மற்றும் ரஷ்யாவின் பொது கூட்டுப் பங்கு நிறுவனமான யுனைடெட் ஏர்கிராஃப்ட் கார்ப்பரேஷன் (PJSC-UAC) கையெழுத்திட்டுள்ளன. ரஷ்யா தலைநகர் மாஸ்கோவில் மேற்கொள்ளப்பட்டுள்ள இந்த ஒப்பந்தத்தின்படி என்ன மாதிரியான விமானங்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட உள்ளன? இது நாட்டின் பொருளாதாரத்திற்கு எந்த அளவிற்கு பயனுள்ளதாக இருக்கும் என்பதை பற்றிய விபரங்களை தான் இனி இந்த தொகுப்பில் பார்க்க போகிறோம்.
Advertisement

பின் சீட்டுலயும் சீட் பெல்ட்ல ஏன் அலாரம் அடிக்குது?

இந்தியாவில் தற்போது தயாரிக்கப்படும் கார்களில் பின்பக்க சீட்டில் இருப்பவர்களும் கட்டாயம் சீட் பெல்ட் அணிய வேண்டும் என்பதற்காக அதற்கான ரிமைண்டர் சவுண்ட் வருகிறது? புதிய கார்களில் மட்டும் ஏன் இந்த சத்தம் வருகிறது? இதற்கான காரணம் என்ன? இது எப்படி வாகனத்தில் உள்ள பயணிகளை பாதுகாக்கும்? விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஜனவரி 26 வரை காத்திருந்தால் போதும்... புதிய ரெனால்ட் டஸ்டர்!

இந்திய சந்தையில் மீண்டும் டஸ்டர் எஸ்யூவி (Duster SUV) காரை அறிமுகப்படுத்துவதாக ரெனால்ட் இந்தியா (Renault India) நிறுவனம் அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. ஜனவரி 26 அன்று இந்திய குடியரசு தினத்தின்போது புதிய தலைமுறை டஸ்டர் எஸ்யூவி காரை அதிகாரப்பூர்வமாக வெளியிடவுள்ளதாக ரெனால்ட் நிறுவனம் தெரிவித்துள்ளது.

ஜப்பான்ல இந்த காருக்கு செம டிமாண்ட்!

மாருதி நிறுவனம் ஜிம்னி என்ற 5 டோர் ஆஃப்ரோடு எஸ்யூவி காரை விற்பனை செய்து வருகிறது.இந்தியாவில் இந்த காருக்கு போதுமான வரவேற்பு இல்லை. பெரிய அளவில் விற்பனையாகவில்லை. ஆனால் ஜப்பானில் கதையே வேறு. இந்த கார் ஜப்பானில் நோமேட் என்ற பெயரில் விற்பனையாகி வருகிறது.இந்தியாவில் தயாரிக்கப்பட்டு ஜப்பானிற்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது இந்த கார் நல்ல விற்பனையையும் பெற்று வருகிறது. இந்த காருக்கான புக்கிங் தற்காலிகமாக ஜப்பானில் நிறுத்தப்பட்ட நிலையில் தற்போது மீண்டும் துவங்கியுள்ளது. இது குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.

ஹோண்டா ஆக்டிவாவிற்கு டஃப் குடுக்கும் சுஸூகி!

இந்தியாவின் ஸ்கூட்டர் செக்மெண்ட்டில், 2 தயாரிப்புகள் முழுமையாக ஆதிக்கம் செலுத்தி கொண்டுள்ளன. அவை ஹோண்டா ஆக்டிவா (Honda Activa) மற்றும் டிவிஎஸ் ஜூபிடர் (TVS Jupiter) ஆகியவை ஆகும். இந்த 2 ஸ்கூட்டர்களுக்கும் விற்பனையில் கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி கொண்டுள்ள மற்றொரு ஸ்கூட்டர்தான் சுஸுகி ஆக்ஸஸ் (Suzuki Access).

7 பேர் போற கார் 26 கி.மீ மைலேஜ் தருனுன்னா யாரு விடுவாங்க!

இந்தியாவில் எம்பிவி ரக கார்களின் விற்பனை கணிசமாக இருந்து வருகிறது. அதிக இடவசதி மற்றும் பிரக்டிக்கல் அம்சங்கள் காரணமாக இந்த கார்கள் சிறப்பாக விற்பனையாகி வருகிறது. இந்நிலையில் இந்த நிதியாண்டில் முதல் அரையாண்டிற்கான எம்பிவி கார்கள் விற்பனை பட்டியலில் வெளியாகியுள்ளது. இதில் அதிகம் விற்பனையான கார்கள் குறித்த விரிவான விபரங்களை காணலாம் வாருங்கள்.